Wednesday, March 12, 2014

சாத்யகியின் ஆலோசனை - வனபர்வம் பகுதி 120

The counsel of Satyaki | Vana Parva - Section 120 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்களுக்காக நாம் போராடலாம் என்று யாதவர்களிடம் சாத்யகி ஆலோசனை கூறுவது; யுதிஷ்டிரன் அதை ஏற்கமாட்டான் என்று கிருஷ்ணன் சொல்வது; யாதவர்களும் பாண்டவர்களும் பிரிவது; பாண்டவர்கள் தங்கள் புனித பயணத்தைத் தொடர்வது...

சாத்யகி சொன்னான், "ஓ! ராமா {பலராமா}, இது புலம்புவதற்கான நேரமன்று; யுதிஷ்டிரன் ஒரு வார்த்தையும் பேசவில்லையென்றாலும் இந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் தக்க காரியத்தைச் செய்வோமாக. தன் நன்மைகளைக் கவனித்துக் கொள்ள ஆட்களிருப்பவர்கள், தாங்களே எதையும் செய்து கொள்வதில்லை; சைப்பியனும் {சிபியும்} மற்றவர்களும் யயாதிக்குச் செய்ததைப் போல, தங்கள் வேலையைச் செய்து கொள்ள அவர்களுக்குப் பிறர் இருக்கிறார்கள். அதே போல, ஓ ராமா! {பலராமா}, தங்கள் சார்பாக, தங்கள் வேலையைச் செய்யப் பிறரை மனிதர்களுக்குத் தலைவர்களாக நியமித்து, காப்பாளர் உள்ளவராக இருப்பவர்கள் ஆதரவற்றவர்கள் போலச் சிரமத்தை அடைவதில்லை. மூன்று உலகங்களையும் சேர்த்துக் காக்கக்கூடியவர்களான ராமனையும் {பலராமனையும்}, கிருஷ்ணனையும் மற்றும் பிரத்யும்னன், சாம்பன் ஆகியோரையும் என்னையும் காப்பாளராகக் கொண்டவர்கள் தானே பாண்டுவின் மகன்கள். அப்படியிருக்கும்போது இந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் தன் தம்பிகளுடன் கானகத்தில் எப்படி வாழ்கிறார்?

பலதரப்பட்ட ஆயுதங்களுடனும், கவசங்களுடனும் தசாஹர்களின் படை கிளம்ப இந்த நாளே தகுந்தது. விருஷ்ணிகளின் படைகளால் திருதராஷ்டிரன் மகன்கள் நசுக்கப்படட்டும். அவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து மரணத் தேவன் வசிப்பிடத்திற்குச் செல்லட்டும். கோபத்தால் தூண்டப்பட்டால், கொம்பாலான வில்லைத் தாங்குபவன் {கிருஷ்ணன் - சாரங்கம் என்ற வில்லைத் தாங்குபவன்} தனியொருவனாகவே இந்த முழுப் பூமியையும் சூழ முடியும். தேவர்களின் தலைவனான பெரும் இந்திரன் விரித்திரனைக் கொன்றதைப் போலத் திருதராஷ்டிரன் மகனை அவனுடைய ஆதரவாளர்களுடன் சேர்த்து நீர் கொல்ல வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், எனக்குச் சகோதரனும், நண்பனும், குருவும் ஆவான். மேலும் அவன் இரண்டாவது கிருஷ்ணனைப் போன்றவன். தகுதியுடைய மகனை விரும்பும் மனிதன், முரண்படாத சீடனைத் தேடும் குரு ஆகியோர் இதன்காரணமாகவே {தீமை அழிய} அவற்றைத் தேடுகின்றனர். இதன் காரணமாகவே, செயல்களில் சிறந்த செயலும், செய்து முடிக்கக் கடினமானதுமான அந்த அற்புதமான வேலையைச் செய்ய நேரமும் வந்திருக்கிறது. துரியோதனனின்1 கணைகளை எனது அற்புதமான ஆயுதங்களால் நான் சிதறடிப்பேன். பாம்புகள், நஞ்சு, நெருப்பு ஆகியவற்றுக்குச் சற்று குறைந்த எனது அற்புதமான கணைகளைக் கொண்டு, கோபத்துடன் நான் அவனது தலையைக் கொய்வேன். கூரிய முனை கொண்ட எனது வாளால், போர்க்களத்தில் அவனது தலையை உடலில் இருந்து அறுப்பேன். பிறகு அவனது ஆதரவாளர்களையும், துரியோதனனையும்2 மற்ற அனைத்து குரு குலத்தவரையும் கொல்வேன்.

