Thursday, May 22, 2014

மாதலி மயங்கினான்! - வனபர்வம் பகுதி 170

Matali lost his senses! | Vana Parva - Section 170 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தெய்வீக ஆயுதங்களின் துணை கொண்டு அர்ஜுனன் அசுரர்களின் மாயை ஒழித்து அவர்களைக் கொன்றது...

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு மலைப்பாறைகளைப் போன்ற மரத்துண்டுகளைக் கொண்ட கல்மழை பொழிந்தன. அது என்னை மிகவும் துன்புறுத்தியது. அந்த மோதலில் நான் அந்த (மலைகளை), நெருப்புடன் வெளிப்பட்ட எனது வேகமான அம்பு மழையால் சிதறடித்தேன். அந்தப் பாறைத் துணுக்குகள் விழும்போது நெருப்புக் குவியல்களாக விழுந்தன. இப்படி அந்தக் கல் மழை நிறுத்தப்பட்ட பிறகு, நீர் மழை தேர் அச்சின் அளவுள்ள தாரைகளோடு எனது அருகில் தோன்றியது. வானத்தில் இருந்து விழுந்த அந்த ஆயிரக்கணக்கான பலமிக்க நீர்த்தாரைகள் அந்த முழு வானத்தையும் திசைகளையும், திசைப்புள்ளிகளையும் நிரப்பின. கொட்டும் மழையும், வீசும் காற்றும், கர்ஜிக்கும் தைத்தியர்களும் என யாரையும் என்னால் காண முடியவில்லை. அந்தக் போர்க்களத்தில் வானையும் முழுப் பூமியையும் {இணைக்கும்படி} தொட்டுக் கொண்டு, விடாமல் பெய்து கொண்டிருந்த மழை என்னை மயங்கச் செய்தது. அதன்பேரில், நான் இந்திரனிடம் கற்ற தெய்வீக ஆயுதமான, சுடர்விட்டெரியும் பயங்கரமான விசோஷணா என்ற ஆயுதத்தை ஏவி நீரை வற்ற செய்தேன்.

ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, கல்மழை அழிக்கப்பட்டு, நீர்த்தாரைகள் வற்ற செய்யப்பட்ட பிறகு, தானவர்கள் நெருப்பையும் காற்றையும் கொண்டு மாயையைப் பரப்பினார்கள். பிறகு நான் நீராயுதங்களைக் கொண்டு {வருணாஸ்திரம் கொண்டு} அந்நெருப்பை அணைத்தேன். பிறகு பாறைகளை வீசும் ஆயுதம் கொண்டு {சைலாஸ்திரம்} அந்தக் கடும் காற்றை அடக்கினேன். இவையெல்லாம் தடுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஒடுக்கப்படமுடியாத தானவர்கள் பலதரப்பட்ட மாயைகளைத் தொடர்ந்து உருவாக்கினர். அங்கே பயங்கரமான கல்மழையும், அக்னி மற்றும் வாயு ஆயுதங்களின் மழையும் பொழிந்தன. அப்படிக் கட்டவிழ்க்கப்பட்ட மாயை அம்மோதலில் என்னைத் துன்புறச் செய்தது. எல்லாப்புறங்களிலும் அடர்த்தியான இருள் தோன்றியது.

