Sunday, February 02, 2014

பூர்வ ஜென்ம ஞாபகங்கள்! - வனபர்வம் பகுதி 84ஈ

Recollections of former life! | Vana Parva - Section 84e | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர் 

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் தேவர்களின் குளத்திற்குச் சென்று துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்பை அடைந்து, குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் சோமபதத்தை அடைய வேண்டும். அங்கே இருக்கும் மகேஸ்வரபதத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அத்தீர்த்தத்தில் கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன என்பது நன்கறியப்பட்டதே. ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {பீஷ்மனே}, ஆமை வடிவில் இருந்த ஒரு தீய அசுரன் ஒருவன் அந்தத் தீர்த்தத்தை அபகரித்துச் சென்றான். அப்போது பலமிக்க விஷ்ணு அவனிடம் இருந்து அதை மீட்டான். அத்தீர்த்தத்தில் ஒருவன் தனது நீர்க்கடன்களைச் செலுத்துவதால் பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான்.


ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் நாராயணன் என்றும் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், ஆதித்தியர்களும், வசுக்களும், ருத்திரர்களும் அத்தீர்த்தத்தில் கூடி அந்த ஜனார்த்தனனை {விஷ்ணுவை} வழிபடுகின்றனர். அற்புதமான செயல்கள் செய்யும் அந்த விஷ்ணு அங்கே சாலக்கிராமன் என்று அறியப்படுகிறான். {இது பத்ரிநாத் மற்றும் கண்டகி நதியாக இருக்கலாம்} மூன்று உலகங்களின் தலைவனான, வரங்கள் அருளும் அந்த நிலைத்த விஷ்ணுவை அணுகுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா} அவ்விடத்தில் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் ஒரு கிணறு இருக்கிறது. நான்கு கடல்களும் அந்தக் கிணற்றுக்குள் எப்போதும் இருக்கின்றன. ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் துரதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பை அடைகிறான். அங்கிருக்கும் வரமருளும் நித்தியமான கடுமை நிறைந்த மகாதேவனைக் காண்பதால், ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் மேகத்திலிருந்து வெளிவரும் நிலவெனப் பிரகாசிக்கிறான். பிறகு தூய மனதுடனும், புலனடக்கத்துடனும் ஜாதிஸ்மரத்தில் நீராடும் ஒருவன் சந்தேகமற தனது பூர்வ ஜென்ம ஞாபகங்களை அடைவான்.

பிறகு மகேஸ்வரபுரத்தை அடையும் ஒருவன், காளையைக் குறியீடாகக் கொண்ட தெய்வத்தை {சிவனை} வணங்கி, சிறிது காலம் உண்ணா நோன்பிருப்பதால் அவனது விருப்பங்கள் யாவையும் சந்தேகமற அடைகிறான். பிறகு பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் வாமனத்திற்குச் சென்று ஹரி தெய்வத்தை வணங்கி அனைத்து துரதிர்ஷ்டங்களில் இருந்தும் ஒருவன் விடுபடுகிறான். பிறகு ஒருவன், அனைத்துப் பாவங்களையும் அகற்றும் குசிகரின் ஆசிரமத்தை அடைய வேண்டும். பிறகு கௌசிகி நதியை அடைந்து பெரும்பாவங்களாக இருப்பினும் அங்கே நீராடுவதால் தொலைந்துவிடும். ஆகையால், ஒருவன் அங்கே நீராட வேண்டும். இதனால் அவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {பீஷ்மா},  பிறகு ஒருவன் அற்புதமான சம்பக வனத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவைக் கழிப்பதால் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை ஒருவன் அடைகிறான். அங்கே பெரும் பிரகாசமிக்க விஸ்வேஸ்வரனை அவனது துணையுடன் காணும் மனிதன், ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மா}, மித்ர வருணனின் உலகத்தை அடைகிறான். அங்கே மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பவன், அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் கன்னியாசம்வேத்ய தீர்த்தத்தை புலனடக்கத்துடனும் முறைப்படுத்தப்பட்ட உணவு வழக்கத்துடனும் அடைய வேண்டும். அதனால், ஓ மனிதர்களில் காளையே, ஒருவன் படைப்புத் தலைவனான மனுவின் உலகத்தை அடைகிறான். அத்தீர்த்தத்தில் அரிசியைத் தானம் கொடுத்தாலோ அல்லது அங்கே தானமளிக்கப்படும் எந்தப் பரிசாக இருந்தாலும் அது பெருகும் என்று கடும் நோன்புகள் கொண்ட முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்து மூன்று உலகத்தாலும் நிஷ்சீரம் என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்திற்குச் செல்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, நிஷ்சீரத்தில் தானமளிக்கும் ஒருவன் பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். அந்தத் தீர்த்தத்தில் மூன்று உலகத்தாலும் அறியப்படும் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு தெய்வீக முனிவர்களால் அடிக்கடி பயணிக்கப்படும் தேவகூடத்தை அடையும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு, குசிக முனிவரின் மகனான விஸ்வாமித்திரயை வெற்றியடைந்த இடமான கௌசிக முனிவரின் தடாகத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ வீரனே {பீஷ்மா} அங்கே கௌசிகத்தில் ஒருமாதம் தங்குபவன், ஓ பாரத குலத்தின் காளையே, அதனால் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். தீர்த்தங்களில் சிறந்ததான மஹாஹ்ரதத்தை அடைந்து வசிக்கும் ஒருவன் துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்படைந்து, அபரிமிதமான தங்கத்தைத் தானமாகக் கொடுத்த பலனை அடைகிறான்.

