Saturday, March 01, 2014

சாந்தையை மணந்த ரிஷ்யசிருங்கர் - வனபர்வம் பகுதி 113

Rishyasringa married Santa! | Vana Parva - Section 113| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீட்டிய திட்டத்தின்படி விலைமகள்கள் ரிஷ்யசிருங்கரை லோமபாதனிடம் அழைத்துச் செல்வது; லோமபாதன் தனது மகளை ரிஷ்யசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தது; கோபத்துடன் வந்த விபாண்டகர் சாந்தமடைந்தது.

விபாண்டகர் {ரிஷ்யசிருங்கரிடம்} சொன்னார், "ஓ மகனே {ரிஷ்யசிருங்கா}, அவர்கள் ராட்சசர்கள். அவர்கள் அழகான உருவம் எடுத்து அற்புதமாக நடந்து செல்வார்கள். நிகரில்லாத பலமும், பெரும் அழகும் கொண்டவர்கள் அவர்கள். தவப்பயிற்சிகளுக்குத் தடங்கல்கள் ஏற்படுத்துவதே அவர்களது தவம். ஓ! எனது மகனே, அவர்கள் அன்பு உருவம் கொண்டு பல வழிகளில் ஏமாற்றுவார்கள். அந்தக் கடுமையானவர்கள், காடுகளில் வசிக்கும் தவசிகளை அருள் நிறைந்த உலகில் இருந்து (அவர்கள் நற்செயல்கள் மூலம் அவற்றை வென்றிருந்தாலும்) விலக்குகின்றனர்.


தனது ஆன்மாவை முழு கட்டுக்குள் வைத்து, நேர்மையானவர்களின் உலகை அடைய விரும்புபவர்களுக்கு இவர்களிடம் எந்தக் காரியமும் இல்லை. அவர்களது செயல்கள் தீங்கானவை. தவத்திற்கு தடை ஏற்படுத்தி மகிழ்பவர்கள் அவர்கள். பக்தி நிறைந்த மனிதர்கள் அவர்களைக் காணக் கூடாது. ஓ மகனே! அந்தப் பானகங்களும் அருந்தத்தக்கவை அல்ல. அவை நேர்மையற்றவர்களால் பருகப்படும் சாராயமாகும். பிரகாசமாகவும், மணமிக்கதாவும், பல வண்ணங்களில் இருக்கும் இந்த மலர்மாலையும் தவசிக்களுக்கானது இல்லை.

அவர்கள் தீய பேய்கள் என்று சொல்லித் தனது மகனுக்குத் தடையை ஏற்படுத்திய பிறகு, விபாண்டகர் அவளைத் தேடி அலைந்தார். மூன்று நாட்கள் தேடியும் அவள் எங்கிருக்கிறாள் என்ற சுவடுகளை அறியாத அவர் மீண்டும் தனது ஆசிரமத்திற்கே திரும்பினார். அதே வேளையில், காசியபரின் மகன் {விபாண்டகர்} கனிகள் சேகரிக்கச் சென்றிருந்தார். அப்போதும் அந்த விலைமகள் மீண்டும் ரிஷ்யசிருங்கரைப் பழைய முறையிலேயே மயக்க வந்திருந்தாள். ரிஷ்யசிருங்கர் அவளைக் கண்டதும் வெகுவாக மகிழ்ந்து அவளிடம் விரைவாகச் சென்று, "எனது தந்தை திரும்புவதற்கு முன்னர், நாம் உமது ஆசிரமத்திற்குச் செல்லலாம்" என்றார்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த விலை மகள்களின் திட்டத்தின்படி காசியபரின் {விபாண்டகரின்} ஒரே மகனைத் தங்கள் மிதக்கும் ஆசிரமத்திற்குள் நுழையச் செய்து, அந்த ஓடத்தை ஓடச் செய்தனர். பிறகு பலவிதமான செயல்கள் மூலம் அவரை மகிழ்ச்சியூட்டிக் கொண்டே, கடைசியாக அங்க மன்னன் அருகே வந்தனர். மிகுந்த வெண்ணிறம் கொண்ட அந்த மிதக்கும் ஓடத்தை நீரிலேயே விட்டு, ஆசிரமத்திலிருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் நிறுத்தி மிதக்கும் ஆசிரமம் என்ற பெயரிலேயே மிக அழகான கானகத்தை உருவாக்கினான் {லோமபாதன்}. இருப்பினும் அம்மன்னன், விபாண்டகரின் ஒரே மகனை {ரிஷ்யசிருங்கனை} அரண்மனையின் ஒரு பகுதியில் வைத்திருந்தாலும், பெண்களை அருகில் விடவில்லை. பிறகு அவன் {அங்க மன்னன் லோமபாதன்} மழை வானத்தில் இருந்து கொட்டுவதைக் கண்டான். உலகம் நீரால் நிரம்பியது.

இதய விருப்பம் நிறைவேறிய லோமபாதன் தனது மகளாகிய சாந்தையை ரிஷ்யசிருங்கருக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அவரது தந்தையின் {விபாண்டகரின்} கோபத்தைத் தணிக்கும் பொருட்டு, அவர் தனது மகனைக் காண வரும் வழியில் மாடுகள் இருக்கவும், நிலங்கள் உழப்பட்டு இருக்கவும் பார்த்துக் கொண்டான். அம்மன்னன் {லோமபாதன்}, அப்படி நிறைய கால்நடைகளை நிறுத்திவிட்டு, அவர்களிடம்  {பணியாளர்களிடம்} பின்வருமாறு சொன்னான்.

