Saturday, March 22, 2014

அஷ்டவக்கிரன் ஞானம்! - வனபர்வம் பகுதி 133

The Knowledge of Ashtavakra! | Vana Parva - Section 133 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

அஷ்டவக்கிரன், வாயில் காப்போன், மன்னன் ஜனகன் ஆகியோர் பேசிக் கொள்வது; மன்னன் ஜனகன் அஷ்டவக்கிரனைப் பரிசோதித்துப் பார்ப்பது; பிறகு வேள்விக்களத்திற்குள் அனுமதிப்பது...

அஷ்டவக்கிரன் {மன்னன் ஜனகனிடம்}, "வழியில் எந்த அந்தணனும் எதிர்படாத போது, அந்த வழி, குருடர், செவிடர், மகளிர், சுமைதூக்கிகள், மன்னன் ஆகியோரை முறையே சாரும். ஆனால் வழியில் ஒரு அந்தணனைச் சந்தித்தால், அந்த வழி அவனுக்கு மட்டுமே {அந்த அந்தணனுக்கே} சொந்தமாகும்" என்றான். அதன்பேரில் மன்னன் {ஜனகன்}, "உள்ளே நுழையும் தனிச்சலுகையை {உமக்கு} அளிக்கிறேன். எனவே, உள்ளே நுழைந்து நீர் விரும்பியதைச் செய்யலாம். சிறு பொறி நெருப்பையும் அசட்டை செய்யக்கூடாது. இந்திரனே கூட அந்தணர்களைப் பணிகிறான்" என்றான். இதற்கு அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, "ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, எங்கள் ஆவல் மேலீட்டால், உனது வேள்விச்சடங்கைக் காண நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் உனது விருந்தினர்களாக இங்கே வந்திருக்கிறோம். எங்களுக்கு (உள்ளே நுழைய) உனது அனுமதி வேண்டும்.

ஓ! இந்திரதியும்னனின் மகனே {ஜனகா}, நாங்கள் வேள்வியைக் காண விரும்பியும், மன்னன் ஜனகனைக் கண்டு அவனுடன் பேசவும் வந்திருக்கிறோம். ஆனால், உனது பாதுகாவலர் எங்களைத் தடை செய்கின்றனர். இதனால் எங்களது கோபம் ஜுரத்தைப் போல எரிகிறது" என்றான்.

அதற்கு அந்தப் பாதுகாவலர், "நாங்கள் வந்தினின் {வந்தியின்} கட்டளைகளை ஏற்று நடக்கிறோம். நான் சொல்ல வேண்டியதைக் கேளும். சிறுவர்கள் நுழைய இங்கே அனுமதிப்பதில்லை. கற்ற முதிர்ந்த அந்தணர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்" என்றான். அதற்கு அஷ்டவக்கிரன், "முதிர்ந்தவர்களுக்குத்தான் அனுமதி என்ற நிலைதான் இருக்கிறது என்றால், ஓ! பாதுகாவலனே, எங்களுக்கும் உள்ளே நுழைய உரிமை உண்டு. நாங்கள் முதிர்ந்தவர்கள். நாங்கள் புனிதமான நோன்புகளை நோற்றிருக்கிறோம். வேதம் உரைப்பதனால் உண்டான சக்தியையும் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு மேன்மையானவர்களுக்குப் பணிவிடை செய்திருக்கிறோம். எங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். ஞானத்திலும் நிபுணத்துவத்தை வென்றிருக்கிறோம். நெருப்பு சிறு பொறியாக இருந்தாலும், அதைத் தொட்டால் எரிக்கும் என்பதனால் சிறுவர்களும் அசட்டை செய்யப்படக்கூடாது என்று சொல்லப்படுகிறது" என்றான் {அஷ்டவக்கிரன்}.

