Wednesday, March 26, 2014

யவக்கிரீயும்! இந்திரனும்!! - வனபர்வம் பகுதி 135

Yavakri! and Indra!! | Vana Parva - Section 135 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

லோமசர் யுதிஷ்டிரனிடம் யவக்கிரீயின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது; யவக்கிரீ கடுந்தவம் இருப்பது யவக்கிரி வேத ஞானத்தை அடைவது பரத்வாஜர் யவக்கிரீயிடம் அகங்காரம் கூடாது என்று எச்சரிப்பது; யவக்கிரீ முனிவர்களைப் புண்படுத்தி இன்பங்கண்டு திரிவது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முன்பொரு காலத்தில் மதுவிலை என்று அழைக்கப்பட்ட சமங்க நதி இதோ தெரிகிறது. இங்கேதான் பரதன் நீராடிய கர்த்தமிலம் என்ற இடம் இருக்கிறது. சச்சியின் தலைவன் {இந்திரன்}, விரித்திரனைக் கொன்றதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பேரிடரின் போது, அவன் தனது சுத்திகரிப்பைச் சமங்கையில் செய்து பாவத்தில் இருந்து விடுபட்டான். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில்தான் மைநாக மலை பூமிக்குள் மூழ்கியது; அதனாலேயே இந்த இடம் வினசனம் என்று அழைக்கப்படுகிறது. ஓ! மனிதர்களில் காளைகளே, பழங்காலத்தில் அதிதி, மகன்களைப் பெறுவதற்காகக் கொண்டாடப் பட்ட ஒரு உணவைச் சமைப்பதற்காக (பிரம்மன் தலைமையில்), இந்த உயர்ந்த மலையில் ஏறி, சொல்ல முடியாத இழிவான துன்பத்துக்கு ஓர் முற்றுப் புள்ளி வைத்தாள்.

பெரிதுபடுத்த
சொடுக்கவும்
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்குதான் தவசிகளுக்கு விருப்பமான கனகல மலைத்தொடர் இருக்கிறது. இங்கேதான் பெரும் நதியான கங்கையும் இருக்கிறது. பழங்காலத்தில், புனிதமான தவசியான சனத்குமாரர் இங்கேதான் துறவில் வெற்றியை அடைந்தார். ஓ! அஜமீட குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இந்த நதியில் நீராடி பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுதலை பெறு. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ உனது அமைச்சர்களுடன் புண்ணியம் என்று அழைக்கப்படும் இந்தத் தடாகத்துக்கும், பிருகுதுங்கம் மலைக்கும், துஷ்னிகங்கா {ஓசையில்லாமல் செல்லும் கங்கை} என்று அழைக்கப்படும் இந்த இரு ஆறுகளுக்கும் செல். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே ஸ்தூலசிரஸ் என்கிற தவசியின் ஆசிரமம் இருக்கிறது. இந்த இடத்தில் உனது கோபத்தையும் அகங்காரத்தையும் விட்டுவிடு. ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கே ரைப்பியரின் அழகிய ஆசிரமத்தில் தான், வேத அறிவு கொண்ட பரத்வாஜரின் மகனான யவக்கிரீ அழிந்தார்" என்றார் {லோமசர்}.

