Saturday, April 19, 2014

ஜடாசுரன் வதம்! - வனபர்வம் பகுதி 156

The slaughter of Jatasura! | Vana Parva - Section 156 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமன் இல்லாத நேரத்தில் ஜடாசுரன் என்ற ராட்சசன், பாண்டவர்களையும், திரௌபதியையும் கடத்திச் செல்வது; பீமன் ஜடாசுரனைக் கொல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படி அச்சிறந்த மலையில் அந்தணர்களுடன் வசித்து வந்த பாண்டவர்கள் அர்ஜுனன் திரும்புவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை வளர்ந்து பிற ராட்சசர்களும், பீமனின் மகனும் {கடோத்கசனும்} சென்ற பிறகு, ஒரு நாள் பீமன் வெளியே சென்றிருந்தான். அப்போது, தீடீரென ஒரு ராட்சசன், நீதிமானான யுதிஷ்டிரனையம், இரட்டையர்களையும் {நகுலன், சகாதேவன் இருவரையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} கடத்திச் சென்றான். (அந்தண வேடத்தில் இருந்த) அந்த ராட்சசன் பாண்டவர்களுடனேயே நெடுங்காலமாகத் தங்கியிருந்தவனாவான். அப்படி இருந்த போது அவன் தன்னைச் சாத்திரங்களை அறிந்த ஆலோசனை கூறத்தக்க உயர்ந்த வகை அந்தணனனாகக் காட்டிக் கொண்டான். பாண்டவர்கள் உபயோகித்த வில் மற்றும் அம்பறாத்தூணிகளையும், இன்னும் பிற பொருட்களையும் கவர்ந்து செல்லவும், திரௌபதியை அபகரிக்கவுமே அவன் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தான். அந்தத் தீய பாவியின் பெயர் ஜடாசுரன் ஆகும். ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அவனை ஆதரித்த பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அந்தப் பாவி சாம்பலால் மூடப்பட்ட நெருப்பைப் போன்றவன் என்பது தெரியாது.


ஒரு நாள் எதிரிகளை ஒடுக்குபவனான பீமசேனன் வேட்டையாடுவதற்கு வெளியே சென்றான். கடோத்கசனும், அவனது அடிபொடிகளும் பலதரப்பட்ட திசைகளுக்குச் சிதறிப் போனதையும், லோமசர் மற்றும் நோன்பு நோற்கும் பிற பெரும் முனிவர்கள் நீராடுவதற்கும், மலர்கள் சேகரிப்பதற்கும் சென்றிருப்பதையும் கண்ட அவன் {அந்த ராட்சசன் ஜடாசுரன்}, பயங்கரமான பெரும் உருவம் எடுத்து (பாண்டவர்களின்) ஆயதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, திரௌபதியையும், மூன்று பாண்டவர்களையும் கடத்திக்கொண்டு சென்றான். அதன் பிறகு, பாண்டுவின் மகனான சகாதேவன், தனது முயற்சியால் அவனிடமிருந்து {அந்த ஜடாசுரன் என்ற ராட்சசனிடம் இருந்து} விடுபட்டு, கௌசிக என்ற வாளை எதிரியிடம் இருந்து பறித்து, பீமனை அழைத்துக் கொண்டே, அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் சென்ற திக்கில் சென்றான்.

இப்படிக் கடத்திச் செல்லப்பட்ட போது, நீதிமானான யுதிஷ்டிரன் அவனிடம் (அந்த ராட்சசனிடம்), "ஓ! மூடா, (இத்தகு செயலால்) உனது தகுதி குறைந்தது. இயற்கையால் விதிக்கப்பட்ட விதியை நீ மதிக்க மாட்டாயா? மானுட இனத்தைச் சேர்ந்தவரோ அல்லது தாழ்ந்த வகையைச் சேர்ந்தவரோ, எவராயினும் அறத்தை மதித்து நடக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ராட்சசர்கள் அப்படி மதித்து நடக்க வேண்டும். முதலில் அவர்களே மற்றவர்களைவிட அறத்தை நன்கறிந்தவர்கள். இதையெல்லாம் கருதிப் பார்த்து நீ அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஓ! ராட்சசா, தேவர்கள், பித்ருக்கள், சித்தர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், ஏன் புழுக்களும் எறும்புகளும் கூட மனிதர்களை நம்பியே தங்கள் வாழ்வை நடத்துகின்றனர். நீயும் அப்படியே வாழ்கிறாய். மானுட இனத்தில் செல்வம் கொழிக்கிறது என்றால், உனது இனமும் செழிப்படையும். அவர்களுக்குப் பேரிடர் சம்பவித்தால் தேவர்களும் துன்புறுவர். காணிக்கைகளால் திருப்தி செய்யப்படுவதால்தான் தேவர்களும் வாழ்கின்றனர். ஓ! ராட்சசா {ஜடாசுரா}, நாங்களே {மனிதர்களே} நாடுகளின் பாதுகாவலர்களாகவும், ஆட்சியாளர்களும், குருக்களாகவும் இருக்கிறோம். நாடுகள் பாதுகாப்பற்று இருந்தால் வளமையும் மகிழ்ச்சியும் எப்படி வரும்? குற்றமேதும் நடக்காத வரை ஒரு ராட்சசன் ஒரு மன்னனை மீறி நடக்கக்கூடாது.

