Tuesday, February 04, 2014

ஓம் என்ற எழுத்தின் சக்தி! - வனபர்வம் பகுதி 85ஆ

The power of the syllable Om! | Vana Parva - Section 85b | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர் 

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் புலனடக்கத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் துங்ககத்தை அடைய வேண்டும். பழங்காலத்தில் அங்கேதான் சாரஸ்வத முனிவர் துறவிகளுக்கு வேதங்களைக் கற்பித்தார். வேதங்கள் (முனிவர்களால் மறக்கப்பட்டுத் தொலைந்த போது, அந்த அங்கிரச குமாரன் {சாரஸ்வதர்}, முனிவர்களின் மேலாடைகள் {துண்டு என்று நினைக்கிறேன்} மேல் வசதியாக அமர்ந்து கொண்டு, "ஓம்" என்ற முக்கிய எழுத்தை முழுவதும் முறைப்படி உச்சரித்தார். இதன்காரணமாக, துறவிகள் அனைவரும் தாங்கள் ஏற்கனவே கற்றதை நினைவு கூர்ந்தனர். அந்த இடத்தில்தான் முனிவர்களும், தேவர்களும் வருணன், அக்னி, பிரஜாபதி, ஹரி என்று அழைக்கப்படும் நாராயணன், மகாதேவன், மற்றும் பெரும் பிரகாசம் கொண்ட சிறப்புமிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மா} ஆகியோரும் வேள்வியை நடத்த பிரகாசித்துக் கொண்டிருந்த பிருகுவை நியமித்தனர். தெளிந்த நெய்யை முறைப்படி பானபலியாகக் {libation} கொடுத்து அக்னியைத் திருப்தி செய்த சிறப்புமிக்கப் பிருகு, ஒருமுறை அக்னேயதான வேள்வியை முனிவர்களுக்காக நடத்தினார். அந்த வேள்விக்குப் பிறகு முனிவர்களும் தேவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு ஒருவர் பின் ஒருவராகத் திரும்பினர். துங்கக வனத்தில் நுழையும்  ஆணோ பெண்ணோ, ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர். ஓ வீரனே, ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் புலனடக்கத்துடனும், முறையான உணவுக்கட்டுப்பாட்டுடனும் ஒரு மாதம் தங்க வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, இதனால் ஒருவன் பிரம்மனின் உலகத்தை அடைந்து, தனது குலத்தைக் காக்கிறான்.

பிறகு ஒருவன் மேதாவிகத்தை அடைந்து, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்த வேண்டும். இதனால் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து, ஞாபக சக்தியையும் புத்திகூர்மையையும் பெறுகிறான். அந்தத் தீர்த்ததில் {மேதாவிகத்தில்}, முழு உலகத்தாலும் அறியப்பட்ட காலஞ்சரம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. அங்கே இருக்கும் தெய்வீகத் தடாகத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா, ஒருவன் அங்கே நீராடிய பிறகு அந்தக் காலஞ்சர மலையில் (தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும்) நீர்க்கடன் செலுத்தினால், சந்தேகமற சொர்க்கத்தில் மதிக்கப்படுகின்றான். பிறகு ஒருவன், ஓ ஏகாதிபதி {பீஷ்மா} அனைத்துப் பாவங்களையும் அழிக்கவல்ல மந்தாகினி நதியை அடைந்து, மலைகளில் சிறந்த சித்திரகூடத்தையும் அடைந்து, அங்கே நீராடி தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் வழிபாடுகளைச் செய்பவன், குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து மேன்மையான நிலையை அடைகிறான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான பர்த்திரிஸ்தானத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே தேவர்களின் தளபதியான கார்த்திகேயன் {முருகன்} இருக்கிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அந்தப் பகுதிக்குப் பயணம் செய்வதாலேயே ஒருவன் வெற்றியை அடைகிறான். பிறகு கோடி என்றழைக்கப்படும் தீர்த்ததில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு அந்தக் கோடியை வலம் வரும் ஒருவன் ஜேஷ்டஸ்தானத்தை அடைய வேண்டும். அங்கே சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டு இருக்கும் மகாதேவனைக் {சிவனைக்} காண வேண்டும். ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கே ஒரு கொண்டாடப்படும் கிணறு இருக்கிறது. ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அந்தக் கிணற்றில் நான்கு கடல்களும் இருக்கின்றன. ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அங்கே கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவோடு தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட்டு நீராடும் ஒருவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மேன்மையான நிலையை அடைகிறான். ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பெருமைவாய்ந்த சிருங்கபேரபுரத்தை அடைய வேண்டும். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, முன்பொரு காலத்தில் தசரதனின் மகனான ராமன் இங்கேதான் (கங்கையைக்) கடந்து சென்றான். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். புலனடக்கத்துடனும், பிரம்மச்சரியத்துடனும் அங்கே இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, *வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.

