Wednesday, January 29, 2014

குருக்ஷேத்திரத்தின் தூசி! - வனபர்வம் பகுதி 83உ

Dust of Kurukshetra! | Vana Parva - Section 83e | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "ஓ மன்னா {பீஷ்மா}, புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒரு பயணி {யாத்ரீகர்} பிறகு, சுவஸ்திபுரம் செல்ல வேண்டும். அந்த இடத்தை வலம் வருபவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பாவனம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைந்து பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் திருப்படையல் {தர்ப்பணம்} செய்ய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா} இதனால் அவன், அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். அதற்கு அருகிலேயே கங்காஹ்ரதமும் மற்றுமொரு தீர்த்தமான கூபமும் இருக்கின்றன. ஓ மன்னா, அந்தக் கூபத்தில் மூன்று கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ மன்னா, அங்கு நீராடும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான். கங்காஹ்ரதத்தில் நீராடி மகேஸ்வரனை {சிவனை} வணங்கும் ஒருவன் கணபத்திய நிலையை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். பிறகு ஒருவன் மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் ஸ்தாணுவடத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.


பிறகு ஒருவன் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கும் பதரீபாச்சனத்தை {பதரீகானனம்} அடையவேண்டும். அங்கே மூன்று இரவுகள் தங்கி இலந்தைப்பழத்தைச் {Jujubes} சுவைத்து உண்ண வேண்டும். அங்கே இலந்தைப்பழத்தை {மட்டுமே} உண்டு பன்னிரெண்டு ஆண்டுகள் வாழ்பவனும், அங்கே மூன்று இரவுகள் உண்ண நோன்பிருப்பவனும் நிலையான நிலையை அடைவான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு இந்திரமார்க்கத்தை அடைந்து, அங்கே ஒரு பகலும் ஒரு இரவும் உண்ணாதிருக்கும் புனிதப்பயணி இந்திரனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஏகராத்ரத்தை அடையும் மனிதன் முறையான நோன்புகளுடன், பொய்மையில் இருந்து விலகி ஒரு இரவு அங்கே தங்கினால் பிரம்மனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், ஒளிக்குவியலான சிறப்பு மிக்க தேவன் ஆதித்தியனின் ஆசிரமத்தை அடைய வேண்டும். மூன்று உலகத்திலும் கொண்டாடப்படும் அத்தீர்த்தத்தில் நீராடி, அந்த ஒளித்தேவனை வழிபடும் ஒருவன் ஆதித்திய உலகத்தை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒரு புனிதப்பயணி சோமத் தீர்த்தத்தில் நீராடுவதால் சந்தேகமற சோமனின் உலகத்தை அடைகிறான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, பிறகு ஒருவன், அனைத்தையும் தூயதாக்கும் வல்லமைப் படைத்ததென முழு உலகத்தாலும் கொண்டாடப்படும் ததீச்சரின் மிகப் புனிதமானத் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கேதான் சரஸ்வத குலத்தைச் சேர்ந்த தவச்சடங்குகளின் கடல் அங்கிரஸ் பிறந்தார். அந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து, சந்தேகமற சரஸ்வதியின் உலகத்தை அடைகிறான். புலனடக்கத்துடன், பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் ஒருவன் அடுத்ததாக கன்னியாஸ்ரமத்தை அடைய வேண்டும். ஓ மன்னா அங்கே புலனடக்கத்துடனும், முறையான உணவுப்பழக்கத்துடனும் மூன்று இரவுகள் தங்குபவன் நூறு தெய்வீக மங்கையரை அடைகிறான். பிறகு அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் ஸன்னிஹதி என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் அங்கே சிறிது காலம் தங்கி மேலும் அறப்பயன் அடைந்தனர். அங்கே சரஸ்வதி நதியில் சூரிய கிரஹணத்தின் போது நீராடும் ஒருவன் நூறு குதிரை வேள்விகள் செய்த பலனை அடைகிறான். அங்கு செய்யப்படும் எந்த வேள்வியும் நிலையான பலனைத் தருகிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஓ மனிதர்களின் மன்னா, பூமியிலோ, ஆகாயத்திலோ, ஆறுகளிலோ, ஏரிகளிலோ, சிறு தடாகங்களிலோ, ஊற்றுகளிலோ, குளங்களிலோ, பெரியதாகவோ, சிறியதாகவோ குறிப்பிட்ட சில தேவர்களுக்குப் புனிதமாக இருக்கும் அனைத்து தீர்த்தங்களும் சந்தேகமற, மாதத்திற்கு மாதம் சந்நிஹதியில் கலக்கிறது. அனைத்துத் தீர்த்தங்களும் இங்கே ஒன்று சேரும் காரணத்தால்தான் அத்தீர்த்தம் தனது பெயரை {சந்நிஹதி என்று} அடைந்தது. அங்கே நீராடி அதன் நீரைப் பருகும் ஒருவன் சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான்.

