Saturday, February 01, 2014

ராமனும் கோப்ரதாரமும்! - வனபர்வம் பகுதி 84ஆ

Rama and Gopratra! | Vana Parva - Section 84b | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் உலகத்தால் கொண்டாடப்படும் சுகந்தத்தை அடைய வேண்டும். இதனால் தனது பாவம் விலகி ஒருவன் பிரம்மனின் வசிப்பிடத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி ருத்ரவர்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் சொர்க்கத்ததிற்கு உயர்கிறான். கங்கையும் சரஸ்வதியும் சங்கமிக்கும் இடத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தை அடைகிறான். பிறகு பத்ரகர்ணேஷ்வரம் சென்று முறைப்படி தேவர்களை வணங்குபவன், அதன்பிறகு துன்பத்தில் மூழ்காதிருந்து சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி குப்ஜாம்ரகம் {குப்ஜாவதி} என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடைந்து சொர்க்கத்தையும் அடைகிறான். பிறகு, ஓ மன்னா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி அருந்ததிவடம் செல்ல வேண்டும். ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பிரம்மச்சரியத்துடன் இருந்து, அங்குள்ள சமுத்ரகத்தில் {கடலில்} நீராடி, மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் குதிரை வேள்வி செய்த பலனையும், ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனையும் அடைந்து தனது குலத்தைக் காக்கிறான்.

பிறகு ஒருவன் அடுத்ததாக ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், பிரம்மச்சரியத்துடனும் பிரம்மவர்தத்தை அடைய வேண்டும். இதனால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சோமனின் உலகத்தை அடைகிறான். யமுனபிரபாவத்துக்குச் (யமுனையின் தோற்றுவாய்க்கு{நதி மூலத்திற்கு}ச்) சென்று அங்கே நீராடும் ஒருவன்  குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு, சித்தர்களாலும் கந்தரவர்களாலும் வழிபடப்படும் சிந்து பிரபாவத்தை (சிந்து நதியின் தோற்றுவாய்) அடைந்து, ஐந்து நாட்கள் அங்கே தங்கினால், அவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.

அடுத்ததாக யாரும் அணுகுவதற்கு அரிதான தீர்த்தமான வேதிக்குச் செல்வதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன் ரிஷிகுல்யையும், வசிஷ்டையையும் அடைய வேண்டும். வசிஷ்டைக்குச் செல்லும் எந்த வகையினரும் அந்தண நிலையை அடைகின்றனர். ரிஷிகுல்யத்திற்குச் சென்று அங்கே நீராடி ஒரு மாதத்திற்கு மூலிகைகளை உண்டு வாழ்ந்து, தேவர்களையம் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன் முனிவர்களின் உலகத்தை அடைவான். பிறகு அடுத்ததாக பிருகுதுங்கத்தை அடையும் மனிதன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு, விப்ரமோட்சத்தை அடையும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு கிருத்திகை மற்றும் மாக தீர்த்தங்களை அடையும் ஒருவன், அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளின் பலன்களைவிட மேன்மையான பலன்களை அடைகிறான்.

வித்யை எனும் அற்புதமான தீர்த்தத்தை அடையும் மனிதன், அங்கே மாலையில் நீராடினால் அனைத்து ஞானங்களையும் திறமைகளையும் பெறுகிறான். பிறகு ஒருவன் பாவங்களை அழிக்கவல்ல மஹாஸ்ரமம் என்ற தீர்த்தத்தை அடைந்து ஒரு நாளைக்கு ஒரு பொழுது மட்டுமே உண்ண வேண்டும். இதனால் ஒருவன் பல மங்களகரமான பகுதிகளை அடைந்து தனக்கு முன்பான பத்து தலைமுறைகளையும், தனக்குப் பின்பான பத்து தலைமுறைகளையும் விடுவிக்கிறான். மஹாலயத்தில் ஒரு மாத காலம் தங்கி, அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் தனது அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டு, அபரிமிதமான தங்கத்தை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பெருந்தகப்பனால் {பிரம்மனால்} வணங்கப்படும் விதசிகத்தை அடைபவன் குதிரை வேள்வி செய்த பலனையும் உசானசின் நிலையையும் அடையலாம். பிறகு ஒருவன் சித்தர்களால் வழிபடப்படும் சுந்தரிகா என்ற தீர்த்தத்தை அடைந்தால் முன்னோர்கள் கண்ட அற்புத மேனி அழகைப் பெறுவார்கள்.

