Friday, October 10, 2014

வரம் மறுத்த குந்தி! - வனபர்வம் பகுதி 303

Kunti denied boon!  | Vana Parva - Section 303 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

குந்தி செய்த பணிவிடையால் மகிழ்ந்த அந்தணர் அவளுக்கு வரம் கொடுக்க முன் வந்தது; வரத்தை மறுத்த குந்தி; அவள் வரத்தை ஏற்கவில்லையென்றாலும், மந்திரம் உபதேசித்த அந்தணர்; அந்தணர் அரசனிடம் விடைபெற்றது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடும் நோன்புகள் கொண்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, “நான் காலையில் திரும்பி வருவேன்" என்ற சொல்லும் அந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், சில நேரங்களில் மாலையிலோ இரவிலோதான் திரும்புவார்; எனினும், அந்தக் கன்னிகை {குந்தி}, அனைத்து நேரங்களிலும் அருமையான உணவு, பானம் மற்றும் படுக்கை ஆகியவற்றைக் கொடுத்து அவரை {அந்த அந்தணரை; துர்வாசரை} வழிபட்டாள். நாளுக்கு நாள் அவரது உணவு, இருக்கை மற்றும் படுக்கை ஆகியவற்றில் அவளது {குந்தியின்} கவனம் தேய்ந்துபோவதற்குப் பதிலாக வளர்ந்து வந்தது.


ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளது {குந்தியின்} ஏற்பாடுகளில் ஏதாவது குறை கண்டு அந்த அந்தணர் {துர்வாசர்} அவளைக் கடிந்து கொண்டாலோ, கடும்வார்த்தைகள் பேசினாலோ கூட, பிருதை {குந்தி}, அவருக்கு ஏற்பில்லாத எதையும் செய்தாளில்லை. பல சந்தர்ப்பங்களில் அந்த அந்தணர் குறித்த நேரத்திற்கு நெடுநேரத்திற்குப் பின்னரே வந்தார். பல சந்தர்ப்பங்களின் உணவைக் கொடுக்கக் கடினமான நேரங்களில் (நள்ளிரவு நேரம் போன்ற நேரங்களில்) அவர் {துர்வாசர்}, “எனக்கு உணவு கொடு!” என்று கேட்பார். ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம், “அனைத்தும் தயாராக இருக்கின்றன" என்று சொல்லும் பிருதை {குந்தி} அவர் கேட்டதை அவருக்கு முன் ஏந்துவாள். ஒரு சீடரையோ {சிஷ்யை}, மகளையோ, தங்கையையோ போலப் பெண்களில் ரத்தினமான அந்தப் பழியற்ற பெண் அர்ப்பணிப்பான இதயத்துடன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அந்தணர்களின் முதன்மையானவரை {துர்வாசரை} மனநிறைவு கொள்ளச் செய்தாள்.

அந்தணர்களில் சிறந்த அவர் {துர்வாசர்}, அவளின் {குந்தியின்} நடத்தையில் கவனிப்பிலும் மனம் மகிழ்ந்தார். சரியான மதிப்புடன் கூடிய அவளது கவனிப்புகளை அவர் {துர்வாசர்} பெற்றார். ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் அவளின் {குந்தியின்} தந்தை {குந்திபோஜன்} அவளிடம், “ஓ! மகளே {குந்தி}, உனது கவனிப்பால் அந்தணர் {துர்வாசர்} மனநிறைவு அடைகிறாரா?” என்று கேட்பான். அதற்கு அந்தச் சிறப்புமிக்கக் கன்னிகை {குந்தி}, “மிக நன்றாக!” என்று மறுமொழி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அதன்பேரில், உயர் ஆன்ம குந்திபோஜன் உயர்ந்த மகிழ்ச்சியை உணர்ந்தான். ஒரு முழு வருடம் கடந்ததும், அந்தத் துறவிகளில் சிறந்தவரால் {துர்வாசரால்}, தன்னைக் கவனித்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்த பிருதையிடம்  {குந்தியிடம்} எந்தத் குற்றத்தையும் காண முடியாமல் அவளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு, “ஓ! மென்மையான கன்னிகையே {குந்தியே}, உனது கவனிப்புகளால், ஓ! அழகான பெண்ணே {குந்தியே}, நான் மிகவும் மகிழ்ந்தேன். ஓ! அருளப்பட்ட பெண்ணே {குந்தி}, இவ்வுலகத்தில் மனிதர்களால் அடைய முடியாத அரிதான வரங்களைக் கேள். அதை அடைவதால், நீ இவ்வுலகில் உள்ள பெண்கள் அனைவரின் புகழையும் விஞ்சி நிற்பாய்!” என்றார் {துர்வாசர்}.

