Tuesday, January 28, 2014

அந்தணராக ஒரு தீர்த்தம்! - வனபர்வம் பகுதி 83ஈ

A thirtha for one to become a Brahmana! | Vana Parva - Section 83d | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்...

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "சாரஸ்வதத்தை அடைந்த பின்னர் ஒருவன் மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் ஔசன தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, அங்கே பிரம்மனின் தலைமையில் தேவர்களும், துறவையே செல்வமாகக் கொண்டிருக்கும் முனிவர்களும், சிறப்பு மிகுந்த கார்த்திகேயனும் தினந்தோறும் பகலும் இரவும் சந்திக்கும் இரு சந்திவேளைகளிலும் மதிய வேளையிலும் பார்க்கவருக்கு {சுக்ரனுக்கு} நன்மை செய்ய விரும்பி நேரடியாகவே இருப்பார்கள். அங்கே கபாலமோட்சம் என்ற பாவங்களைக் கழுவும் மற்றுமொரு தீர்த்தமும் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே நீராடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன் அக்னி என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் காளையே, அங்கே நீராடும் ஒருவன் அக்னியின் உலகத்தை அடைந்து தனது குலத்தை தாழ்ந்த உலகங்களில் இருந்து மீட்டெடுக்கிறான். அந்தத் தீர்த்தத்திலேயே விஸ்வாமித்ரருடைய மற்றுமொரு தீர்த்தமும் இருக்கிறது. ஓ பாரதர்களில் தலைவா, அங்கே நீராடும் ஒருவன், ஓ மனிதர்களில் சிறந்தவனே, பிரம்மனின் நிலையை அடைகிறான்.


பிறகு ஒருவன் சுத்தமான உடலுடனும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மயோனியை அடையும் ஒருவன், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே நீராடி பிரம்மலோகத்தை அடைந்து ஏழு தலைமுறை வரை தனது குலத்தைச் சந்தேகமற சுத்தம் செய்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் கார்த்திகேயனின் {முருகனின்} பிருதூதகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி, பித்ருக்களையும் தேவர்களையும் வழிபடும் வேலையில் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மனித நோக்கங்களால் உந்தப்பட்ட ஆணாலோ, பெண்ணாலோ அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட தீமைகள் யாவும் அங்கு நீராடுவதால் அழிந்து போகும். அங்கே நீராடுவதால் ஒருவன் குதிரை வேள்வி செய்யும் பலனை அடைந்து சொர்க்கத்தை அடைகிறான். குருக்ஷேத்திரத்தைப் புனிதம் என்றும்; சரஸ்வதி குருக்ஷேத்திரத்தைவிட புனிதமானது என்றும்; சரஸ்வதியைவிட ஒன்றாகக் கூடிய அனைத்துத் தீர்த்தங்களும் புனிதமானது என்றும்; அனைத்துத் தீர்த்தங்களைக் காட்டிலும் பிருதூதகம் புனிதமானது என்றும் கற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அங்கே தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் மனிதன், அனைத்துத் தீர்த்தங்களிலும் சிறந்ததான பிருதூதகத்திலேயே தனது உடலைக் கைவிட்டு இறவா நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பிருதூதாகம் செல்ல வேண்டும் என்று வேதங்களிலும் உள்ளது. சனத்குமாரராலும், உயர் ஆன்ம வியாசராலும் கூட இது பாடப்பட்டுள்ளது. ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிருதூதகத்திற்கும் மேன்மையான ஒரு தீர்த்தம் வேறு எதுவும் இல்லை. சந்தேகமற அத்தீர்த்தம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதும், புனிதமானதும், பாவங்களை அழிக்கவல்லதுமாகும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா} ஒரு மனிதன் எவ்வளவுதான் பாவியாக இருந்தாலும், பிருதூதகத்தில் நீராடினால் சொர்க்கம் செல்வான் என்று கற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கே மற்றுமொரு தீர்த்தமாக மதுஸ்ரவம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.

ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் கொண்டாடப்படும் புனித தீர்த்தமும், சரஸ்வதியும் அருணை நதிகளும் சந்திக்கும் சங்கமமுமான அந்தத் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பவன் அந்தணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட்டு அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகள் செய்த பலனை விட மேன்மையான பலனைப் பெற்று மேலும் கீழுமாகத் தனது ஏழு தலைமுறைகளை மீட்டெடுக்கிறான். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {பீஷ்மா}, அங்கேயே மற்றுமொரு தீர்த்தமான அர்த்தகீலம் {அவதீர்ணம்} என்ற தீர்த்தமும் இருக்கிறது. அந்தத் தீர்த்தம் முன்பொரு காலத்தில் அந்தணர்கள் மீது கொண்ட கருணையால் தார்பீயினால் {சார்ங்கீயினால்} உண்டாக்கப்பபட்டது. நோன்புகளாலும், புனிதமடைவதாலும், உண்ணா நோன்புகளாலும், சடங்குகளாலும், மந்திரங்களாலும் சந்தேகமற ஒருவன் அந்தணனாகிறான். ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மனே}, இருப்பினும், முற்காலத்தில் இருந்த கற்றவர்கள், சடங்குகளும், மந்திரங்களும் அற்ற ஒருவன் இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதன் மூலமே கற்றவனாகவும், நோன்புகள் நோற்ற பலனையும் அடைகிறான் என்பதைக் கண்டனர். தார்ப்பி இங்கே நான்கு கடல்களையும் கொண்டு வந்தான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, இங்கே நீராடும் ஒருவன், அதன்பிறகு துயரை அடையாமல், நாலாயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.