ஓ! மனிதர்களை உண்பவனே {ஜடாசுரனே}, சிறு தீங்கைக் கூட நாங்கள் செய்யவில்லையே. விகாசையில் வாழும் நாங்கள் தேவர்களையும் பிறரையும் எங்கள் சக்திக்குத் தக்கவாறு சேவித்தே வருகிறோம். நாங்கள் எங்களுக்கு மூத்தவர்களையும், அந்தணர்களையும் வணங்காமல் இருந்ததில்லை. ஒரு நண்பன், நம்பியிருப்பவன், உணவு கொடுத்தவன், தங்க இருப்பிடம் அளித்தவன் ஆகியோருக்கு ஒரு போதும் தீங்கிழைக்கக் கூடாது. நீ எங்களுடன் இருந்ததில் மகிழ்ச்சியாகவும் மரியாதையுடனும் வசித்திருக்கிறாய். ஓ! தீய மனம் கொண்டவனே, நாங்கள் கொடுத்த உணவையும் உண்ட நீ, எங்களைக் கடத்திக் கொண்டு செல்கிறாயா? உனது செயல்கள் சரியற்றவையாக இருக்கிறது. எந்தப் பலனும் இல்லாமல் நீ வயதால் வளர்ந்திருக்கிறாய். விலங்குக்கொப்பான உனது இயல்புகள் தீமையானவையாக இருக்கின்றன. ஒன்றுமில்லாததற்குச் சாகத் துணிந்தாய். ஆகையால் இன்று நீ ஒன்றுமில்லாமலேயே இறப்பாய். நீ உண்மையில் அறமற்று இருந்தாலும், தீமையற்றவனாக இருந்தால், எங்கள் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, போரிட்ட பின் திரௌபதியை அபகரித்துச் செல். ஆனால் மூடத்தனத்தால் நீ இச்செயலைச் செய்தால் நீ அவப்பெயரையும், சிறுமையையுமே பெறுவாய். மானுட இனத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு {திரௌபதிக்கு} நீ ஏதும் தீங்கு செய்தால், நன்கு குலுக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்த விஷத்தைக் குடித்தவனாவாய்" என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}.

பிறகு, யுதிஷ்டிரன் தன்னைக் கனம் நிறைந்தவனாக ஆக்கிக் கொண்டான். அவனது எடையால் ஒடுக்கப்பட்ட அவன் முன்பு போல வேகமாகச் செல்ல முடியவில்லை. பிறகு திரௌபதி, நகுலன், சகாதேவன் ஆகியோரிடம் யுதிஷ்டிரன், "இந்த இழிந்த ராட்சசனைக் குறித்து அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நான் அவனது வேகத்தைத் தடுத்திருக்கிறேன். பலம்வாய்ந்த கரம் கொண்ட வாயுத்தேவனின் மகன் {பீமன்}, வெகு தொலைவில் இருக்க மாட்டான். பீமன் இங்கு வந்த அடுத்த நொடி இந்த ராட்சசன் வாழ மாட்டான்" என்றான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, உணர்விழந்த ராட்சசனை முறைத்துப் பார்த்த சகாதேவன் குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம், "ஒரு க்ஷத்திரியனுக்குப் போரைவிடவோ அல்லது எதிரியை வீழ்த்துவதை விடவோ எது தகுதி வாய்ந்ததாக இருக்கும்? ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே, நாம் போரிடலாம். ஓ! பலம் வாய்ந்த கரம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, ஒன்று இவன் நம்மைக் கொல்வான் அல்லது நாம் இவனைக் கொல்வோம். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதுவே தகுந்த நேரமும் இடமும் ஆகும். ஓ! பொய்க்காத பராக்கிரமம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நமது க்ஷத்திரிய அறத்தைக் காட்ட நேரம் வாய்த்தது. நாம் வென்றோ அல்லது கொல்லப்பட்டோ சொர்க்கத்தை அடைவதே நமக்குத் தகும். இந்த ராட்சசன் வாழ்ந்தவாறே இன்று சூரியன் மறைந்தனானால், நான் இனிமேல் என்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஹோ! ஹோ! ராட்சசனே, நான் பாண்டுவின் மகனான சகாதேவன். ஒன்று என்னைக் கொன்று இந்த மங்கையைக் கடத்தி செல் அல்லது என்னால் கொல்லப்பட்டு உணர்விழந்து விழு" என்றான் {சகாதேவன்}.

