Friday, March 07, 2014

நீரில் மூழ்கிய பூமி - வனபர்வம் பகுதி 114

Earth sank in waters! | Vana Parva - Section 114 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கௌசிகி நதி, கலிங்கம் ஆகிய இடங்களுக்கு யுதிஷ்டிரனை அழைத்துச் சென்ற லோமசர், அதன் பெருமைகளையும், செய்ய வேண்டிய செயல்களையும் அவனுக்கு எடுத்துச் சொல்லல்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ!  ஜனமேஜயா, பிறகு பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கௌசிகி நதியில் இருந்து கிளம்பி அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக அனைத்து புனித தலங்களுக்கும் சென்றான். ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே, அவன் {யுதிஷ்டிரன்} கங்கை நதி கலக்குமிடமான கடலை அடைந்து, ஐந்நூறு நதிகளுக்கு மத்தியில் மூழ்கி நீராடி புனித சடங்குகளைச் செய்தான். ஓ! பூமியின் ஆட்சியாளனே, பிறகு தனது தம்பிகளுடன் சென்ற அந்தத் துணிவுமிக்க இளவரசன் {யுதிஷ்டிரன்} கடற்கரை வழியாகவே சென்று பழங்குடிகளான கலிங்கர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்றான்.


லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கலிங்கப் பழங்குடிகள் வாழும் ஒரு இடம் இருக்கிறது. அந்தப் பகுதியின் வழியே அறத்தேவனும் {தர்மதேவனும்} தேவர்களுடன் சேர்ந்து வழிபடும் நதியான வைதரணீ நதி ஓடுகிறது. இந்த நதியின் வடகரையில் முனிவர்கள் வசிக்கிறார்கள். ஒரு மலையால் அழகாக்கப்பட்ட அந்த இடம் அறச்சடங்குகள் செய்யத் தகுதியான இடமாக இருந்ததால், மறுபிறப்பாளர் {அந்தண} வகையைச் சார்ந்தவர்கள் அந்த இடத்திற்கு அடிக்கடி வந்து சென்றனர். சொர்க்கத்திற்குச் செல்லத் தகுதிவாய்ந்த அறம்சாரந்த மனிதர்கள் செல்லக்கூடிய தேவர்கள் வசிக்கும் இடத்தைப் பழிக்கும் வண்ணம் இவ்விடம் {கலிங்கம்} இருந்தது. பழங்காலத்தில் இந்த இடத்தில்தான் இறவாதவர்களை வேள்விகள் மூலம் வழிபட்டனர். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, இந்த இடம்தான், ருத்திரன் வேள்விப் பசுவைக் கைப்பற்றி "இது எனது பங்கு" என்ற சொன்ன இடம்.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, சிவனால் வேள்விப்பசு கவரப்பட்ட போது தேவர்கள் அவனிடம் {ருத்திரனிடம்}, "அனைத்து நேர்மையான விதிகளையும் புறந்தள்ளி, அடுத்தவர் பொருளைப் பேராசையுடன் பார்க்காதீர்" என்றனர். அதன்பிறகு, ருத்திரனைத் திருப்திப்படுத்த அவனைப் புகழ்ந்தனர். அவனுக்கு வேள்விப் பங்கைக் கொடுத்து, தகுந்த மரியாதைகளைக் கொடுத்தனர். அதன்பிறகு அவன் {சிவன்} அந்த விலங்கை அவர்களிடம் {தேவர்களிடம்} கொடுத்து, தேவர்கள் சென்ற பாதையிலேயே சென்றான். ஓ! யுதிஷ்டிர, அதன்பிறகு ருத்திரனுக்கு என்ன நேர்ந்தது என்பதை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள். தேவர்கள் ருத்திரன் மீது கொண்ட பயத்தால் புதிதானதும், அனைத்துப் பாகங்களைவிடச் சிறந்ததுமான பாகத்தை ருத்திரனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்த இடத்தில் தனது நீர்க்கடன்களைச் செலுத்தும் யாரும், இந்தப் பழங்கதையைச் சொல்லும்போது, தனது ஊனக்கண்ணாலேயே தேவலோகத்திற்குச் செல்லும் வழியைக் காண்பார்கள்" என்றார் {லோமசர்}.

வைசம்பாயனர்  {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, விதியின் உதவியால் துருபதன் மகளும் {திரௌபதியும்}, பாண்டுவின் மகன்கள் அனைவரும், வைதரணீ நதிக்குள் இறங்கி, தங்கள் தந்தையரின் பெயர்களில் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.
யுதிஷ்டிரன் {முனிவர் லோமசரிடம்}, "ஓ லோமசரே, பக்திச் செயலின் சக்தி எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்! இந்த இடத்தில் {வைதரணீ} உரிய முறையில் நீராடிய நான் பிறந்திறக்கும் மனிதனின் உலகங்களை மட்டும் இப்போது காணவில்லை! ஓ தவசியே, அறவாழ்வால், நான் அனைத்து உலகங்களையும் காண்கிறேன். மந்திரங்களை உரக்கச் சொல்லும் பெருந்தன்மைமிக்கக் கானகவாசிகள் ஒலி இது" என்றான்.