"அந்தப் பெரும் முனிவரான விபாண்டகர் தனது மகனைக் குறித்து உங்களிடம் விசாரிக்கும்போது, நீங்கள் குவிந்த கரங்களுடன் அவரிடம் இந்த கால்நடைகளும், உழப்பட்ட நிலங்களும் உமது மகனுடையதே. நாங்கள் அவர் சொல்வதற்குக் கீழ்ப்படியும் அடிமைகள்" என்றும் சொல்லவேண்டும் என்றான் {லோமபாதன்}. கடும் கோபம் கொண்ட அந்தத் தவசி பழங்களையும், கிழங்குகளையும் சேகரித்து தனது ஆசிரமத்திற்குத் திரும்பி தனது மகனை {ரிஷ்யசிருங்கரைத்} தேடினார். அவரைக் காணாததால் மிகுந்த கோபத்திற்குள்ளானார். கோபத்தால் துன்புறுத்தப்பட்ட அவர், இது மன்னனுடைய செயல்தான் என்று சந்தேகப்பட்டார். ஆகையால், அவர் சம்பை நகரத்துக்குச் சென்று மன்னனையும், அவனது நகரத்தையும், மொத்த நாட்டையும் எரித்துவிட எண்ணினார்.

வழியில் மிகவும் களைத்துப் போய் பசியுடன் இருந்த அவர் {விபாண்டகர்}, அந்த கால்நடைகள் நிரம்பிய இடத்திற்கு வந்தார். அங்கே அவர் சரியான முறையில் மாடுமேய்ப்பவர்களால் உபசரிக்கப்பட்டு, அந்த இரவை ஒரு மன்னனைப் போல கழித்தார். இப்படிப்பட்ட பெரும் விருந்தோம்பலைப் பெற்ற அவர், அவர்களிடம், "ஓ இடையர்களே, யாருடையவர்கள் நீங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இந்தச் செல்வம் அனைத்தையும் எங்களுக்கு உமது மகன் {ரிஷ்யசிருங்கர்} கொடுத்தார்" என்றனர். பிறகு பல இடங்களில் மனிதர்களில் சிறந்த பலரால் அவர் {விபாண்டகர்}  பெரிதும் மதிக்கப்பட்டார். தனது மகன் அங்கே சொர்க்கத்தில் இருக்கும் இந்திரனைப் போல இருப்பதைக் கண்டார். (மேகத்திலிருந்து) வெளியேறும் மின்னலைப் போல இருந்த தனது மருமகளான சாந்தையையும் கண்டார். மாட்டு மந்தைகளும், குக்கிராமங்களும் தனது மகனுக்குக் கிடைத்திருப்பதைக் கண்டும், சாந்தையைக் கண்டும் அவரது பெரும் எதிர்ப்பு நிலை சாந்தப்படுத்தப்பட்டது.

ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பூமியின் தலைவனிடம் விபாண்டகர் தனது பெரும் திருப்தியை வெளிப்படுத்தினார். சூரியனையும், நெருப்பையும் பழிக்கும் சக்தி கொண்ட அந்த பெரும் தவசி {விபாண்டகர்} தனது மகனிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} "உனக்கு ஒரு மகன் பிறந்ததும், மன்னனுக்கு ஏற்புடையது அனைத்தையும் நீ செய்த பிறகு, தவறாமல் காட்டுக்கு வந்துவிடு" என்றார். ரிஷ்யசிருங்கரும் தனது தந்தை சொன்னபடியே செய்து, தனது தந்தையின் இடத்திற்கே திரும்பினார்.

ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, வானத்தில் இருக்கும் ரோகிணி நட்சத்திரம் சந்திரனுக்குக் காத்திருப்பதைப் போல, பெரும்பேறு பெற்ற அருந்ததி வசிஷ்டருக்குக் காத்திருப்பது போல, லோபமுத்திரை அகஸ்தியருக்குக் காத்திருப்பது போல, நளனுக்குக் கீழ்ப்படிந்த மனைவியான தமயந்தியைப் போல, இடியைத் தாங்குபவனுக்கு {இந்திரனுக்கு} சச்சி இருப்பது போல, முத்கலருக்கு நாராயணனின் மகளான இந்திரசேனை {நளாயனி} இருப்பது போல, கானகத்தில் வாழ்ந்த ரிஷ்யசிருங்கருக்காக சாந்தை பாசத்துடன் காத்திருந்தாள். இதுதான் அவருக்குச் சொந்தமான ஆசிரமம். இந்தப் பெரும் தடாகத்திற்கு அழகு சேர்க்கும் இது புனிதமான புகழைப் பெற்றிருக்கிறது. இங்கே உனது கடன்களைச் செய்து விருப்பம் நிறைவேறியவனாகு. உன்னைச் சுத்தகரித்துக் கொண்ட பிறகு, உனது பாதையை வேறு புனிதமான இடங்களின் பால் திருப்பு" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்