மாத்ரியின் மகனான சகாதேவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, வஜ்ரம் தாங்கியிருக்கும் வாசவனைப் போலக் கைகளில் கதாயுதத்துடன் பீமசேனன் அங்கே தோன்றினான். அவன் {பீமன்} தனது இரு சகோதரர்களையும், நல்ல மனம் கொண்ட திரௌபதியையும் (அந்தப் பேயின் தோள்களில்), தரையில் நின்று கொண்டு விதியால் மதியிழந்த ராட்சசனை கண்டித்துக் கொண்டிருந்த.சகாதேவனையும் கண்டான். தனது சகோதரர்களும், திரௌபதியும் கடத்தப்படுவதை அறிந்த பெரும் பலம் வாய்ந்த பீமன் கோபத்தால் எரிந்து அந்த ராட்சசனிடம், "முன்பு நீ எங்கள் ஆயுதங்களை நுண்ணாய்வு செய்த போதே நீ தீயவன் என்பது எனக்குத் தெரியும்; ஆனால் உன்னைக் குறித்து நான் அச்சப்படவில்லை. அதனால் உன்னை அப்போது கொல்லாமல் விட்டேன். நீ அப்போது அந்தண உருவில் இருந்தாய். எங்களிடம் எந்தக் கடும் வார்த்தைகளையும் பேசவில்லை. எங்களைத் திருப்தி செய்வதிலேயே மகிழ்ச்சி கொண்டிருந்தாய். மேலும் நீ எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. அதற்கு மேலும் நீ எங்கள் விருந்தினராக வேறு இருந்தாய். ஆகையால் குற்றமிழைக்காத அப்பாவியான உன்னை; அதுவும் அந்தண உருவில் இருந்த உன்னை நான் எப்படிக் கொல்ல முடியும்? அப்படியிருப்பவன் ஒருவன் ராட்சசனாகவே இருந்தாலும், அவனைக் கொல்பவன் நரகத்திற்குச் செல்வான். மேலும் நேரம் வருவதற்கு முன்னால் உன்னைக் கொல்ல முடியாதல்லவா. இன்று உனது முழு நேரமும் முடிந்தது. அதனால்தான் விதி உன்னைக் கிருஷ்ணையை {திரௌபதியை} அபகரிக்கச் செய்தது. இக்காரியத்தைச் செய்ததால் நீ விதியெனும் தூண்டில் முள்ளில் சிக்கிக் கொண்டாய். முள்ளால் தைக்கப்பட்ட வாயுடன் நீரில் இருக்கும் மீனைப் போல இருக்கும் நீ எப்படி இன்று உயிருடன் இருக்க முடியும்? நீ ஏற்கனவே மனதால் {நீ விரும்பிய இடத்திற்கு} சென்றிருந்தாலும் உன்னால் இன்று நீ விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாது. ஆனால் பகனும், ஹிடிம்பனும் சென்ற இடத்திற்கு நீ செல்ல வேண்டியதிருக்கும்" என்றான் {பீமன்}.

பீமனால் இப்படிச்சொல்லப்பட்ட அந்த ராட்சசன் அச்சத்தால் அவர்கள் அனைவரையும் கீழே இறக்கினான். இருப்பினும் விதியால் இழுக்கப்பட்ட அவன் போர் செய்ய அணுகினான். கோபத்தால் உதடுகள் துடிக்க அவன் {ஜடாசுரன்} பீமனிடம், "இழிந்தவனே, நான் தடுமாறவில்லை. நான் உனக்காகவே தாமதம் செய்தேன். நான் கேட்டிருப்பது போல உன்னால் ஏற்கனவே போரில் கொல்லப்பட்ட ராட்சசர்களுக்கு உனது இரத்தத்தைக் காணிக்கையாக்குவேன்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட பீமன் மிகச்சினம் கொண்டு பிரளய கால யமன் போல வாயோரங்களைத் தனது நாவால் நக்கிக் கொண்டிருந்த அந்த ராட்சசனை அணுகி, தனது கரங்களைத் தட்டினான். பீமன் போருக்கு எதிர்பார்த்து காத்திருப்பதைப் பார்த்த ராட்சசன் {ஜடாசுரன்} கோபத்துடன் வாலி இந்திரனை நோக்கி விரைந்தது போல விரைந்து சென்றான்.