ஓ ஆறம்சார்ந்தவனே, பிறகு ஒருவன் சதஸஹஸ்ரகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அதன் அருகிலேயே மற்றும் ஒரு தீர்த்தமான சாகஸ்ரகம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. அந்த இரண்டு தீர்த்தங்களும் கொண்டாடப்படுபவையே. அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். அங்கே அளிக்கப்படும் தானங்களும் நோன்புகளும் ஆயிரம் மடங்குகளாகப் பெருகுகின்றன. ஓ மன்னா, பிறகு ஒருவன் ரேணுகா என்ற அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி பித்ருக்களையும் தேவர்களையும் வழிபட வேண்டும். இதன்காரணமாக ஒருவன் அனைத்துப் பாவங்களிலும் இருந்து விடுபட்டு அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு விமோ என்ற தீர்த்தத்தில் ஆசைகளையும் புலன்களையும் கட்டுக்குள் வைத்து நீராடும் ஒருவன், பரிசுகளை ஏற்பதால் உண்டாகும் பாவத்தில் இருந்து விடுபடுகிறான். பிறகு ஒருவன் புலன்களைக் கட்டுக்குள் வைத்து, பிரம்மச்சரிய வாழ்வுமுறை வாழ்ந்து பஞ்சவடி வனத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கி இருப்பதால் ஒருவன் மிகுந்த அறத்தை அடைந்து, அறம் சார்ந்தவர்களின் உலகத்தை அடைகிறான்.

பிறகு ஒருவன் வருணனின் தீர்த்தமான தன்னொளியால் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தைஜசத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே அந்தத் தீர்த்தத்தில் யோகத்தின் தலைவனான, காளையைத் தனது வாகனமாகக் கொண்ட ஸ்தாணு {சிவன்} இருக்கிறான். அங்கே சிலகாலம் தங்கும் ஒருவன் தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வழிபடுவதால் வெற்றியை அடைகிறான். அங்கேதான், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் குகனை {முருகனை} தேவர்களின் படைத்தளபதியாக நியமித்தனர். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே, அந்தத் தீர்த்தத்திற்குக் கிழக்கேதான் குரு தீர்த்தம் என்று அழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய வாழ்வு முறை வாழும் ஒருவன் அக்குரு தீர்த்தத்தில் நீராடுவதால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு பிரம்மனின் உலகை அடைகிறான்.

பிறகு அடக்கப்பட்ட புலன்களுடனும், முறையான உணவுப் பழக்கத்துடனும் இருக்கும் ஒருவன் சுவர்க்கத்வாரம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து பிரம்மனின் வசிப்பிடத்தை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி, அநரகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா அங்கே நீராடும் ஒருவன் அதன்பிறகு எந்தத் துயரையும் அடைவதில்லை. ஓ மன்னா, ஓ மனிதர்களில் புலியே அங்கே நாராயணனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் எப்போதும் இருக்கின்றனர். ஓ குருகுலத்தின் அரசமகனே {பீஷ்மா}, ருத்திரனின் மனைவியும் அங்கே இருக்கிறாள். அந்தத் தேவியைக் காணும் ஒருவன் அதன்பிறகு துயரையே சந்திப்பதில்லை. அங்கே அந்தத் தீர்த்தத்தில் உமையின் தலைவனான விஸ்வேஸ்வரனும் இருக்கிறான். தேவர்களுக்குத் தேவனை {சிவனை} அங்கே காணும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அங்கே நாராயணனையும், அவனது நாபியில் உதிக்கும் கமலத்தையும் {தாமரையையும்} காணும் ஒருவன் சுடர்விட்டுப் பிரகாசித்து விஷ்ணுவின் வசிப்பிடத்தை அடைகிறான். ஓ மனிதர்களில் காளையே அனைத்து தேவர்களின் தீர்த்தங்களிலும் நீராடும் ஒருவன் அனைத்து துக்கத்தில் இருந்தும் விடுப்பட்டு, சந்திரனைப் போல ஒளிர்கிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்