Friday, March 28, 2014

முயற்சியின்றி பெற்ற கல்வி பயன்தராது! - வனபர்வம் பகுதி 138

Education without exertion will be useless! | Vana Parva - Section 138 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

ரைப்பியரை மான் என்று நினைத்த பராவசு அவரைக் கொல்வது; பராவசு தம்பியான அர்வாவசுவை ஏமாற்றிக் காட்டுக்கு அனுப்புவது; அர்வாவசு கடுந்தவம் இருந்து சூரிய வெளிப்பாடை அடைந்து, ரைப்பியரையும், பரத்வாஜரையும், யவக்கிரீயையும் உயிர்மீட்பது; தனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று அக்னியிடம் கேட்ட யவக்கிரீ...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அதேநேரத்தில், ரைப்பியரின் எஜமானனும் {வேள்வியின் எஜமானனும், ரைப்பியரின் சீடனுமான என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.} நல்ல அதிர்ஷ்டம் வாய்ந்தவனும் பெரும் பலம் வாய்ந்த மன்னனுமான பிருகத்யுன்மனன், ஒரு வேள்வியைச் செய்தான். அந்தப் புத்திகூர்மை கொண்ட ஏகாதிபதி {பிருகத்யும்னன்}, ரைப்பியரின் மகன்களான அர்வாவசுவையும், பராவசுவையும் தனக்கு {பிருகத்யும்னனுக்கு} உதவியாக வேள்வியில் ஈடுபடுத்தினான்.

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்த இருவரும் {அர்வாவசுவும், பராவசுவும்} தங்கள் தந்தையிடம் {ரைப்பியரிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு {பிருகத்யும்னனின்} வேள்வியை நடத்த சென்றனர். ரைப்பியரும் பராவசுவின் மனைவியும் ஆசிரமத்தில் இருந்தனர். இப்படியே செல்கையில் ஒரு நாள், தனது மனைவியைக் காண விரும்பிய பராவசு, தனியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது கருப்பு மான்தோலால் தன்னை மூடியிருந்த தனது தந்தையை {ரைப்பியரை} வனத்தில் கண்டான். அந்த இரவு மிகுந்த இருளாக இருந்தது. களைப்பால் குருடாகியிருந்த பராவசு அந்த ஆழ்ந்த கானகத்தில் தனது தந்தையை அங்குமிங்கும் திரியும் மானாக நினைத்தான். தவறுதலாக அவரை {தந்தை ரைப்பியரை} மானாக நினைத்துக் கொண்ட பராவசு, எந்த உள்நோக்கமும் இல்லாமல், தனது பாதுகாப்புக்காக, தனது தந்தையைக் கொன்றான்.


ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு (தனது தந்தையின்) இறுதிச் சடங்குகளை முடித்து, வேள்விக்குத் திரும்பி தனது சகோதரனிடம், "உன்னால் இந்தக் காரியத்தைத் {இந்த வேள்வியைத்} துணையில்லாமல் செய்ய முடியாது. நான் மானென்று நினைத்து நமது தந்தையைக் கொன்றுவிட்டேன். ஓ! சகோதரா {அர்வாவசுவே}, அந்தணரைக் கொன்ற பாவம் போக நீ எனக்காக நோன்பிரு. ஓ முனிவனே {அர்வாவசுவே}, நான் எந்தத் துணையும் இல்லாமல் இந்த வேள்வியை முடிப்பேன்" என்றான் {பராவசு}. அர்வாவசு, "கொடைநிரம்பிய பிருகத்யும்னனின் இந்த வேள்வியை நீ நடத்து; எனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நீ அந்தணரைக் கொன்ற பாவத்துக்காக {பிரம்மஹத்தி தோஷம் நீங்க}, உனக்காக நான் நோன்பிருப்பேன்" என்றான் {அர்வாவசு}"

