Friday, October 10, 2014

குந்தியிடம் பேசிய சூரியன்! - வனபர்வம் பகுதி 304

Lord Surya spoke to Kunti!  | Vana Parva - Section 304 | Mahabharata In Tamil

(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)

மந்திரங்களின் சக்தியைச் சோதிக்கக் குந்தி எண்ணுவது; அதே நேரத்தில் அவளுக்குப் பருவமும் வந்தது; கிழக்கில் உதிக்கும் சூரியனைக் கண்டு மந்திரங்களால் குந்தி அவனை அழைத்தது; சூரியன் வந்தது; குந்தி அவனைத் திரும்பி செல்லும்படி சொன்னது; சூரியன் குந்தியை மிரட்டியது; குந்தி தனது நிலையை விளக்குவது; சூரியன் தனது நிலையை விளக்குவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த அந்தணர்களில் முதன்மையானவர் {துர்வாசர்}, வேறு வேலையாகச் சென்றுவிட்ட பிறகு, அந்தக் கன்னிகை {குந்தி}, அந்த மந்திரங்களின் திறனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள்  தனக்குள்ளேயே, "அந்த உயர் ஆன்மா கொண்டவரால் {மகாத்மாவால்} எனக்கு அளிக்கப்பட்ட அந்த மந்திரங்களின் இயல்பு எப்படிப்பட்டது? தாமதிக்காமல் நான் அதன் சக்தியைச் சோதிப்பேன்" என்று நினைத்தாள். அப்படி அவள் {குந்தி} சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, திடீரெனப் பருவகாலத்தின் {ருது} அறிகுறிகள் தனக்குத் தென்படுவதை உணர்ந்தாள். திருமணமாகாத போதே, தனக்குப் பருவகாலம் வந்ததால், அவள் {குந்தி} வெட்கமும் நாணமுமடைந்தாள். தனது அறையில் ஓர் ஆடம்பரப் படுக்கையில் அமர்ந்திருந்த அவள் {குந்தி}, கிழக்கில் சூரியக் கோளம் உதிப்பதைக் காண நேர்ந்தது. சிறந்த இடை கொண்ட அந்தக் கன்னிகையின் {குந்தியின்} கண்கள் மற்றும் மனம் ஆகிய இரண்டும் அந்தச் சூரிய கோளத்தின் மேல் நிலைத்து நின்றது. காலைச் சூரியனின் அழகைக் கண்டு, தெவிட்டாமல் மீண்டும் மீண்டும் அந்தக் கோளத்தை அவள் கூர்ந்து நோக்கியபடியே இருந்தாள். திடீரென அவளுக்கு {குந்திக்கு} தெய்வீகப் பார்வை கொடையாகக் கிடைத்தது.


பிறகு அவள் {குந்தி}, கவசத்துடனும், காது குண்டலங்களுடனும் இருந்த அந்தத் தெய்வீகமான தேவனைக் {சூரியனைக்} கண்டாள். ஓ மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, அந்தத் தேவனைக் {சூரியனைக்} கண்ட அவள் மந்திரங்களைக் {மந்திரங்களின் திறனைக்} குறித்து ஆவல் கொள்ளத் தொடங்கினாள். அதன்பிறகு அந்தக் கன்னிகை {குந்தி}, அவனை {சூரியனை} அழைக்கத் {மந்திரங்களால் அழைக்கத்} தீர்மானித்தாள். மேலும், பிராணாயாமத்தின் உதவியைக் கொண்டு, அவள் {குந்தி} நாள்-படைப்போனை {சூரியனை} {மந்திரங்களால்} அழைத்தாள் {invoked}. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி அவளால் அழைக்கப்பட்ட நாள்படைப்போன் {சூரியன்}, விரைவில் {அவளுக்குத்} தன்னை வெளிப்படுத்தினான். தேன் போன்ற மஞ்சள் நிறமும், வலிய கரங்களும், சங்கின் கோடுகளைப் போன்று கழுத்தில் கோடுகளும் அவனுக்கு {சூரியனுக்கு} இருந்தன. மேலும் தோள்வளைகளும், கிரீடமும் அணிந்திருந்த அவன், சிரித்தபடியே அனைத்து திசைகளையும் ஒளியூட்டிக் கொண்டு வந்தான். யோக சக்தியின் மூலமாகத் தன்னை இருகூறாகப் பிரித்து, அதில் ஒன்றைக் கொண்டு தொடர்ந்து வெப்பத்தை அளித்தான். மற்றொன்றைக் கொண்டு குந்தியின் முன்பு தோன்றினான்.