இப்படி ஆழ்ந்த அடர்ந்த இருள் உலகத்தை மூடியதால் குதிரைகள் திரும்பின, மாதலி விழுந்தான், அவனது கையில் இருந்த தங்கச் சாட்டை {குறடா} பூமியில் விழுந்தது. ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இதனால் பயந்து போன அவன் என்னிடம் "எங்கிருக்கிறாய்?" என்று அடிக்கடி கேட்டான். அவன் மனம் பேதலித்திருந்த அவ்வேளையில், என்னையும் அச்சம் ஆட்கொண்டது. பிறகு அவசரத்துடன் அவன் {இந்திரனின் தேரோட்டியான மாதலி} என்னிடம், "ஓ! பார்த்தா, அமுதத்துக்காகத் தேவர்களுக்கும் அசுரர்களுக்குப் பெரும் போர் நடந்திருக்கிறது. ஓ! பாவமற்றவனே, நான் அதைக் (அப்போரைக்) கண்டிருக்கிறேன். சம்பரனை அழித்த போதும் பயங்கரமான போர் மூண்டது. அப்போதும் நான் குறைவில்லாமல் தேவர்கள் தலைவனுக்குத் தேரோட்டியாகப் பணி செய்திருக்கிறேன். அதே போல, விரித்திரனைக் கொன்ற போதும், குதிரைகள் என்னால் நடத்தப்பட்டன. ஓ! பாண்டவா {அர்ஜுனா}, விரோச்சனின் மகன், பலன், பிரஹராதன் மற்றும் பிறருடன் நடந்த கோரமான போர்களையும் நான் கண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட பயங்கரமான போர்களில் எல்லாம் நான் பங்குபெற்றிருக்கிறேன். ஆனால், ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, (இதற்கு முன்னால்) எப்போதும் எனது உணர்வுகளை நான் இழந்ததில்லை. பெருந்தகப்பன் அனைத்து உயிர்களின் அழிவை நிர்ணயித்துவிட்டான் என்றே நிச்சயமாக நினைக்கிறேன். அண்ட அழிவைத் தவிர வேறு எதையும் இந்தப் போர் ஏற்படுத்தாது" என்றான் {மாதலி}.

அவனது வார்த்தைகளைக் கேட்ட நான், எனது சொந்த முயற்சியால் கவலை தரும் குழப்பத்தைத் தணித்துக் கொண்டு, "தானவர்களால் பரப்பப்படும் மாயையின் பெரும் சக்தியை அழிப்பேன் என்று நான் உனக்குச் சொல்கிறேன் மாதலி. எனது கரங்களின் வலிமையையும், எனது ஆயுதங்கள் மற்றும் காண்டீவத்தின் வல்லமையையும் பார். இன்று மாயை உருவாக்கும் ஆயுதங்களால் (அதன் துணையால்), நான் இந்த ஆழ்ந்த மனச்சோர்வையும், மற்றவர்களால் பரப்பப்படும் இந்தப் பயங்கரமான மாயையும் அகற்றுவேன். ஓ! தேரோட்டியே {மாதலி}, அஞ்சாதே. உன்னை அமைதிப்படுத்திக் கொள்" என்றேன். இதைச் சொன்ன நான், ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, தேவர்களின் நன்மைக்காக, அனைத்து உயிர்களையும் வெளிப்படுத்தும் ஆயுத மாயையை ஏற்படுத்தினேன். (அவர்களது) மாயை அகன்ற போது, ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட அசுரர்களில் முதன்மையானவர்களில் சிலர், பலதரப்பட்ட மாயைகளைப் மீண்டும் பரப்பினார்கள்.

அதன்பேரில், ஒரு நேரம் (உலகம்) தெரிந்தது, மறு நேரம் இருள் அதை விழுங்கியது, ஒரு நேரம் உலகம் பார்வையில் இருந்த மறைந்தது, மறு நேரம் அது நீருக்குள் மூழ்கியது. அது பிரகாசமடைந்த போது, ரதத்தின் முன்பு அமர்ந்த மாதலி, நன்கு செலுத்தப்பட்ட குதிரைகளுடன், மயிர்க்கூச்செரியும்படி அக்களத்தில் உலவ ஆரம்பித்தான். பிறகு கடுமை நிறைந்த நிவாதகவசர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினார்கள். எனது வாய்ப்பைக் கண்டுபிடித்த நான், அவர்களை {தானவர்களை} யமனின் மாளிகைக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்தேன். பொங்கியெழும் அம்மோதலில், திட்டமிட்டு நிவாதகவசர்களை அழிக்க எண்ணினேன். திடீரென்று மாயையினால் மறைக்கப்பட்ட அந்த தானவர்களை என்னால் காண முடியவில்லை.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்