இந்த வார்த்தைகளுக்குக் குந்தி {துர்வாசரிடம்}, “வேதங்களை அறிந்தவர்களின் தலைவரான நீரும், எனது தந்தையும், என்னிடம் மனநிறைவுடன் இருப்பதால், என் சார்பாக அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. வரங்களைப் பொறுத்தமட்டில், ஓ! அந்தணரே, அவை அனைத்தும் என்னால் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டன!” என்றாள். அதற்கு அந்த அந்தணர் {துர்வாசர் குந்தியிடம்}, “ஓ! மென்மையான கன்னிகையே, ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, நீ என்னிடம் இருந்து வரங்களை அடைய விரும்பவில்லையென்றால், தேவர்களை அழைக்கும் மந்திரத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக! தேவர்களுக்கு மத்தியில் உள்ள எவரை நீ இந்த மந்திரத்தை உச்சரித்து அழைத்தாலும், அவன் உன் முன் வந்து, ஆளுகைக்குள் இருப்பான். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த மந்திரத்தின் தகுதியினால் மென்மையான வடிவத்தில் வரும் அத்தேவன் அடிமையின் பணிவான அணுகுமுறை அனுமானித்து, உனது அதிகாரத்துக்கு உட்பட்டு இருப்பான்!” என்றார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, இருபிறப்பாளர்களில் சிறந்தவரின் {அந்த அந்தணரின்} சாபத்திற்கஞ்சி, அவரது விருப்பங்களை இரண்டாவது முறையாக மறுக்க முடியவில்லை. பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அந்தணர் குற்றமற்ற அங்கங்கள் கொண்ட அந்தப் பெண்ணுக்கு {குந்திக்கு} அதர்வண வேதத்தின் தொடக்கத்தில் உள்ள அந்த மந்திரங்களை உரைத்தார். அந்த மந்திரங்களை அவளுக்குச் சொன்ன பிறகு, அவர் {துர்வாசர்} குந்திபோஜனிடம், “ஓ! ஏகாதிபதி {குந்திபோஜா}, எப்போதும் உரிய முறையில் வழிபடப்பட்டு, உனது மகளிடம் {குந்தியிடம்} மனநிறைவு கொண்டு உனது இல்லத்தில் இருந்த நான், இப்போது செல்கிறேன்" இதைச் சொன்ன அவர் அங்கேயே மறைந்து போனார். அந்த அந்தணர் {துர்வாசர்} அங்கே மறைந்து போனதைக் கண்ட மன்னன் {குந்திபோஜன்} ஆச்சரியத்தால் தாக்கப்பட்டான். மேலும், பிறகு, அந்த ஏகாதிபதி {குந்திபோஜன்}, தனது மகளை {குந்தியை} சரியான மதிப்புடன் நடத்தினான்" .



இங்கே குறிப்பிடப்படும் அந்தணர், கங்குலியின் புத்தகத்தில் துர்வாசர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பல பதிப்புகளில் இந்த அந்தணர் துர்வாசர் என்றே குறிப்பிடப்படுகிறார். தேவிபாகவதத்தில் இந்த அந்தணர் துர்வாசரே என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்