அவன் {சூரியன்} குந்தியிடம் மிகுந்த இனிமையான வார்த்தைகளில், "ஓ! மென்மையான கன்னிகையே {குந்தி}, மந்திரங்களுக்குக் கட்டுப்பட்ட நான், உனக்குக் கீழ்ப்படிந்து வந்திருக்கிறேன். ஓ! ராணி {குந்தி}, உனது ஆளுகைக்கு ஆட்பட்டிருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? நீ என்ன கட்டளையிட்டாலும் நான் அதைச் செய்வேன். எனக்குச் சொல்?" என்று கேட்டான். அந்தத் தெய்வத்தின் {சூரியனின்} வார்த்தைகளைக் கேட்ட குந்தி {சூரியனிடம்}, "ஓ! வழிபாட்டுக்குரியவரே {சூரியனே}, நீர் எங்கிருந்து வந்தீரோ அங்கேயே செல்லும்! ஆவலின் காரணமாக மட்டுமே நான் உம்மை {மந்திரங்களால்} அழைத்தேன். ஓ! வழிபாட்டுக்குரியவரே {சூரியனே}, என்னை மன்னியும்" என்றாள். பிறகு சூரியன், "மெலிந்த இடைகொண்ட காரிகையே {குந்தி}, நீ சொன்னது போலவே நான் வந்த இடத்திற்கே திரும்பி செல்வேன்! எனினும், ஒரு தேவனை அழைத்து, அவனை வீணாக அனுப்புவது சரியாகாது! ஓ! அருளப்பட்டவளே {குந்தி}, காதுகுண்டலங்களும், கவசமும் தரித்து, உலகத்தில் ஒப்பிலாத பராக்கிரமம் கொண்ட ஒரு மகனைச் சூரியனிடம் இருந்து பெறுவதே உனது எண்ணம். எனவே, ஓ! யானை நடை கொண்ட காரிகையே {குந்தி}, உன்னை என்னிடம் ஒப்படைப்பாயாக! ஓ! மங்கையே, பிறகு நீ உனது விருப்பப்படி ஒரு மகனை அடைவாய்! ஓ மென்மையான பெண்ணே, ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, உன்னை அறிந்த பிறகு நான் திரும்பிச் செல்வேன்!