ஒ மன்னா {பீஷ்மா}, சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசையில் சிராத்தம் செய்யும் மனிதனுக்கு உண்டாகும் பலனைக் கேள். அங்கே {சந்நிஹதியில்}, அந்த நாளில் சிராத்தம் செய்து {சமைக்கப்படாத உணவுப்பொருட்களை அந்தணர்களுக்கு தானமளித்தல் அன்னசிராத்தம் எனப்படுகிறது} அத்தீர்த்தத்தில் நீராடும் மனிதன், ஆயிரம் குதிரை வேள்விகளைச் சரியாகச் செய்வதால் வரும் பலனை அடைகிறான். ஆண்களாலும் பெண்களாலும் செய்யப்படும் என்ன வகை பாவமானாலும், அங்கே நீராடியவுடன் சந்தேகமற அழிந்து போகிறது. அங்கே நீராடும் ஒருவன் தாமரை நிறம் கொண்ட தேரில் பிரம்மனின் வசிப்பிடத்தை அடைகிறான். பிறகு, வாயில் காப்போனான யக்ஷன் மசக்ரூகனை வழிபட்டபின் கோடி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.

ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தத்திற்கு அருகிலேயே கங்காஹ்ரதம் என்ற ஒரு தீர்த்தம் இருக்கிறது. ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மனே}, அங்கே ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், பிரம்மச்சரியம் கடைப்பிடித்து நீராட வேண்டும். இதனால் ஒருவன் ராஜசுயம் மற்றும் குதிரை வேள்விகள் செய்ததை விட உயர்ந்த பலனை அடைகிறான். அதற்கு அருகிலேயே பூமியில் நன்மையை விளைவிக்கும் நைமிஷம் என்ற தீர்த்தம் இருக்கிறது. விண்ணுலகத்துக்கு புஷ்கரை நன்மையை விளைவிக்கும் என்றாலும் மூன்று உலகத்திற்கும் குருக்ஷேத்திரமே நன்மையை விளைவிக்கும். காற்றால் சுமக்கப்படும் குருக்ஷேத்திரத்தின் தூசி கூட ஒரு பாவியை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்.

திருஷ்த்வதிக்கு {நதி} வடக்கிலும், சரஸ்வதிக்குத் தெற்கிலும் இருக்கும் குருக்ஷேத்திரத்தில் வசிப்பவர்கள் உண்மையில் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள். "நான் குருக்ஷேத்திரத்திற்குச் செல்வேன்" என்றும், "நான் குருக்ஷேத்திரத்தில் வசிப்பேன்" என்ற வார்த்தைகளை ஒரு முறையேனும் உச்சரித்தாலும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான். பிரம்ம முனிவர்களாலும் வழிபடப்படும் குருக்ஷேத்திரம் தேவர்களின் வேள்வி மேடையாகக் {பலிப்பீடமாகக்} கருதப்படுகிறது. அங்கே வசிக்கும் மனிதர்களுக்கு எந்தக் காலத்திலும் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை. தரந்துகம், அருந்துகம் ஆகியவற்றுக்கும் ராம {ராமஹ்ரதம்}, மசக்ருகம் ஆகிய தடாகங்களுக்கும் மத்தியில் இருப்பதே குருக்ஷேத்திரம். அது சமந்தபஞ்சகம் என்றும் அழைக்கப்படுகிறது. அது பெருந்தகப்பனின் {பிரம்மாவின்} வடபுற வேள்வி மேடையெனச் சொல்லப்படுகிறது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்