Sunday, March 16, 2014

சோமத்தைப் பெற்ற அசுவினிகள் - வனபர்வம் பகுதி 125

Aswinis got the right for Soma juice | Vana Parva - Section 125 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சியவனர், இந்திரனை விடுவித்தது; லோமசர் தீர்த்தங்களின் பெருமைகளை விவரிப்பது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "நூறு வேள்விகள் செய்தவன் (இந்திரன்), தன்னை விழுங்க எண்ணி தன்னைநோக்கி வரும் மரணத் தேவன் போல வாயைத் திறந்து கொண்டு வந்த பயங்கர முகம் கொண்ட பிசாசான மதனைக் கண்டான். தனது கரங்கள் அசைவற்று இருந்ததால், அச்சத்தால் அவன் திரும்பத் திரும்பத் தனது உதட்டோரங்களை நாவால் நனைத்தான்.


பிறகு, அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, சியவனரிடம், "ஓ! பிருகுவின் மகனே! ஓ! அந்தணரே, நான் உண்மையைச் சொல்கிறேன். இன்று முதல் அந்த அசுவினிகள் இருவரும் சோமச்சாற்றைப் பருகும் தகுதி பெறட்டும். என்னிடம் கருணை கொள்ளும்! எனது பணி பயனற்றுப் போகக்கூடாது. இது விதியாகட்டும். ஓ! புரோகித வகையைச் சேர்ந்த தவசியே! உமது பணியும் ஒன்றுமில்லாமல் போகக்கூடாது. இந்த இரு அசுவினிகளும், உம்மால் தகுதிபெற்றதால், சோமச்சாற்றைப் பருகும் உரிமையைப் பெறுவார்கள். மேலும், ஓ பிருகுவின் மகனே, உமது சக்தியின் புகழ் பரவவே நான் இதைச் செய்தேன். உமது சக்திகளைக் காட்ட ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதே எனது நோக்கம். சுகன்யாவின் தந்தையின் {மன்னன் சர்யாதியின்} புகழும் எங்கும் பரவ வேண்டும் என்பது எனது மற்றொரு நோக்கம். ஆகையால், என்னிடம் கருணை கொள்ளும். நீர் விரும்பியவாறே அனைத்தும் நடக்கட்டும்" என்றான் {இந்திரன்}.

இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்டதும், சக்திவாய்ந்த ஆன்மாக் கொண்ட சியவனர் உடனே அமைதியடைந்தார். பிறகு அவர் எதிரி நகரங்களை அழிப்பவனை {இந்திரனை} விடுவித்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தச் சக்திவாய்ந்த தவசி {சியவனர்} பிசாசான மதனை (உண்மையில் போதையை) {மதத்தை} மதுவுக்கும், பெண்களுக்கும், சூதுக்கும், விளையாட்டுக் களத்துக்கும் எனப் பலவாறாகப் பகுத்தளித்தார். இப்படிப் பிசாசான மதனைக் கைவிட்டு சோமச்சாற்றின் பங்கைக் கொடுத்து இந்திரனைத் திருப்திப்படுத்தி, மன்னன் சர்யாதி மற்றத் தேவர்களையும் அசுவினி இரட்டையர்களையும் வணங்கவும் அம்மன்னனின் புகழ் அனைத்து உலகங்களை அடையவும் உதவி செய்தார். பிறகு பேச்சறிந்தவர்களில் சிறந்த அவர் {சியவனர்}, தமது அன்பான மனைவியான சுகன்யாவுடன் அக்கானகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பறவையொலிகளுடன் பளபளக்கும் இதுவே அத்தடாகம். இங்கே நீ உனது தம்பிகளுடன் சேர்ந்து உனது மூதாதையர்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்த வேண்டும். ஓ! பூமியின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே, அதை அடைந்த பிறகு, சிகதாக்ஷத்தைக் கண்டு, ஸைந்தவ வனத்தை அடைந்து, எண்ணற்ற சிறு செயற்கையாறுகளைக் காண வேண்டும். ஓ! பெரும் மன்னா, ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே, அனைத்து புனிதமான தடாகங்களின் நீரையும் தொட்டு தெய்வமான ஸ்தாணுவின் (சிவன்) பாடல்களைப் {மந்திரங்களைப்} பாடி அனைத்துக் காரியங்களிலும் வெற்றியைச் சந்திக்க வேண்டும். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, ஏனென்றால், இது துவாபர மற்றும் திரேதா யுகத்தின் சந்திக்காலம் ஆகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இது ஒரு மனிதனின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வல்லமை பெற்ற காலமாகும்.

