Friday, March 21, 2014

அஷ்டவக்கிரன் பிறப்பு! - வனபர்வம் பகுதி 132

The birth of Ashtavakra! | Vana Parva - Section 132 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

உத்தாலகர் தனது சீடனான கஹோடருக்கு, தனது மகள் சுஜாதையை  மணமுடித்துக் கொடுப்பது; சுஜாதைக்குக் கரு உருவாவது; அந்தக் கரு, தனது தந்தை கஹோடர் சரியாக வாசிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது; அக்கருவுக்குச் சாபமிட்ட கஹோடர்; வாதப்போரில் தோற்று கஹோடர் இறப்பது; தனது தந்தை கஹோடர் இறந்தது தெரியாமல் வளரும் அஷ்டவிக்கிரன்; உண்மையை அறிந்ததும் ஜனகரின் வேள்விக்குச் செல்ல தனது மாமனான சுவேதகேதுவுடன் அஷ்டவக்கிரன் புறப்பட்டது...

அஷ்டவக்கிரர்
லோமசர் {யுதிஷ்டிரன்}, "ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, புனிதமான மந்திரங்களில் நிபுணர் என்று உலக முழுதும் புகழ்பெற்ற உத்தாலகரின் மகன் சுவேதகேதுவின் புனிதமான ஆசிரமத்தை இங்கே பார். இந்த ஆசிரமம் தென்னை மரங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இங்கேதான் ஸ்வேதகேது சரஸ்வதி தேவியை மனித உருவில் கண்டு, அவளிடம், "வாக்கைக் {பேச்சைக்} கொடையாகக் கொண்டவனாக நான் இருக்க வேண்டும்" என்று கேட்டார். அந்த யுகத்தில், மாமனும் மருமகனுமான உத்தாலகரின் மகனான ஸ்வேதகேதுவும், கஹோடரின் மகனான அஷ்டவக்கிரரும் புனித கதைகளை அறிந்தவர்களில் சிறந்தவர்களாக இருந்தனர். ஒப்பற்ற சக்தி கொண்ட மாமனும் மருமகனுமான அந்த இரு அந்தணர்களும், மன்னன் ஜனகனின் வேள்விக்களத்திற்குச் சென்று வந்தினை {வந்தின்-ஐ} {வந்தி என்றும் அழைக்கப்படுகிறார்} ஒரு வாதப்போரில் வென்றார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, சிறுவனாக இருக்கும்போதே வந்தினை வென்று, நதியில் மூழ்கும்படி செய்த அஷ்டவக்கிரரைப் பேரனாகக் கொண்டவரின் {உத்தாலகரின்} இந்த ஆசிரமத்தை உனது தம்பிகளுடன் கூடி வழிபடு" என்றார் {லோமசர்}.


அதற்கு யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, "ஓ! லோமசரே, வந்தினை இவ்வகையில் வீழ்த்திய அந்தச் சக்திமிக்க மனிதரை {அஷ்டவக்கிரரைக்} குறித்து அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. அவர் ஏன் அஷ்டவக்கிரராகப் {உடலின் எட்டுப் பகுதிகள் கோணலானவராகப்} பிறந்தார்?" என்று கேட்டான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "தவசியான உத்தாலகருக்கு, கஹோடர் {கஹோளர் என்றும் அழைக்கப்படுகிறார்} என்ற பெயரில் ஆசைகளை அடக்கிய ஒரு சீடர் இருந்தார். அவர் {கஹோடர்}, தன்னைக் குருவின் சேவைக்கு அர்ப்பணித்து, நீண்ட காலத்திற்குத் தனது கல்வியைத் தொடர்ந்தார். அந்த அந்தணர் {கஹோடர்}, தனது ஆசிரியருக்கு நீண்ட காலம் சேவை புரிந்தார். இவரது சேவையை உணர்ந்த குருவும் {உத்தாலகரும்}, தனது மகளான சுஜாதாவையும், சாத்திரங்கள் மீதான ஆளுமையையும் அவருக்குக் {கஹோடருக்குக்} கொடுத்தார். அவளும் {சுஜாதாவும்} நெருப்புக்கு ஒப்பான ஒரு பிள்ளையைக் கருவில் சுமந்தாள். அந்தக் கரு தனது தந்தை படித்துக் கொண்டிருந்த போது அவரிடம் {கஹோடரிடம்}, "ஓ தந்தையே, இரவு முழுவதும் படிக்கிறீர்கள். ஆனால் உமது வாசிப்புச் சரியானதாக எனக்குத் தெரியவில்லை. உமது கருணையால், இந்த எனது கரு நிலையிலேயே சாத்திரங்களையும், வேதங்களையும் அதன் பல கிளைகளையம் நான் அறிந்திருக்கிறேன். ஓ தந்தையே, உமது வாயில் இருந்து வெளிவருபவை {உச்சரிப்பு} சரியானதில்லை என்று நான் சொல்கிறேன்" என்றது. இப்படித் தனது சீடர்களின் முன்னிலையில் அவமதிக்கப்பட்ட அந்தப் பெரும் முனிவர் {கஹோடர்}, கோபத்தால் கருவில் இருந்த அந்தக் குழந்தையிடம், "கருவில் {வக்கிரகதியில்} இருக்கும்போதே நீ இப்படிப் பேசுவதால், உனது உடலில் எட்டுக் கோணல்களைக் கொண்டிருப்பாய்" என்று சபித்தார்.

