Saturday, March 15, 2014

இளமையைப் பெற்ற சியவனர் - வனபர்வம் பகுதி 123

Chyavana attained youth | Vana Parva - Section 123 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

குளித்துவிட்டு வந்த சுகன்யையைக் கண்ட அசுவினி தேவர்கள், அவள் அழகைக் கண்டு பாராட்டுவது; ஒரே உருவத்தில் இருக்கும் அவளது கணவர் மற்றும் தங்கள் இருவர் ஆகிய மூவரில் ஒருவரை அவள் கணவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், அவளது கணவருக்கு {சியவனருக்கு} இளமையைத் திரும்ப அளிப்பதாக அசுவினிகள் கூறுவது; சுகன்யை இச்செய்தியை சியவனருக்குச் சொல்வது; சியவனர் அதற்கு இணங்குவது; அசுவினிகள் சியவனரை இளமையடையச் செய்வது; மூவரில் தனது கணவரையே சுகன்யைத் தேர்ந்தெடுப்பது; சோமச்சாற்றைப் பருகும் நிலையை அசுவினிகளுக்குக் கொடுப்பதாகச் சியவனர் உறுதியளிப்பது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முறை தேவர்களான அசுவினி இரட்டையர்கள் சுகன்யையை, அவள் குளித்து முடித்து வெற்றுடலோடு இருக்கும்போது காண நேர்ந்தது. தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகளைப் போல அற்புதமான உறுப்புகள் கொண்டவளைக் {சுகன்யையைக்} கண்ட நாசத்யர்களான {மூக்கில் பிறந்தவர்களான} அசுவினிகள் அவளை {சுகன்யையை} நெருங்கி அவளிடம், "ஓ! அழகிய வடிவம் கொண்ட தொடைகளைக் கொண்டவளே, நீ யாருடைய மகள்? நீ இந்தக் கானகத்தில் என்ன செய்கிறாய்? ஓ! மங்களகரமானவளே, அற்புதமான அருள் கொண்டவளே, இவற்றை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஆகையால் நீ எங்களுக்கு அதைச் சொல்", என்றனர்.


இதன் பேரில் அவள் {சுகன்யா} அந்தத் தேவர்களில் முதன்மையானவர்களிடம் {அசுவினிகளிடம்} நாணத்துடன், "நான் சர்யாதியின் மகளென்றும், சியவனரின் மனைவியென்றும் அறிந்து கொள்ளுங்கள்" என்றாள். இதைக்கேட்ட அசுவினிகள் புன்னகையுடன், "ஓ! நற்பேறு பெற்றவளே {சுகன்யா}, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவருக்கு {சியவனருக்கு} உனது தந்தை {சர்யாதி} உன்னை ஏன் அளித்தான்? ஓ! மருட்சியுடைய மங்கையே, நிச்சயமாக நீ மின்னலைப் போல இந்தக் கானகத்தில் பிரகாசிக்கிறாய். ஓ! பெண்ணே, தேவர்களில் கூட இப்படி எங்கள் கண்களைக் கூசச் செய்தவளை நாங்கள் கண்டதில்லை. ஓ! மங்கையே, ஆபரணங்களற்று, மகிழ்ச்சிகரமான ஆடைகளற்று இருக்கும்போதே நீ இந்தக் கானகத்தில் மிகுந்த அழகுள்ளவளாக இருக்கிறாய். ஓ! குற்றமற்ற உறுப்புகள் கொண்டவளே, இப்படி அழுக்கும் சேறும் பூசப்பட்டவளாக இருந்தால் பிரகாசிக்க மாட்டாய். ஆனால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பபட்டு, கண்கவர் ஆடைகளை உடுத்தினால் மிகவும் பிரகாசிப்பாய். ஓ! அற்புதமான மங்கையே, ஒளிவீசும் புன்னகை கொண்டவளே, மூப்பினால் தளர்ந்தவரும், இன்பம் உணர முடியாத நிலையை அடைந்தவரும், உன்னைப் பராமரிக்க முடியாதவருமான கணவரை {சியவனரை}, இந்தத் துயரத்திலும் நீ ஏன் சேவிக்கிறாய்? ஓ! தெய்வீக அழகு கொண்ட மங்கையே, நீ சியவனரைக் கைவிட்டு, எங்களில் ஒருவரை கணவராக ஏற்பாயாக. உனது இளமையைக் கனியற்றதாக்குவது உனக்குத் தகாது" என்றனர் {அசுவினிகள்}.

