Monday, February 03, 2014

குமரிக்கு அப்பால் நடுக்கடலில் ஒரு தீர்த்தம்! - வனபர்வம் பகுதி 85அ

A tirtha after Kanya in the midst of the sea! | Vana Parva - Section 85a | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு அற்புதமான தீர்த்தமான சம்வேத்திய தீர்த்தத்தை மாலைப்பொழுதில் அடைந்து, அதன் நீரைத் தொடுவதால் ஒருவன் நிச்சயமாக அறிவைப் பெறுகிறான். முற்காலத்தில் {தசரத} ராமனின் அருளால் உண்டான லௌஹித்ய தீர்த்தத்தை அடைந்தால் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு கரதோயை நதியை அடையும் ஒருவன், மூன்று இரவுகள் உண்ணாதிருப்பதால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். இந்த விதி படைப்பாளியாலேயே {பிரம்மனாலேயே} உண்டாக்கப்பட்டது. ஓ மன்னா {பீஷ்மா}, கடலில் கங்கை கலக்கும் இடத்தை அடையும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனைப் போன்று பத்து மடங்கு பலனை அடைவான் என்று ஞானிகள் கூறுகின்றனர். ஓ மன்னா {பீஷ்மா} கங்கையின் மறு கரைக்குக் கடந்து சென்று, அதில் நீராடி அங்கே மூன்று இரவுகள் வசிப்பவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.


பிறகு ஒருவன் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வைதரணியை அடைய வேண்டும். அடுத்ததாக விராஜம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடையும் ஒருவன் சந்திரனைப் போலப் பிரகாசிப்பவனாகி, தனது குலத்தைப் புனிதமாக்கி, அதைக் காத்து, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். விராஜத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைந்து தனது குலத்தை புனிதப்படுத்துகிறான். சுத்தத்துடன் சோணம் மற்றும் ஜோதிரத்தியையின் சங்கமத்தில் வசிக்கும் ஒருவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்துவதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். அடுத்ததாக, சோணம் மற்றும் நர்மதையின் பிறப்பிடங்களை உள்ளடக்கிய வம்சகுல்மத்தின் நீரைத் தொடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.

ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, அடுத்ததாக கோசலத்தில் ரிஷபம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தில் சிறிது காலம் தங்குபவன் அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருந்தால் வாஜபேய வேள்வி செய்த பலனையும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனையும் அடைந்து, தனது குலத்தையும் காக்கிறான். கோசலத்தை அடையும் மனிதன் அங்கே இருக்கும் கால தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதனால் ஒருவன் நிச்சயமாக பதினோரு காளைகளை தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா} புஷ்பவதியில் நீராடி, மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் தனது குலத்தைப் புனிதப்படுத்தி, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு, ஓ பாரத குலத்தில் முதன்மையானவனே {பீஷ்மா}, பதரிகா என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைந்து, சொர்க்கத்தை அடைகிறான். அடுத்ததாக சம்பையை அடைந்து, பாகிரதியில் நீராடும் ஒருவன், தண்டத்தைக் காண்பதால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான்.

பிறகு ஒருவன் புண்ணியவான்கள் இருக்கும் புனிதமான லபேடிகையை அடைய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவன் வாஜபேய வேள்வியைச் செய்த பலனை அடைந்து தேவர்வகளால் மதிக்கப்படுகிறான். அடுத்ததாக ஜமதக்னேயன் {பரசுராமன்} வசிக்கும் மகேந்திரம் என்று அழைக்கப்படும் மலையை அடைந்து, ராமனின் {பரசுராமனின்} தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, இங்கே மதங்கரின் கேதாரம் என்ற தீர்த்தம் இருக்கிறது. ஒ குரு குலத்தில் முதன்மையானவனே {பீஷ்மனே}, அங்கே நீராடுவதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஸ்ரீ {ஸ்ரீபர்வதம்} என்ற மலையை அடைந்து, அங்கிருக்கும் ஓடையின் நீரைத் தொட்டு காளையைத் தனது குறியீடாகக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} வணங்கினால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஸ்ரீ என்ற அந்த மலையில் பிரகாசமிக்க மகாதேவன் {சிவன்}, தேவியுடன் மகிழ்ச்சியாக வசிக்கிறான். பிரம்மனும் மற்ற தேவர்களும் கூட அங்கே வசிக்கின்றனர். அங்கிருக்கும் தேவத்தடாகத்தில் சுத்தமான தெளிந்த மனதுடன் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து உயர்ந்த வெற்றியை அடைகிறான். அடுத்ததாக பாண்டிய நாட்டில் தேவர்களால் வழிபடப்படும் ரிஷப மலையை அடைபவன், வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் மகிழ்கிறான்.

