Friday, October 10, 2014

சோம்பலைத் தள்ளிவைத்த குந்தி! - வனபர்வம் பகுதி 302

Kunti cast aside her idleness!  | Vana Parva - Section 302 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

குந்திபோஜனுக்கு உறுதி அளித்த குந்தி, ; குந்திபோஜன் சில முறைமைகளைக் குந்திக்குச் சொன்னது; அந்தணரிடம் தனது மகளை அறிமுகப்படுத்திய குந்திபோஜன், அவள் ஏதாவது பிழை செய்தால் பொறுத்தருளுமாறு அந்த அந்தணரிடம் குந்திபோஜன் வேண்டியது; குந்தி அந்த அந்தணரைப் பொறுப்புடன் பார்த்துக் கொண்டது...

குந்தி {வளர்ப்புத் தந்தையான குந்திபோஜனிடம்}, "ஓ! மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது! ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குச்} சேவை செய்யும் நன்மையைச் செய்வதும், உமது கட்டளைகளை நிறைவேற்றுவதுமே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, என்னை நீர் நம்பலாம்!


அந்த அந்தணர்களில் சிறந்தவர் {துர்வாசர்} உமது இல்லத்தில் வசிக்கும்போது, அதிருப்திக்கான எந்த நிலையையும் அடைய மாட்டார். நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மன்னா {குந்திபோஜரே}, நான் மிகுந்த கவனத்தோடு, அந்த அந்தணருக்கு ஏற்புடையதையும், உமக்கு நன்மை நிறைந்ததையுமே செய்வேன். ஓ! பாவமற்றவரே, பேரறம்சார்ந்த அந்தணர்கள் மனநிறைவடைந்தால் முக்தியையும், வருந்தினால் அக்குற்றவாளிக்கு அழிவையும் தரவல்லவர்கள் என்பதை நான் முழுமையாக அறிவேன். எனவே, நான் அந்த அந்தணர்களில் முதன்மையானவரை மனம் நிறையச் {திருப்தி கொள்ளச்} செய்வேன். ஓ! ஏகாதிபதி {குந்திபோஜரே}, அந்த மறுபிறப்பாள மனிதர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரை {துர்வாசரைக்} குறித்து நீர் கவலைக் கொள்ளத்தேவையில்லை. ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, முற்காலத்தில் சுகன்யாவின் செயல் காரணமாகச் சியவனர் தீங்கிழைத்தது போல, ஏகாதிபதிகளின் வரம்புமீறல்களின் விளைவாக அந்தணர்கள் அவர்களுக்குத் தீமையை விளைவிக்கின்றனர். எனவே, ஓ! மன்னா {குந்திபோஜரே}, நான் பெரும் ஒழுங்குமுறையுடன் {சரியான இடைவெளிகளில்}, அந்த அந்தணர்களில் சிறந்தவருக்காக {துர்வாசருக்காகக்} காத்திருந்து, உமது கட்டளைகளின் படி நடந்து கொள்வேன்!” என்றாள் {குந்தி}.

அவள் {குந்தி} இப்படி நீளமாகப் பேசியதும், அவளை அணைத்துக் கொண்ட மன்னன் {குந்திபோஜன்}, அவளுக்கு உற்சாகமூட்டி, அவளால் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அவளுக்கு விளக்கமாகத் தெரிவித்தான். பிறகு அந்த மன்னன் {குந்திபோஜன் குந்தியிடம்}, “ஓ மென்மையான பெண்ணே {குந்தியே}, உனது நன்மைக்காகவும், எனது நன்மைக்காகவும், உனது குலத்தின் நன்மைக்காகவும், ஓ! குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, அச்சமில்லாமல் செயல்படு!” என்றான். அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த சிறப்புமிக்கக் குந்திபோஜன், பிறகு, பிருதையை {குந்தியை} அந்த அந்தணரிடம் {துர்வாசரிடம்} அழைத்துச் சென்று, “ஓ! அந்தணரே {துர்வாச முனிவரே}, இது எனது மகள். இளவயது கொண்ட இவள், ஆடம்பரமாக {சுகபோகமாக} வளர்க்கப்பட்டவளாவாள். எனவே, இவள் எப்போதாவது வரம்புமீறி நடந்து கொண்டால், அதை உமது இதயத்தில் கொள்ளாதீர்! முதிர்ந்த மனிதர்கள், சிறுவர்கள், துறவிகள் ஆகியோர் அடிக்கடி வரம்பு மீறினாலும் சிறப்புமிக்க அந்தணர்கள் கோபம் கொள்வதில்லை. அவர்கள் பெரும் குற்றம் இழைத்தாலும் மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} பொறுமைகாப்பார்கள். எனவே, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, தனது சக்திக்கும் முயற்சிக்கும் இயன்ற அளவு ஒருவனால் செய்யப்படும் வழிபாடு ஏற்கப்பட வேண்டும்!” என்றான் {குந்திபோஜன்}.

ஏகாதிபதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {துர்வாசர்}, “அப்படியே ஆகட்டும்!” என்றார். அதன்பிறகு அந்த மன்னன் {குந்திபோஜன்} மிகுந்த மன நிறைவு கொண்டு அன்னங்களைப் போலவும், சந்திரனின் கதிர்களைப் போலவும் வெண்மையாக இருக்கும் ஒரு மாளிகையை அவருக்குக் கொடுத்தான். வேள்வி நெருப்புக்கான அறையில், குறிப்பாக அவருக்கெனவே ஓர் இருக்கையை மன்னன் {குந்திபோஜன்} வைத்தான். அந்த அந்தணருக்கு அளிக்கப்பட்ட உணவு மற்றும் பிற பொருட்கள் சிறந்த வகையில் இருந்தன. சோம்பலையும், சுயமுக்கியத்துவ உணர்வுகளையும் தள்ளி வைத்த அந்த இளவரசி {பிருதை}, நல்ல உள்ளத்துடன் அந்த அந்தணரை {துர்வாச முனிவரை} தனக்குள் ஆராதித்து, அவருக்காகக் காத்திருக்கத் தீர்மானித்தாள். சுத்தமான நடத்தை கொண்ட கற்புடைய குந்தி, அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குச்} சேவை செய்வதற்காக அங்கே சென்றாள். தெய்வத்துக்காகக் காத்திருப்பது போலவே, அந்த அந்தணருக்காகக் காத்திருந்து, அவரைப் பெரிதும் மனம் நிறையச் செய்தாள் {குந்தி}.”



இங்கே குறிப்பிடப்படும் அந்தணர், கங்குலியின் புத்தகத்தில் துர்வாசர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பல பதிப்புகளில் இந்த அந்தணர் துர்வாசர் என்றே குறிப்பிடப்படுகிறார். தேவிபாகவதத்தில் இந்த அந்தணர் துர்வாசரே என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்