பிறகு ஒருவன் உயர்ந்த நுண்ணறிவு கொண்ட மகாதேவனைப் பிரதிஷ்டை செய்திருக்கும் மயூரவடத்தை அடைய வேண்டும். அங்கே அந்தத் தெய்வத்தைக் கண்டு, அவனை வணங்கி வலம் வருபவன், ஓ பாரதா {பீஷ்மா} கணபத்திய நிலையை அடைகிறான். அந்தத் தீர்த்தத்தில் இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவனது அனைத்துப் பாவங்களும் கழுவப்படுகின்றன. ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், முனிவர்களால் அதன் பெருமைகள் பாடப்படும் பிரயாகையை அடைய வேண்டும். பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், திக்குகளின் தெய்வங்களும், லோகபாலர்களும், சித்தர்களும், உலகங்களால் வழிபடப்படும் பித்ருக்களும், பெரும் முனிவர்களான சனத்குமாரர்களும் மற்றவர்களும், களங்கமற்ற பிரம்ம முனிவர்களான அங்கிரசும் மற்றவர்களும், நாகர்களும், சுபர்ணர்களும், சித்தர்களும், பாம்புகளும் {நாகர்களும்}, ஆறுகளும், கடல்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், பிரஜாபதியுடன் கூடிய தலைவன் ஹரியும் அங்கே  {பிரயாகையில்} வசிக்கின்றனர். அத்தீர்த்ததில் இருக்கும் மூன்று அக்னிக்குண்டங்களுக்கு மத்தியில், தீர்த்தங்களில் முதன்மையான கங்கை வேகமாக வருகிறாள். அங்கே அந்தப் பகுதியில்தான் உலகத்தைச் சுத்தப்படுத்தும் சூரியனின் மகளான, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் யமுனை, கங்கையுடன் இணைகிறாள்.

கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட நாடு பெண்ணின் இடையைப் போன்று இருக்கிறது என்று கருதப்படுகிறது. பிரயாகையே அதன் முதன்மையான இடம் என்றும் கருதப்படுகிறது. பிரவேள்வி, பிரதிஷ்டாம், கம்பளம், அஸ்வதரம், போகவதி ஆகிய தீர்த்தங்கள் படைப்பாளனின் {பிரம்மாவின்} வேள்வி மேடைகளாகும். ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மா} அந்த இடங்களில் வேதங்களும் வேள்விகளும் வடிவம் கொண்டவையாக இருக்கின்றன. துறவை செல்வமாகக் கொண்ட முனிவர்கள் பிரம்மனை வழிபடுகின்றனர். தேவர்களும், எல்லைகளை ஆளுபவர்களும் {மன்னர்களும்} அங்கே தங்கள் வேள்விகளை நடத்துகின்றனர். ஓ மேன்மையானவனே, இருப்பினும் இந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் பிரயாகையே மிகவும் புனிதமானது என்று கற்றோர் சொல்கின்றனர். உண்மையில் அது மூன்று உலகிலும் முதன்மையான தீர்த்தமாகும். அந்தத் தீர்த்ததிற்குச் {பிரயாகைக்குச்} சென்று, அதன் {பிரயாகையின்} புகழைப் பாடி, அங்கிருந்து சிறிது மண்ணை எடுத்துக் கொள்பவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அங்கே இருக்கும் சங்கமத்தில் நீராடும் ஒருவன், ராஜசூய வேள்வி செய்த பலனையும், குதிரை வேள்வி செய்த பலனையும் அடைகிறான். இந்த வேள்விக்கான இடம் தேவர்களால் கூட வழிபடப்படுகிறது. ஓ பாரதா {பீஷ்மா} ஒரு மனிதன் அங்கே சிறிதளவே தானம் செய்தாலும் அது ஆயிரம் மடங்காகப் பெருகும்.

