Sunday, February 02, 2014

சாம்பலை மேனியில் பூசுதல்! - வனபர்வம் பகுதி 84இ

Rub ash on one's body! | Vana Parva - Section 84c | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர் 

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "அடுத்ததாக வாரணாசிக்குச் சென்று காளையைத் தனது குறியீடாகக் கொண்ட தெய்வத்தை {சிவனை} வழிபட்டு, கபிலஹ்ரதத்தில் நீராடுபவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைவான். பிறகு, ஓ குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே, அவிமுக்தம் என்ற தீர்த்தத்திற்குச் சென்று அங்கு தேவர்களுக்கு தேவனைக் காணும் புனிதப்பயணி, அந்தக் காட்சியின் நிமித்தமாகவே அந்தணரைக் கொன்ற பாவத்தில் இருந்தும் கூட விடுபடுகிறான். அங்கே தனது உயிரைக் கைவிடுபவன், விடுதலையைப் பெறுகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு அரிதான தீர்த்தமும் உலகத்தால் கொண்டாப்படுவதும், கங்கை சங்கமிக்கும் இடத்தில் இருப்பதுமான மார்க்கண்டேய  தீர்த்தத்தை அடையும் ஒருவன், அக்னிஷ்டோமா வேள்வியைச் செய்த பலனை அடைந்து, தனது குலத்தை விடுவிக்கிறான். பிறகு கயைக்குச் சென்று புலன்களை அடக்கி, பிரம்மச்சரியம் இருந்து சிறிதுகாலம் அங்கு தங்கியிருப்பவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தை மீட்கிறான். மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் அக்ஷயவடம் அந்தத் தீர்த்தத்தில் தான் இருக்கிறது. அங்கே பித்ருக்களுக்கு தானமளிக்கப்படும் எதுவாக இருந்தாலும் அது பன்மடங்காகிறது. அங்கே மகாநதியில் நீராடி தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் மனிதன் நித்தியமான உலகங்களை அடைந்து தனது குலத்தை மீட்கிறான்.


பிறகு தர்மவனத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பிரம்மசரத்தை அடைந்து அங்கே ஒரு இரவை கழிக்கும் மனிதன் பிரம்ம லோகத்தை அடைகிறான். அந்தத் தடாகத்தில் பிரம்மா ஒரு வேள்வித்தூணை எழுப்பியிருக்கிறான். அத்தூணை வலம் வரும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {பீஷ்மா}, பிறகு ஒருவன் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தேனுகா என்ற தீர்த்தத்தை அடையவேண்டும். அங்கே ஓரிரவு தங்கி எள்ளையும், பசுவையும் தானமாகக் கொடுப்பவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் சுத்தப்படுத்தப்பட்டு, ஒருவன் சந்தேகமற சோமனின் உலகத்தை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே அந்த மலைகளில் கபிலை என்ற பசு தனது கன்றுடன் உலாவுவது வழக்கம். ஓ பாரதா {பீஷ்மா}, அந்தப் பசு மற்றும் கன்றின் கால் தடயங்கள் இன்னும் இருப்பதாக நம்பப்படுகிறது. ஓ பாரதா, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {பீஷ்மா}, அக்கால்த் தடயங்களில் உண்டான தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் எப்பாவம் செய்திருந்தாலும் அப்பாவங்கள் கழுவப்படுகின்றன. பிறகு ஒருவன், திரிசூலம் தாங்கும் தெய்வத்தால் {சிவனால்} புனிதப்படுத்தப்பட்டிருக்கும் கிருத்திரவடத்தை அடைய வேண்டும். அங்கே காளையைத் தனது குறியீடாகக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} அணுகும் ஒருவன் சாம்பலைத் தன் மேனியில் பூசிக் கொள்ள வேண்டும். ஒருவன் அந்தணனாக இருந்தால், பனிரெண்டு வருட நோன்பு மேற்கொண்ட பலனை அடைகிறான். அவன் வேறு வகைகளைச் சார்ந்தவானாக இருந்தால், அவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.

பிறகு ஒருவன் இனிய மெல்லிசையால் நிறைந்த உதயந்த மலைகளை அடைய வேண்டும். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அங்கே சாவித்திரியின் கால் தடம் இன்னும் தெரிகிறது. கடும் நோன்பிருந்து காலை, நடுப்பகல் மற்றும் மாலை வழிபாடுகளை இங்கே செய்யும் அந்தணன், பனிரெண்டு வருடம் இச்சேவையைச் செய்த பலனை அடைகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே, அங்கே, புகழ்மிக்க யோனிதுவாரம் இருக்கிறது. அங்கே செல்லும் ஒரு மனிதன் மறுபிறவி பெறும் வலியில் இருந்து விடுபடுகிறான். தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்கள் அனைத்தையும் கயையில் கழிப்பவன் நிச்சயமாக சுத்திகரிக்கப்பட்டவனாகி, ஓ மன்னா {பீஷ்மா}, தனக்கு முன்பும் பின்பும் உள்ள ஏழு தலைமுறைகளைக் காக்கிறான். தனது பிள்ளைகளில் ஒருவன் கயைக்குச் செல்லவோ அல்லது குதிரை வேள்வி செய்யவோ அல்லது நீலக்காளையை தானம் செய்யவோ வேண்டுமானால் ஒருவன் நிறைய மகன்களைப் பெற்றுக் கொள்ள விரும்ப வேண்டும்..

ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி பல்குவை அடைய வேண்டும். இதனால் அவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து பெரும் வெற்றியையும் அடைகிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன், கட்டுப்பட்ட ஆன்மாவுடன் தர்மப்பிரஸ்தத்தை அடைய வேண்டும். ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, அங்கே, அறம் என்பது நிலைத்து இருக்கிறது. அங்கே இருக்கும் கிணற்றிலுள்ள நீரை அருந்தி, குளித்துத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட ஒருவன் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன்களைச் செலுத்தி தனது பாவங்கள் அனைத்தையும் கழுவிக்கொண்டு சொர்க்கத்திற்கு உயர்கிறான். அத்தீர்த்ததில் தான் மதங்கப் பெருமுனிவரின் ஆசிரமம் இருக்கிறது. களைப்பையும் துன்பத்தையும் போக்கும் அந்த அழகிய ஆசிரமத்திற்குள் நுழையும் ஒருவன்  கவாயன {கவாமயநயஜ்ஞ} வேள்வி செய்த பலனை அடைந்து, அங்கே இருக்கும் அறத்தேவனைத் {தர்மதேவனின் உருவத்தைத்} தொடுவதால், ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.

ஓ மன்னா, பிறகு ஒருவன், பிரம்மஸ்தானம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே பிரம்மனை அணுகும் ஆடவர்களில் காளையே, ஓ பலம் பொருந்திய ஏகாதிபதியே {பீஷ்மா}, ராஜசூயம் மற்றும் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மனிதர்களின் மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி ராஜசூயத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் (சொர்க்கத்தில்) மகிழ்ச்சியாக வாழும்  காக்ஷீயரை (முனிவரைப்) போல வாழ்கிறான். தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்ட ஒருவன் யக்ஷிணிக்கு படையலிட்டதை உண்ண வேண்டும். இதனால் யக்ஷிணியின் அருளை அடைந்து, அந்தணரைக் கொன்ற பாவத்திலிருந்தும் கூட ஒருவன் விடுபடுகிறான். பிறகு மணிநாகத்தை அடையும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ பாரதா {பீஷ்மா} மணிநாகத்தீர்த்தத்திற்குச் சம்பந்தப்பட்ட எதையும் உண்ணும் ஒருவன், கடும் விஷம் கொண்ட பாம்பால் கடிக்கப்பட்டாலும், அதன் விஷத்துக்கு வீழ்வதில்லை. அங்கே ஒரு இரவு தங்கும் ஒருவன் தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறான்.

பிறகு ஒருவன் பிரம்ம முனிவர் {பிரம்மரிஷி} கௌதமருக்குப் பிடித்தமான வனத்தை அடைய வேண்டும். அங்கே அகலிகையின் மடுவில் நீராடும் ஒருவன் மேன்மையான நிலையை அடைகிறான். பிறகு ஸ்ரீயின் உருவத்தைக் காணும் ஒருவன் பெரும் செழிப்பை அடைகிறான். அந்தத் தீர்த்ததில் மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் ஒரு கிணறு இருக்கிறது. அதில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அங்கே அரசமுனியான ஜனகனின் மற்றுமொரு கிணறும் இருக்கிறது. அது தேவர்களாலும் வணங்கப்படுகிறது. அக்கிணற்றில் நீராடும் ஒருவன் விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒருவன் அனைத்து பாவங்களையும் அழிக்கும்  விநசத்தை அடைய வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சோமனின் உலகத்தை அடைகிறான்.

பிறகு ஒருவன் அனைத்துத் தீர்த்தங்களின் நீராலும் உண்டாக்கப்பட்ட கந்தகியை அடைவதால், அவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சூரிய உலகத்திற்கு உயர்கிறான். பிறகு ஒருவன் விசல்யை என்ற மூன்று உலகத்திலும் கொண்டாடப்படும் இடத்தை அடைவதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மா}, துறவிகளின் வனமான ஆதிவங்கத்தை அடையும் ஒருவன், சந்தேகமற குஹயர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அடைவான். அடுத்ததாக, சித்தர்களால் அடிக்கடி அடையப்படும் கம்பனை என்ற நதியை அடைபவன், பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா} மகேஸ்வரி என்று அழைக்கப்படும் ஓடைக்கு வரும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தை மீட்கிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்