ஓ! ரோகிணியின் மகனே {பலராமா}, பிரளயகாலத்தில் பெரும் புற்குவியலை எரிக்கும் நெருப்பு போலப் போர்க்களத்தில் நான் எனது ஆயுதங்களைக் கொண்டு போர்வீரர்களில் சிறந்தவர்களைக் கொல்லும்போது பீமனின் ஆதரவாளர்கள் இதயத்தில் மகிழட்டும். பிரத்யும்னன் அடிக்கும் கூரிய கணைகளைக் கிருபர், துரோணர், விகர்ணன், கர்ணன் ஆகியோரால் தாங்க முடியாது. அர்ஜுனன் மகன் {அபிமன்யு} வீரத்தை நான் அறிவேன். அவன் போர்க்களத்தில் கிருஷ்ணனின் மகனைப் {பிரத்யும்னனைப்} போன்றவன். சாம்பன் தனது ஆயுதங்களின் பலத்தால் துச்சாசனனைத் தண்டிக்கட்டும். அவன் {சாம்பன்}, துச்சாசனனையும், அவனது தேரோட்டியும், அவனது தேரையும் தனது பலத்தால் அழிக்கட்டும்.

களத்தில் நடக்கும் போரில் ஜாம்பவதியின் மகன் {பிரத்யும்னன்} தாங்க முடியாதவனாக இருப்பான். எதுவும் அவனது பலத்தைத் தாங்க முடியாது. அவன் சிறுவனாக இருந்த போது சம்பரன் என்ற அசுரனின் படை அவனால் விரைவாக விரட்டப்பட்டது. உருண்ட தொடை கொண்டவனும், மிக நீண்ட பருத்த கரங்கள் கொண்டவனுமான அஸ்வசக்ரன் இவனாலேயே {பிரத்யும்னனாலேயே} கொல்லப்பட்டான். தேரில் இருக்கும்போது போரில் வல்லவனாக இருக்கும் சாம்பனுடைய தேரை யார்தான் யுத்தத்தில் நேர் கொண்டு எதிர்த்து வர முடியும்? மரணத்தின் பிடிக்குள் வரும் மனிதனால் எவ்வாறு தப்பிக்க முடியாதோ, அப்படியே. போர்களத்தில் அவனது பிடிக்குள் வரும் எவரும் எப்படித் தப்ப முடியும்? வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மகன் தனது கணைகளின் நெருப்பால், தேரில் இருக்கும்போது வலியவர்களான பீஷ்மர் துரோணர் மற்றும் தனது மகன்களால் சூழப்பட்ட சோமதத்தன் ஆகியோர் கொண்ட எதிரிகளின் படையை எரித்துப் போடுவான்.

போராயுதங்களை எடுத்து, கைகளில் அற்புதமான கணைகளையும், சக்ராயுதத்தையும் கொண்டிருக்கும் கிருஷ்ணனுக்கு நிகராக, தேவர்களையும் சேர்த்து இந்த உலகத்தில் யார்தான் இருக்கிறார்கள்? அநிருத்தன் தனது கேடயத்தையும் வாளையும் எடுத்துக் கொள்ளட்டும். அவன் திருதராஷ்டிரன் மகன்களின் தலைகளை உடலில் வெட்டியெடுத்து இந்தப் பூமியின் பரப்பை நிரப்பட்டும். உணர்வற்ற அவர்களது உடலை எடுத்து புல் மூடிய அந்தப் பூமியின் மேல் எழுப்பப்படும் வேள்விப் பீடத்தில் எறியட்டும். கதன், உலூகன் {உல்முகன்}, பாகுகன், பானு, நீதன், யுத்தத்தில் வீரனான இளம் நிசடன், கடும்போர் செய்கிறவர்களான சாரணன், சாருதேஷ்ணன் ஆகிய அனைவரும் தங்கள் குலத்துக்குகந்த சாதனைகளைப் புரியட்டும்.

சாத்வதர்கள் மற்றும் சூரர்களின் ஒன்றுபட்ட படை, விருஷ்ணிகள், போஜர்கள் மற்றும் அந்தகர்களின் சிறந்த படைவீரர்களுடன் சேர்ந்து போர்க்களத்தில் திருதராஷ்டிரன் மகன்களைக் கொன்று தங்கள் புகழை உலகம் முழுவதும் பரப்பட்டும். அறம் பயில்பவர்களில் மிக மேன்மையான யுதிஷ்டிரர் சூதாட்டத்தின் போது குரு குலத்தின் மிக நேர்மையானவர் {பீஷ்மர்} முன்பு எடுத்துக்கொண்ட உறுதி நிறைவேறும் வரை அபிமன்யு இந்தப் பூமியை ஆளட்டும். அதன்பிறகு, நமது கணைகளால் அவரது எதிரிகள் வீழ்ந்த பிறகு அந்த அறம் சார்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பூமியைப் பாதுகாக்கட்டும். அப்போது இந்தப் பூமியல் திருதராஷ்டிரன் மகன்களென்று யாரும் இருக்க மாட்டார்கள். தேரோட்டியின் மகனும் {கர்ணனும்} இருக்க மாட்டான். இதுவே நாம் செய்ய வேண்டிய முக்கிய வேலையாகும். இது நிச்சயம் நமக்குப் புகழைத் தரும்" என்றான் {சாத்யகி}.