பாதுகாவலன், "ஓ! இளம் அந்தணரே, நான் உம்மைச் சிறுவராகவே கருதுகிறேன். ஆகையால், தெய்வீகத் தவசிகளால் போற்றப்படுவதும் பிரம்மத்தின் {கடவுளின்} இருப்பை உணர்த்துவதும், ஒரு எழுத்தைக் கொண்ட போதிலும் பல பொருளை உணர்த்துவதுமான அந்த ஒரு வரியை நீர் உரைக்க வேண்டும். வீண் பெருமை பேசாதீர். கற்ற மனிதர்கள் உண்மையில் மிகவும் அரிதாகவே இருக்கின்றனர்" என்றான். அதற்கு அஷ்டவக்கிரன், "இலவ {இலவம்பஞ்சு} மரத்தின் முடிச்சுகள் அதன் வயதைக் குறிப்பதில்லை. ஆகவே உண்மையான வளர்ச்சியை வெறும் உடல் வளர்ச்சியால் அனுமானிக்க முடிவதில்லை. ஒரு மரம் மெலிதாகவும், குறுகியதாகவும் இருந்தாலும் கனிகளைத் தாங்கினால், அது முழுமையாக வளர்ந்தது என்று அழைக்கப்படுகிறது. ஆனால், கனியைத் தாங்காதவை வளர்ந்தவையாகக் கருதப்படுவதில்லை" என்றான்.

பாதுகாவலன், "சிறுவர்கள், முதியவர்களிடம் இருந்து கல்வியைப் பெற்றுக் கொண்டு காலத்தால் அவர்களும் வளர்ந்து முதிர்கிறார்கள். ஞானம் என்பது குறுகிய காலத்தில் அடையக்கூடியதல்ல. நீர் குழந்தையாக இருந்த போதிலும் ஏன் முதிர்ந்த மனிதனைப் போலப் பேசுகிறீர்?" என்று கேட்டான். அதற்கு அஷ்டவக்கிரன், "ஒருவனது தலை நரைத்துப் போவதால் அவன் முதிர்ந்தவனாவதில்லை. ஒருவன் வயதால் குழந்தையாக இருந்தாலும், அவன் ஞானத்தைப் பெற்றிருந்தால் தேவர்களும் அவனை முதிர்ந்தவனாகக் கருதுகிறார்கள். ஒரு மனிதனின் தகுதி வயதிலோ, நரை முடியிலோ, செல்வத்திலோ அல்லது நண்பர்களாலோ வருவது என்று தவசிகள் விதிக்கவில்லை. எங்களுக்குள் வேதங்களை நன்கு அறிந்தவனே பெருமைவாய்ந்தவன். ஓ! வாயில் காப்போனே, நாங்கள் அவையில் வந்தினைக் காண விரும்பி இங்கே வந்திருக்கிறோம். கழுத்தில் தாமலை மாலை அணிந்திருக்கும் மன்னன் ஜனகனிடம் சென்று, நான் இங்கே இருக்கிறேன் என்பதைச் சொல். உள்ளே நுழைந்து கற்ற மனிதர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்டு, வாதப்போரில் வந்தினை நான் தோற்கடிப்பதை நீ இன்று காண்பாய். மற்றவர்கள் அமைதியடைந்த பிறகு, முதிர்ந்த கல்வி கற்ற அந்தணர்களும் தனது முதன்மைப் புரோகிதர்களுடன் கூடிய மன்னனும் {ஜனகனும்}, எனது திறனின் மேன்மை அல்லது தாழ்மையான தன்மையைச் சாட்சியாகக் காண்பார்கள்" என்றான்.

