Thursday, January 30, 2014

கங்கை யமுனை சங்கமம்! - வனபர்வம் பகுதி 84அ

Confluence of Ganga and Yamuna! | Vana Parva - Section 84a | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "ஓ பெரும் மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான தர்ம தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். சிறப்புமிக்க தர்மதேவன் உன்னதமான துறவு பயின்ற இடம் அந்தத் தீர்த்தமாகும். துறவு பயில்வதற்காகவே அவன் {தர்ம தேவன்} அந்தத் தீர்த்தத்தை உண்டாக்கி அதற்குத் தன் பெயரையும் இட்டான். ஓ மன்னா, அங்கே நீராடும் ஓர் அறம் சார்ந்த மனிதன், தனது ஏழு தலைமுறை குடும்பத்தைச் சுத்தப்படுத்துகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான ஞானபாவனத்தை அடையவேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து, முனிவர்களின் உலகத்தை அடைகிறான்.

பிறகு, ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, ஒருவன் சௌகந்திவனத்தை அடைய வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவை செல்வமாகக் கொண்ட முனிவர்களும், சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும், நாகர்களும் வசிக்கின்றனர். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், ஓடைகளில் சிறந்ததும், நதிகளில் முதன்மையானதுமான புனிதமான பெண்தெய்வம் ரஸ்வதி, பிலக்ஷை என்ற பெயரில் இருக்கும் இடத்தை அடைய வேண்டும். அங்கே எறும்புப் புற்றிலிருந்து வெளியேறும் நீரில் ஒருவன் நீராட வேண்டும். (அங்கே நீராடி) பித்ருக்களையும், தேவர்களையும் வணங்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். எறும்புப் புற்றின் அருகில் இருந்து ஒரு கனமான தடியைத் தூக்கி எறிந்தால், அந்தத் தடி செல்லும் தூரத்தைவிட ஆறு மடங்கு தூரத்தில் ஈசானதியுஷிதம் {கவேராத்யுஷிதம்} என்ற அரிதான தீர்த்தம் ஒன்று இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே புராணங்களில் உரைத்திருக்கும்படி அங்கு நீராடும் மனிதன் கபில வகைப் பசுக்களை ஆயிரம் எண்ணிக்கையில் தானம் அளிக்கும் பலனையும், குதிரை வேள்வி செய்த பலனையும் அடைகிறான்.

ஓ மனிதர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, பிறகு சுகந்தம், சதகும்பம், பஞ்சயக்ஷம் ஆகியவற்றுக்குப் பயணப்படுபவன் சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு திரிசூல கதம் என்ற பெயர் கொண்ட தீர்த்தத்தை அடைந்து, அங்கு நீராடி, பித்ருக்களையும், தேவர்களையும் ஒருவன் வணங்க வேண்டும். அப்படிச் செய்வதால், ஒருவன், சந்தேகமற தனது மரணத்திற்குப் பின்னர் கணபத்திய நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், மூன்று உலகத்தாலும் சாகம்பரி என்று கொண்டாடப்படும் பெண்தெய்வத்தின் அற்புதமான இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மனிதர்களின் மன்னா {பீஷ்மா}, அங்கே அற்புதமான நோன்புகள் நோற்ற அவள் {சாகம்பரி}, தேவ வருடங்களில் ஆயிரம் வருடகாலம், மாதம் ஒரு முறை மூலிகைகளை {சாகத்தை} மட்டுமே உணவாகக் கொண்டாள். அவள் மீது ஏற்பட்ட பக்தியால் தவசிகளான முனிவர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். ஓ பாரதா {பீஷ்மா}, அவர்கள் அவளிடம் இருந்த மூலிகைகளால் மகிழ்ந்தார்கள். அதன் காரணமாகவே அவளுக்குச் சாகம்பரி என்ற பெயர் உண்டானது.

