Thursday, May 29, 2014

பாம்பிடம் அகப்பட்ட பீமன்! - வனபர்வம் பகுதி 177

Bhima caught by a snake! | Vana Parva - Section 177 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமன் வனத்தில் வேட்டையாடித் திரிகையில் ஒரு பாம்பிடம் அகப்பட்டது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, பெரும் பராக்கிரமும், பத்தாயிரம் {10,000} யானைகளின் பலமும் கொண்ட பீமன் அந்தப் பாம்பினால் (அதைக் கண்டு) எப்படிப் பீதியடைந்தான்? அந்த எதிரிகளைக் கொல்பவன், (குபேரனின்) தாமரைத் தடாகத்தில் யக்ஷர்களையும், ராட்சசர்களையும் கொன்றவன், வளங்களை அளிக்கும் புலஸ்தியரின் மகனை {குபேரனை} கர்வத்தோடு ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைக்கு அழைத்தவன், அப்படிப்பட்ட அவன் {பீமன்} பயத்தால் கலங்கி திகைத்துப் போனான் என்கிறீரே! நான் இதை (உம்மிடமிருந்து) கேட்க விரும்புகிறேன்; எனது ஆவல் பெரிதாக இருக்கிறது" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயனே}, மன்னன் விருஷபர்வனின் ஆசிரமத்தை அடைந்த அந்தப் பயங்கரப் போர்வீரர்கள் பலதரப்பட்ட அற்புதமான வனங்களில் வாழ்ந்து வந்த போது, கையில் வில்லுடனும், கத்தியுடனும் இன்பமாக உலவி வந்த விருகோதரன் {பீமன்}, தேவர்களும் கந்தர்வர்களும் வந்து செல்லும் ஒரு அழகிய கானகத்தைக் கண்டான். அதன் பிறகு அவன் {பீமன்}, தேவ முனிவர்களும், சித்தர்களும் வந்து போவதும், அப்சரசு கூட்டங்கள் வாழும் இடமுமான இமய மலையின் (சில) அழகான இடங்களைக் கண்டான். அங்கே சகோரங்களும், சக்கரவாகங்களும், ஜீவஜீவங்களும், குயில்களும், பிருங்கராஜங்களும் ஆங்காங்கே (தங்கள் கானத்தை) ஒலித்தன. அங்கே அடர்ந்த நிழல் கொண்ட மரங்கள், எப்போதும் பூத்துக் குலுங்கும் மலர்களுடனும் கனிகளுடனும் மெதுவான பனியின் ஸ்பரிசத்துடன், கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையை அளித்தன.

அவன் {பீமன்} அங்கே பளிங்கு போல இருந்த மலையருவிகளையும், வெண்பனி நிறம் கொண்ட பத்தாயிரம் வாத்துகளையும், அன்னங்களையும், மேகங்களைச் சிறைபிடிக்கும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளையும், இடையிடையே மஞ்கள் நிற சந்தன மரங்கள், துங்கா, காளீயக மரங்கள் அடர்ந்த காடுகளையும் கண்டான். அந்தப் பெரும்பலமிக்கவன் {பீமன்} மேடு பள்ளமில்லாத, தண்ணீரில்லாத பாலை மலைவெளிகளில் நஞ்சற்ற சுத்தமான அம்புகளால் வேட்டை விளையாட்டினை விளையாடித் திரிந்தான். அந்தக் கானகத்தில், நூறு {100} யானைகளின் பலத்தைக் கொண்ட, புகழும் பலமும் மிக்கப் பீமசேனன் (பல) பெரிய காட்டுப் பன்றிகளைத் தனது (கரத்தின்) சக்தியால் கொன்றான். கடும் பராக்கிரமும், பெரும் பலமும், சிங்கம் மற்றும் புலியைப் போன்ற சக்தியும், நூறு மனிதர்களைத் தடுக்கும் ஆற்றலும், நீண்ட கரங்களும், நூறு யானைகளின் பலமும் கொண்ட அவன் {பீமன்}, பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும், எருமைகளையும் கொன்றான். அந்தக் கானகத்தில் ஆங்காங்கே மரங்களை வேருடன் பிடுங்கி வேகத்துடன் அவற்றை ஒடித்தான். அச்சத்தம் அக்கானகம் முழுதும், பூமி முழுதும் எதிரொலித்தது. மலைகளின் சிகரங்களை நொறுக்கியவாறும் தனது கர்ஜனையாலும், கைத்தட்டலாலும், போர்க்குரலாலும், புஜங்களைத் தட்டியும் பூமியை எதிரொலிக்கச் செய்த சிதைவற்றவனும், சதாகர்வியும், பயமற்றவனுமான பீமசேனன், மீண்டும் மீண்டும் அக்கானகத்தில் குதித்தபடி சென்றான்.