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்தணரைக் கொன்ற பாவத்திற்கான நோன்பை முடித்த முனிவன் அர்வாவசு வேள்விக்குத் திரும்பினான். தனது சகோதரன் {அர்வாவசு} வருவதைக் கண்ட பராவசு, வன்மத்துடன் கூடிய அடைபட்ட குரலுடன், பிருகத்யும்னனிடம், "ஓ மன்னா, அந்தணரைக் கொன்ற இவன் வேள்வியில் நுழையாதவாறு பார்த்துக் கொள். அந்தணரைக் கொன்றவனின் பார்வை கூட உனக்குத் தீங்கை இழைத்துவிடலாம்" என்றான். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்ட அம்மன்னன் உடனடியாகத் தனது சேவகர்களை அழைத்துக் (அர்வாவசுவை வெளியேற்றுமாறு} கட்டளையிட்டான்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவன் {அர்வாவசு} வெளியேற்றப்பட்ட போது, அந்தச் சேவகர்கள் அவனை {அர்வாவசுவை} தொடர்ச்சியாக "அந்தணரைக் கொன்றவனே" என்று சொன்னதால், அர்வாவசு ஒரு முறைக்குப் பலமுறை, "நான் எந்த அந்தணரையும் கொல்லவில்லை" என்றான். தான் தனக்காக {பிரமஹத்தி தீர} அந்நோன்பைச் செய்யவில்லை என்றும், தனது சகோதரனே {பராவசுவே} அப்பாவத்தை இழைத்தவன் என்றும், தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொல்லி, சேவகர்களைக் கண்டித்த அந்தக் கடுந்தவம் கொண்ட அந்தண முனிவன் {அர்வாவசு}, பிறகு அமைதியாக வனத்திற்குள் சென்றான். அங்கே அந்தப் அந்தண முனிவன் {அர்வாவசு} கடுமையான நோன்புகள் இருந்து சூரியனின் பாதுகாப்பை வேண்டினான். அப்போது சூரிய வழிபாடு குறித்த கல்வி அவனுக்கு வெளிப்பாடானது. அது {சூரிய கல்வி} வெளிப்பட்டு அவனை {அர்வாவசுவை} அடைந்தது. (வேள்வி நெய்யில்) முதற்பங்கைப் பெறும் சூரியன் அவனுக்கு எதிரில் உருவமெடுத்து வந்தான்."

லோமசர்  {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அர்வாவசுவின் செயல்களில் தேவர்களும் திருப்திகொண்டிருந்தனர். அவர்கள் அவனை {அர்வாவசுவை} (பிருகத்யும்னனின்) வேள்வியில் முதன்மைப் புரோகிதராக ஈடுபடுத்தி, பராவசுவை வேள்வி செய்வதிலிருந்து நீக்கினர். பிறகு அக்னியும், பிற தேவர்களும் அர்வாவசுவுக்கு வரங்களை அளித்தனர். மேலும் அவன் {அர்வாவசு} அவனது தந்தை {ரைப்பியர்} உயிர்மீள வேண்டும் என்று வேண்டினான். மேலும் தனது சகோதரனின் பாவம் விலக்கப்பட வேண்டும் என்றும், தனது தந்தை தான் கொல்லப்பட்டதை மீண்டும் நினைக்கக்கூடாது என்றும், பரத்வாஜரும், யவக்கிரீயும் மீண்டும் உயிர்பெற வேண்டும் என்றும், சூரியன் சம்பந்தமான வெளிப்பாடு (பூமியில்) புகழடைய வேண்டும் என்று வேண்டினான். அந்தத் தேவனும் "அப்படி ஆகட்டும் என்று சொல்லி, மேலும் வரங்களை அளித்தான்.

ஓ! யுதிஷ்டிரா, அதன்பேரில் அனைவரும் உயிர்மீண்டனர். அப்போது யவக்கிரீ அக்னியிடமும் பிற தேவர்களிடமும், "நான் அனைத்து வேதங்களின் ஞானத்தையும் பெற்றேன். மேலும் தவமும் பயின்றேன். இருப்பினும், ஓ இறவாதவர்களின் {தேவர்களின்} தலைவா {அக்னியே}, ரைப்பியரால் எப்படி என்னை இத்தகைய வழியில் கொல்ல முடிந்தது?" என்று கேட்டான். அதற்குத் தேவர்கள், "ஓ யவக்கிரீ, நீ நடந்தகொண்டதைப் போல மீண்டும் நடந்து கொள்ளாதே. நீ கேட்பது சாத்தியமே, ஏனென்றால் நீ உனது முயற்சியின்றி, ஒரு குருவின் உதவியின்றி வேதம்பயின்றாய். ஆனால் இந்த மனிதனோ {ரைப்பியரோ}, அனைத்துத் தொல்லைகளையும் தாங்கி, தனது நடத்தையால் குருவைத் திருப்தி செய்து, அற்புதமான வேதங்களைப் பெரும் முயற்சியுடன் குருவிடம் இருந்து நீண்ட காலத்திற்குப் பிறகு பெற்றார்" என்றனர்."

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "யவக்கிரீயிடம் இதைச் சொன்ன அவர்கள் {தேவர்கள்} அனைவரும் இந்திரனைத் தலைமையாகக் கொண்டு சொர்க்கம் திரும்பினர். ஓ! யுதிஷ்டிரா, அனைத்துப் பருவங்களிலும் பூத்துக்குலுங்கும் மலர்களையும் கனிகளையும் தாங்கியிருக்கும் மரங்கள் நிறைந்த இந்தப் புண்ணியமான ஆசிரமம் அந்தத் தவசியினுடையதே {யவக்கிரீயுடையதே}. ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில் வசித்தால், உனது பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவாய்" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்