ஓ பாரதா {பீஷ்மா}, சாகம்பரிக்கு வரும் மனிதன், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்துடனும், பிரம்மச்சரியத்துடனும் மூன்று இரவுகளை மூலிகைகளை மட்டுமே உண்டு சுத்தமாகக் கழித்தால், அந்தத் தேவியின் விருப்பத்தின் பேரில் பனிரெண்டு வருடங்கள் மூலிகைகளை மட்டுமே உண்டவன் அடையும் பலனை அடைவான். பிறகு ஒருவன் மூன்று உலகங்களிலும் புகழப்படும் சுவர்ணம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே பழங்காலத்தில் விஷ்ணு, ருத்திரனின் கருணைக்காகவும், தேவர்களுக்கும் கிடைக்காத கிடைத்தற்கரிய வரங்களுக்காகவும், தனது வழிபாடுகளை ருத்திரனுக்குச் செலுத்தினான். ஓ பாரதா திரிபுரத்தை அழித்தவன் {சிவன்} இதனால் திருப்தி கொண்டு, "ஓ கிருஷ்ணா, சந்தேகமற நீ உலகத்தால் நேசிக்கப்படுவாய். இவ்வண்டத்தில் இருக்கும் அனைத்திலும் முதன்மையானவனாவாய்" என்றான்.

ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே செல்லும் ஒருவன் காளையைக் குறியீடாகக் கொண்டவனை {சிவனை} வணங்கி குதிரை வேள்வி செய்த பலனையும் கணபத்திய நிலையையும் அடைகிறான். பிறகு ஒருவன், தூமவதி என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே மூன்று இரவுகள் உண்ணாமல் நோன்பிருக்கும் ஒருவன் சந்தேகமற தனது விருப்பங்கள் அனைத்தையும் ஈடேற்றிக் கொள்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு தேவிக்குத் தென்பாதியில் ரதவர்த்தம் என்ற தீர்த்தம் இருக்கிறது. ஓ அறம்சார்ந்தவனே, ஒருவன் பக்தியுடனும் புலனடக்கத்துடனும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். இதனால் மகாதேவனின் {சிவனின்} கருணையை அடைந்து மேன்மையான நிலையை அடைகிறான். பிறகு அந்த இடத்தை வலம் வரும் ஒருவன், ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மனே} தாரை என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அத்தீர்த்தம் அவனது அனைத்துப் பாவங்களையும் கழுவுகிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மனே}, அங்கே நீராடும் ஒருவன் தனது அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபடுகிறான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, பிறகு ஒருவன் பெரும் மலையை (இமயத்தை) வணங்கி, சந்தேகமற சொர்க்கத்தின் வாயிலைப் போல இருக்கும் கங்கையின் தோற்றுவாய்க்குச் {கங்காத்துவாரத்துக்குச்} செல்ல வேண்டும். அங்கே குவிந்த ஆன்மாவுடன் கோடி என்ற தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதனால் ஒருவன் பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். அங்கே ஒரு நாள் தங்குவதால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனையும் அடைகிறான். பிறகு தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் சப்தகங்கா, திரிகங்கா, சக்ரவர்தா ஆகிய அங்கே இருக்கும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீர்க்கடன் செலுத்தும் ஒருவன் அறம்சார்ந்தவர்களின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒரு மனிதன் கனகலத்தில் நீராடி மூன்று நாள் உண்ணாநோன்பிருந்து குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கம் செல்கிறான்.

ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, பிறகு ஓர் புனிதப்பயணி, கபிலாவடத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவு உண்ணா நோன்பிருந்து ஆயிரம் பசுக்கள் கொடுத்த பலனை அடையலாம். ஓ மன்னா {பீஷ்மா}, ஓ குருக்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கே நாகர்களின் மன்னனான சிறப்புமிக்கக் கபிலனின் தீர்த்தமும் இருக்கிறது. அந்த நாகதீர்த்தத்தில் நீராடும் ஒருவன், ஓ மன்னா, ஆயிரம் கபில வகைப் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் சந்தனுவின் அற்புதமான தீர்த்தமான லலிதிகத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் அதுமுதல் எப்போதும் துயரத்தில் மூழ்குவதில்லை. கங்கையும் யமுனையும் சேருமிடத்தில் நீராடும் ஒருவன் பத்து குதிரை வேள்விகள் செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்