யுதிஷ்டிரன் {லோசரிடம்}, "பரத்வாஜரின் மகனான பெரும் தவசி யவக்கிரீ எப்படி வேதங்களில் ஆழமான ஞானத்தை அடைந்தார்? மேலும் அவர் எப்படி அழிந்தார்? நான் இவற்றையெல்லாம் நடந்தபடியே அறிய ஆவலாய் இருக்கிறேன். தேவர்களைப் போன்ற அம்மனிதர்களின் செயல்களின் விவரிப்பைக் கேட்பதில் நான் மகிழ்கிறேன்" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பரத்வாஜரும், ரைப்பியரும் இரு நண்பர்களாவர். அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து பெரும் மகிழ்ச்சியுடன் இங்கே வசித்தார்கள். ரைப்பியருக்கு அர்வாவசு, பரவசு என்று இரு மகன்கள் இருந்தனர். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பரத்வாஜருக்கு யவக்கிரீ என்ற ஒரே மகன் இருந்தான். பதரத்வாஜர் தவம்பயின்றிருந்த வேளையில் ரைப்பியர் தனது இருமகன்களுக்கும் வேதங்களில் நல்ல நிபுணத்துவத்தைக் கொடுத்தார். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, சிறுவர்களாக இருந்த பொழுதிலிருந்தே அந்த இருவருக்குள்ளும் {பரத்வாஜருக்கு ரைப்பியருக்கும்} நட்பு ஒப்பற்றதாக இருந்தது. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, தவம்பயின்ற தனது தந்தை அந்தணர்களால் அசட்டை செய்யப்பட்டதையும், அதே வேளையில் ரைப்பியரையும் அவரது மகன்களையும் {அர்வாவசுவையும், பரவசுவையும்} அவர்கள் {அந்தணர்கள்} நன்கு மதித்தையும் கண்ட யவக்கிரீ மிகவும் துக்கம் கொண்டு, மன வருத்தமடைந்தார். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அதன் பிறகு அவர் {யவக்கிரீ} வேத ஞானத்திற்காகக் கடுந்தவத்தை ஆரம்பித்தார். அவர் தனது உடலை எரியும் நெருப்புக்கு வெளிப்படுத்தினார். கடும் தவம்பயின்று, இந்திரனின் மனதில் துயரத்தை ஏற்படுத்தினார். ஓ யுதிஷ்டிரா, பிறகு இந்திரன் அவரிடம் {யவக்கிரீயிடம்} சென்று, "ஓ தவசியே, எதற்காக நீர் இத்தகு கடும் தவம் இருக்கிறீர்?" என்று கேட்டான். அதற்கு யவக்கிரீ, "தேவர்களில் புகழத்தக்கவனே {இந்திரனே}, எந்த அந்தணனும் அடைய முடியாத வேத ஞானத்தை நான் விரும்புகிறேன். ஓ! பகனை வீழ்த்தியவனே {இந்திரா}, அந்த ஞானத்திற்காகவே நான் இத்தகு கடும் தவம் செய்கிறேன். ஓ! கௌசிகா எனது தவத்தின் சக்தியால் நான் அனைத்து சாத்திரங்களின் ஞானத்தையும் அறிய விரும்புகிறேன். ஓ!தலைவா {இந்திரா}, ஆசிரியர்கள் மூலம் அடையப்படும் வேத ஞானத்திற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. ஆகையால், (குறுகிய காலத்திற்குள் வேத ஞானம் அடைய) நான் இந்த உயர்ந்த முயற்சியைச் செய்கிறேன்" என்றார் {யவக்கிரீ}. அதற்கு இந்திரன், "ஓ! அந்தணத் தவசியே, நீர் மேற்கொண்டிருக்கும் வழி சரியானதல்ல. ஓ! அந்தணரே, நீர் எதற்காக உம்மையே அழித்துக் கொள்கிறீர்? போய் ஒரு குருவின் வாயிலாக அவற்றைப் படித்துக் கொள்ளும்" என்றான் {இந்திரன்}.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லிவிட்டு, சக்ரன் {இந்திரன்} சென்றுவிட்டான். பிறகு அளவிடமுடியாத சக்தி கொண்ட யவக்கிரீ மீண்டும் தனது கவனத்தைத் தவத்தில் செலுத்தினார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவரது கடுந்தவங்களை அறிந்த இந்திரன் மீண்டும் பெரும் தாக்கத்திற்கு உள்ளானான். பிறகு வலனைக் கொன்ற தேவனான இந்திரன், மீண்டும் கடுந்தவத்திலிருந்த அந்தப் பெரும் தவசியிடம் வந்து, "நீரும் உமது தந்தையும் வேத ஞானத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்; ஆனால் உமது முயற்சிகள் வெற்றி அடைய முடியாது. இந்த உமது செயல் பரிந்துரைக்கத்தக்கதன்று" என்றான். யவக்கிரீ, "ஓ தேவர்களின் தலைவா {இந்திரா}, நீ எனது விருப்பங்களை நிறைவேற்றவில்லையென்றால், நான் இந்த வேள்வியில் சுடர்விட்டு எரியும் நெருப்பில் எனது அங்கங்களை வெட்டிப் போடுவேன்" என்றார் {யவக்கிரீ}.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்த உயர் ஆன்ம தவசியின் தீர்மானத்தை அறிந்த அறிவுநுட்பம் கொண்ட இந்திரன் சிறிது நேரம் சிந்தித்து, அவரது கருத்தை மாற்ற சிறந்த ஓர் உபாயத்தைக் கண்டுபிடித்தான். பிறகு இந்திரன், நூறு வயது கொண்ட ஒரு உறுதியற்ற சுவாசக்கோளாறுடைய ஒரு அந்தண வடிவம் எடுத்தான். பிறகு அவன் {இந்திரன்}, யவக்கிரீ தனது நீர்க்கடனை செலுத்த வரும் பகீரதியின் {கங்கையின்} கரையில் மணலை அள்ளி வீசிக் கொண்டிருந்தான். அந்தணர்களின் தலைவரான யவக்கிரீ தன்னைக் கவனிக்காததைக் கண்ட இந்திரன், அக்கங்கையை மணலால் நிரப்பத் தொடங்கினான். நிறுத்தாமல் கைநிறைய மணலை அள்ளி பகீரதிக்குள் எறிந்து, அந்தத் தவசியின் {யவக்கிரீயின்} கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு அணை கட்டத் தொடங்கினான்.