நீ இன்று எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, எனக்கு மனநிறைவளிக்கவில்லை என்றால், கோபத்தில் உன்னையும், உனது தந்தையையும் {குந்திபோஜனையும்}, அந்த அந்தணரையும் {துர்வாசரையும்} நான் சபிப்பேன். உனது குற்றத்தால், நான் அவர்கள் அனைவரையும் எரிப்பேன். உனது வரம்புமீறலை அறியாத உனது முட்டாள் தகப்பனுக்கும், உனது மனநிலையையும், நடத்தையையும் அறியாது, உனக்கு மந்திரங்களை அளித்த அந்த அந்தணருக்கும் உகந்த தண்டனையை அளித்து அல்லற்படுத்துவேன். ஓ! பெண்ணே, புரந்தரனைத் தலைமையாகக் கொண்ட சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் உன்னால் ஏமாற்றப்படும் என்னைக் கண்டு ஏளனச் சிரிப்புடன் அதோ அங்கு நின்று பார்க்கின்றனர். நீ இப்போது தெய்வீகப் பார்வை கொண்டிருக்கிறாய், எனவே, அந்தத் தேவர்களைப் பார்! நீ என்னைப் பார்ப்பதற்காகவே, தெய்வீகப் பார்வையை நான்  உனக்கு ஏற்கனவே அளித்திருக்கிறேன்" என்றான் சூரியன்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அதன்பிறகு அந்த இளவரசி {குந்தி}, ஆகாயத்தில் தத்தமது துறையில் [1] சரியாக நிற்கும் தேவர்களையும்,  ஏற்கனவே தன் முன் கண்டது போலவே கதிர்களுடனும், பெரும் பிரகாசத்துடனும் இருக்கும் சூரியனையும் கண்டாள். அவர்கள் அனைவரையும் கண்ட அந்தப் பெண் மிகவும் பயந்தாள். பிறகு அவளின் {குந்தியின்} முகம் வெட்கத்தாலும் நாணத்தாலும் நிறைந்தது. பிறகு அவள் {குந்தி} சூரியனிடம், "ஓ! கதிர்களின் தலைவரே {சூரியனே}, உமது துறைக்கே [1] திரும்பிப் போம். எனது கன்னித்தன்மையைக் கருத்தில் கொண்டு, உமது இந்தச் சீற்றம், எனக்குக் கடும் துயர் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு தந்தையோ, தாயோ, பிற மேன்மையானவர்களோ தான் தங்கள் மகளின் உடலைக் கொடுக்க முடியும். தூய்மை குன்றாமல் இருப்பதே பெண்களின் உயர்ந்த கடமை என்று இவ்வுலகம் கருதுவதை உயர்வாக எண்ணும் நான் அறத்தை தியாகம் செய்ய மாட்டேன். ஓ! பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்டவரே {சூரியனே}, எனது மந்திரங்களின் சக்தியைச் சோதித்துப் பார்க்க மட்டுமே, சிறுபிள்ளைத்தனமாக நான் உம்மை அழைத்துவிட்டேன். இளம் வயது கொண்ட ஒரு பெண் செய்த காரியம் இஃதென்றெண்ணி, ஓ! தலைவா {சூரியனே}, அவளை மன்னிப்பதே உமக்குத் தகும்!" என்றாள் {குந்தி}.

[1] மூலத்தில் விமானம் என்ற சொல் இருப்பதாகவும், அதைத் தேர் எனக் கொள்ளலாம் எனவும் கங்குலி சொல்கிறார்.

பிறகு சூரியன் {குந்தியிடம்}, "உன்னை நான் அப்படிப்பட்ட பெண் என்று {சிறுமியாகக்} கருதுவதாலேயே, ஓ! குந்தி, நான் உன்னிடம் இவ்வளவு மிதமாகப் பேசுகிறேன். வேறு ஒருத்தியிடமும் {சிறுமியல்லாதவளிடம்} நான் இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இதனால் நீ நிச்சயம் மகிழ்ச்சியை அடைவாய். ஓ! அச்சம் கொண்ட கன்னிகையே {குந்தி}, நீ மந்திரங்களைக் கொண்டு என்னை அழைத்ததால், எந்தக் காரியமும் நடைபெறாமல் நான் செல்வது தகாது. ஓ! குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, அப்படி நான் செய்தால், இவ்வுலகத்தில் கேலிக்குரியவனாவேன். ஓ அழகிய காரிகையே {குந்தி}, அனைத்துத் தேவர்களில் இருந்து நான் விடுபடுவேன் {a bye-word with all the celestials}. எனவே, உன்னை எனக்குத் தா! அதனால் நீ என்னைப் போன்றே ஒரு மகனை அடைந்து, இவ்வுலகால் புகழப்படுவாய்" என்றான் {சூரியன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்