Thursday, May 15, 2014

அர்ஜுனன் இந்திரன் சந்திப்பு! - வனபர்வம் பகுதி 167அ

Arjuna and Indra meets! | Vana Parva - Section 167a | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தான் இந்திரலோகம் சென்றதையும், அங்கு வாசம் செய்ததையும், இந்திரனிடம் ஆயுதங்கள் பெற்றதையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதரே, தேவர்களுக்குத் தேவனும், தலைமை ஆன்மாவுமான திரயம்பகன் {முக்கண்ணன்} அருளால், அந்த இரவை அந்த இடத்திலேயே கழித்தேன். இரவைக் கழித்து, காலைச் சடங்குகளை முடித்ததும், நான் முன்பு சந்தித்த அந்தணர்களில் முதன்மையானவரைச் சந்தித்தேன். நடந்தவற்றை நான் அவரிடம் சொன்னேன். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, தெய்வீகமான மகாதேவனை {சிவனை} நான் சந்தித்தது குறித்துச் சொன்னேன். ஓ! மன்னார்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, அவர் என்னிடம் திருப்தி கொண்டு, "யாராலும் காண முடியாத பெரும் தெய்வத்தை நீ கண்டதால், விரைவில் நீ வைவஸ்வதன் {யமன்} முதலான பிற லோகபாலர்கள் மற்றும் தேவர்களின் தலைவன் {இந்திரன்} ஆகியோருடன் நீ பழகுவாய். இந்திரன் உனக்கு ஆயுதங்களை வழங்குவான்" என்றார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதைச் சொன்ன சூரியனைப் போன்ற அந்த அந்தணர், என்னை மீண்டும் மீண்டும் அணைத்து, அங்கிருந்து சென்றார்.


ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அந்த நாளின் மாலைப் பொழுதில், முழு உலகத்திற்கும் புத்துணர்ச்சியூட்டும் சுத்தமான தென்றல் வீசத் தொடங்கியது. இமய மலையின் அடிவாரத்தில் என் அருகில், நறுமணமிக்க அழகிய மலர்கள் புதிதாகப் பூக்கத் தொடங்கின. அனைத்து பக்கங்களிலும், மனதைக் கவரும் இனிய இன்னிசையும், இந்திரன் சம்பந்தமான பாடல்களும் கேட்கப்பட்டன. தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} முன்னிலையில் அப்சரஸ் மற்றும் கந்தர்வக் கூட்டங்கள் பலவகைப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். மருதர்களும், மகேந்திரனின் பணியாட்களும், சொர்க்கவாசிகளும் தெய்வீகத் தேர்களில் ஏறி அங்கே வந்தனர். பிறகு சச்சியுடன் கூடிய மருத்வானும், அனைத்து தேவர்களும் நல்ல அலங்காரத்தோடு தேரில் ஏறி வந்தனர். அந்த நேரத்தில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, மனிதர்களின் தோள்களில் பயணிப்பவன் {குபேரன்}, தனது சிறந்த கிருபையால் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பிறகு தென்திசையில் அமர்ந்திருந்த யமனையும், அவரவர் இடங்களில் அமர்ந்திருந்த வருணன் மற்றும் தேவர்கள் தலைவனையும் {இந்திரனையும்) நான் கண்டேன்.

ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! பலம்வாய்ந்த ஏகாதிபதி, என்னை உற்சாகப்படுத்திய பிறகு அவர்கள், "ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, லோகபாலர்களான நாங்கள் அமர்ந்திருப்பதைப் பார். தேவர்களின் காரியத்தை நிறைவேற்றவே நீ சங்கரனின் {சிவனின்} காட்சியைப் பெற்றாய். சுற்றி அமர்ந்திருக்கும் எங்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்" என்றனர். ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, அதன் பிறகு, உரிய முறையில் தேவர்களில் முதன்மையானவர்களை வணங்கிய நான் அந்தப் பெரும் பலம்வாய்ந்த ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டேன். பிறகு அவர்கள் என்னை அவர்களில் ஒருவராகவே உணர்ந்தார்கள். பின்னர் அந்தத் தேவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தப் பகுதிக்கே திரும்பினர்.

புகழ்பெற்ற தனது ரதத்தில் ஏறிய தேவர்கள் தலைவனான தெய்வீக மகவானும் {இந்திரனும்} என்னிடம், "ஓ! பல்குனா {அர்ஜுனா}, நீ தேவலோகம் செல்ல வேண்டியதிருக்கும். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இந்த உனது வருகைக்கு முன்னரே, நீ இங்கு வருவாய் என்பது எனக்குத் தெரியும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அதன்பிறகே நான் உனக்கு என்னை வெளிப்படுத்தினேன். முன்பே நீ பல தீர்த்தங்களில் நீராடி, இப்போதோ கடும் தவங்கள் இயற்றுகிறாய். ஆகையால், ஓ! பாண்டவா {அர்ஜுனா}, உன்னால் தேவலோகம் செல்ல இயலும். எனினும் நீ தேவலோகப் பயணம் மேற்கொள்ள இன்னும் கடும் தவம்பயில வேண்டும். எனது கட்டளையின் பேரில், மாதலி உன்னைத் தேவலோகங்களுக்கு அழைத்துச் செல்வான். உன்னை ஏற்கனவே தேவர்களும், உயர்ஆன்ம தெய்வீக முனிவர்களும் அறிவார்கள்" என்றான் {இந்திரன்}.

அதன்பேரில் நான் சக்ரனிடம் {இந்திரனிடம்}, "ஓ! தெய்வீகமானவரே {இந்திரரே}, எனக்குச் சாதகமாக இருப்பாயாக. நான் ஆயுதங்கள் பயில விரும்புகிறேன். ஆகவே, 'நீ எனக்குக் குருவாக இருப்பாயாக' என்று வேண்டுகிறேன்" என்று கேட்டேன். அதற்கு இந்திரன், "ஓ! குழந்தாய், ஆயுதங்கள் பயின்றால் பயங்கரக் காரியங்கள் புரிவாய். இதை நோக்கமாகக் கொண்டே நீ ஆயுதங்களை விரும்புகிறாய். எனினும், நீ விரும்பியவாறே ஆயுதங்களை அடைந்து கொள்" என்றான். பிறகு நான், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே, என்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டால் தவிர, நான் இந்தத் தெய்வீக ஆயுதங்களை மனிதர்கள் மீது ஏவ மாட்டேன். ஓ! தேவர்கள் தலைவா {இந்திரா}, எனக்குத் தெய்வீக ஆயுதங்களை அருள்வாயாக. (அதன் காரணமாக) இதன்பிறகு நான் போர் வீரர்கள் அடையும் உலகங்களை அடைவேன்" என்றேன்.

இந்திரன் {அர்ஜுனனிடம்}, "ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உன்னைச் சோதித்துப் பார்க்கவே, நான் இவ்வார்த்தைகளை உன்னிடம் சொன்னேன். என் மூலமாகப் பெறப்பட்ட உனக்கு, இவ்வார்த்தைகள் பொருத்தமானதே. ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ எனது வசிப்பிடத்தை அடைந்து, ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {அர்ஜுனா} வாயு, அக்னி, வசு, வருண, மருத, சித்த, பிரம்ம, கந்தர்வ, உரக, ராட்சச, விஷ்ணு, நைரித ஆயுதங்களையும் மற்றும் என்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பெறுவாய்" என்று சொன்னான். இதை என்னிடம் சொன்ன சக்ரன் {இந்திரன்} அந்த இடத்திலேயே மறைந்து போனான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்