Tuesday, June 24, 2014

சங்கில் அமர்ந்திருந்த சிறுவன்! - வனபர்வம் பகுதி 187இ

Boy seated on a conch! | Vana Parva - Section 185c | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சம்வர்த்தக நெருப்பால் அழிக்கப்பட்ட பூமியில், மேகக்கூட்டங்கள் திரண்டு பெய்யா பெருமழையைப் பொழிதல்; அனைத்து உயிரினங்களும் அழிதல்; உயிர்களற்ற நீர் திரண்ட பூமியில் மார்க்கண்டேயர் மட்டும் அலந்து திரிந்து கடைசியாக ஒரு சிறுவனைக் கண்டடைதல்; அச்சிறுவன் மார்க்கண்டேயரை விழுங்குதல்...

{மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொல்லுதல்}:
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான்கு யுகங்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான வருடங்களின் முடிவில் மனிதர்களின் வாழ்வு மிகக் குறுகியதாகிவிடுகிறது. பஞ்சம் ஒன்று பல வருடங்களுக்கு நீடிக்கும். பிறகு, ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, மனிதர்களும், குறைந்த பலமும் உற்சாகமும் கொண்ட உயிரினங்களும் ஆயிரக்கணக்கில் பட்டினியாகக் கிடந்து சாகும். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஆகாயத்தில் சுடர்விட்டெரியும் ஏழு சூரியன்கள் தோன்றி, பூமியில் உள்ள ஆறுகள் மற்றும் கடல்களில் உள்ள நீரனைத்தையும் குடித்துவிடும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இயற்கையில் உள்ள வனங்களும், ஈரமாகவோ உலர்ந்தோ இருக்கும் புற்களும், அவற்றால் {சூரியன்களால்} உட்கொள்ளப்பட்டுச் சாம்பலாகும். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஏழு சூரியன்களின் தழல்கள் மூலம் காய்ந்திருக்கும் பூமியில் காற்றின் உந்துதலால் சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு தோன்றும். அந்த நெருப்பானது பூமிக்குள் ஊடுருவி, பாதாள லோகங்களிலும் தனது தோற்றத்தை உண்டாக்கி, தேவர்கள், தானவர்கள் மற்றும் யக்ஷர்கள் இதயங்களில் பெரும் பயங்கரத்தை உருவாக்கும்.


ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பாதாள லோகங்களையும், பூமி மீது இருக்கும் அத்தனையையும் அழித்து உட்கொள்ளும் அந்த நெருப்பு {சம்வர்த்தகம்}, ஒரு நொடிப்பொழுதில் அனைத்து பொருட்களையும் அழித்துவிடும். சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும்.  அமங்கலமான காற்றின் உதவிக் கொண்டிருக்கும் அந்த நெருப்பானது, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யோஜனைகளுக்குப் பரந்திருக்கும் உலகத்தை உட்கொள்ளும். அனைத்து பொருட்களுக்கும் தலைவனான அந்த நெருப்பு {சம்வர்த்தகம்}, பிரகாசமாகச் சுடர்விட்டு எரிந்து, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பாம்புகள், ராட்சசர்கள் அடங்கிய இந்த அண்டத்தையே உட்கொள்ளும். 

யானைக்கூட்டங்களைப் போன்ற பெரும் மேகக் கூட்டங்கள் வானத்தில் எழுந்து, காண்பதற்கினிய மின்னல் வரிசையுடன் தோன்றும். அப்படி வரும் மேகங்களில் சில மேகங்கள் நீலத் தாமரை போன்ற நிறத்திலும்; சில நீர் குவளை {மலர்} நிறத்திலும்; சில தாமரையின் இதழ்களின் நிறத்திலும்; மேலும் சில ஊதா நிலத்திலும், சில பூசுமஞ்சளைப் போன்ற மஞ்சள் நிறத்திலும், சில காக்கை முட்டை போன்ற நிறத்திலும் இருக்கும். சில தாமரை இதழ்களைப் போன்று பிரகாசமாகவும், சில குங்குமம் போன்ற சிவந்த நிறத்திலும் இருந்தன. சில {மேகங்கள்} அரண்மனைகள் கொண்ட நகரங்களின் வடிவத்திலும், சில யானைக்கூட்டங்கள் போலவும், சில பல்லிகளைப் போலவும், சில முதலை மற்றும் சுறாக்களைப் போன்ற வடிவங்களிலும் இருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பார்ப்பதற்குப் பயங்கரமான நேரங்களில் வானத்தில் மின்னல்களுடன் கூடும் மேகங்கள் பயங்கரமாகக் கர்ஜனை செய்யும். மழை நிறைந்த அந்த {நீர்} ஆவிக் குவியல், உடனே அந்த முழு வானத்தையும் மூடும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த ஆவிக் குவியல் {மேகக்கூட்டங்கள்}, மலைகள், கானகங்கள், சுரங்கங்கள் நிறைந்த இந்தப் பூமி முழுவதும் பெருவெள்ளத்தைப் பொழியும்.

ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, மேலான தலைவனால் {பிரம்மனால்} உந்தப்பட்ட அம்மேகங்கள் பயங்கரமாகக் கர்ஜனை செய்தவாறு, பூமியின் முழுப் பரப்பின் மேலும் பெருவெள்ளதைப் பொழியும். அபரிமிதமான நீரைப் பொழிந்து முழு உலகத்தையும் நிரப்பியவாறு, அந்தப் பயங்கரமான அமங்கலமான (நாம் ஏற்கனவே பேசிய {சம்வர்த்தகம் என்ற}) நெருப்பை அணைக்கும். சிறப்புமிக்க அந்தத் தலைவனால் {பிரம்மனால்} உந்தப்பட்ட அம்மேகங்கள் பூமியை நிறைத்து பனிரெண்டு வருடங்களுக்குத் தொடர்ச்சியாக மழையைப் பொழியும். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கடல் தனது வரம்புகளை மீறும், மலைகள் துண்டுகளாக உடையும், அதிகரிக்கும் பெருவெள்ளத்தில் இந்தப் பூமி மூழ்கும். பிறகு, காற்றின் உந்துதலால் ஆகாயத்தின் முழு விரிவிலும் உலவும் அம்மேகங்கள், காட்சியில் இருந்து திடீரென்று மறைந்து போகும். பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையை வசிப்பிடமாகக் கொண்ட அனைத்துக்கும் முதற்காரணமான பிறப்பற்ற தலைவன் {பிரம்மன்}, ஓ! பாரதா {யுதிஷ்டிரா} அந்தப் பயங்கரமான காற்றைக் குடித்து, உறங்கச் செல்வான்.

இப்படி {இதே போல ஒரு முறை} அண்டம் நெடுகிலும் ஒரே நீராகி, அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தும் அழிந்து, தேவர்களும், அசுரர்களும் நாசமடைந்து, யக்ஷர்களும், ராட்சசர்களும் இல்லாமலாகி, மனிதர்களற்று, மரங்களும், ஊனுண்ணும் விலங்குகளும் மறைந்து, ஆகாயமும் இல்லாமல் போன போது, நான் மட்டும், ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, துயரத்துடன் அலைந்து கொண்டிருந்தேன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தப் பயங்கரமான நீர்பரப்பின் மீது நான் அலைந்து கொண்டிருந்த போது, ஒரு உயிரினத்தையும் நான் காணாததால், எனது இதயம் துயரத்தில் இருந்தது! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிற்காமல் அந்தப் பெருவெள்ளத்தில் திரிந்து கொண்டிருந்த நான் சோர்வடைந்துவிட்டாலும், {எனக்கு} ஓய்வெடுக்க ஒரு இடமும் கிடைக்கவில்லை!

ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, சில காலத்திற்குப் பிறகு அந்த நீர்திரண்ட பெருவெளியில் ஒரு பரந்து விரிந்த ஆலமரத்தைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஆலமரத்தின் நீண்ட கிளை ஒன்றில் இணைக்கப்பட்ட தெய்வீகப் படுக்கையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையைப் போன்றோ சந்திரனைப் போன்றோ அழகான முகமும், முழுதும் மலர்ந்த தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டு, சங்கின் {சங்கு} மீது அமர்ந்திருந்த ஒரு சிறுவனைக் கண்டேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இக்காட்சியைக் கண்ட எனது இதயம் ஆச்சரியத்தால் நிரம்பியது. நான் எனக்குள், "உலகமே அழிக்கப்பட்ட பிறகும், எப்படி இச்சிறுவன் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான்?" என்று கேட்டுக் கொண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் குறித்த முழு ஞானங்களையும் கொண்ட என்னால் கூட, தவத்தின் மூலம் அவன் யார் என்பதை அறியமுடியவில்லை.

காயாம்பூவின் {Atasi Flower = அலி மலர்} பிரகாசமும், ஸ்ரீவத்சக் குறியும் {மரு அல்லது மச்சமும்} கொண்ட அவன் {அச்சிறுவன்}, லட்சுமியின் வசிப்பிடத்தில் இருப்பதாகவே எனக்குப் பட்டது. தாமரை இதழ்களைப் போன்ற கண்களும், ஸ்ரீவத்ச மருவும், சுடர்விடும் பிரகாசமும் கொண்ட அச்சிறுவன் கேட்பதற்கினிய உயர்ந்த வார்த்தைகளுடன் என்னிடம், "ஓ ஐயா {மார்க்கண்டேயரே}, களைத்துப் போய் ஓய்வெடுக்க விரும்புகிறீர் என்பதை நான் அறிவேன். ஓ! பிருகு குலத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயரே, நீர் விரும்பும் வரை இங்கு ஓய்ந்திருக்கலாம். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது உடலுக்குள் சென்று, அங்கே ஓய்வெடும். அதுவே நான் உமக்கு நிர்ணயித்திருக்கும் வசிப்பிடமாகும். நான் உம்மிடம் திருப்தி கொண்டுள்ளேன்" என்றான்.

அச்சிறுவனால் இப்படிச் சொல்லப்பட்ட எனக்கு, நீண்ட வாழ்விலும், மனிதனின் நிலையிலும் பெரும் வெறுப்பு உண்டாயிற்று. பிறகு அச்சிறுவன் திடீரெனத் தனது வாயைத் திறந்தான். அசையும் திறனற்றுப்போன நான், விதியின் பயனாக அவனது வாய்க்குள் நுழைந்தேன். ஆனால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, திடீரென அந்தச் சிறுவனின் வயிற்றுக்குள் நுழைந்த நான், அங்கே நகரங்களுடனும், நாடுகளுடனும் கூடிய முழு உலகத்தையும் கண்டேன்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்