பாதுகாவலன், "பதின்ம வயதில் இருக்கும் நீர், கல்வி கற்ற மனிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பபடும் இந்த வேள்விக்குள் நுழைவீர் என்று எப்படி நம்பலாம்? இருப்பினும் நான் உமது நுழைவுக்காகச் சில வழிகளில் முயற்சிப்பேன். நீரும் உமது பங்குக்கு முயற்சி செய்யும்" என்றான். பிறகு அஷ்டவக்கிரன் மன்னனிடம் சென்று, "ஓ மன்னா, ஓ ஜனக குலத்தில் முதன்மையானவனே, நீயே தலையாய இறையாண்மை. அனைத்து சக்திகளும் உன்னில் நிறைந்திருக்கின்றன. பழங்காலத்தில் வேள்விகளைக் கொண்டாடுபவனாக மன்னன் யயாதி இருந்தான். இக்காலத்தில் நீயே அதைச் செய்கிறாய். கற்றவனான வந்தின், வாதம் புரிவதில் நிபணர்களை வீழ்த்தியபிறகு, உம்மால் நியமிக்கப்பட்டிருக்கும் தனது நம்பிக்கைக்குரிய சேவகர்கள் மூலம் அவர்களை {வாத நிபுணர்களை} நீரில் மூழ்கடிப்பதாகக் கேள்விப்பட்டோம். இதைக் கேட்ட பிறகே, நான் இந்த அந்தணர்கள் முன்னிலையில், பிரம்மத்தின் ஒருமைப்பாடு குறித்த கொள்கையை விளக்க இங்கே வந்திருக்கிறேன். வந்தின் இப்போது எங்கிருக்கிறான்? சூரியன் நட்சத்திரங்களை அழிப்பது {மறைப்பதைப்} போல நானும் அவனை {வந்தினை} அணுகி அழிக்க வந்திருக்கிறேன். அவன் {வந்தின்} எங்கிருக்கிறான் என்பதைச் சொல்லுங்கள்" என்றான் {அஷ்டவக்கிரன்}.

அதற்கு மன்னன் {ஜனகன்}, ஓ அந்தணரே, வந்தினின் வாத திறனை நீர் அறியாததால் அவரை வீழ்த்திவிடலாம் என்று நம்புகிறீர். அவரது சக்தியை அறிந்தவர்கள் உம்மைப் போலப் பேச முடியுமா? வேதமறிந்த அந்தணர்கள் அவரிடம் முயன்றும் பார்த்துவிட்டார்கள். அவரது {வாதத்திறனை} சக்தியை அறியாததாலேயே நீர் வந்தினை வென்று விடலாம் என்று நம்புகிறீர். சூரியன் முன்னால் மறைந்து போகும் நட்சத்திரங்களைப் போல, அவர் முன்னால் பல அந்தணர்கள் மறைந்து போயிருக்கின்றனர். தங்கள் கல்வியில் கர்வம் கொண்ட மக்கள் அவரை வீழ்த்த விரும்பி, அவரது முன்னிலையில் வந்து தங்கள் புகழைத் தொலைத்து, சபை உறுப்பினர்களிடம் கூடப் பேசும் துணிவை இழந்து, அவருக்கெதிரில் இருந்து விலகிப் போயிருக்கின்றனர்" என்றான்.

அஷ்டவக்கிரன் {மன்னன் ஜனகனிடம்}, "வந்தின் இதுவரை என்னைப்போன்ற மனிதனுடன் சர்ச்சையில் ஈடுபடவில்லை. இதனால் தான் அவன் தன்னைச் சிங்கமாகக் கண்டு கர்ஜித்து வருகிறான். ஆனால் இன்று என்னைச் சந்தித்து, நெடுஞ்சாலையில் {அச்சாணியற்று} சக்கரங்கள் விலகிய வண்டியைப் போல இறந்து விழுவான்" என்றான். மன்னன் {ஜனகன் அஷ்டவக்கிரனிடம்}, "முப்பது பிரிவுகளும், பன்னிரெண்டு பகுதிகளும், இருபத்துநான்கு இணைப்புகளும் {பொருத்துகளும்} முன்னூற்று அறுபது ஆரங்களும் கொண்ட ஒரு பொருளின் {சக்கரத்தின்} முக்கியத்துவத்தை எவன் அறிவானோ அவனே உண்மையில் கற்ற மனிதனாவான்" என்றான்.

அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, "இருபத்துநான்கு இணைப்புகளும் {பொருத்துகளும்}, ஆறு மையங்களும் {நாபிகளும்-தொப்புள்களும்}, பனிரெண்டு எல்லைகளும் {அச்சுகளும்}, முன்னூற்று அறுபது ஆர்ங்களும் கொண்ட எப்போதும் நகரும் சக்கரம் {காலச்சக்கரம்} உன்னைப் பாதுகாக்கட்டும்"என்றான். {சூரியன், சந்திரன் மற்றும் நிழற்கோள்களின் {ராகு, கேது} சுழற்சியைக் கொண்ட காலச்சக்கரத்தின்படி சரியான நேரங்களில் செய்யப்படும் நற்செயல்கள் உன்னைப் பாதுகாக்கட்டும் என்பதே பொருள்}. மன்னன் {ஜனகன் அஷ்டவக்கிரனிடம்}, "தேவர்களுள் எவன், (தேரில் பூட்டப்பட்ட) இரண்டு பெண் குதிரைகளைப் போல சேர்ந்திருப்பவைகளும், பருந்தைப் போல விழுகின்றவைகளுமானவற்றைத் தேவர்களுள் எவன் தாங்குகிறான்? அவை எதைப் பெற்றெடுக்கின்றன?" என்று கேட்டான். அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, "ஓ! மன்னா, உன் வீட்டிலும், ஏன் உனது பகைவரின் வீட்டிலும் கூட அவ்விரண்டும் {இடியும், மின்னலும் அல்லது துன்பமும், மரணமும்} நேர வேண்டாம். காற்றைச் சாரதியாகக் கொண்டிருப்பவன் {மேகம் அல்லது மனம்} இவற்றைப் பெற்றெடுக்கிறான். அவையும் {இடியும், மின்னலும் அல்லது துன்பமும் மரணமும்} அவனையே {மேகத்தையே அல்லது மனத்தையே} பெற்றெடுக்கின்றன" என்றான்.

பிறகு அம்மன்னன் {ஜனகன்}, "உறங்கும் போதும் தனது கண்களை மூடாதது எது; பிறக்கும்போதும் எது அசையாமல் இருக்கிறது; இதயம் இல்லாதது எது; எது தன் வேகத்தைத் தானே பெருக்கிக் கொள்ளும்?" என்று கேட்டான். அதற்கு அஷ்டவக்கிரன், "உறங்கும்போது கண் இமைகளை மூடாதது மீன் {எப்போதும் விழிப்புடன் இருக்கும் ஜீவாத்மா}. உற்பத்தியாகும்போதும் {பிறக்கும்போதும்} அசையாமல் இருப்பது முட்டை {இம்மைக்குரிய முட்டை அல்லது உலகம் என்றும் கொள்ளலாம்}. இதயமே இல்லாதது கல் {உடலைத் துறந்த ஆன்மா}. தனது வேகத்தைத் தானே பெருக்கிக் கொள்வது ஆறு {ஒரு யோகியின் இதயம்}" என்றான்.

அதற்கு மன்னன் {ஜனகன் அஷ்டவக்கிரனிடம்}, "ஓ தெய்வீக சக்தியைக் கொண்டவரே, நீர் மனிதர் அல்ல என்று காண்கிறேன். நான் உம்மைச் சிறுவனாகக் கருதவில்லை, முதிர்ந்த மனிதராகவே கருதுகிறேன்; பேச்சில் தன்னை உம்முடன் ஒப்பிடத்தக்க வேறு மனிதன் கிடையாது. ஆகையால் நான் உமக்கு அனுமதியளிக்கிறேன். அதோ வந்தின் {வந்தி} அங்கிருக்கிறார்" என்றான் {மன்னன் ஜனகன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்