Sunday, April 27, 2014

ஆர்ஷ்டிஷேணரின் அறிவுரை! - வனபர்வம் பகுதி 158

The advice of Arshtishena! | Vana Parva - Section 157 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனிடம் ஆர்ஷ்டிஷேணர் நலம் விசாரிப்பது; பிறகு கைலாச மலையைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு ஆர்ஷ்டிஷேணர் சொல்வது; பிறகு அர்ஜுனன் வரவு வரை தனது ஆசிரமத்திலேயே அவர்கள் தங்கலாம் என்றும் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பாவங்களைத் தவத்தால் எரித்த அவரை {ஆர்ஷ்டிஷேணரை} அணுகிய யுதிஷ்டிரன், தனது பெயரைச் சொல்லி சிரம் தாழ்த்தி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறினான். பிறகு கிருஷ்ணையும் {திரௌபதியும்}, பீமனும், அர்பணிப்புள்ள இரட்டையர்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, அந்த அரசுமுனிக்குச் சிரம் தாழ்த்தி, அவரைச் சூழ்ந்து நின்றனர். பாண்டவர்களின் புரோகிதரான அறம்சார்ந்த தௌமியரும் நோன்பைக் கடைப்பிடிக்கும் அத்தவசியை அணுகினார். அந்த அறம்சார்ந்த முனிவர் {ஆர்ஷ்டிஷேணர்}, குருக்களின் முதன்மையான பாண்டுவின் மகன்களைத் தனது ஞானப்பார்வையால் கண்டு அறிந்தார். அவர் {ஆர்ஷ்டிஷேணர்} அவர்களிடம், "அமருங்கள்" என்றார்.


குருக்களின் தலைவனை {யுதிஷ்டிரனை} முறையாக வரவேற்ற அந்தக் கடும் தவசி, அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் அமர்ந்த பிறகு அவர்களின் சுக துக்கங்களைக் கேட்டறிந்தார். அவர் {ஆர்ஷ்டிஷேணர்}, "பொய்மையை நோக்கிச் செல்லாமலிருக்கிறாயா? 
அறத்தை நோக்கிச் செல்கிறாயா?
ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, தாய் தந்தை மீதான உனது கவனம் குறைவடையாமல் பார்த்துக் கொள்கிறாயா?
மேன்மையானவர்களும், முதியவர்களும், வேதங்களை அறிந்தவர்களும் உன்னால் மதிக்கப்படுகிறார்களா?
ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பாவ காரியங்களில் உனது மனத்தைச் செலுத்தாமல் இருக்கிறாயா?
ஓ! குருக்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, நற்செயல் புரிவதும், தீச்செயல் புரியாமல் இருப்பதும் எப்படி என்பதை நீ தெரிந்து கொண்டிருக்கிறாயா? உன்னை நீ மேன்மையாகக் கருதாமல் இருக்கிறாயா? {தற்புகழ்ச்சி செய்யாமல் இருக்கிறாயா?},
பக்திமான்கள் உன்னால் திருப்திசெய்யப்பட்டு மதிக்கப்படுகிறார்களா? காட்டில் வசித்தாலும், அறத்தை மட்டுமே பயில்கிறாயா?
ஓ! பார்த்தா, உனது நடத்தையால் தௌமியர் துயரடையாது இருக்கிறாரா? தானத்திலும், தர்ம காரியங்களிலும், தவத்திலும், சுத்தத்திலும், கபடமற்ற நேர்மையிலும் {candour}, மன்னிப்பளிப்பதிலும் நீ உனது மூதாதையரின் வழக்கங்களைக் கடைப்பிடிக்கிறாயா?
அரசமுனிகள் சென்ற பாதையில் நீயும் செல்கிறாயா?
(தங்கள்) குலத்தில் மகன் பிறந்தால், பித்ரு லோகத்தில் இருக்கும் பித்ருகள், இந்த மகனின் பாவச்செயல்களால் நமக்குத் தீங்கு விளையுமா அல்லது இவனது நற்செயல்களால் நமக்கு நன்மை கிடைக்குமா? என்று எண்ணி சிரிக்கவும், துக்கப்படவும் செய்கிறார்கள். தந்தை, தாய், குரு, அக்னி மற்றும் ஐந்தாவதாகத் தனது ஆன்மா ஆகியவற்றுக்கு அஞ்சலி செலுத்தும் ஒருவன் இரு உலகங்களையும் {பூலோகம் மற்றும் சொர்க்கம்} வெல்கிறான்" என்று சொன்னார் {ஆர்ஷ்டிஷேணர்}.

யுதிஷ்டிரன் {ஆர்ஷ்டிஷேணயரிடம்}, "ஓ! வழிபடத்தகுந்தவரே, நீர் குறிப்பிட்ட கடமைகள் அனைத்தும் அற்புதமானவை. நான் அவற்றை எனது சக்திக்கு சிறந்தவாறு முறையாகவும் சரியாகவும் வெளிப்படுத்துகிறேன்" என்றான்.