அதற்குக் கிருஷ்ணன், "ஓ மது குலத்தின் வழித்தோன்றலே {சாத்யகியே}!, நீ சொல்வது உண்மை என்பதில் சந்தேகமில்லை; ஓ பலமும் வீரமும் கொண்டவனே, உனது வார்த்தைகளை நாங்கள் ஏற்கிறோம்! ஆனால், இந்தக் குரு குலத்தின் காளை (யுதிஷ்டிரன்), தனது கரத்தின் பலத்தால் வெல்லப்படாத வரை, இந்தப் பூமியின் ஆட்சி அதிகாரத்தை ஏற்கமாட்டார். இன்பத்திற்காகவோ, பலத்திற்காகவோ, பேராசைக்காகவோ யுதிஷ்டிரர் தனது சாதியின் {சத்திரிய சாதியின்} விதிகளைக் கைவிடமாட்டார். பீமனும் அர்ஜுனனும் இதை ஏற்க மாட்டார்கள். இரட்டைச் சகோதரர்களும் {நகுலனும் சகாதவேனும்}, துருபதன் மகளான கிருஷ்ணையும் {திரௌபதியும்} இதை ஏற்க மாட்டார்கள். ஓநாயின் பசி கொண்டவனும் (பீமனும்), செல்வங்களை வெல்பவனும் (அர்ஜுனனும்), இந்த முழு உலகிலும் போரில் நிகரற்றவர்கள் ஆவார்கள். மாத்ரியின் இரு மகன்களும் {நகுல-சகாதேவன்} இவரது காரியத்தை நிறைவேற்ற இருக்கும்போதும், ஏன் இந்த மன்னன் இந்த முழு உலகத்தையும் ஆளக் கூடாது? பாஞ்சாலத்தின் உயர் ஆன்ம ஆட்சியாளனும், கேகய மன்னனும் சேர்ந்து தங்கள் பலத்தால் ஒன்றுபட்டால், யுதிஷ்டிரரின் எதிரிகள் அழிவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.

யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ! மது குலத்தின் வழித்தோன்றலே {சாத்யகி}! நீ இப்படிப் பேசுவது எனக்கு வியப்பைத் தரவில்லை. ஆனால் எனக்கு, ஆட்சி அதிகாரத்தை விட உண்மையே முதல் கருதுகோளாகப் படுகிறது. ஆனால் கிருஷ்ணன் மட்டுமே என்னைச் சரியாக அறிவான்; அதே போல, நானே (உண்மையில்) கிருஷ்ணனைச் சரியாக அறிவேன். ஓ வீரம் கொண்டவனே! ஓ மது குலத்தின் வழித்தோன்றலே! வீரச்செயல்களுக்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவன் {கிருஷ்ணன்) கண்டவுடன், ஓ சினி குலத்தவரில் மிகத்துணிவுள்ளவனே {சாத்யகி}, அந்த அழகிய முடி கொண்டவன் (கிருஷ்ணன்) சுயோதனனை {துரியோதனனை} வீழ்த்துவான். தாசார்ஹ குலத்தைச் சேர்ந்த வீரர்கள் இன்று திரும்பிச் செல்லட்டும். அவர்களே எனது காப்பாளர்களும் மனிதர்களில் முதன்மையானவர்களும் ஆவர். அவர்களால் நான் இன்று பார்க்கப்பட்டேன். ஓ! அளவிடமுடியா பலம் கொண்டவனே! அறத்தின் வழியில் இருந்து எப்போதுமே விழக்கூடாது. நீங்கள் மகிழ்ச்சியாகக் கூடியிருக்கும்போது, நான் மீண்டும் உன்னைப் பார்ப்பேன்" என்றான்.

பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி, மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தி, இளையவர்களை அணைத்துக் கொண்ட பிறகு, அந்த யது குலத்து வீர மனிதர்களும், பாண்டுவின் மகன்களும் பிரிந்து சென்றனர். யதுக்கள் தங்கள் இல்லங்களுக்கு மீண்டும் சென்றனர்; பாண்டவர்கள் புனித இடங்களுக்குச் செல்லும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். கிருஷ்ணனைப் பிரிந்த பிறகு, அந்த அறம் சார்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளுடனும், பணியாட்களுடனும், லோமசருடனும், வடிகட்டப்பட்ட சோமச் சாறு கலந்த நீருடைய புனிதமான நதியான பயோஷ்ணிக்குச் சென்றான். அங்கே அந்த உயர் ஆன்ம யுதிஷ்டிரன், பல இரு பிறப்பாளர் வர்க்கத் தலைவர்களால் {அந்தணர்களால்} புகழ்ந்து வரவேற்கப்பட்டான். அவர்கள் {அந்தணர்கள்} அவனை அங்கே கண்டு மகிழ்ந்தனர்.


1. இங்கே கர்ணன் என்று வர வேண்டும் என நினைக்கிறேன்
2. இங்கே மறுபடியும் துரியோதனன் என்று வர அவசியமில்லை. ஆகையால் முதலில் கர்ணன் என்றே வர வேண்டும் என்று நினைக்கிறேன்}

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்