 இந்திரன் அணை கட்டுவதைக் கண்ட தவசிகளில் காளையான யவக்கிரீ சத்தம் போட்டு சிரித்து, "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய். ஓ! அந்தணா, உனது நோக்கம்தான் என்ன? ஒன்றுக்கும் ஆகாத, இந்தப் பெரும் முயற்சியை நீ ஏன் செய்கிறாய்?" என்று கேட்டார். இந்திரன், "ஓ மகனே, ஒரு தாராளமான வழி வேண்டும் என்பதற்காக நான் கங்கையின் மீது அணை கட்டுகிறேன். (இந்த நதியை) படகில் கடக்க மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்" என்றான். யவக்கிரீ, "ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்தப் பெரும்பலம் வாய்ந்த ஊற்றை உம்மால் அணை கட்டித் தடுக்க முடியாது. ஓ அந்தணரே, அனுபவத்திற்கு ஒத்துவராத உமது முயற்சியைக் கைவிடும், அனுபவத்துக்குகந்த வேறு எதையாவது செய்யும்" என்றார். இந்திரன், "ஓ தவசியே, நிச்சயமாகக் கனி தராது என்று தெரிந்தும், வேதங்களின் ஞானத்தை அடைய நீர் செய்யும் தவத்தைப் போலத்தான் நானும் இந்தப் பெரும்பணியைச் செய்கிறேன்" என்றான். யவக்கிரீ, "ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, உனது முயற்சிகளைப் போலவே எனது முயற்சிகள் அனைத்தும் கனியற்றதாகுமென்றால், எது அனுபவத்திற்கு உகந்து வருமோ அதை எனக்குச் செய் {உன்னால் முடிந்ததை எனக்குச் செய்}. நான் மற்ற மனிதர்களை விஞ்சி இருக்கும் வகையில் எனக்கு வரங்களை அருள் செய்" என்று கேட்டார் {பரத்வாஜரின் மகன் யவக்கிரிவர்}.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பிறகு இந்திரன் அந்தப் பெருஞ்சக்தி வாய்ந்த தவசி கேட்ட வரங்களை அளித்தான். பிறகு அவன், "நீர் விரும்பிய படியே, வேதங்களின் ஞானம் உமக்கும் உமது தந்தைக்கும் கிடைக்கும். உமது அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். ஓ யவக்கிரீ, வீட்டிற்குச் செல்லும்" என்றான்.

இப்படித் தனது விருப்பத்தை அடைந்த யவக்கிரீ தனது தந்தையிடம் {பரத்வாஜரிடம்} வந்து, "ஓ! தந்தையே, எனக்கும் உமக்கும் வேதங்கள் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. நான் அனைத்து மனிதர்களை விஞ்சும் வகையில் வரங்களைப் பெற்றிருக்கிறேன்" என்று சொன்னான். பரத்வாஜர், "ஓ மகனே {யவக்கிரிவனே}, நீ விரும்பிய நோக்கங்களை அடைந்ததனால், நீ அகங்காரம் கொள்வாய். நீ அப்படி அகங்காரத்தை அடையும்போது நீ இரக்கமற்று போவாய். அப்படி இரக்கமற்றுப் போவதால், விரைவில் அழிவு உன்னை வந்தடையும். ஓ எனது மகனே {யவக்கிரிவனே}, இது சம்பந்தமாகத் தேவர்கள் ஒரு உபகதையைச் சொல்வார்கள். ஓ மகனே {யவக்கிரிவனே}, பழங்காலத்தில் பாலதி என்ற பெயரில் பெரும் சக்தி கொண்ட ஒரு தவசி வாழ்ந்து வந்தார். தனது பிள்ளையின் இறப்பால் துக்கத்தில் இருந்த அந்த முனிவர் {பாலதி}, தேவர்களைப் போலவே இறவாதவனாக ஒரு மகனை வேண்டி கடும் தவம் செய்தார். அவர் விரும்பியபடி ஒரு மகனையும் அடைந்தார். ஆனால் அவருக்கு {முனிவர் பாலதிக்கு} ஆதரவாக நடந்து கொண்ட தேவர்கள், அவரது மகனை இறவாதவனாக ஆக்கவில்லை. அவர்கள், "இறக்கக்கூடிய ஒரு மனிதன் ஒரு நிபந்தனையின் பேரில் இறவாதவனாக ஆக முடியும். இருப்பினும் உமது மகனின் உயிர், ஏதாவது ஒன்றின் மூலம் பிரிவதாக இருக்க வேண்டும்" என்று கேட்டனர். அதற்குப் பாலதி, : "ஓ தேவர்களின் தலைவா, நித்தியமாக நிலைத்து நிற்கும் இந்த அழிவில்லாத மலைகள் அவன் உயிர் பிரிவதற்கான காரணமாக இருக்கட்டும்" என்று சொன்னார். பிறகு அந்தத் தவசிக்கு {பாலதிக்கு}, மேதாவி என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான். அவர் எரிச்சல் மிக்க மனநிலை கொண்டவனாக இருந்தான். அனைத்தையும் (தனது பிறப்பைக் குறித்துக்) கேள்விப்பட்ட அவன் {மேதாவி}, அவனுக்கு அகங்காரம் பெருகி, முனிவர்களை அவமதிக்க ஆரம்பித்தான். முனிவர்களுக்குத் தீங்கிழைத்தவாறே அவன் இந்தப் பூமியைச் சுற்றி வந்தான்.