ஆர்ஷ்டிஷேணர் {யுதிஷ்டிரனிடம்}, "பர்வசந்திகளின் போது {During Parvas = பௌர்ணமியும் பிரதமையும் சந்திக்கும்போது அல்லது அமாவாசையும் பிரதமையும் சந்திக்கும்போது}, காற்றையும் நீரையும் மட்டும் அருந்தும் முனிவர்கள் இந்த மலைகளிற் சிறந்த மலைக்கு விண் வழியாக வருவார்கள். மலையின் சிகரங்களில் காதல் பாங்கான கிம்புருஷர்கள் தங்கள் காதலிகளுடன் இணைபிரியாமல் இருப்பார்கள்; ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, வெண்பட்டு உடுத்திய பல அப்சரசுகளும், பல கந்தர்வர்களும், அழகான வித்யாதரர்களும் மாலைகள் அணிந்து கொண்டும், பலம்வாய்ந்த நாகர்களும், சுபர்ணர்களும், ஊரகர்களும் பிறரும் இங்கே காணப்படுவார்கள். பர்வசந்திகளின் போது, இம்மலையின் சிகரங்களில் பேரிகைகள், பணவங்கள், சங்கங்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் ஒலிகள் கேட்கும்.

ஓ! பரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இங்கிருந்தபடி நீ அந்த ஒலிகள் அனைத்தையும் கேட்கலாம். அவ்விடத்திற்கு எவ்வகையிலும் செல்ல நீங்கள் எண்ணலாகாது. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, இதற்கு மேலும் நீங்கள் செல்ல இயலாது. இது தேவர்களின் விளையாட்டிடமாகும். அங்கே செல்வதற்கு மனிதர்களுக்கு அனுமதியில்லை. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மீறி நடக்கும் எம்மனிதனையும், அச்செயல் மிகச் சிறியதாக இருந்தாலும், இங்கிருக்கும் அனைத்து உயிரினங்களும் பகைக்கும், ராட்சசர்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.

இந்தக் கைலாச மலையின் சிகரத்திற்கு அப்பால், தெய்வீக முனிவர்களின் பாதை தென்படுகிறது. யாரும் வெட்கங்கெட்டுப் போய், இதைக் கடந்து சென்றால், இரும்பு சூலங்களாலும், இன்னும் பல ஆயுதங்களாலும் அவனைக் கொன்று போடுவார்கள். ஓ! குழந்தாய், பர்வசந்திங்களின் போது இங்கே மனிதர்களின் தோள்களில் பயணிப்பவனும், அப்சரசுகளால் சூழப்பட்டவனுமான வைஸ்ரவணன் {குபேரன்} பகட்டுடனும் ஆடரம்பரத்துடனும் இருப்பான். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் தலைவனான அவன் {குபேரன்} சிகரத்தில் அமர்ந்த பிறகு, அனைத்து உயிர்களும் அவனை உதயச் சூரியனைப் போலக் காண்கின்றன. அந்தச் சிகரமே தேவர்கள், தானவர்கள், சித்தர்கள், வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோர் விளையாடும் நந்தவனமாகும்.

பர்வசந்திகளின் போது, பொக்கிஷத் தலைவனை {குபேரனை} மகிழ்விக்க எண்ணி கானம் பாடும் தும்புருவின் இனிய குரல் இந்தக் கந்தமாதனம் முழுவதும் கேட்கப்படும். ஓ! குழந்தாய், ஓ! யுதிஷ்டிரா, இங்கே பர்வசந்திகளின் போது, இது போன்ற அற்புதங்களை அனைத்து உயிர்களும் பார்க்கவும், கேட்கவும் செய்கின்றன. ஓ! பாண்டவர்களே, அர்ஜுனனை நீங்கள் சந்திக்கும்வரை சுவைமிக்கக் கனிகளையும், முனிவர்களின் உணவையும் உண்டு இங்கே தங்கிக் கொள்ளுங்கள். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, இங்கே வந்த பிறகு, நீங்கள் எதையும் மதிக்காமல் நம்பிக்கைதுரோகம் செய்யக்கூடாது. ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, இங்கே உங்கள் விருப்பப்படி வாழும்போது, நீ எண்ணியவாறு மாறுதல் அடைந்து, பிறகு உனது கரங்களின் பலத்தால் அடைந்த உலகை நெடுநாள் ஆள்வாய்" என்றார் {ஆர்ஷ்டிஷேணர்}.
http://www.mediafire.com/view/h526b06w895kf8a/வன_பர்வம்_158__ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.pdf
http://www.mediafire.com/view/6ciys7a7y2tawfw/வனபர்வம்_158_ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.doc

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்