இந்த இடம் ஒரு மனிதனின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வல்லமை பெற்றிருப்பதால், இங்கே நீ நீராட வேண்டும். பண்படுத்தப்பட்ட மனங்கள் கொண்ட மனிதர்கள் வாழும் ஆர்ச்சிக மலையும் இங்கே தான் இருக்கிறது. அனைத்துக் காலங்களின் கனிகளும் இங்கே எல்லாக் காலங்களிலும் வளர்கிறது. ஓடைகள் இங்கே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. தேவர்களுக்குத் தகுந்த அற்புதமான இடம் இது. தேவர்களால் நிறுவப்பட்ட பல உருவங்களிலான புனித கற்குவைகளும் இருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, இதுவே சந்திரனுக்குச் சொந்தமான நீராடும் இடம். இதைச் சுற்றி, இந்தக் கானகவாசிகளான தவசிகளும், வாலகில்யர்களும், காற்றை மட்டுமே உண்ணும் பாவகர்களும் எப்போதும் இருக்கின்றனர். இவையே மூன்று சிகரங்களும், மூன்று நீரோடைகளும் ஆகும். நீ அவற்றை ஒவ்வொன்றாக வலம் வரலாம். பிறகு உனது வசதிக்கேற்ப நீராட வேண்டும்.

ஓ! மன்னா, மனிதர்களை ஆட்சி செய்த சந்தனுவும், சுனகனும், நரநாராயணர்களும் நித்தியமான பகுதிகளை இங்கிருந்துதான் அடைந்தனர். இங்கே இந்த வலிமைமிக்கத் தவசிகளுடன் தேவர்களும் மூதாதையர்களும் இருக்கின்றனர். இந்த ஆர்ச்சிக மலையில் அவர்கள் அனைவரும் தவமிருக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, அவர்களுக்கு நீ படையல் செய்ய வேண்டும். ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே, இங்கே தான் அவர்களும், தவசிகளும், பாலில் சமைக்கப்பட்ட சோறை {அரிசியை} உண்கிறார்கள். வற்றாத ஊற்றுக் கொண்ட யமுனை இங்கேதான் இருக்கிறது. ஓ! பாண்டுவின் மகனே, கிருஷ்ணர் {வியாசர்} இங்கேதான் தனது தவவாழ்வை மேற்கொண்டார். ஓ! எதிரிகளின் சடலங்களை இழுத்துச் செல்பவனே, இரட்டைத் தம்பிகளும் {நகுலனும் சகாதேவனும்}, பீமசேனனும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, மேலும் நாங்கள் அனைவரும் உம்முடன் இந்த இடத்திற்குச் செல்வோம்.

ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இது இந்திரனுக்குச் சொந்தமான புனித ஊற்றாகும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, படைத்திடும் தேவனும் {தாதாவும்}, தவிர்த்திடும் தேவனும் {விதாதாவும்}, வருணனும் மேல்நோக்கி எழுந்து, பொறுமையைக் கடைப்பிடித்து, உயர்ந்த நம்பிக்கையைக் கொண்டு இங்கே வசிக்கலாயினர். இந்தச் சிறந்த மற்றும் அனுகூலமான மலை, அன்பும், நேர்மையான மனநிலையும் கொண்ட மனிதர்களுக்குத் தகுந்ததாக இருக்கிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சக்திமிக்கத் தவசிகளும் தங்கள் அறச்சடங்குகளைச் செய்ய அடிக்கடி வந்து செல்லும் இதுவே கடும் பாவங்களை அழிக்கவல்ல புனிதமான யமுனையாகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, பெரும் வில் படைத்த மாந்தாதாவும், அற்புதமான பரிசுகளைக் கொடுக்கவல்லவனும் சகாதேவனின் மகனுமான சோமகனும் இங்கேதான் தேவர்களுக்காக வேள்விச் சடங்குகளைச் செய்தனர். 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்