Thursday, March 27, 2014

யவக்கிரீயின் அழிவு! - வனபர்வம் பகுதி 136

The end of Yavakri! | Vana Parva - Section 136 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யவக்கிரீ, ரைப்பியரின் மருமகளும், பரவசுவின் மனைவியுமான பெண்ணின் மீது மையல் கொள்வது; அவள் யவக்கிரீயை ஏமாற்றிவிட்டு, ரைப்பியரிடம் வந்து விஷயத்தைச் சொல்வது; ரைப்பியர் தனது முடியினால் உண்டான ராட்சசன் மூலம் யவக்கிரீயைக் கொன்றது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "அச்சமற்று உலவிக்கொண்டிருந்த யவக்கிரீ, சித்திரை மாதத்தின் ஒரு நாளில் ரைப்பியரின் ஆசிரமத்தை அணுகினார். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பூத்துக்குலுங்கும் மரங்களுடன் இருந்த அந்த அழகிய ஆசிரமத்தில், அவர், கின்னரப் பெண்மணி போல மெல்ல நடந்து கொண்டிருந்த ரைப்பியரின் மருமகளைக் காண நேர்ந்தது. ஆசையால் தனது உணர்வுகளை இழந்த யவக்கிரீ, அந்த நாணம் கொண்ட பெண்ணிடம் சிறிதும் வெட்கமில்லாமல், "நீ என்னோடு இணைந்திருப்பாயா?" என்று கேட்டார். அவரது {யவக்கிரீயின்} இயல்பை அறிந்து, சாபத்திற்கு அஞ்சி, அதே வேளையில் ரைப்பியரின் சக்தியையும் நினைத்துப் பார்த்து, அவரிடம் "நான் சம்மதிக்கிறேன்" என்று சொன்னாள் அவள் {ரைப்பியரின் மருமகள்}.


ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு அவரை {யவக்கிரீயை} தனிமையில் அழைத்துச் சென்று சங்கிலியால் பிணைத்தாள். ஓ! எதிரிகளை வெல்பவனே {யுதிஷ்டிரா}, ஆசிரமத்திற்குத் திரும்பிய ரைப்பியர், பரவசுவின் மனைவியான தனது மருமகள் கண்ணீருடன் இருப்பதைக் கண்டார். ஓ! யுதிஷ்டிரா, அவர் {ரைப்பியர்} அவளைச் சமாதானப் படுத்தி, அவளது துயரத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதன்பேரில், அந்த அழகிய மங்கை, யவக்கிரீ தன்னிடம் பேசியதையும், பதிலுக்கு புத்திசாலித்தனமாக தான் செய்தவற்றையும் சொன்னாள். யவக்கிரீயின் தீய நடத்தையைக் கேட்ட அந்தத் தவசி {ரைப்பியர்} கோபத்தால் எரிந்தார்.

எளிதில் கோபமடையக்கூடிய மனநிலை கொண்ட அந்தப் பெரும் முனிவர் {ரைப்பியர்}, இதனால் ஏற்பட்ட உந்துதலால், தனது ஜடா முடியில் இருந்த ஒரு முடியைப் பிடுங்கி, புனிதமான மந்திரங்களைச் சொல்லி அதை வேள்வித்தீயில் காணிக்கையாகக் கொடுத்தார். இதன் காரணமாக அந்த நெருப்பில் இருந்து அவரது மருமகளை ஒத்த உருவம் கொண்ட ஒரு பெண் வெளிப்பட்டாள். பிறகு அவர் மேலும் ஒரு முடியை அவரது ஜடா முடியில் இருந்து பிடுங்கி மீண்டும் அதை வேள்வி நெருப்பில் காணிக்கைக் கொடுத்தார். இப்போது காண்பதற்குப் பயங்கராமன கடும் விழிகள் கொண்ட ஒரு ராட்சசன் வெளிவந்தான். பிறகு அந்த இருவரும் {அந்த அழகிய பெண்ணும், ராட்சசனும்} ரைப்பியரிடம், "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர். அதற்கு அந்தக் கோபக்கார முனிவர் {ரைப்பியர்}, "நீங்கள் சென்று யவக்கிரீயைக் கொல்லுங்கள்" என்று சொன்னார். "அப்படியே செய்கிறோம்" என்று சொன்ன அவர்கள், யவக்கிரீயைக் கொல்லும் நோக்குடன் அங்கிருந்து சென்றனர்.

அந்தப் பெரும் இதயம் கொண்ட முனிவர் {ரைப்பியர்} படைத்த அந்த அழகிய பெண், தனது அழகால் யவக்கிரீயை மயக்கி, அவரிடம் இருந்த கமண்டலத்தைப் {sacred water pot} பிடுங்கிக் கொண்டாள். பிறகு அந்த ராட்சசன், ஓங்கிய ஈட்டியுடன் {அல்லது சூலத்துடன்}, கமண்டலம் இழந்ததால் சுத்தமற்றிருந்த யவக்கிரியின் மேல் பாய்ந்தான். ஓங்கிய ஈட்டியுடன் தன்னை நோக்கி வரும் ராட்சசனைக் கண்ட யவக்கிரீ, திடீரென எழுந்து தடாகத்தை நோக்கி ஓடினார். ஆனால் அத்தடாகம் நீர் வற்றிப் போய் இருப்பதைக் கண்டார். மேலும் பல நதிகளுக்கு ஓடினார். ஆனால் அவையும் வறண்டிருப்பதையே கண்டார்.

ஈட்டி {[அ] சூலம்} தாங்கிய ராட்சசனால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்ட யவக்கிரீ பயத்தால் தனது தந்தையின் {பரத்வாஜரின்} அக்னிஹோத்ர அறைக்குள் நுழைய முற்பட்டார். ஆனால் அவர் {யவக்கிரீ}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூத்திரனான ஒரு குருட்டுக் காவற்காரணால் தடுக்கப்பட்டார். அவர் {யவக்கிரீ} அந்த மனிதனிடம் {சூத்திர சாதியைச் சேர்ந்த குருட்டுக் காவற்காரனிடம்} பிடிபட்ட நிலையில், அந்த வாசலிலேயே நின்றார். யவக்கிரீ இப்படிச் சூத்திரனால் பிடிபட்டதை அறிந்த ராட்சசன், தனது ஈட்டியை அவர் {யவக்கிரீ} மீது வீசினான். இதனால் இதயம் துளைக்கப்பட்ட அவர் {யவக்கிரீ}, அங்கேயே இறந்து கீழே விழுந்தார். யவக்கிரீயைக் கொன்ற அந்த ராட்சசன் ரைப்பியரிடம் திரும்பி, அந்த முனிவரின் {ரைப்பியரின்} அனுமதியுடன் அந்தப் பெண்ணுடன் {ரைப்பியர் உருவாக்கிய பெண்ணுடன்} வாழ ஆரம்பித்தான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்