பிறகு புலனடக்கத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் பிராமணி தீர்த்தத்தை அடைந்து தாமரை நிறத் தேரில் பிரம்ம லோகத்தை அடைவான். பிறகு ஒருவன் சித்தர்களால் வழிபடப்படும் புனிதமான நைமிஷத்தை அடையவேண்டும். அங்கே தேவர்களுடன் சேர்ந்து பிரம்மனும் வசிக்கிறார். நைமிஷத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே ஒருவனின் பாதி பாவங்கள் அழிகின்றன. அதற்குள் நுழையும்போது அவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன் புலனடக்கத்துடன் நைமிஷத்தில் ஒரு மாத காலம் தங்க வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, உலகத்தில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் நைமிஷத்தில் உள்ளன. புலன்களில் இருந்து விடுபட்டு, ஒழுங்கு செய்யப்பட்ட உணவுமுறையுடன் அங்கு நீராடுபவன் பசு வேள்வி {கோமேத வேள்வி} செய்த பலனை அடைந்து, ஓ பாரதர்களில் சிறந்தவனே, தனக்கு முன்பும் பின்பும் உள்ள ஏழு தலைமுறையினரையும் புனிதப்படுத்துகிறான். உண்ணாதிருந்து நைமிஷத்தில் உயிரை விடுபவன், சொர்க்கலோகங்களில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். இது விவேகிகளின் கருத்தாகும். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, நைமிஷம் என்றும் எப்போதும் புண்ணியமானதே! புனிதமானதே!

அடுத்ததாக ஒருவன் கங்கோத்பேதத்தை அடைந்து மூன்று இரவுகள் உண்ணாதிருப்பதால் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து பிரம்மனைப் போல ஆகிறான். சரஸ்வதியில் {நதியில்} பயணித்து ஒருவன் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படையலிட வேண்டும். இதனால் ஒருவன் சரஸ்வதா உலகங்களில் மகிழ்ச்சியடைகிறான். பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் பாகுதம் செல்ல வேண்டும். ஓ கௌரவா {பீஷ்மா}, அங்கே ஓரிரவு தங்குபவன் சொர்க்கத்தை அடைந்து அங்கே வழிபடப்பட்டு தேவாஸ்திர வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு புனிதமான மனிதர்களால் அடிக்கடி பார்க்கப்படும் க்ஷீரவதிக்குச் செல்ல வேண்டும். அங்கே தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடுபவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் விமலசோகம் அடைந்து, அங்கே ஓர் இரவு வசிப்பவன் சொர்க்கத்தில் கொண்டாடப்படுகிறான்.

பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா},  சரயுவில் இருக்கும் கோப்ரதாரம் என்ற தீர்த்ததின் மகிமையால் {தசரத} ராமன், தனது பணியாட்களுடனும் மற்ற விலங்குகளுடனும் தனது உடலைத் துறந்த, அந்த அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, ராமனின் அருளாலும், ஒருவனது தன்னறங்களாலும் {தனது செயல்களின் அறங்களாலும்}, அத்தீர்த்தத்தில் நீராடுபவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறது. அவன் சொர்க்கத்தை அடைகிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன், ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மனே}, கோமதியில் இருக்கும் ராம தீர்த்தத்தை அடைந்து அங்கு நீராடுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து, தனது குலத்தைப் புனிதப்படுத்துகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அங்கே மற்றுமொரு தீர்த்தமான சதசாகஸ்ரகம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. புலன்களில் இருந்து விடுபட்டு, முறையான உணவுப்பழக்கத்துடன் இருக்கும் மனிதன், ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, ஒப்பற்ற தீர்த்தமான பர்த்துருஸ்தானத்தை அடைய வேண்டும். இதனால் ஒரு மனிதன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கோடி என்ற தீர்த்தத்தில் நீராடி கார்த்திகேயனை வழிபடும் மனிதன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைந்து, பெரும் சக்தியை அடைகிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்