Tuesday, March 18, 2014

சோமகனும்! ஜந்துவும்! - வனபர்வம் பகுதி 127

Somaka and Jantu! | Vana Parva - Section 127 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சோமகன் மகனில்லாதிருப்பது; தனது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுப்பது; சோமகன் தனது புரோகிதரிடம் நூறு மகன்கள் பிறக்க வழி கேட்பது; மன்னன் வேள்வியில் தனது ஒரே மகனை பலி கொடுத்தால் நூறு பிள்ளைகள் பிறப்பார்கள் என்று குடும்பப் புரோகிதர் சொல்வது...

யுதிஷ்டிரன் {லோமசரிடம்} கேட்டான், "ஓ உரைப்பவர்களில் சிறந்தவரே {லோமசரே}! மன்னன் சோமகன் கொண்டிருந்த சக்தி மற்றும் பலத்தின் எல்லை எது? அவனது செயல்களைக் குறித்தும், அவனது சக்தி குறித்தும் உள்ளபடியே அறிய விரும்புகிறேன்"

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ யுதிஷ்டிரா! சோமகன் என்ற பெயரில் ஒரு அறம்சார்ந்த மன்னன் இருந்தான். ஓ! மன்னா, அவனுக்கு, கணவனுக்குச் சரியான பொருத்தமான நூறு {100} மனைவியர் இருந்தனர். அவன் {சோமகன்} பெரும் அக்கறை எடுத்துக் கொண்டும், அவர்களில் ஒரு மகனைப் பெற முடியவில்லை. நீண்ட காலம் கடந்தும் அவன் மகனற்றவனாகவே தொடர்ந்தான். ஒரு சமயம், அவன் முதிர்ந்த வயதடைந்த பிறகும் ஒரு மகனைப் பெற அனைத்து வகையிலும் முயன்று கொண்டிருந்தான். அப்போது அந்த நூறு மனைவியரில் ஒருத்தியிடம், ஜந்து என்ற பெயர் கொண்ட மகன் பிறந்தான். அனைத்து அன்னையரும் அவனைச் சுற்றி அமர்ந்து கொள்வதும், அவனை {ஜந்துவை} மகிழச்செய்யும் பொருட்களை அனைவரும் கொடுப்பதும் வழக்கம்.


ஒரு நாள் அந்தப் பிள்ளையில் இடையில் ஒரு எறும்பு கடிக்க நேர்ந்தது. அந்தப் பிள்ளையும் வலியால் சத்தமாகக் கதறினான். உடனே அத்தாய்மார்கள், பிள்ளை எறும்பால் கடிக்கப்பட்டதைக் கண்டு மிகவும் துன்புற்றார்கள். மேலும் அவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு மிகவும் அழுதார்கள். இதனால் அங்கே ஆரவாரவொலி எழுந்தது. திடீரென அவ்வலியின் கதறல், குடும்பப் புரோகிதர் அருகிருக்க அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த பூமியின் ஆட்சியாளனை {சோமகனை} (அவனின் காதுகளை) அடைந்தது. பிறகு அம்மன்னன் {சோமகன்} அது என்னவென்ற தகவலைக் கேட்டனுப்பினான். அரச துதிபாடி {பொதுவாக வாயிற்காப்போன்}, அது அவனது மகனைக் குறித்த காரியம் என்று விளக்கினான். சோமகன் தனது அமைச்சர்களுடன் எழுந்து, பெண்கள் இருந்த அந்தப்புரத்திற்கு விரைந்தான். ஓ! எதிரிகளை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, அங்கே வந்ததும், அவன் {சோமகன்} தனது மகனுக்கு ஆறுதல் கூறினான். இப்படிச் செய்த பிறகு, பெண்களின் அந்தப்புரத்தைவிட்டு வெளியே வந்த மன்னன், தனது குடும்பப் புரோகிதர் மற்றும் அமைச்சர்களுடன் அமர்ந்தான்.

சோமகன் {குடும்பப் புரோகிதரிடம்}, "ஒரே மகனைக் கொண்டிருப்பது இகழத்தக்கது! இதற்கு நான் மகனற்றவனாகவே இருந்திருக்கலாம். அனைத்து உயிரினங்களும் நோய்வாய்ப்படும் சாத்தியம் இருப்பதைக் கருதினால் ஒரே பிள்ளை கொண்டிருப்பது தொல்லையே. ஓ! அந்தணரே, ஓ! எனது தலைவா! நான் பல பிள்ளைகள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நூறு மனைவியரையும் நான் மணந்தேன். அதுவும் அவர்களைச் சோதித்தறிந்து, எனக்கு அவர்கள் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்றறிந்த பிறகே மணந்தேன். ஆனால் அவர்களுக்குப் பிள்ளைகளில்லை. அனைத்து வகையிலும் முயன்று, பெரும் முயற்சிக்குப் பின்னர் அவர்கள் ஜந்து என்ற ஒரு மகனைப் பெற்றார்கள். இதைவிடப் பெரிதாகத் துக்கம் தரக்கூடியது எது? ஓ! இரு பிறப்பாளர்கள் சாதியில் {அந்தணர்களில்} மிக அற்புதமானவரே! நான் வயதால் வளர்ந்து மூப்படைந்துவிட்டேன். எனது மனைவியரும் அப்படியே. இருப்பினும் இந்த ஒரே மகன்தான் அவர்களின் நாசியில் மூச்சாக இருக்கிறான். அவன் எனக்கும் அப்படியே இருக்கிறான். ஒருவன் நூறு மகன்களைப் பெறக்கூடிய ஏதாவது சடங்கு இருக்கிறதா? (அப்படி ஒன்று இருந்தால்), அது சிறியதா அல்லது பெரியதா என்றும், செய்வதற்கு எளிதானதா அல்லது கடுமையானதா என்றும் சொல்லும்" என்று கேட்டான்.

குடும்பப் புரோகிதர் {மன்னன் சோமகனிடம்}, "ஒரு மனிதன் நூறு மகன்கள் பெறக்கூடிய ஒரு அறச்சடங்கு இருக்கிறது. ஓ! சோமகா, உன்னால் அதைச் செய்ய முடியும் என்றால், நான் அதை உனக்கு விவரிக்கிறேன்" என்றார்.

சோமகன், "அது நன்மையோ அல்லது தீமையோ, நூறு மகன்களைப் பிறக்க வைக்கக்கூடிய அச்சடங்கு ஏற்கனவே முடிந்ததாக எடுத்துக் கொள்ளும். அருளப்பட்ட நீர் அதை எனக்கு விளக்குவதே தகும்" என்றான்.

அதற்கு அந்தக் குடும்பப் புரோகிதர், "ஓ! மன்னா {சோமகா}, நான் ஒரு வேள்வியைச் செய்ய அனுமதி. அதில் நீ உனது மகனான ஜந்துவைத் தியாகம் செய்ய வேண்டும். பிறகு, குறைந்த நாட்களிலேயே உனக்கு அழகான நூறு மகன்கள் பிறப்பார்கள். ஜந்துவின் கொழுப்பு தேவர்களுக்குப் படையலாக நெருப்பிலடப்படும்போது, அந்தத் தாய்மார் அதில் வரும் புகையை முகர்ந்து பார்க்க வேண்டும். அது வீரமும் பலமும் மிக்கப் பல மகன்களை அவர்களுக்குக் கொடுக்கும். ஜந்து, மீண்டும் அதே தாயினிடத்தில் உனக்கே மகனாகப் பிறப்பான். அவனது முதுகில், தங்கத்தாலான ஒரு குறி {மச்சம்} தோன்றும்" என்றார்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்