Sunday, March 16, 2014

சியவனரால் அசைவிழந்த இந்திரன் - வனபர்வம் பகுதி 124

Chyavana paralysed Indra | Vana Parva - Section 124 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சியவனர், தனது மாமனான சர்யாதியிடம் சொல்லி ஒரு வேள்விக்கு ஏற்பாடு செய்து, சோமச்சாற்றின் பங்கை அசுவினிகளுக்குப் படைக்க முயற்சிப்பது; இந்திரன் அதற்குத் தடை சொல்வது; அதை மீறி கொடுக்க முயன்ற சியவனர் மேல் வஜ்ரத்தை இந்திரன் ஓங்க, சியவனர் இந்திரனை அசைவற்றவனாக்கியது; சியவனரால் உண்டாக்கப்பட்ட பிசாசு இந்திரனிடம் செல்வது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "சியவனர் இளமையைப் பெற்றார் என்ற செய்தி சர்யாதியை அடைந்தது. மிகவும் திருப்தி கொண்ட அவன் {சர்யாதி}, தனது படைகளுடன், பிருகு மைந்தனின் {சியவனரின்} ஆசிரமத்திற்கு வந்தான். அங்கே சியவனரும், சுகன்யாவும் தேவர்களிடம் எழுந்த இரு பிள்ளைகள் போல இருப்பதைக் கண்டான். அவனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் அடைந்த மகிழ்ச்சி பெரியதாக இருந்தது. அவன் மொத்த பூமியையும் வென்றுவிட்டதாகக் கருதினான். அந்தத் தவசியால் {சியவனரால்} அந்தப் பூமியின் ஆட்சியாளனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் மரியாதையாக வரவேற்கப்பட்டனர். பிறகு அந்த மன்னன் {சர்யாதி}, அந்தத் தவசியின் {சியவனரின்} அருகில் அமர்ந்து, மகிழ்ச்சிகரமாக விவாதித்தான்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு, அந்தப் பிருகுவின் மைந்தர் {சியவனர்} அந்த மன்னனிடம் {சர்யாதியிடம்} இன்சொல்பேசி, "ஓ! மன்னா, நான் உனக்கு ஒரு வேள்வியைச் செய்வேன். ஆகையால் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வாயாக" என்றார். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அதன்பேரில், பூமியின் பாதுகாவலனான சர்யாதி, மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்று, சியவனரின் கோரிக்கையைப் பாராட்டினான். பிறகு வேள்வி செய்யக்கூடிய ஒரு நன்னாளில் சிறப்பாகச் சொல்லும் அளவுக்கு ஒரு வேள்விக் கோவிலை ஏற்படுத்தி அதில் விரும்பத்தக்க அனைத்து பொருட்களையும் வைத்தான். அங்கே பிருகுவின் மகனான சியவனர், மன்னனின் {சர்யாதியின்} புரோகிதராகப் பணியை ஏற்றார். அந்த இடத்தில் நடந்த அற்புதமான நிகழ்ச்சிகளை இனி சொல்கிறேன் கேள்.


சியவனர், தேவ மருத்துவர்களான அசுவினிகளுக்குப் படைப்பதற்காகச் சோமச்சாற்றில் ஒரு பகுதியை எடுத்து வைத்தார். அந்தத் தவசி அதைத் தெய்வீக அசுவினிகளுக்குப் படைப்பதற்கு எத்தனித்த போது, இந்திரன், "அசுவினிகளான இவர்கள் இருவருக்கும் சோமச்சாற்றின் பகுதியை அடைவதற்கு உரிமையில்லை என்பது எனது கருத்து. இவர்கள் சொர்க்கத்தில் தேவர்களுக்கு மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்களது தொழிலே, இவர்களுக்கு (சோமச்சாற்றைப் பெறுவதில்) உரிமையில்லை என்பதைப் பறைசாற்றுகிறது" என்று தனது தடையைச் சொன்னான்.