பிறகு ஒருவன் வீராஸ்ரமத்தில் வசிக்கும் கார்த்திகேயனைக் {முருகனைக்} கண்டு ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடையலாம். பிறகு, மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் அக்னிதாரத்தை அடைந்து, அங்கே நீராடி, தேவர்களுக்குத் தேவனான நித்தியமான வரமளிக்கும் விஷ்ணுவைக் காண்பதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு பனியால் முடி மூடப்பட்டிருக்கும் மலைகளின் அருகே இருக்கும் பெருந்தகப்பனின் {பிரம்மனின்} குளத்தை அடைந்து அங்கே நீராடும் ஒரு மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பெருந்தகப்பனின் குளத்தில் இருந்து கீழிறங்கும் ஒருவன் மூன்று உலகத்தாலும் குமாரதாரம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் தனது காரியங்கள் அனைத்தும் ஈடேறிவிட்டதாகக் கருதலாம். அத்தீர்த்தத்தில் மூன்று நாள் உண்ணாதிருந்து, அந்தணரைக் கொன்ற பாவத்தில் இருந்தும் விடுபடலாம்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி, மூன்று உலத்திலும் புகழ்பெற்ற கௌரி என்ற பெரும்பெண் தெய்வத்தின் சிகரத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அதன் மீதேறி ஸ்தனகுண்டத்தை அடைய வேண்டும். ஸ்தனகுண்டத்தின் நீரைத் தொடுவதால் ஒரு மனிதன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். அத்தீர்த்தத்தில் நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன்  குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து இந்திரனின் உலகை அடைகிறான். தேவர்களால் அடிக்கடி காணப்படும் தாமரார்ண கிணற்றை அடையும் ஒருவன், ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, மனித வேள்வி செய்த பலனை அடைகிறான். கிருத்திகை, கௌசிகி மற்றும் அருணை சங்கமிக்கும் சங்கமத்தில் மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்கும் படித்த மனிதன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஊர்வசி மற்றும் சோமஸ்ராம தீர்த்தங்களை அடையும் ஒரு விவேகி, கும்பகர்ணாஸ்ரத்தில் நீராடி உலகத்தால் வழிபடப்படுவான். தடுமாறாத நோன்புகளுடன் பிரம்மச்சரியம் இருந்து கோமுகத்தின் நீரைத் தொடுவதால் ஒருவன் முந்தைய ஜென்ம ஞாபகங்களை மீட்டெடுக்கிறான்.

பிறகு நந்தா என்று அழைக்கப்பட்டும் வேகமாகச் செல்லும் நதியை அடையும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, கட்டுப்பட்ட ஆன்மாவுடன் இந்திரனின் உலகத்துக்கு உயர்கிறான். பிறகு கொக்குகள் அழியும் ரிஷபத் தீவுக்குச் சென்று அங்கே சரஸ்வதியில் நீராடும் ஒருவன் சொர்க்கத்தில் சுடரெனப் பிரகாசிக்கிறான். பிறகு ஔத்தாலகம் என்றழைக்கப்படும் தீர்த்ததிற்குச் செல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். அடுத்து, அந்தணர்களால் அதிகம் பார்க்கப்படும் தர்மம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அதனால் ஒருவன் வாஜபேயி வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் மதிக்கப்படுவான். பிறகு சம்பைக்குச் சென்று பகீரதியில் {கங்கையில்} நீராடி, தண்டபர்ணத்தில் சிறிது காலம் தங்கி ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் புனிதமான தடாகமான லலிதகாவை அடையவேண்டும். அறம்சார்ந்தவர்கள் அங்கே இருக்கிறார்கள். இதனால் ஒருவன் ராஜசூய வேள்வி செய்ததாகக் கருதப்பட்டு சொர்க்கத்தில் உயர்வாக மதிக்கப்படுகின்றான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்