Monday, May 05, 2014

சிவனோடு போர்புரிந்தேன்! - வனபர்வம் பகுதி 166

I fought with Siva! | Vana Parva - Section 166 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வேடன் உருவில் வந்த சிவனுடன் தான் போரிட்டதைக் குறித்தும், பாசுபத ஆயுதத்தை, தான் பெற்ற கதையையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "தனக்கு உரிய இடத்திற்குச் சக்ரன் {இந்திரன்} சென்றதும், தனது சகோதரர்களுடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} சேர்ந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு, இப்படி வணங்கிய அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} தலையை முகர்ந்தவன் {யுதிஷ்டிரன்}, மனக்களிப்பும் மகிழ்ச்சியும் கொண்டு தடைபட்ட வார்த்தைகளில் அர்ஜுனனிடம் "ஓ! அர்ஜுனா, இந்தக் காலத்தை நீ எப்படிச் சொர்க்கத்தில் கழித்தாய்? ஆயுதங்களை எப்படி அடைந்தாய்? தேவர்களின் தலைவனை {இந்திரனை} எப்படித் திருப்தி செய்தாய்? ஓ! பாண்டவா {அர்ஜுனா}, பிநாகையைத் தாங்கும் தெய்வீகமான சங்கரனை {சிவனை} எப்படிக் கண்டாய்? மேலும் ஆயுதங்களை எப்படி அடைந்தாய்? எம்முறையில் (அவர்களை) வழிபட்டாய்? "உன்னால் நான் திருப்தியடைந்தேன்" என்று நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} சொல்லும் விதம், அந்த எதிரிகளை ஒடுக்குபவனுக்கு என்ன சேவை செய்தாய்? ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {அர்ஜுனா}, நான் இவை அனைத்தையும் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாவமற்றவனே, மகாதேவனையும் {சிவனையும்}, தேவர்களின் மன்னனையும் {இந்திரனையும்} நீ திருப்தி செய்த விதத்தையும், ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, வஜ்ரத்தைத் தாங்கியிருப்பவனுக்கு {இந்திரனுக்கு} நீ செய்த சேவையையும், எனக்கு விவரமாகச் சொல் தனஞ்சயா {அர்ஜுனா}" என்றான் {யுதிஷ்டிரன்}.


அர்ஜுனன் {யுஷ்டிரனிடம்}, "ஓ! பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, நூறு வேள்விகள் செய்தவனையும் {இந்திரனையும்}, தெய்வீக சங்கரனையும் {சிவனையும்} எவ்வாறு முறையாகக் கண்டேன் என்பதைக் கேளும். ஓ! எதிரிகளை அழிப்பவரே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {ஆயுத} அறிவியலை (கற்க} அடைய நீர் வழிகாட்டியதும், உமது கட்டளையின் பேரில் கானகம் சென்று தவம்பயின்றேன். காம்யகத்தில் இருந்து பிருகுதுங்கம் சென்று தவத்தில் ஈடுபட்டு ஒரு இரவை அங்கே கழித்தேன். அடுத்த நாள் நான் ஒரு குறிப்பிட்ட அந்தணரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம், "ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்லப் போகிறாய்?" என்று கேட்டார். ஓ! குருக்களின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, அதன்பேரில் நான் உண்மை அனைத்தையும் அவரிடம் சொன்னேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரரே}, அந்த உண்மையைக் கேட்ட அந்த அந்தணர் மிகவும் திருப்தி கொண்டு என்னைப் புகழ்ந்தார். பின்பு, என்னிடம் திருப்தி கொண்ட அந்தணர், "ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிரு. அப்படித் தவம் பயில்கையில், குறுகிய காலத்தில் நீ தேவர்களின் தலைவனைக் {இந்திரனைக்} காண்பாய்" என்றார்.

ஓ! பெரும் பலம்வாய்ந்த மன்னா, பிறகு, நான் அவரது அறிவுரைப்படி இமயத்தில் ஏறி, ஒரு மாதகாலம் கனிகளும் கிழங்குகளும் மட்டும் உண்டு தவம்பயில ஆரம்பித்தேன். இரண்டாவது மாதத்தை நீரை மட்டும் உண்டு கழித்தேன். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, மூன்றாவது மாதம் முழுதும் உணவைத் தவிர்த்தேன். நான்காவது மாதம் கைகளை உயர்த்தியபடி இருந்தேன். அப்போது, நான் எனது பலத்தை இழக்காதது ஆச்சரியம்தான். ஐந்தாவது மாதத்தின் முதல் நாள் கழிந்த போது, எனது முன்னிலையில் பன்றியின் உருவத்தில் ஒரு உயிரினம், பூமியைத் தனது வாயால் புரட்டியும், கால்களால் தரையை மிதித்துக் கொண்டும், மார்பால் மண்ணைத் தேய்த்துக் கொண்டும் பயங்கரமாக நின்றது. அதை {அந்த உயிரினத்தைத்} தொடர்ந்து, பெண்கள் சூழ, வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தாங்கியபடி வேடன் உருவில் இருந்த ஒருவன் வந்தான். அதன் பேரில், நான் எனது வில்லையும், இரண்டு அம்பறாத்தூணிகளையும் எடுத்து, எனது கணைகளால் அந்தப் பயங்கரமான உயிரினத்தைத் துளைத்தேன். அதே வேளையில் அந்த வேடனும் தனது பலம்வாய்ந்த வில்லை இழுத்து, அதை {அந்த விலங்கை) அடித்தது எனது மனதை உலுக்கியது.

மேலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் என்னிடம், "வேட்டை விதிகளை மீறி, நான் முதலில் அடித்த விலங்கை நீ ஏன் அடித்தாய்? இந்தக் கூரிய கணைகள் உனது கர்வத்தை அழிக்கும். அங்கேயே நில்" என்றான். பிறகு அந்தப் பெரும் உடல் படைத்தவன் {வேடன்}, வில்லோடு என்னை நோக்கி விரைந்தான். பிறகு மேகம் மழையைப் பொழிந்து மலையை மறைப்பது போல, அவனது பலம்வாய்ந்த கணைகளால், என்னை மறைத்தான். நான் எனது பங்குக்கு, பல கணைகளால் அவனை மறைத்தேன். முனை ஒளிரும் உறுதியான அம்புகளை உரிய மந்திரங்களுடன், {இந்திரன்} வஜ்ரம் கொண்டு மலையைப் பிளப்பது போல, அவனைத் துளைத்தேன். அப்போது அவனது உருவம் நூறாகவும், ஆயிரமாகவும் ஆனது. நான், அந்த உடல்கள் அத்தனையையும் எனது கணைகளால் துளைத்தேன். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த உருவங்கள் அனைத்தும் மீண்டும் ஒன்றாகின. அதை நான் அடித்தேன்.

பிறகு அவன் சிறிய உடலும் பெரிய தலையும் கொண்டவன் ஆனான். அதன்பிறகு பெரும் உடலும் சிறிய தலையும் கொண்டவன் ஆனான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவன் தனது பழைய உருவம் கொண்டு போருக்காக என்னை அணுகினான். ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நான் அவனை எனது கணைகளால் மூழ்கடிப்பதில் தோல்வியுற்ற போது, வாயுத் தேவனின் பெரும் பலம் வாய்ந்த ஆயுதத்தைப் பொருத்தினேன். ஆனால் அதை அவன் மீது செலுத்துவதில் நான் தோல்வி கண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆயுதம் பலனைக் கொடுக்கத் தவறிய போது, நான் திகைப்படைந்தேன். எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் கடுமையாக முயன்ற நான் அவனைப் பல பலம் வாய்ந்த கணைகளால் நிறைத்தேன். பிறகு, ஸ்தூணாகர்ண, வருண, சலப, அசமவர்ஷ ஆயுதங்களை எடுத்து அவன் மீது பொழிந்தேன். ஆனால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எனது அனைத்து ஆயுதங்களையும் அவன் உடனே விழுங்கிவிட்டான். எனது ஆயுதங்கள் அனைத்தும் விழங்கப்பட்ட பிறகு, நான் பிரம்மனின் ஆளுகை கொண்ட ஆயுதத்தை அவன் {வேடன்} மீது விட்டேன்.

சுடர்விட்டுச் செல்லும் கணைகள் அந்த ஆயுதத்தில் இருந்து கிளம்பி அவன் மீது குவிந்தது. இப்படி அடிக்கப்பட்ட எனது பலம்வாய்ந்த ஆயுதத்தால் மூழ்கிய அவன், தனது உடலைப் பெருக்கினான். பிறகு நான் வீசிய ஆயுதத்தின் சக்தியால் ஆகாயமும், வானத்தின் அனைத்து திக்குகளும் வாட்டப்பட்டன. ஆனால் அந்தப் பெரும் பலமும் சக்தியும் கொண்டவன் அந்த ஆயுதத்தை உடனே கலங்கடித்தான். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பிரம்மனின் ஆளுமை கொண்ட அந்த ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட போது பயங்கரமான அச்சம் என்னைப் பீடித்தது. அதனால் உடனே எனது வில்லையும் இரண்டு அம்பறாத்தூணிகளைப் பிடித்துக் கொண்டு, அவன் மீது கணைகளை அடித்தேன். ஆனால் அவன் {வேடன்} அனைத்து ஆயுதங்களையும் விழுங்கினான்.

அனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டும் விழங்கப்பட்டும் போன போது, அவனுக்கும் {வேடனுக்கும்} எனக்கும் இடையில் மற்போர் நடந்தது. அடிகளாலும், அறைகளாலும் இருவரும் மோதிக் கொண்டோம். ஆனால் அவனை வீழ்த்த முடியாத நான், மதிமயங்கித் தரையில் விழுந்தேன். ஓ! பெரும்பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு சிரித்த அவன் {வேடன்}, என் கண் முன்பாகவே அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து அந்த இடத்திலேயே மறைந்து போனான்.. ஓ! சிறப்புவாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இதைச் சாதித்த அந்தத் தெய்வீகமானவன் வேறு உரு கொண்டு தெய்வீக ஆடை பூண்டு வந்தான். வேடன் உருவைக் கைவிட்ட தேவர்களின் தெய்வீகத் தலைவன் {சிவன்}, தனது தெய்வீக தோற்றத்தைப் பெற்று அங்கே நின்றான்.

பிறகு, உமையுடன் கூடிய காளையைத் தனது குறியாகக் கொண்டவனும் பினகையைத் தாங்குபவனும், பல உருவங்கள் எடுக்கவல்லவனுமான அந்தத் தெய்வீகமானவன் {சிவன்}, பாம்புகளைத் தாங்கிக் கொண்டு என் முன்பு தோன்றினான். ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அப்போதும் போருக்குத் தயாராகக் களத்தில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி வந்த திரிசூலம் தாங்குபவன் {சிவன்}, "நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டேன்" என்றான். பிறகு அந்தத் தெய்வீகமானவன் எனது விற்களையும், வற்றாத அம்புகள் கொண்ட அம்பறாத்தூணி ஜோடியையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து, "ஓ! குந்தியின் மகனே. நீ என்னிடம் ஏதாவது வரம் கேள். நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும். ஓ! வீரா, உனது இதயத்தில் குடி கொண்டிருக்கும் விருப்பத்தைச் சொல். நான் அதை அருளுவேன். இறவா நிலை தவிர்த்து, உனது இதயத்தில் இருக்கும் விருப்பத்தை என்னிடம் சொல்" என்றான் {சிவன்}.

ஆயுதங்கள் பெறுவதில் நிலைத்த மனதுடன், நான் சிவனை வணங்கி, "ஓ! தெய்வீகமானவனே, எனக்குச் சாதகமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், நான் ஒரு வரத்தைப் பெற விரும்புகிறேன். தேவர்களிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் {ஆயுத அறிவியலையும்} நான் கற்க விரும்புகிறேன்" என்றேன். பிறகு, அந்தத் திரயம்பகன் {சிவன் [முக்கண்ணன்]} என்னிடம், "ஓ! பாண்டவா {அர்ஜுனா}, எனது ஆயுதமான ரௌத்திரத்தை {பாசுபதத்தை} நான் உனக்குக் கொடுப்பேன்" என்றான். பிறகு மிகவும் திருப்தி கொண்ட மகாதேவன் {சிவன்}, வலிமைமிக்க ஆயுதமான பாசுபதத்தை எனக்கு அருளினான். அந்தத் தெய்வீக ஆயுதத்தை அருளிய அவன், என்னிடம், "இது மனிதர்கள் மீது ஏவப்படலாகாது. குறைந்த சக்தி கொண்டவர் மீது இதை ஏவினால், அது அண்டத்தையே உட்கொண்டு விடும். கடுமையாகப் பாதிக்கப்படும் போது மட்டுமே, இதை ஏவ வேண்டும். உன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் வீணான பிறகே, இதை நீ ஏவலாம்" என்றான் {சிவன்}.

காளையைக் குறியாகக் கொண்டவன் {சிவன்} இப்படி என்னிடம் திருப்தி கொண்ட போது, தடையற்ற சக்தி கொண்டு அனைத்து ஆயுதங்களைக் கலங்கடிப்பதும், பகைவர்களை அழிப்பதும், எதிரிகளின் படைகளை அழிப்பதும், அடைய முடியாத ஒப்பற்றதும், தேவர்களாலும், தானவர்களாலும், ராட்சசர்களாலும் தாங்கமுடியாததுமான பாசுபத ஆயுதம் உருவமெடுத்து வந்து என் அருகில் நின்றது. பிறகு அந்தத் தெய்வத்தின் கட்டளையின் பேரில் நான் அங்கே அமர்ந்தேன். நான் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே அந்தத் தெய்வம் {சிவன்} அந்த இடத்தில் இருந்து மறைந்தான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்