அதற்குச் சியவனர் {இந்திரனிடம்}, "வலிமைமிக்க ஆன்மாக் கொண்ட இவர்கள் இருவரும் பெரும் தொழிலைச் செய்பவர்களே! இவர்கள் அசாதாரண அழகும் அருளும் கொண்டவர்கள். ஓ! இந்திரா, இவர்கள் என்னை நித்திய இளமை கொண்டவனாக, தேவர்களுக்கு இணையானவனாக மாற்றியிருக்கிறார்கள். வடித்த சோமச்சாற்றைப் பெறும் தகுதியை நீயும் பிற தேவர்களும் ஏன் பெற வேண்டும்? இவர்கள் {அசுவினிகள்} ஏன் பெறக்கூடாது? ஓ! தேவர்களின் தலைவா, ஓ எதிரிகளின் நகரங்களை அழிப்பவனே {இந்திரா}, அசுவினிகளும் தேவர்கள் என்ற மதிப்புடையவர்கள் என்பதை நீ அறிவாயாக" என்றார். இதற்கு இந்திரன் {சியவனரிடம்}, "இவர்கள் இருவரும் குணப்படுத்தும் {சிகிச்சை} கலை பயில்கிறார்கள். ஆகையால் அவர்கள் சேவகர்களைத் தவிர வேறல்ல. நினைத்த வண்ணம் தங்கள் உருவங்களை அடைந்து, இவர்கள் மனிதர்களின் உலகில் உலவிவருகிறார்கள். இவர்கள் எப்படி உரிமையுடன் சோமச்சாற்றைக் கோரலாம்?" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவர்கள் தலைவனால் மறுபடியும் மறுபடியும் பேசப்பட்ட போது, பிருகுவின் மகன் {சியவனர்} இந்திரனைக் கருதிப் பாராமல் {லட்சியம் செய்யாமல்}, காணிக்கை {சோமச்சாற்றை} படைக்கும் நோக்குடன் எடுத்தார். அந்தச் சோமச்சாற்றின் அற்புதமான பகுதியை அந்த இரு அசுவினிகளுக்கும் அவர் படைக்கப்போகும் நேரத்தில், அசுரன் பலனை அழித்தவன் {இந்திரன்}, இச்செயலைக் கண்டு அவரிடம் {சியவனரிடம்}, "அந்தத் தேவர்களுக்குப் படைக்கும் நோக்கோடு நீர் சோமத்தை எடுத்தீரென்றால், நிலைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களிலும் மேன்மையான, கொடூர வடிவிலான எனது வஜ்ராயுதத்தை நான் உம்மீது ஏவுவேன்" என்றான் {இந்திரன்}.

இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்} புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி, சோமச்சாற்றின் பகுதியை அசுவினிகளுக்குப் படைப்பதற்காக எடுத்தார். அப்போது சச்சியின் தலைவன் {இந்திரன்} கொடூர வடிவம் கொண்ட வஜ்ரத்தை அவர் மீது வீச எத்தனித்தான். அவன் அதை ஏவ முற்பட்ட போது, அவனது கரங்கள் பிருகுவின் மைந்தனால் {சியவனரால்} அசைவற்றனவாக மாற்றப்பட்டன. சியவனர் புனித பாடல்களை {மந்திரங்களை} உரைத்து நெருப்பில் படையலிட்டார். அவரது நோக்கம் நிறைவேறிய பிறகு, அவர் அந்தத் தேவனை {இந்திரனை} அழிக்க முற்பட்டார், பிறகு அந்தத் தவசியின் தவச்சக்தியின் விளைவாக தீய ஆவி கொண்ட பெரிய பிசாசானவன் உண்டானான். பெரும் பலமும், பெருத்த உருவமும் கொண்ட அவனது பெயர் மதன் ஆகும். 

அவனது {பிசாசான மதனின்} உடல் தேவர்களாலும் அசுரர்களாலும் அளவிடமுடியாதபடி இருந்தது. அவனது வாய்ப் பயங்கரமாகப் பெருத்த அளவிலும் கூரிய பற்களுடனும் இருந்தது. அவனது ஒரு தாடை பூமியில் இருந்தபோது, மறு தாடை சொர்க்கம் வரை நீண்டது. அவனுக்கு நான்கு கோரைப் பற்கள் {தெற்றுப் பற்கள்} இருந்தன. அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனை தூரமும், மற்றப் பற்கள் பத்து யோஜனை தூரமும் இருந்தன. அவை ஒவ்வொன்றின் முனையும் கூரிய ஈட்டி போலவும் ஒரு மாளிகையின் கோபுரம் போலவும் இருந்தன. அவனது இரு கரங்களும் இரு மலைகள் போலப் பத்தாயிரம் யோஜனை தூரம் இருந்தன. அவனது இரு கண்களும் சூரியனையும் சந்திரனையும் ஒத்திருந்தன. அவனது முகம் பிரளயத்தின் பெருந்தீ போல இருந்தது. அவன் தனது வாயை, மின்னலைப் போல இருந்த ஓய்வறியா நாவால் நக்கிக் கொண்டிருந்தான். அவனது வாய்த் திறந்திருந்தது. அவனது பார்வை பயங்கரமாக இருந்தது. அவன் இந்த மொத்த உலகத்தையுமே விழுங்கிவிடுவான் போல இருந்தது. அப்படிப்பட்ட அந்தப் பிசாசானவன் {மதன்} நூறு வேள்விகள் செய்த தேவனிடம் {இந்திரனிடம்} விரைந்தான். அவனது நோக்கம் அந்தத் தேவனை {இந்திரனை} விழுங்குவதாக இருந்தது. அந்த அசுரன் கர்ஜித்த பயங்கர ஒலி உலகத்தையே நிரப்பியது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்