Tuesday, March 18, 2014

யமனைச் சந்தித்த சோமகன்! - வனபர்வம் பகுதி 128

Somaka met Yama! | Vana Parva - Section 128 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வேள்வி நடந்தேறுவது; ஜந்து கொல்லப்படுவது; தாய்மார்களுக்கு நூறு மகன்கள் பிறப்பது; ஜந்துவே மீண்டும் மூத்த மகனாகப் பிறப்பது; சோமகனும் புரோகிதரும் இறப்பது; புரோகிதர் நரகத்தில் அவிக்கப்படுவதைச் சோமகன் காண்பது; புரோகிதருடன் சேர்ந்து சோமகனும் நரகவாசம் பெற்று பிறகு அருள் உலகை அடைந்தது...

சோமகன் {குடும்ப புரோகிதரிடம்} சொன்னான், "ஓ அந்தணரே! எது நடத்தப்பட வேண்டுமோ அதை, அதன் அவசியத்திற்கேற்ப துல்லியமாகச் செய்யும். நான் பல மகன்களைப் பெற விரும்புவதால், நீ சொல்லும அனைத்தையும் நான் செய்வேன்"

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பிறகு வேள்வியை நடத்திய அந்தப் புரோகிதர், ஜந்துவை பலிக்காணிக்கையாக்கினார். இரக்கம் கொண்ட அந்தத் தாய்மார்கள் அந்த மகனை வலுக்கட்டாயமாகப் பறித்து எடுத்துச் சென்றான். பிறகு அவர்கள், "ஐயோ, நாங்கள் கெட்டோம்" என்றனர். அவர்கள் துன்பத்தின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டு, ஜந்துவின் வலக்கரத்தைப் பற்றிப் பரிதாபகரமான முறையில் அழுதனர். ஆனால் வேள்வியை நடத்திய புரோகிதரோ, அந்தப் பிள்ளையை வலக்கரத்தால் பற்றி இழுத்தார். பெண் அன்றில் பறவைகளைப் போல அவர்கள் துயரத்தால் கதறினர். ஆனால் அந்தப் புரோகிதர் அவர்களது மகனை இழுத்து, அவனைக் கொன்று, அவனது கொழுப்பை சரியான முறையில் எரித்தார். ஓ! குரு குலத்தின் இன்பமே {யுதிஷ்டிரா}, அக்கொழுப்புப் படையலாக்கப்பட்ட போது, துயரத்தில் இருந்த அத்தாய்மார், அதன் மணத்தை நுகர்ந்தபடியே, திடீரெனத் தரையில் (மயங்கி) விழுந்தனர்.


ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த அழகிய மங்கையர் அனைவரும் கருவுற்றனர். ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே! {யுதிஷ்டிரா}, பத்து மாதம் கடந்ததும் சோமகனுக்கு அந்த மங்கையர்கள் மூலம் நூறு மகன்கள் பிறந்தனர். ஓ பூமியின் ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, ஜந்து, முன்புபோலவே, தன் தாயிடத்திலேயே சோமகனின் மூத்த பிள்ளையாகப் பிறந்தான். அந்த மங்கையருக்கு அவன் {ஜந்து} அன்பிற்கினியவனாக இருந்தது போல அவர்களது சொந்த பிள்ளைகளும் இருக்கவில்லை. அவனது முதுகில் தங்கக்குறியும் {மச்சம்} இருந்தது. அவன் அந்த நூறு மகன்களைக் காட்டிலும் மேன்மைதங்கியவனாக இருந்தான்.

பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்தில் சோமகனின் குடும்பப் புரோகிதர் தனது உயிரை விட்டார். சோமகனும் அவ்வாறே தனது உயிரை விட்டான். இப்போது அவன் {சோமகன்}, தனது புரோகிதர் கொடுராமன நரகத்தில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அவன் {சோமகன்} அவரிடம் {புரோகிதரிடம்}, "ஓ! அந்தணரே! நீர் ஏன் இந்த நரகத்தில் அடைபட்டுக் கிடக்கிறீர்!" என்று கேட்டான். நெருப்பில் வெந்து கொண்டிருந்த அந்தக் குடும்பப் புரோகிதர் அவனிடம் {சோமகனிடம்}, "உனது வேள்வியை நான் நடத்தியதன் விளைவு இது" என்றார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்ட தவசியான அம்மன்னன் {சோமகன்}, இறந்தவர்களின் ஆன்மாவைத் தண்டிக்கும் தேவனிடம் {யமனிடம்}, "நான் இதற்குள் நுழைவேன். எனது வேள்வியை நடத்திய புரோகிதரை விடுவி; இந்த மரியாதைக்குரிய மனிதர் என் காரணமாகவே இந்நரக நெருப்பில் வேக வைக்கப்படுகிறார்" என்றான்.

அதற்குத் தர்மராஜன் {யமன்} {மன்னன் சோமகனிடம்}, "ஒருவன் இன்னொருவன் செயல்களுக்காக மகிழவோ துன்பப்படவோ முடியாது. ஓ! பேசுபவர்களில் சிறந்தவனே {சோமகா}! நீ காணும் இவை யாவும் உனது செயல்களின் கனிகளாகும்", என்றான்.

சோமகன் {யமனிடம்}, "இங்கே இருக்கும் இந்த அந்தணர் இல்லாமல் நான் அருளுலகு செல்ல விரும்பவில்லை. சொர்க்கமோ, நரகமோ நான் இம்மனிதரின் துணையுடனே இருந்து விடுகிறேன். ஓ தர்மராஜா {யமா}, எனது செயல் அவருக்கு ஒத்ததுதான். அச்செயல் நன்மையோ தீமையோ, அதன் கனி எங்கள் இருவருக்கும் சமமாகவே இருக்க வேண்டும்" என்றான்.

தர்மராஜன் {யமன்}, "ஓ! மன்னா {சோமகா}! இதுவே உனது விருப்பமென்றால், அச்செயலுக்கான கனியை அவன் பெறும் காலம் வரை சுவை. அதன் பிறகு நீ அருளுலகு செல்லலாம்" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தத் தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்ட மன்னன் {சோமகன்}, பரிந்துரைக்கப்பட்டபடியே அனைத்தையும் சரியாகச் செய்தான். அவரது பாவங்கள் தொலைந்த பிறகு, அவன் தனது புரோகிதருடன் விடுவிக்கப்பட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புரோகிதரிடம் அன்பு கொண்ட அவன் நல்வினையினால் கிடைத்த அருள் உலகையும், மற்றும் அனைத்தையும் புரோகிதரான அந்த அந்தணருடனேயே அடைந்தான். நமது கண்ணெதிரே இருக்கும் இந்த ஆசிரமம் அவனுடையதே {சோமகனுடையதே}. இங்கே புலனடக்கத்துடன் ஆறு இரவுகள் தங்கும் மனிதன் அருளப்பட்ட உலகங்களை அடைகிறான். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! குரு குலத்தின் தலைவா! உற்சாகத்தை விடுத்து, தன்னடகத்துடன், நாம் ஆறு இரவுகளைக் கழிக்க வேண்டும். நீ அதற்குத் தயாராகு" என்றார் {லோமசர்}. 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்