ஒருநாள் பெரும் சக்தி கொண்டவரும் கற்றறிந்தவருமான தனுஷாக்ஷர் என்ற தவசியை அவன் {மேதாவி} சந்திக்க நேர்ந்தது. மேதாவி அவருக்குத் தீங்கிழைத்தான். அதனால் அந்தத் தவசி {தனுஷாக்ஷர்} "சாம்பலாகப் போ" என அவனைச் {மேதாவியைச்} சபித்தார். இருப்பினும் மேதாவி சாம்பலாகவில்லை. பிறகு தனுஷாக்ஷர், மேதாவியின் உயிருக்குக் காரணமாக இருந்த அந்த மலையை எருமைகளைக் கொண்டு சிதறடித்தார். தனது உயிருக்குக் காரணமான மலையின் அழிவால் அந்தப் பிள்ளையும் {மேதாவியும்} அழிந்து போனான். மேதாவியின் தந்தை {பாலதி} தனது இறந்த மகனை அணைத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதார். ஓ மகனே, அப்படி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த அந்தத் தவசியிடம் வேதங்களை அறிந்த தவசிகள் என்ன சொன்னார்கள் என்பதைச் சொல்கிறேன் கேள். "எந்த நிபந்தனையின் பேரிலும் {இறக்கக்கூடிய} ஒரு மனிதன், விதியால் நிர்ணயிக்கப்பட்ட முடிவை மீற முடியாது. பார்! தனுஷாக்ஷர் எருமைகளைக் கொண்டே மலைகளைக் கூடப் பிளந்துவிட்டார்." என்றனர்.

ஆகையால் வரங்களைப் பெற்றுவிட்டோம் என்று அகங்காரம் கொள்ளும் இளந்துறவிகள் குறுகிய காலத்தில் அழிந்து போவார்கள். நீ {யவக்கிரீயே} அவர்களுள் ஒருவனாக ஆகவிடாதே. ஓ எனது மகனே {யவக்கிரீ}, இந்த ரைப்பியர் பெரும் சக்தி வாய்ந்தவர். அவரது பிள்ளைகளும் {அர்வாவசுவும், பரவசுவும்} அவரைப் {ரைப்பியரைப்} போலவே இருக்கின்றனர். ஆகையால் நீ அவரை {ரைப்பியரை} அணுகாமல் எச்சரிக்கையாய் இரு. ஓ எனது மகனே, பெரும் தவசியான ரைப்பியர் எரிச்சல் குணம் கொண்டவர். அவர் கோபப்பட்டால் உனக்குத் தீங்கு நேரும்" என்றார் {பரத்வாஜர்}. யவக்கிரீ, "ஓ தந்தையே {பரத்வாஜரே}, நீர் சொன்னவாறே நான் செய்வேன். அதற்காக நீர் எவ்வகையிலும் வருந்தாதீர். எனது தந்தையைப் போலவே, எனக்கு ரைப்பியரும் மரியாதைக்கு உரியவரே!" என்றான். அப்படி இனிமையான வார்த்தைகளைத் தனது தந்தையிடம் கூறிய யவக்கிரீ, எதற்கும் யாருக்கும் அஞ்சாமல், முனிவர்களைப் புண்படுத்துவதில் இன்பம் கொண்டு திரிய ஆரம்பித்தார்." என்றார் {லோமசர் யுதிஷ்டிரனிடம்}. 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்