Sunday, June 15, 2014

அந்தண சக்தி! - வனபர்வம் பகுதி 183

The might of a Brahmana! | Vana Parva - Section 183 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அந்தணர்களின் மகிமை குறித்து யுதிஷ்டிரனுக்கும் அவனைச் சூழ்ந்திருந்தவர்களுக்கும் மார்க்கண்டேயர் சொல்லியது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பாண்டுவின் மகன்கள் உயர் ஆன்ம மார்க்கண்டேயரிடம், "அந்தணர்களின் பெருமைகளைக் கேட்கக் காத்திருக்கிறோம். நீர் எங்களுக்கு அதைச் சொல்லும்" என்றனர். இப்படிக் கேட்கப்பட்ட தவ அறமும் ஆன்ம சக்தியும், அனைத்துத் துறைகளில் ஞானமும் கொண்ட மதிப்பிற்குரிய மார்க்கண்டேயர், "எதிரிகளின் நகரத்தை வெல்பவனும், ஹேஹய குலத்தைச் சார்ந்தவனும் வலிமையான உறுப்புகள் கொண்டவனுமான ஒரு இளவயது இளவரசன் (ஒரு சமயம்) வேட்டைக்கு வெளியே சென்றான். அப்படி அவன் காட்டு மரங்கள் மற்றும் அடர்த்தியான புற்களுக்கிடையே உலவி கொண்டிருந்த போது, கறுப்பு மான் தோலை தனது மேலாடையாக உடுத்தியிருந்த ஒரு முனிவரைத் தனது அருகில் கண்டு, அவரை மான் என நினைத்துக் கொன்று விட்டான்.


தான் செய்த காரியத்தில் வலி கொண்டு, துயரத்தால் புலன்கள் செயலற்ற அவன், புகழ்பெற்ற ஹேஹயத் தலைவர்களிடம் சென்றான். அந்தத் தாமரை கண்கள் கொண்ட இளவரசன் அவர்களிடம் விவரங்களைத் தெரிவித்தான். ஓ! எனது மகனே {யுதிஷ்டிரா}, அவன் சொன்னதைக் கேட்டும், கனிகளும் கிழங்குகளும் உண்டு வாழ்ந்த அந்த முனிவரின் உடலைக் கண்டும், அவர்கள் மனதால் மிகவும் துன்புற்றார்கள். அவர்கள் அனைவரும் இந்த முனிவர் யாருடைய மகன் என்பதை அறிய அங்கும் இங்கும் தேடி விசாரித்தார்கள். அவர்கள் விரைவில், காசியபரின் மகனான அரிஷ்டநேமியின் ஆசிரமத்தை அடைந்தனர். நிலைத்த தவத்தில் இருந்த அந்தப் பெரும் முனிவரை வணங்கியபடி அவர்கள் அங்கே நின்றார்கள். அதே வேளையில், முனிவர் {அரிஷ்டநேமி} தன்பங்குக்கு, அவர்களை வரவேற்பதில் மும்முரமாக இருந்தார். அவர்கள் அந்தச் சிறப்புமிக்க முனிவரிடம் {அரிஷ்டநேமியிடம்}, விதியின் விளையாட்டால், நாங்கள் உம்முடைய வரவேற்புக்குத் தகுதியற்றவர்களானோம். உண்மையில் நாங்கள் ஒரு அந்தணரைக் கொன்றுவிட்டோம்!" என்றனர்.

அந்த மறுபிறப்பாள முனிவர்கள் அவர்களிடம், "நீங்கள் எப்படி ஒரு அந்தணனைக் கொன்றீர்கள்? அவன் எங்கிருக்கிறான்? நீங்கள் அனைவரும் எனது தவப்பயிற்சியின் சக்தியைப் பாருங்கள்" என்றார். அனைத்தையும் நடந்தவாறே அவரிடம் விவரித்த அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். ஆனால், {இறந்த} அந்த முனிவரின் உடல் அங்கே (அவர்கள் அதை விட்டுச் சென்ற இடத்தில்) இல்லை. தேடிக் களைத்த பின்னர், கனவில் கண்டதைப் போல, கருத்திழந்து வெட்கித் திரும்பினர். பிறகு, ஓ! எதிரிகளின் நகரங்களை வெல்பவனே {யுதிஷ்டிரா}, அந்த முனிவர் தார்க்ஷயர் {அரிஷ்டநேமி}, அவர்களிடம், "இளவரசர்களே, நீங்கள் கொன்ற அந்தணன் இவனா? ஆன்மப் பயிற்சிகள் மூலம் அமானுஷ்ய கொடைகள் {சக்திகள்} கொண்ட இந்த அந்தணன் உண்மையில் எனது மகனே" என்றார் {அரிஷ்டநேமி}.

அம்முனிவரைக் கண்ட அவர்கள், ஓ பூமியின் தலைவா, மிகுந்த அதிர்ச்சியை அடைந்தனர். அவர்கள், "என்ன அற்புதம்! இறந்தவர் உயிருடன் திரும்புவது எப்படி? தவ அறத்தின் சக்தியால் இவர் மீண்டும் புத்துயிர் பெற்றாரா? உண்மையில் அதை வெளியிடலாம் என்றால், ஓ அந்தணரே, நாங்கள் கேட்கக் காத்திருக்கிறோம்" என்றனர். அவர்களிடம் அவர் {அரிஷ்டநேமி}, "ஓ மனிதர்களின் தலைவர்களே, எங்கள் மீது சாவுக்கு அதிகாரம் கிடையாது. அதை யுக்தியுடன் சுருக்கமாகச் சொல்வேன். நாங்கள் எங்கள் புனிதமான கடமைகளைச் செய்கிறோம்; ஆகையால் எங்களுக்கு மரணத்திடம் பயம் கிடையாது; நாங்கள் அந்தணர்களைப் பற்றி நல்ல விதமாகப் பேசுகிறோம் ஆனால் அவர்களைக் குறித்துத் தீங்கு நினைத்தது கிடையாது; ஆகையால் மரணம் என்பது எங்களுக்குப் பயத்தைக் கொடுப்பதில்லை. எங்கள் விருந்தினர்களை உணவு, நீர் கொடுத்தும், எங்களை நம்பியிருப்பவர்களுக்கு அபரிமிதமான உணவைக் கொடுத்தும், அதன் பிறகு எஞ்சி இருப்பதை நாங்கள் உண்பதால் மரணத்திடம் எங்களுக்குப் பயம் கிடையாது. அமைதி நிரம்பி, தவம், தானம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, புனித இடங்களுக்குச் சென்று, புனிதமான இடங்களில் நாங்கள் வாழ்கிறோம். ஆகையால் எங்களுக்கு மரணத்தின் மீது பயம் கிடையாது. ஆன்மசக்தி நிறைந்த மனிதர்கள் வாழும் இடத்தில் நாங்கள் வாழ்கிறோம்; எனவே எங்களை மரணம் பயமுறுத்துவது கிடையாது. நான் சுருக்கமாக அனைத்தையும் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இப்போது அனைத்து உலகத் தீமைகளிலிருந்தும் குணமடைந்து நீங்கள் திரும்பலாம். பாவத்தினால் இனி உங்களுக்குப் பயமில்லை" என்றார். "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்த இளவரசர்கள், ஓ! பாரதக் குலத்தின் முதன்மையான குலவழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அம்முனிவரை {அரிஷ்டநேமியை} வணங்கி, மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்