அதே போல அக்குழந்தையும் கோணலுடனேயே பிறந்தது. அதனாலேயே அந்தப் பெரும் தவசி அஷ்டவக்கிரர் என்ற பெயரால் அறியப்பட்டார். அவருக்கு {அஷ்டவக்கிரருக்கு}, சுவேதகேது என்ற பெயரில் மாமன் ஒருவர் இருந்தார். அவர்கள் இருவரும் {அஷ்டவக்கிரரும், சுவேதகேதுவும்} சமவயது கொண்டவர்களாகவே இருந்தனர். கருவில் வளர்ச்சியடைந்த குழந்தையால் துன்பப்பட்ட சுஜாதை, செல்வத்தை விரும்பி, செல்வமற்றிருந்த தனது கணவரைத் தனிமையில் அழைத்துச் சமாதானப்படுத்தி, "ஓ பெரும் தவசியே, எனது கர்ப்பத்தின் பத்தாவது மாதத்தை நான் எப்படிச் சமாளிப்பேன்? நான் பிரசவித்த பிறகு, என் நிலைமையில் இருந்து நான் மீள வேண்டிய பொருள் எதுவும் உம்மிடம் இல்லையே" என்றாள்.

இப்படி மனைவியால் {சுஜாதாவால்} சொல்லப்பட்ட கஹோடர், செல்வத்திற்காக மன்னன் ஜனகனிடம் சென்றார். அங்கே அவர் வாத {பேச்சு} அறிவியல் அறிந்த வந்தினுடன் ஒரு வாத போரில் தோற்று, (அதன் தொடர்ச்சியாக) நீரில் மூழ்கடிக்கப்பட்டார். தனது மருமகன் {கஹோடர்} வந்தினுடன் விவாவித்து அந்த வாதப்போரில் தோற்று, நீரில் மூழ்கடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட உத்தாலகர், தனது மகளான சுஜாதையிடம், "நீ இதை அஷ்டவக்கிரனிடம் சொல்லாமல் கமுக்கமாக {ரகசியமாக} வைத்துக் கொள்" என்றார். அஷ்டவக்கிரன் பிறந்த பிறகு, அவன் இவ்விஷயத்தைக் குறித்து எதையும் கேள்விப்படாதவாறு அவளும் {சுஜாதையும்} அந்த {தனது தந்தையின்} ஆலோசனையின்படி நடந்து கொண்டாள். அவன் {அஷ்டவக்கிரன்}, உத்தாலகரைத் தனது தந்தையாகவும், சுவேதகேதுவைத் தனது தமையனாகவும் கருதினான்.

அஷ்டவக்கிரனுக்குப் பனிரெண்டு வயதானது. தனது தந்தையின் மடியில் அவன் உட்கார்ந்திருப்பதைச் சுவேதகேது கண்டான். இதனால் அவன் {சுவேதகேது} அவனை {அஷ்டவக்கிரனைக்} கையைப்பிடித்து இழுத்தான். இதனால் அஷ்டவக்கிரன் அழுததால், அவனிடம் {அஷ்வக்கிரரிடம்}, "இது உனது தந்தையின் மடியல்ல" என்றான் {ஸ்வேதகேது}. இந்தக் கொடும் வார்த்தை அஷ்டவக்கிரனின் இதயத்துக்குள் நேராகச் சென்று, மிகுந்த வலியை உண்டாக்கியது. அவன் நேராக இல்லத்திற்குச் சென்று, தனது தாயிடம், "எனது தந்தை எங்கே?" என்று கேட்டான். (இந்தக் கேள்வியால்) பெரிதும் துயருற்ற சுஜாதா, சாபத்திற்குப் பயந்து நடந்தது அத்தனையும் சொன்னாள்.

அனைத்தையும் கேட்ட அந்த அந்தணன் {அஷ்டவக்கிரன்}, இரவில், தனது மாமனான சுவேதகேதுவிடம், "நாம் மன்னன் ஜனகனின் வேள்விக்குச் செல்லலாம். அங்கே அற்புதங்கள் பலவற்றைக் காண வேண்டியுள்ளது. அங்கே நாம் அந்தணர்களுக்கிடையே நடைபெறும் வாதப்போரைக் கேட்டு, அற்புதமான உணவை உண்ணலாம். நமது ஞானமும் அதிகரிக்கும். புனிதமான வேதங்களை உரைப்பது காதுக்கு இனியதும், அருள் நிறைந்ததும் ஆகும்" என்றான். பிறகு அந்த மாமனும் மருமகனும், அற்புதமான வேள்வியான மன்னன் ஜனகனின் வேள்விக்குச் சென்றனர். வாயிலில் இருந்து விரட்டப்பட்ட அஷ்டவக்கிரன் மன்னனைச் {மன்னன் ஜனகனைச்} சந்தித்து, இந்த வார்த்தைகளை உரைத்தான்" என்றார் {லோமசர்}. 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்