அந்த இருவருக்குள்ளும் கடும் மற்போர் ஏற்பட்ட போது, மாத்ரியின் மகன் இருவரும் எல்லைமீறிய கோபத்துடன் முன்னேறினர். ஆனால் குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்} அவர்களைப் புன்னகையுடன் தடுத்து, "இந்த ராட்சசனுக்கு நானே போதும். நின்று பார். எனது சகோதரர்கள், எனது நற்செயல்கள், எனது வேள்விகள், எனது சக்திகள் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் இந்த ராட்சசனைக் கொல்வேன்" என்றான். அவன் {பீமன்} அப்படிச் சொன்ன பிறகு, அந்த இரு வீரர்களான ராட்சசனும் {ஜடாசுரனும்} விருகோதரனும் {பீமனும்} ஒருவருக்கொருவர் சவால் விட்டபடி ஒருவர் கரத்தை மற்றவர் பிடித்தனர். அவர்கள் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டது தேவனுக்கும் அரசுரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அது இருந்தது. தொடர்ச்சியாக மரங்களை வேரோடு பிடுங்கி அந்தப் பலம் பொருந்திய இருவரும் போரிட்டுக் கொண்டனர். ஒருவரை ஒருவர் பழிவாங்கும் உணர்ச்சியுடன் கொல்ல நினைத்த அவர்கள் தங்கள் தொடைகளால் பெரும் மரங்களை ஒடித்துப் போட்டனர். செடிகளுக்கு அழிவைத் தருவதான மரங்களைக் கொண்டு அவர்கள் செய்த போர் ஒரு பெண்ணுக்காக இரு சகோதரர்களான வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நடந்த போரைப் போல இருந்தது. ஒரு நொடியில் மரங்களைக் காற்றில் வீசிய அவர்கள், அதைக் {மரங்களைக்} கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பெரும் கர்ஜனை செய்தனர்.

அந்தப் பகுதியில் இருந்த மரங்களை அனைத்தும் பிடுங்கப்பட்டு நார்நாராய் ஆன பிறகு ஒருவரை ஒருவர் கொல்ல நினைத்த பலம்பொருந்திய அவர்கள் இருவரும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மலையைப் போன்றும், பெரும் மேகக்கூட்டம் போன்று இருந்த பெரிய பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். அதனால் பாதிக்கப்படாத இருவரும், பிறகு இடியைப் போன்ற செங்குத்தான பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். பலம் நிறைந்த அவர்கள் அறைகூவியபடி துள்ளிக் குதித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு இரு பெரும் யானைகளைப் போல மற்போர் புரிந்தனர். பிறகு கடும் அடிகளைக் கொண்டு சண்டையிட்டனர். அந்த இரு பெரும் பலம் வாய்ந்தவர்களும் பற்களை நறநறவெனக் கடித்து ஒலியை எழுப்பினர்.

ஐந்து தலை பாம்பைப் போல இருந்த தனது கரத்தால் பீமன் அந்த ராட்சசனின் {ஜடாசுரனின்} கழுத்தில் ஒரு கடுமையை அடியை அடித்தான். பீமன் அடித்த முதல் அடியில் அந்த ராட்சசன் மயங்கினான். மயங்கிய அவனைப் பீமேசனேன் பிடித்துக் கொண்டான். பிறகு தேவனைப் போன்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட பீமன் தனது இரு கரங்களால் அவனைத் தூக்கி நல்ல விசையுடன் தரையில் தூக்கி எறிந்து அவனது உறுப்புகள் அனைத்தையும் நொறுக்கினான். பிறகு தனது முட்டியால் அடித்து, கண்கள் உருண்டபடி, உதடுகள் கடித்தபடி இருந்த அந்த ராட்சசனின் தலையை மரத்தில் இருந்து கனியைப் பிடுங்குவது போல அவனது உடலில் இருந்து பிய்த்தெறிந்தான். பீமசேனன் தனது பலத்தால் ஜடாசுரனின் தலையைப் பிய்த்த போது, அவனது உடல் முழுவதும் ரத்தத்தால் பூசப்பட்டபடி இருந்தது. ஜடாசுரனைக் கொன்ற பீமன் யுதிஷ்டிரனின் முன்னிலைக்குக் வந்தான். அந்தணர்களில் முதன்மையானவர்கள் (பீமனை) வாசவனைப் புகழும் மருதர்களைப் போலப் புகழ ஆரம்பித்தனர்.

http://www.mediafire.com/view/h526b06w895kf8a/வன_பர்வம்_158__ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.pdf
http://www.mediafire.com/view/6ciys7a7y2tawfw/வனபர்வம்_158_ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.doc

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்