பிறகு ஒருவன் அப்சரஸ்கள் அடிக்கடி செல்லும் காவேரி ஆறுக்குச் செல்ல வேண்டும். ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கு நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு கடற்கரையில் இருக்கும் கன்யா {கன்யாகுமாரி} தீர்த்தத்தை அடைந்து அதன் நீரைத் தொடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா} பிறகு ஒருவன், கடலுக்கு மத்தியில் பிரம்மாவின் தலைமையிலான தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், பூதங்களும், யக்ஷர்களும், பிசாசர்களும், கின்னரர்களும், பெரும் நாகர்களும் {மகோரகர்களும்}, சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், மனிதர்களும், பன்னகர்களும், ஆறுகளும், கடல்களும், மலைகளும் எங்கு உமையின் தலைவனை {சிவனை} வழிபடுகிறார்களோ, அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருந்து அந்த ஈசானனை {சிவனை} வணங்க வேண்டும். இதனால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து கணபத்திய {கணங்களின் தலைவன்} நிலையை அடைகிறான். அங்கே பனிரெண்டு இரவுகள் தங்குவதால் ஒருவனது ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறது.

பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் காயத்ரி என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே மூன்று இரவுகள் வசிக்கும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா} அங்கே அந்தணர்கள் காரியத்தில் ஒரு வினோதமான நிகழ்வு நடக்கிறது. ஒரு பிராமணத்தி மூலமோ அல்லது வேறு பெண்ணின் மூலமோ பிறந்த ஒரு அந்தணன் அங்கே காயத்ரியை உச்சரித்தால் அது ஸ்வரமும் நியமமும் உள்ளதாக இருக்கிறது. அதுவே அந்தணனில்லாத மனிதன் அப்படி உரைக்க முடிவதில்லை. அந்தண முனிவரான சம்வர்த்தரின் அடைவதற்கு அரிதான குளத்தை {வாவியை} ஒருவன் அடைந்தால் அவன் மேனி அழகையும் செழிப்பையும் அடைகிறான்.

பிறகு வேணையை அடைந்து, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்யும் ஒருவன் மயில்களாலும் நாரைகளாலும் இழுக்கப்படும் தேரை {விமானமாக இருக்கும் என்று நினைக்கிறேன்} அடைகிறான். அடுத்ததாக, சித்தர்களால் அடிக்கடி அணுகப்படும் கோதாவரியை அடைபவன் பசு வேள்வி செய்த பலனை அடைந்து, வாசுகியின் அற்புதமான உலகத்தை அடைகிறான். பிறகு வேணையின் சங்கமத்தில் நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு வரதாவின் சங்கமத்தில் மூழ்கி எழும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு பிரம்மஸ்தானத்தை அடைந்து, மூன்று இரவுகள் தங்கும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான். 

பிறகு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், பிரம்மச்சரியத்துடனும் குசப்லவனத்தை அடையும் ஒருவன், அங்கே மூன்று இரவுகள் தங்கி நீராடுவதால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கிருஷ்ண வேணையின் நீரினால் உண்டான தேவஹ்ரதம் ஜாதிஸ்மரஹ்ரதம் என்கிற குளத்திலும் நீராடினால் முற்பிறப்புகளின் நினைவுகளை அடைகிறான். அங்கேதான் தேவர்கள் தலைவன் நூறு வேள்விகளைச் செய்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அங்கே ஒருவன் பயணம் செய்வதாலேயே அவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு சர்வதேவஹ்ரதத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான்.

பிறகு ஒருவன் மிகப்பெரும் புனிதம் வாய்ந்த பயோஷ்ணி என்ற நீரில் சிறந்த நீரைக் கொண்ட குளத்தை அடையும் ஒருவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு புனிதமான காடான தண்டகத்தை அடையும் ஒருவன், அங்கே (அக்கானகத்தில் இருக்கும் நீரில்) நீராட வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, ஓ பாரதா, இதனால் ஒருவன் உடனே, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். அடுத்ததாக சரபங்கரின் ஆசிரமத்தையும், சிறப்பு மிக்க சுகரின் ஆசிரமத்தையும் அடையும் ஒருவன், துரதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பை அடைந்து தனது குலத்தைப் புனிதப்படுத்துகிறான். 

பிறகு ஒருவன் ஜமதக்னியின் மகன் {பரசுராமன்} முன்பு வசித்த சூர்ப்பாரகத்தை அடைய வேண்டும். அங்கே ராமனின் {பரசுராமனின்} தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் செய்த பலனை அடைகிறான். அடுத்ததாக புலனடக்கத்துடனும் முறையான உணவுப் பழக்கத்துடனும் சப்தகாதுவாரத்தில் நீராடும் ஒருவன் பெரும் பலன்களை அடைந்து தேவர்களின் உலகத்தை அடைகிறான். அடுத்ததாக புலனடக்கத்துடனும் முறையான உணவுப் பழக்கத்துடனும் தேவஹ்ரதத்தை அடையும் ஒருவன், தேவாஸ்திர வேள்வி செய்த பலனை அடைகிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்