பீமசேனனின் கர்ஜனையைக் கேட்ட பலமிக்கச் சிங்கங்களும், பெரும் பலம் மிக்க யானைகளும் அச்சத்துடன் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வந்தன. அதே கானகத்தில் அச்சமற்று உலவி, ஓர் கானக வாசியைப் போல {வேடுவனைப் போல}, மனிதர்களில் மிகுந்த வீரமிக்கவன் வேட்டை விளையாட்டினை விளையாடிக் கொண்டு அந்தக் கானகத்தில் நடந்தான். வலிமையும், பராக்கிரமும் கொண்ட அவன் {பீமன்}, விசித்திரமான சத்தங்களை {strange whoopos} எழுப்பி, அனைத்து உயிர்களுக்கும் திகிலூட்டியபடி, அந்தப் பரந்தக் காட்டில் ஊடுருவினான். திகிலடைந்த பாம்புகள் குகைகளுக்குள் {தங்களை} மறைத்துக் கொண்டன. ஆனால் தாமதமில்லாமல் அவைகளை முந்தியும், மெதுவாக அவற்றைப் பின்தொடர்ந்து சென்றான்.

பின்னர், தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வலிமைமிக்கப் பீமசேனன், மலைக்குகைகள் ஒன்றில் வாழும், அந்த (முழு) குகையையும் தனது பருத்த உடலால் மூடிக்கொண்ட, தனக்கு மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கிய {அதைக் கண்ட அச்சத்தினால்} ஒரு பாம்பைக் கண்டான். மலையைப் போன்ற பெரும் உடலும், அசுரத்தனமான பலமும், உடல் முழுதும் புள்ளிகளும் கொண்டு மஞ்சளைப் போன்ற {மஞ்சள்} நிறத்தில் இருந்து. அதன் வாய், நான்கு பற்களுடன் குகையின் உருவத்தில் தாமிர நிறத்தில் இருந்தது. சுடர்விடும் கண்களுடன் அது தொடர்ந்து தனது கடைவாயை நக்கிக் கொண்டிருந்தது. அசையும் உயிர்கள் அனைத்தையும் பீதியடைய வைக்கும் அது {அந்தப் பாம்பு}, அழிப்பவனான யமனின் உருவம் போலத் தெரிந்தது. அது விடும் மூச்சிரைப்பு ஒலியால் {ஹிஸ் என்ற ஒலி - hissing noise} அதட்டுவதைப் போல அது கிடந்தது.

பீமன் தனக்கு மிக அருகில் வந்ததைக் கண்ட ஆட்டை விழுங்கும் கோபம் கொண்ட அந்தப் பாம்பு, பெரும் கோபத்துடனும் வன்முறையுடனும் தனது பிடிக்குள் பீமசேனனைப் பற்றியது. பிறகு, அந்தப் பாம்பு பெற்றிருந்த வரத்தால், அதன் பிடிக்குள் இருந்த பீமசேனன், உடனே தனது சுய நினைவை இழந்தான். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பீமசேனன் கரங்களின் பலம் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானது. ஆனால், பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தப் பீமன் அந்தப் பாம்பினால் வீழ்த்தப்பட்டு, மெதுவாக நடுங்கி அசைவதற்கு சக்தியற்று எதுவும் முயலாமல் இருந்தான். பலம் கொண்ட கரங்களும், சிம்மம் போன்ற தோள்களும் கொண்ட அவன் {பீமன்}, பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைப் பெற்றிருந்தாலும், அந்தப் பாம்பினால் பிடிக்கப்பட்டு, அது பெற்றிருந்த வரத்தின் காரணமாக வீழ்த்தப்பட்டு, தனது அனைத்து பலத்தையும் இழந்தான். அவன் தப்பிப்பதற்காகக் கடுமையாகப் போராடினான். ஆனால், எவ்விதத்தினாலும் {அந்தப் பாம்பைத்} திருப்பி அடிப்பதற்கு சக்தியுள்ளவன் ஆவதில் அவன் வெற்றிபெறவில்லை."
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்