ஓ குழந்தாய் {பீஷ்மா}, வேதங்களின் உரையோ, மனிதர்களின் கருத்துகளோ, பிரயாகையில் உயிரை விட விரும்பும் உனது மனதை மாற்றாது இருக்கட்டும். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பத்தாயிரம் {ten thousand} தீர்த்தங்களுடன், அறுபது கோடி {600 million) தீர்த்தங்களும் பிரயாகையில் இருக்கின்றன. கங்கை மற்றும் யமுனையின் சங்கமத்தில் நீராடும் ஒருவன் நால்வகை அறிவு சம்பந்தமான பலன்களையும், உண்மையின் பலன்களையும் அடைகிறான். அந்தப் பிரயாகையில் வாசுகியின் தீர்த்தமான போகவதி என்றழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அந்தக் கங்கையில், பத்து குதிரை வேள்விகளின் பலனைத் தரும் மூன்று உலகத்திலும் புகழோடு இருக்கும் ராமப்பிரப்பதன தீர்த்தம்  இருக்கிறது. ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, கங்கையில் எங்கேனும் நீராடும் மனிதன் குருக்ஷேத்திரப் பயணத்திற்கு ஒப்பான பலனை அடைகிறான். இருப்பினும், கனகலத்தில் அதைவிட அதிகப் பலனை அடைகிறான். பிரயாகையில் கனகலத்தைவிட அதிக பலனை அடைகிறான். நூறு பாவங்களைச் செய்த ஒருவன் கங்கையில் நீராடினால், அதன் நீரால் அவனது பாவங்கள் அனைத்தும் எரிபொருளை விழுங்கும் நெருப்பைப் போலக் கழுவப்படும். சத்திய யுகத்தில் அனைத்து தீர்த்தங்களும் புனிதமானவை என்றும், திரேதா யுகத்தில் புஷ்கரை மட்டுமே அப்படி என்றும், துவாபரையில் குருக்ஷேத்திரம் என்றும், கலியுகத்தில் கங்கை மட்டுமே புனிதம் என்றும் சொல்லப்படுகிறது.

*******************************************

* வாஜபேய வேள்வி என்றால் என்ன? என்று நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். ஆறு சோம வேள்விகளில் முக்கியமான ஒன்றுதான் வாஜபேய வேள்வி. அதில் அந்த வேள்வியின் தலைவன் {எஜமானன்} சடங்கு நீராடி  வர வேண்டும். வேள்வியின் முடிவில் மன்னனே அத்தலைவனுக்கு {எஜமானனுக்கு} வெண்குடை பிடிக்க வேண்டும். "வாஜ" என்றால் அரிசி {உணவு} என்று பொருள். "பேய" என்றால் பானகம் என்று பொருள். வாஜபேயம் என்ற பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, அவ்வேள்வி அபரிமிதமான பயிர் உற்பத்தியையும், அபரிமிதமான நீரையும் கொடுக்கும். அவ்வேள்வியில் சோமரச ஹோமம், பசுஹோமம் (23 விலங்குகள்), அன்னம் அல்லது வாஜ ஹோமம் {அதாவது உணவு} ஆகியவை அடக்கம். வேள்வித்தலைவன் மீதியிருக்கும் அரசியில் குளிப்பதால், அதாவது, நீரைப்போல அரிசி அவன் மீது ஊற்றப்படுவதால் "வாஜபேயம்" என்று அழைக்கப்படுகிறது. ஆதாரம் : http://www.kamakoti.org/hindudharma/part19/chap6.htm


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்