லோமசர், "ஓ யுதிஷ்டிரா, உனது காதுகளை எட்டும் அந்த ஒலி முன்னூறு ஆயிரம் {300,000} யோஜனைகளுக்கு அப்பால் இருந்து கேட்கிறது என்பது நிச்சயம். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அமைதியாக இரு. எந்த வார்த்தையும் உச்சரிக்காதே. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நமது பார்வைக்கு வந்திருக்கும் இது தானே இருப்பவனின் {பிரம்மனின்} தெய்வீக வனமாகும். ஓ மன்னா, அங்கே பயங்கரமான பெயர் கொண்ட விஸ்வகர்மா தனது அறச்சடங்குகளைச் செய்தான். அவ்வேள்வியின் பலம் மிக்க நேரத்தில், பிரம்மன், மலைகளும், கானகங்களும் கூடிய முழு உலகத்தையும் காசியபருக்கு, அவர் செய்த புரோகிதத்திற்குப் பரிசாகக் கொடுத்தான். ஓ குருவின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிப் பூமி கொடுக்கப்பட்ட பிறகு, அவள் {பூமி} கவலை நிறைந்த இதயத்துடனும் மிகுந்த கோபத்துடனும் உலகத்தின் ஆட்சியாளனும் பெரும் தலைவனுமானவனிடம் {பிரம்மனிடம்} "ஓ பலம்வாய்ந்த தேவா, பிறப்பு இறப்பு உள்ள ஒரு மனிதனுக்கு என்னைக் கொடுப்பது உமக்குத் தகாது. இதோ நான் பாதாளத்திற்கு இறங்கப் போகிறேன். ஆகையால், பரிசாகக் கொடுக்கும் இந்த உமது செயலால் ஒன்றுமே நடக்காது" என்று சொன்னாள்.

ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அருளப்பட்ட தவசியான காசியபர், பூமித்தேவி மனச்சோர்வுடனும் சோகத்துடனும் இருப்பதைக் கண்டு, அவளது கோபத்தைத் தணிக்க, ஒரு சினம் தணிக்கும் காரியத்தைச் செய்தார். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு, அவரது பக்தியால் மகிழ்ந்தாள் பூமித்தேவி. மீண்டும் அவள் பூமியில் இருந்து எழுந்து பலிப்பீடத்தில் தனது உருவத்தை வெளிப்படுத்தினாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பலிப்பீடத்தின் உருவில் இருக்கும் இந்தப் பகுதியே அந்த இடம். ஓ! பெரும் ஏகாதிபதி, இதன் மேல் ஏறு. உனக்குத் துணிவும் பலமும் பிறக்கும். இந்தப் பீடம் கடல் வரை சென்று அதன் {பூமியின்} இதயத்தில் நிலைத்திருக்கிறது. நற்பேறு உனதாகட்டும் இதில் ஏறி கடலைக் கட. நீ இன்று இதன் மேல் ஏறும்போது, நான் உன்னில் இருக்கும் தீமைகள் அகல வேண்டி சடங்கு செய்வேன். பிறப்புடையவனின் {மனிதனின்} தொடுதலைப் பெறும் இந்தப் பீடம் உடனே கடலுக்குள் புகுகிறது. இந்த அண்டத்தைக் காப்பவனை வணங்குவோம்! இந்த அண்டத்துக்கு அப்பால் இருப்பவனை வணங்குவோம்! ஓ! தேவர்களின் தலைவா, இந்தக் கடலில் இறங்கு. 

ஓ! பாண்டுவின் மகனே, நீ இந்த உண்மையான வார்த்தைகளை உரைக்க வேண்டும். அப்படி உரைத்துக் கொண்டிருக்கும்போதே இந்தப் பீடத்தில் ஏற வேண்டும். "அக்னித் தேவனும், சூரியனும், தலைமுறைக்கான உறுப்பும், நீரும், தேவியும், விஷ்ணுவின் வித்தும் சேர்ந்து அமுதத்தின் இருப்பிடமாகவும் இருக்கிறாய். அக்னித்தேவனே கடலைப் படைத்த உறுப்பாகும். பூமியே உனது உடல். விஷ்ணுவின் வித்தே உன்னை உருவாக்கியது. நீயே அமுதத்தின் இருப்பிடம்" என்று சொல்லிக் கொண்டே பீடத்தில் ஏற வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, இந்த உண்மையான வார்த்தைகள் கேட்கக்கூடிய அளவில் உரைக்கப்பட வேண்டும். அப்படி உரைக்கும்போதே இந்த ஆறுகளின் தலைவனுக்குள் {கடலுக்குள்} மூழ்கு. ஓ குந்தியின் மகன்களில் புகழத்தக்கவனே, இல்லையென்றால் {உரைக்கவில்லையென்றால்} நீரின் களஞ்சியமான இந்தத் தெய்வீகப்பிறப்புடைய நீர்த்தேவனைப் புனிதமான புல்லின் நுனி கொண்டும் தொடக்கூடாது" என்றார் {லோமசர்}.

வைசம்பாயனர்  {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தீமையை விலக்கும் சடங்கு முடிந்ததும், பெருமைமிக்க யுதிஷ்டிரன், கடலுக்குள் சென்று அந்தத் தவசி சொன்ன அனைத்தையும் செய்து, மகேந்திர மலையின் பரப்புக்குச் சென்று அந்த இரவை அங்கே கழித்தான்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்