இப்படிச் சொல்லப்பட்ட சுகன்யா, அந்தத் தேவர்களிடம், "நான் என்னை எனது கணவரான சியவனருக்கு அர்ப்பணித்திருக்கிறேன். அதில் ([ஒரு மனிதரிடம் விசுவாசத்துடன் இருக்கும்] எனது நேர்மையில்) உங்கள் சந்தேகங்களை ஊக்குவிக்காதீர்கள்" என்றாள். அதற்கு அவர்கள் {அசுவினிகள்} மீண்டும் அவளிடம் {சுகன்யாவிடம்}, "நாங்கள் இருவரும் தேவ மருத்துவர்கள். நாங்கள் உனது தலைவனை இளமையும் அருளும் கொண்டவராக மாற்றுகிறோம். அதன்பிறகு, நீங்கள் எங்களில் ஒருவரை, அதாவது நாங்கள் இருவர் மற்றும் உனது கணவர் ஆகிய மூவரில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ! மங்களகரமானவளே, இதற்கு உறுதியளித்து நீ உனது கணவரை இங்கே அழைத்து வா" என்றனர்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் {அசுவினிகள்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட அவள், பிருகுவின் மகனிடம் {சியவனரிடம்} சென்று அந்த இரண்டு தேவர்களும் {அசுவினிகளும்} சொன்னதைச் சொன்னாள். அவளது செய்தியைக் கேட்ட சியவனர், தனது மனைவியிடம் {சுகன்யாவிடம்}, "அப்படியே செய்" என்றார். தனது தலைவனின் அனுமதியைப் பெற்ற அவள் {சுகன்யா}, (அசுவினி தேவர்களிடம் சென்று) அவர்களிடம், "அப்படியே செய்யுங்கள்" என்றாள். "அப்படியே செய்யுங்கள்" என்ற அவளது வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் {அசுவினிகள்} மன்னனின் {சர்யாதியின்} மகளிடம் {சுகன்யாவிடம்}, "உனது கணவர் நீருக்குள் இறங்கட்டும்" என்றனர்.

அழகை அடைய விரும்பிய சியவனரும் விரைவாக நீருக்குள் இறங்கினார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த அசுவினி இரட்டையர்களும், அந்த நீரின் பரப்புக்குள் மூழ்கினார். அடுத்த நொடியில் அவர்கள் அனைவரும் அழகான உருவத்துடனும், இளமையுடனும், காதில் மெருகூட்டப்பட்ட குண்டலங்களுடனும் தோன்றினர். பார்வைக்கு ஒரே உருவத்தைக கொண்ட அவர்கள் அவளிடம் {சுகன்யாவிடம்}, "ஓ! நற்பேறு கொண்டவளே, எங்களில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ! அழகானவளே, உனது எண்ணத்துக்குத் திருப்தி உண்டாக்கும் ஒருவரை நீ உனது தலைவனாகத் தேர்ந்தெடு" என்றனர். அவர்கள் அனைவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பினும், அவள் ஆழ்ந்து ஆராய்ந்து, கடைசியாகத் தனது கணவரின் அடையாளத்தை உறுதி செய்து, சரியாக அவரையே {சியவனரையே} தேர்வு செய்தாள்.

பேராசைப் பட்ட அழகையும், தனது மனைவியையும் அடைந்த மிகுந்த சக்தி கொண்ட சியவனர், மிகவும் திருப்தி கொண்டு அந்த நாசத்ய {நாசியில் பிறந்த அசுவினி} தேவர்களிடம், "உங்கள் கைகளால் ஒரு முதிர்ந்தவனான நான், இளமையும் அழகும் பெற்று எனது இந்த மனைவியையும் அடைந்ததால், மிகவும் திருப்தி கொண்ட நான், நிச்சயமாக உங்களைத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்னிலையில் சோமச் சாற்றைப் பருகுபவர்களாக ஆக்குவேன். இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்றார் {சியவனர்}. இதைக் கேட்ட அந்த இரட்டையர்கள் {அசுவினிகள்} மிகுந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர். பிறகு சியவனரும் சுகன்யாவும் தேவர்களைப் போலத் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தினர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்