Wednesday, June 25, 2014

அளவிலா சக்தி மிக்கவன்! - வனபர்வம் பகுதி 187ஈ

A being of immeasurable energy! | Vana Parva - Section 185d | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சிறுவனின் வயிற்றுக்குள் மார்க்கண்டேயர் அண்டசராசரங்களையும் காணுதல்; ஆறுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மிருகங்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைத்தையும் காணுதல்; வயிறு முழுமையும் திரிந்தும், அதன் எல்லையை அடையமுடியாத மார்க்கண்டேயர் அச்சிறுவனை ஒப்பற்ற தெய்வம் என்ற தீர்மானத்திற்கு வந்து அவனைச் சரணடைதல்; சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து மார்க்கண்டேயர் வெளியேறுதல்

{மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொல்லுதல்}: ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்த ஒப்பற்றவனின் வயிற்றுக்குள் திரிந்து கொண்டிருந்த போது, நான் கங்கை, சதத்ரு, சீதை, யமுனை, கௌசிகி, சர்மண்வதி, வேதரவதி, சந்திரபங்கை, சரஸ்வதி, சிந்து, விபாசை, கோதாவரி, வஸ்வோகாசரை, நளினி, நர்மதை, தமரா, காண்பதற்கினிய ஓட்டமும் புனிதமான நீரும் கொண்ட வேணை, சுவேணை, கிருஷ்ணவேணை, இராமை, மஹாநதி, விதஸ்தை ஆகிய நதிகளையும், ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் நதியான காவேரியையும், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, விசால்யை, கிம்புருனை ஆகிய நதிகளையும் அவனுள் கண்டேன். இந்த அனைத்து நதிகளையும், பூமியின் இன்னபிற நதிகளையும் நான் அங்குக் கண்டேன்.


ஓ! பகைவர்களை அழிப்பவனே {யுதிஷ்டிரா}, முதலைகளும், சுறாக்களும் நிறைந்து, ரத்தினங்களின் சுரங்கமாகவும், நீரின் அற்புத கொள்ளிடமாகவும் இருக்கும் பெருங்கடலை நான் அங்குக் கண்டேன். சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியன் மற்றும் சந்திரனோடு கூடிய ஆகாயம், சூரியனின் நெருப்பு போன்ற காந்தியுடன் அங்கு இருப்பதை நான் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கானகங்கள் மற்றும் தோப்புகளுடன் கூடிய பூமியையும் நான் அங்குக் கண்டேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட வேள்விகளில் ஈடுபட்டிருக்கும் பல அந்தணர்களையும், அனைத்து வகை மக்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபட்டிருக்கும் க்ஷத்திரியர்களையும், விவசாயம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் வைசியர்களையும், மறுபிறப்பாள வகையினர் அனைவருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் சூத்திரர்களையும் நான் அங்குக் கண்டேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் உலவிக்கொண்டிருந்த போது, நான் இமயத்தையும், ஹேமகூட மலைகளையும் கண்டேன். மேலும் நிஷதம் மற்றும் வெள்ளி நிறைந்த ஸ்வேத மலைகள் ஆகியவற்றையும் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே கந்தமாதன மலையையும் கண்டேன். மேலும், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உயர்ந்த மலைகளான நீல மலைகளையும் நான் அங்குக் கண்டேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே மேருவின் தங்க மலைகளையும், மகேந்திரத்தையும், அற்புதமான மலைகளான விந்திய மலைகளையும் கண்டேன். மேலும், மலையம், பரிபாத்ரம் ஆகிய மலைகளையும் நான் அங்கே கண்டேன். இவையும், பூமியின் இன்ன பிற மலைகளும் அவனது வயிற்றுக்குள் என்னால் காணப்பட்டன. இவை அனைத்தும் ரத்தினங்களுடனும் தங்கங்களுடனும் இருந்தன.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அவனது வயிற்றில் உலவிய போது, சிங்கங்கள், புலிகள், பன்றிகள் ஆகியவற்றையும், உண்மையில், பூமியில் உள்ள பிற விலங்குகளையும் கண்டேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! மனிதர்களில் புலியே, அவனது வயிற்றில் நுழைந்த நான், சுற்றித்திரிந்து, சக்ரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் குலம், சத்யஸ்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், குஹ்யர்கள், பித்ருக்கள், பாம்புகள், நாகங்கள், இறகு படைத்த குலங்கள், வசுக்கள், அசுவினிகள், கந்தர்வர்கள், அசுவினிகள், யக்ஷர்கள், முனிவர்கள், தைத்திய-தானவ-நாகக் கூட்டங்கள் ஆகியவர்களைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிங்கிகையின் மகன்களையும், தேவர்களின் அனைத்து எதிரிகளையும், உண்மையில் பூமியில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் என்னால் காணப்பட்டன.

ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, பழங்களை உண்டு, அவனது உடலில் பல நூற்றாண்டுகள் வசித்துக் கொண்டே அங்கிருந்த முழு அண்டத்தையும் சுற்றித் திரிந்தேன். இருப்பினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என்னால் அவனது உடலின் எல்லைகளைக் காண இயலவில்லை. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனது உடலின் எல்லைகளைக் காண்பதில் நான் தோல்வியுற்றபோதும், மனதில் பெரும் துன்பத்துடன் நான் தொடர்ந்து சுற்றித் திரிந்தேன். பிறகு, சிந்தனையாலும் செயலாலும் நான் அந்த வரம் தரும் ஒப்புயர்வற்ற தெய்வத்திடம், அவனது மேன்மையை ஏற்றுச் சரண்டைந்தேன். நான் அப்படிச் செய்ததும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, திறந்திருந்த அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வாய் வழியாகக் காற்றின் பலத்தால் திடீரென நான், (அவனது உடலுக்குள் இருந்து) வெளியேற்றப்பட்டேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு நான், முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு சிறுவனின் உருவில், (மார்பில்) ஸ்ரீவத்ச மருவுடன் இருந்த அந்த அளவிடமுடியாத சக்தி கொண்டவன், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதே ஆலமரக் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். மஞ்சள் ஆடையுடனும் {பீதாம்பரத்துடனும்}, சுடர் மிகும் பிரகாசத்துடனும், ஸ்ரீவத்ச மருவுடனும் கூடிய அந்தச் சிறுவன், என்னில் திருப்தி அடைந்து, புன்னகைத்தவாறே, "ஓ! மார்க்கண்டேயரே, ஓ! முனிவர்களில் சிறந்தவரே, எனது உடலில் சிறிது காலம் வசித்து மிகவும் களைத்திருக்கிறீர்! இருப்பினும் நான் உம்மிடம் பேசுவேன்" என்றான். என்னிடம் அவன் இப்படிச் சொன்னதும், எனக்குப் பேசுமளவுக்குப் புதிய பார்வை கிடைத்தது. அதைக் கொண்டு உலக மாயையில் இருந்து விடுபட்டு உண்மையான அறிவைப் பெற்றேன். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த அளவிட முடியாத சக்தி கொண்டவனின் வற்றாத பலத்தைச் சாட்சியாகக் கண்ட நான், அவனை வணங்கி, தாமிரம் போன்று பிரகாசமாகவும், கட்டுக்கோப்பாகவும், லேசான சிவப்பு நிறத்தில் விரல்களையும் கொண்டிருந்த அவனது உள்ளங்கால்களைக் கவனமாக எடுத்து எனது தலையில் வைத்து, அடக்கத்துடன் என் கரங்களைக் குவித்து, அவனை மரியாதையுடன் அணுகினேன். தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய, அனைத்திற்கும் ஆன்மாவான அந்தத் தெய்வீகமானவனை நான் மீண்டும் கண்டேன்.

குவிந்த கரங்களுடன் அவன் முன் வணங்கிய நான், அவனிடம், "ஓ! தெய்வீகமானவனே, நான் உன்னையும், உனது உயர்ந்த அற்புதமான மாயையும் அறிய விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கவனே, நான் உனது வாய்வழியாக உனது உடலுக்குள் நுழைந்ததும், முழு அண்டத்தையும் உனது வயிற்றில் கண்டேன். ஓ தெய்வீகமானவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என உண்மையில் முழு அண்டத்திலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தையும் உனது உடலில் கண்டேன். உனது அருளால், நிற்காமல் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் நான் உனது உடலில் திரிந்தாலும், எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ! பெரும் தலைவா, நான் உனது விருப்பத்தாலேயே உனது உடலைவிட்டு வெளியே வந்தேன். எனது விருப்பத்தாலல்ல. ஓ! தாமரை இதழ் கண்கள் கொண்டவனே, குறைகளற்ற உன்னை நான் அறிய விரும்புகிறேன்! முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு, நீ ஏன் இங்குச் சிறுவனின் உருவத்தில் இருக்கிறாய்? இவை அனைத்தையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உனக்குத் தகும். ஓ! பாவமற்றவனே, முழு அண்ட மும் ஏன் உனது வயிற்றில் இருக்கிறது? ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, எவ்வளவு காலம் நீ இங்கிருப்பாய்? அந்தணர்களுக்குத் தகுந்த ஆவலால் உந்தப்பட்டே, ஓ அனைத்து தேவர்களுக்கும் தலைவா, இவை அனைத்தையும் உன்னிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே அனைத்தையும் சரியாக அது நிகழ்ந்தவாறே, அனைத்து விவரங்களுடனும் சொல்வீராக. ஓ! தலைவா, புத்திக்கு எட்டாத அற்புதமான அவற்றை நானும் கண்டிருக்கிறேன்" என்றேன். இப்படி என்னால் சொல்லப்பட்டதும், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான, அனைத்துப் பேச்சாளர்களில் முதன்மையான அவன், சுடரும் பிராகசத்துடனும், பெரும் அழகுடனும், எனக்குச் சரியாக ஆறுதல் அளிக்கும் வகையில் என்னிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்