Thursday, March 27, 2014

பரத்வாஜரின் பிள்ளைப் பாசம்! - வனபர்வம் பகுதி 137

The lament of Bharadwaja for his son! | Vana Parva - Section 137 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

விறகு சேகரித்து வந்த முனிவர் பரத்வாஜர் தனது மகனின் இறப்பை அறிவது; மகனின் பிரிவைத் தாளாது அழுதுப் புலம்புவது; பரத்வாஜர் ரைப்பியருக்கு சாபமிடுவது; தனது மகனின் உடலை எரியூட்டி, தானும் நெருப்பில் விழுவது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, விறகுகள் சேகரித்து அந்த நாளின் சடங்குக் கடமைகளை நிறைவேற்றிய பரத்வாஜர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அவரது மகன் {யவக்கிரீ} இறந்துவிட்டதால், வழக்கம்போல அவரை {பரத்வாஜரை} வரவேற்கும் வேள்வி நெருப்பு அன்று அவரை வரவேற்கவில்லை. அக்னிஹோத்திரத்தில் இருந்த மாற்றத்தைக் கண்ட அந்தப் பெரும் முனிவர் {பரத்வாஜர்}, அங்கு அமர்ந்திருந்த சூத்திரனான அந்தக் குருட்டுக் காவற்காரனிடம், "ஓ! சூத்திரா, ஏன் இன்று என்னைக் கண்ட பிறகு நெருப்புகள் மகிழவில்லை? நீயும் உற்சாகமாக இருப்பதாகத் தெரியவில்லையே. எனது ஆசிரமம் நன்றாக இருக்கிறதா {அனைத்தும் நன்றாக இருக்கின்றனவா}? அற்ப புத்தி கொண்ட எனது மகன் {யவக்கிரீ} ரைப்பிய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றிருக்க மாட்டான் என்று நம்புகிறேன். ஓ! சூத்திரா, எனது கேள்விகள் அனைத்திற்கும் விரைவாகப் பதில் சொல். எனது மனம் ஐயம் கொள்கிறது" என்று கேட்டார் {பரத்வாஜர்}.


அதற்கு அந்தச் சூத்திரன், "அற்ப புத்தி கொண்ட உமது மகன் {யவக்கிரீ} ரைப்பிய முனிவரிடம் சென்றதால், ஒரு ராட்சசனால் கொல்லப்பட்டு இங்கே (தரையில்) நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கிறார். ஈட்டி {சூலம்} தாங்கிய ராட்சசனால் தாக்கப்பட்ட அவர், இந்த அறைக்குள் நுழைய முற்பட்ட போது, நான் எனது கரங்களால் அவரது வழியைத் தடுத்தேன். சுத்தமற்ற நிலையில் நீரை எடுக்க விரும்பிய அவர் நம்பிக்கையற்று நின்ற போது, கரங்களில் ஈட்டியுடன் இருந்த உணர்ச்சி வேகமுள்ள ராட்சசனால் கொல்லப்பட்டார்" என்றான்.

அந்தச் சூத்திரனிடம் இருந்து இந்தப் பெருந்துயரத்தைக் கேட்ட பரத்வாஜர் மிகவும் துன்புற்ற தனது மகனை {யவக்கிரீயைக்} கட்டி அணைத்துக் கொண்டு புலம்பி அழுதார். அவர் {பரத்வாஜர்}, "ஓ எனது மகனே, எந்த அந்தணனாலும் அறியப்படாத வேதங்களை நீ அறிய வேண்டும் என்று, அந்தணர்களின் நன்மைக்காக அல்லவா நீ தவம் பயின்றாய். அந்தணர்களிடம் உனது நடத்தை நன்றாகவே இருந்தது. அனைத்து உயிர்களுக்கும் தீங்கு செய்யாதவனாக இருந்தாய். ஆனால் ஐயோ! (கடைசியில்} முரட்டுத்தனம் என்ற குறையைக் கொண்டாய். ஓ! எனது மகனே, ரைப்பியனின் வசிப்பிடத்தை அணுகாதே என்று நான் உன்னைத் தடுத்தேனே; ஆனால், மரணத் தேவன் அல்லவா உன்னை அவ்விடம் அழைத்துச் சென்றிருக்கிறான்.

நான் முதிர்ந்த வயதினன் என்பதை அறிந்தும், நீ {யவக்கிரீ} எனது ஒரே மகன் என்பதை அறிந்தும் அந்தத் தீய மனம் கொண்ட மனிதன் {ரைப்பியன்} கோபத்துக்கு இடம் கொடுத்தானே. ரைப்பியனின் ஏற்பாட்டால் அல்லவா நான் எனது குழந்தையை இழந்தேன். ஓ! எனது மகனே, நீ இல்லாத உலகில் நான் இனி வாழ மாட்டேன். நான் எனது உயிரை விடுகிறேன். ஆனால், நான் ஒன்றைச் சொல்கிறேன். குறுகிய காலத்திற்குள் ரைப்பியனின் மூத்த மகன், அவனை {ரைப்பியரைக்} கொல்வான். துயரத்தை அறியாமல் மகிழ்ச்சியோடு வாழ்வதால் {பிள்ளையின் மரணத்தைக் காணாததால்}, பிள்ளைகளே பெறாதவர்கள் அருளப்பட்டவர்களே. தனது பிள்ளை இறந்த துக்கம் தாளாமல், தனது ஆருயிர் தோழனைச் சபிக்கும் ஒரு மனிதனைவிடத் தீய மனிதன் வேறு எவன் இருக்க முடியும்! எனது மகன் இறந்ததைக் கண்டதால், நான் எனது ஆருயிர் நண்பனைச் சபித்து விட்டேன்! இவ்விதமான துயரை இவ்வுலகத்தில் என்னைத் தவிர வேறு யார் அனுபவிப்பான்?" என்று புலம்பி அழுதார். இப்படி நீண்ட நேரம் புலம்பி அழுத பரத்வாஜர் தனது மகனின் {யவக்கிரீயின்} உடலுக்கு எரியூட்டினார். பிறகு, தழல்விட்டு முழுதும் எரிந்த நெருப்புக்குள் அவரும் புகுந்தார்" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்