Tuesday, May 20, 2014

போர் தொடங்கியது! - வனபர்வம் பகுதி 169

War began! | Vana Parva - Section 169 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

நிவாதகவசர்களோடு அர்ஜுனன் போர் புரியத் தொடங்கியது...

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, பிறகு,, நிவாதகவசர்கள் ஆயுதங்கள் தாங்கிய படி ஒரே கூட்டமாக உணர்ச்சிப் பெருக்குடன் என்னை நோக்கி விரைந்து வந்தார்கள். தேரின் பாதையைத் தடுத்து, சத்தமாகக் கர்ஜித்த அந்தப் பெரும் பலம் மிக்க ரதசாரதிகள் என்னை அனைத்து புறங்களிலும் நெருக்கி, அவர்களது கணைகளால் என்னை மூடினர். பிறகு பெரும் பராக்கிரமம் கொண்ட பிற பேய்கள் {அசுரர்கள்}, தங்கள் கணைகளாலும், தங்கள் கைகளில் இருந்த கைக்கோடரிகளையும், ஈட்டிகளையும், கோடரிகளையும் என் மீது வீசினர். இப்படி வீசப்பட்ட பெரும் பலம் வாய்ந்த கணைகளும், எண்ணற்ற கதாயுதங்களும், தண்டங்களும் இடைவிடாமல் எனது தேரில் விழுந்தபடியே இருந்தன. நிவாதகவசர்களில் பெரும்பயங்கரமான முகம் படைத்தவர்கள் விற்களையும் கூரிய ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு போருக்காக என்னை நோக்கி ஓடி வந்தார்கள். அந்த மோதலில் நேராகச் செல்லக்கூடிய பலவகையான வேகமான கணைகளை எனது காண்டீவத்தில் இருந்து அடித்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தேன். கல்லில் கூரேற்றப்பட்ட எனது கணைகளால் அவர்கள் திரும்பி ஓடினார்கள்.


பிறகு, மாதலியால் {இந்திரனின் தேரோட்டியால்} திறம்பட ஓட்டப்பட்ட எனது குதிரைகள், பலவிதமான அசைவுகளைக்காட்டி வாயு வேகத்துடன் இருந்தன. மாதலியால் திறம்பட வழிநடத்தப்பட்ட அவை திதியின் மகன்களை {அசுரர்களை} மிதிக்கத் தொடங்கின. மாதலியால் செயல்திறத்துடன் செலுத்தப்பட்ட அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான {பதினாயிரம்} குதிரைகள், ஏதோ சிலவே {சிறு எண்ணிக்கையிலான குதிரைகளே} இருந்தது போல எளிதாக நகரத்தொடங்கின. அவற்றின் மிதியாலும், தேர்ச்சக்கரத்தின் சடசடப்பாலும், எனது கணை மழையாலும், தானவர்கள் நூற்றுக்கணக்கில் விழ ஆரம்பித்தனர். விற்களுடன் போர்க்கோலத்தில் இருந்த மற்றவர்கள் உயிரிழந்து, தங்கள் தேரோட்டிகள் கொல்லப்பட்டு, குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர். பிறகு, அனைத்து பக்கங்களையும், திசைகளையும் மூடியபடி, தாக்குவதில் திறம் படைத்த அனைவரும் (அனைத்து தானவர்களும்) பலதரப்பட்ட ஆயுதங்களுடன் வந்ததைக் கண்டு எனது மனது வருத்தமடைந்தது. (இச்சமயத்தில்) கடுமை நிறைந்த குதிரைகளைத் திறம்பட நடத்திய மாதலியின் அற்புத பராக்கிரமத்தை நான் சாட்சியாகக் கண்டேன்.

பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த மோதலில் வித்தியாசமான வேகமான ஆயுதங்களால் நான் ஆயுதம்தாங்கிய நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானவர்களைத் (பேய்களை [அசுரர்களை]} துளைத்தேன். ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அனைத்து முயற்சிகளையும் முனைந்து கொண்டு களத்தில் திரிந்த என்னைக் கண்ட சக்ரனின் வீரத் தேரோட்டி {மாதலி} பெரும் திருப்தி கொண்டான். அந்தக் குதிரைகளாலும், தேராலும் ஒடுக்கப்பட்ட ஒரு சிலர் (அவர்கள் [அசுரர்கள்]} நிர்மூலமடைந்தனர்; பிறர் மோதலில் இருந்து விலகினர்; அதே நேரத்தில் கணைகளால் துன்புற்ற (சிலர்) நிவாடகவசர்கள், களத்தில் எங்களுக்குச் சவால் விட்டு பெரும் பலமிக்கக் கணைகளை மழையாகப் பொழிந்த படி எதிர்த்து வந்தனர். அதன்பேரில், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டுப் பிரம்ம ஆயுதங்களோடு தொடர்புடைய நான் அடித்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வேகமான ஆயுதங்கள் அவர்களை எரிக்கத் தொடங்கின. என்னால் கடுமையாக ஒடுக்கப்பட்ட அந்தப் பலமிக்க அசுரர்கள் கோபம் மூண்டு ஒன்றாகச் சேர்ந்து கதாயுதங்களையும்ம், கணைகளையும் வாட்களையும் என் மீது பொழிந்தனர்.

பிறகு, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, தேவர்கள் தலைவனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்த ஆயுதமான மாகவன் என்ற பெயர் கொண்ட கடும் சக்தி படைத்த தலைமையான ஆயுதத்தை எடுத்து, அந்த ஆயுதத்தின் சக்தியைக் கொண்டு, அவர்களால் அடிக்கப்பட்ட திரிசூலங்கள், வாட்கள், மற்றும் தோமரங்களை ஆயிரம் துண்டுகளாக அறுத்தெறிந்தேன். பிறகு கோபத்தால் அவர்கள் கரங்களையும் அறுத்து ஒவ்வொருவர் மீதும் பத்து கணைகளைத் துளைத்தேன். அந்தப் போர்க்களத்தில் காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட கணைகள் அத்தனையும் கருவண்டுகளின் வரிசைகள் போலத் தெரிந்ததைக் கண்டு மாதலி ரசித்தான். அவர்களும் என் மீது கணைகளைப் பொழிந்தனர். ஆனால் நான் அந்தப் பலமிக்கக் கணைகளை எனது கணைகளால் அறுத்தேன்.

பிறகு இப்படி அடிக்கப்பட்ட நிவாதகவசர்கள் மீண்டும் அனைத்துப் புறங்களில் இருந்தும் பலம் மிக்கக் கணைகளால் என்னை மறைத்தனர். நான் அந்தக் கணைகளின் சக்தியை எனது வேகமான அற்புதமான எரிஆயுதங்களால் சமன் செய்து, கலங்கடித்து, அவர்களை ஆயிரக்கணக்கில் துளைத்தெடுத்தேன். அவர்களது கிழிந்த உடலில் இருந்த இரத்தம், மலை முகடுகளில் இருந்து ஓடும் மழைக்கால நீர் போல வழியத் தொடங்கியது. இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்று நேராகச் செல்லும் எனது வேகமான கணைகளால் காயமடைந்த அவர்கள் பெரிதும் துன்பமடைந்தனர். அவர்களது உடல்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் துளைக்கப்பட்டிருந்தனர். அவர்களது கரங்களின் சக்தியும் குறைந்து போயிற்று. பிறகு அந்த நிவாதகவசர்கள் மாயைக் கொண்டு (மாயையின் உதவி கொண்டு) என்னுடன் மோதினர்.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்