Saturday, February 22, 2014

விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 104

Agastya stopped the growth of Vindhya! | Vana Parva - Section 104| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சூரியனோடு போட்டியிட்டு உயர்ந்த விந்தியம்; விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர்; கடலைக் குடிக்க வேண்டும் என்று தேவர்கள் அகஸ்தியரை வேண்டுவது; அனைவரும் சேர்ந்து பெருங்கடலிடம் செல்லல்...

யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "ஓ பெரும் தவசியே, கோபத்தால் மதியிழந்த விந்தியன் {விந்திய மலை}, ஏன் திடீரெனத் தனது உருவத்தை வளர்த்துக் கொண்டான் என்பதை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்"

அதற்கு லோமசர், "சூரியன், தனது உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தங்கமாக மின்னும் மலைகளின் ஏகாதிபதியான பெரும் மேருவை வலம் வந்தான். இதைக் கண்ட மலையான விந்தியன் சூரியனிடம், "நீ தினமும் மேருவைச் சுற்றி வலம் வந்து அவனை மதிக்கிறாய். ஓ ஒளியை உண்டாக்குபவனே, என்னையும் அதே போல் நீ வலம் வர வேண்டும்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட சூரியன் அந்தப் பெரும் மலையிடம் {விந்தியனிடம்}, "நான் எனது சுய விருப்பத்தின் பேரில் இந்த மலையை வலம் வந்து மதிக்கவில்லை. இந்த அண்டத்தைக் கட்டியவர்களால் எனது பாதை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது" என்றான் {சூரியன்}.



இதனால் அந்த மலையானவன், சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகளுக்குத் தடங்கல் செய்ய விரும்பி, பெரும் கோபத்துடன் தனது உருவத்தை வளர்த்தான். அனைத்து தேவர்களும் கூடி மலைகளின் பலம் வாய்ந்த மன்னனான விந்தியனிடம் வந்து அவனது நோக்கத்தில் இருந்து பின்வாங்கச் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவன் அவர்கள் சொன்ன எதையும் கவனிக்கவே இல்லை. பிறகு அந்தத் தேவர்கள் அனைவரும், ஆசிரமத்தில் வாழ்ந்து, தவத்தில் ஈடுபட்டு, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மனிதர்களில் சிறந்தவரும் அற்புத சக்திகளால் அனைவரையும் விஞ்சி நிற்பவருமான அகஸ்தியரிடம் சென்றனர்.


தேவர்கள் {அகஸ்தியரிடம்}, "மலைகளின் மன்னனான இந்த விந்தியன் கோபம் கொண்டு சூரிய சந்திர பாதைகளையும், நட்சத்திரங்களின் வழிகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறான். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {அகஸ்தியரே}, ஓ கொடைகளில் சிறந்தவரே, உம்மைத்தவிர வேறு யாராலும் அவனை {விந்தியனைத்} தடுக்க முடியாது. ஆகையால், அவனை அக்காரியத்தில் இருந்து பின்வாங்கச் செய்யும்" என்று கேட்டுக் கொண்டனர். தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {அகஸ்தியர்}, அந்த {விந்திய} மலையிடம் சென்றார். அவர் தனது மனைவியுடன் {லோபமுத்ராவுடன்} அந்த இடத்திற்கு வந்து விந்தியன் அருகே சென்று, அவனிடம், :ஓ! மலைகளில் சிறந்தவனே {விந்தியனே}, "ஒரு காரியத்திற்காக நான் தென்னகம் செல்ல விரும்புகிறேன், ஆகையால் நீ எனக்கு ஒரு பாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், நான் திரும்பி வரும்வரை எனக்காக நீ காத்திருக்க வேண்டும். நான் திரும்பி வந்த பிறகு, ஓ மலைகளின் மன்னா, நீ உனது உருவத்தை உனக்கு விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்" என்றார். ஓ எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, கச்சிதமான இந்த ஒப்பந்தத்தை விந்தியனிடம் ஏற்படுத்திக் கொண்ட வருணனின் மகன் {அகஸ்தியர்) இதுநாள் வரை தென்னகத்தில் இருந்து திரும்பவில்லை. அகஸ்தியரின் சக்தியால் விந்தியன் மேலும் வளர முடியவில்லை என்ற இக்கதையை நீ கேட்டுக் கொண்டபடி சொல்லிவிட்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள் எப்படிக் காலகேயர்களைக் கொன்றார்கள் என்பதைக் கேள்.

தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட மித்ரா வருண மைந்தன் அகஸ்தியர், "எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்? நீங்கள் என்னிடம் என்ன வரம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், அந்தப் புனிதரிடம் {அகஸ்தியரிடம்}, "ஓ பெருமைவாய்ந்தவரே, பெருங்கடலைக் குடிக்கும் பெரும் சாதனையை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறோம், பிறகு தேவர்களுக்கு எதிரிகளான காலகேயர்களையும் அவர்களைத் தொடர்பவர்களையும் எங்களால் கொல்ல முடியும்" தேவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தவசி "அப்படியே ஆகட்டும், மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரியத்தை நீங்கள் விரும்பியவாறே செய்கிறேன்" என்றார்.

ஓ அற்புதமான வாழ்வு வாழ்பவனே {யுதிஷ்டிரனே}, இப்படிச் சொன்ன அவர் {அகஸ்தியர்}, தவப் பயிற்சியில் பழுத்த முனிவர்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து ஆறுகளின் தலைவனான கடலை நோக்கி சென்றார். மனிதர்கள், பாம்புகள், தெய்வீக கலைஞர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், பெரும் தவசிகள் ஆகியோர் அந்த அற்புதமான நிகழ்வைக் காண விரும்பி அவரைத் தொடர்ந்து சென்றனர். பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து பரிதாபமாகக் கர்ஜித்துக் கொண்டும் அலைகளை அசைத்து ஆடிக் கொண்டும், தென்றல் நிறைந்தும், நுரை தள்ளிச் சிரித்தும், குகைகளின் அருகே நீரால் அடித்தும், வித்தியாசமான வகைகளான சுறாக்களாலும், அடிக்கடி வந்து போகும் பல்வேறு பறவைகளாலும் நிறைந்திருந்த அந்தப் பெரும் கடலின் அருகில் வந்தனர். அகஸ்தியர், தெய்வீகக் கலைஞர்கள், பெரும் பாம்புகள், பெரும் கொடைகள் கொண்ட தவசிகள் ஆகியோருடன் தேவர்கள் அந்த மகத்தான நீர்க்கழிவை {கடலை} அடைந்தனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்