Sunday, October 26, 2014

யுதிஷ்டிரனின் துர்க்கையம்மன் துதி! - விராட பர்வம் பகுதி 6

Yudhishthira's prayer to mother goddess Durga! | Virata Parva - Section 6 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 6)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண





பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் துர்க்கையம்மனைத் துதிப்பது; துர்க்கையம்மன் யுதிஷ்டிரனுக்குக் காட்சி கொடுத்து, வரங்களளித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன், காண்பதற்கினிய விராட நகரத்திற்குச் செல்லும் வழியில் இருந்த போது, யசோதையின் கருவறையில் பிறந்தவளும்; நாராயணனால் தனக்கு அளிக்கப்பட்ட வரங்களை ஏற்று, இடையர் நந்தரின் {நந்தகோபரின்} குலத்தில் உதித்தவளும்; செழிப்பையும், (வழிபடுபவர்) குடும்பத்தையும் (குடும்பப் புகழையும்) மேம்படுத்துபவளும்; கம்சனுக்கு அச்சமூட்டியவளும்; அசுரர்களை அழித்தவளும்; இந்த அண்டத்தின் உயர்ந்த தேவியுமான {பரமேஸ்வரியுமான} தெய்வீக துர்க்கையை {துர்க்கையம்மனை} மனதாரத் துதித்தான். கல்மேடையில் (கம்சனால்) தூக்கி வீசப்பட்டபோது வானத்தில் உயர்ந்து எழுந்தவளும்; வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கையும்; தெய்வீக மாலைகள் அணிந்திருப்பவளும்; தெய்வீக ஆடைகள் தரித்திருப்பவளும்; கத்தி, கேடயம் ஆகியவற்றைத் தாங்கியவளும்; துன்பம் நிறைந்த நேரங்களில், புதைகுழியில் உள்ள மாட்டைப் {மாடு} போல, பாவத்தில் மூழ்கிய வழிபாட்டினர், தங்கள் {பாவச்} சுமைகளை அகற்றும் பொருட்டு, நித்திய அருள் வழங்கும் தன்னை {பரமேஸ்வரியான அவளை} அழைக்கும்போது எப்போதும் காப்பவளுமான அந்தத் தேவியை {துர்க்கையம்மனை} யுதிஷ்டிரன் வணங்கினான்.


அந்தத் தேவியின் {துர்க்கையின்} காட்சியைப் பெற, தனது தம்பிகளுடன் விரும்பிய மன்னன் {யுதிஷ்டிரன்}, அவளை அழைக்க (அங்கீகரிக்கப்பட்ட) பாடல்களில் இருந்து பெறப்பட்ட, அவளது பல்வேறு பெயர்களைச் சொல்லித் {துர்க்கையம்மனைத்} துதித்தான். யுதிஷ்டிரன், “ஓ! வரங்களை அளிப்பவளே {துர்க்கையம்மனே}, உன்னை வணங்குகிறேன். ஓ! கிருஷ்ணனைப் போன்றவளே, ஓ! கன்னிகையே, ஓ! பிரம்மச்சரிய நோன்பு நோற்பவளே, ஓ! புதிதாக உதித்த சூரியனைப் போன்ற பிரகாசமான உடல் கொண்டவளே, ஓ! முழு நிலவைப் போன்ற அழகிய முகம் கொண்டவளே, ஓ! நான்கு கரங்களும், நான்கு முகங்களும் கொண்டவளே, ஓ! உருண்ட அழகிய இடைகளும், பருத்த முலைகளும் கொண்டவளே, ஓ! மரகதங்கள் மற்றும் நீலமணிக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட வளையல்களை அணிந்தவளே, ஓ! மேல் புஜத்தில் சிறந்த கடகங்களை அணிந்தவளே.

ஓ! தேவி {துர்க்கையம்மனே}, நாராயணனின் மனைவியான பத்மாவைப் {மகாலட்சுமியைப்} போலப் பிரகாசிப்பவள் நீயே. ஓ! தெய்வீக உலகங்களில், உன் உண்மை வடிவத்திலும், உன் பரிசுத்தமான பிரம்மச்சரியத்துடனும் அதிகாரம் செய்பவள் நீயே, கருமேகங்களைப் போன்ற கரிய முகத்துடன் சங்கர்ஷணரைப் போல அழகாக இருப்பவள் நீயே. இந்திரனுக்கு மதிப்பளிக்கும் வகையில் எழுப்பப்படும் கொடிமரங்களைப் {இந்திரத்வஜத்தைப்} போன்ற நீண்ட இரு கரங்களைக் கொண்டவள் நீயே. பாத்திரம், தாமரை மலர், மணி, சுருக்குக் கயிறு {பாசம்}, வில், பெரும் சக்கரம் மற்றும் பல்வேறு பிற ஆயுதங்களையும் உனது மற்ற (ஆறு) கரங்களில் கொண்டவள் நீயே. இந்த அண்டத்தில் பரிசுத்தமான பண்பை அடைந்த ஒரே பெண் {பரிசுத்த ஸ்த்ரீ} நீயே! சிறந்த குண்டலங்களால் அருளப்பட்ட அழகிய காதுகள் கொண்டவள் நீயே.

ஓ! தேவி, நிலவை அறைகூவி அழைக்கும் அழகு முகம் கொண்டவள் நீயே. சிறந்த கிரீடமும், பாம்பு உடல்களால் செய்யப்பட்ட உடையுடன் கூடிய அழகிய பின்னலும், உருண்டு வளைந்த பிரகாசமான இடைகளும் கொண்டவள் நீயே. பாம்புகளால் சூழப்பட்ட மந்தர மலை போல விளங்குபவள் நீயே. தலையில் நிமிர்ந்து நிற்கும் மயில் தோகைகளால் அதிகமாகப் பிரகாசிப்பவள் நீயே. நித்திய கன்னியாக நோன்பு நோற்று {கௌமார விரதம் இருந்து}, தேவலோகங்களைப் பரிசுத்தமாக்கியவள் நீயே. ஓ! மஹிஷாசுரனைக் [1] கொன்றவளே, இதற்காகவே {கௌமார விரதம் இருப்பதால்} மூவுலகங்களின் பாதுகாப்புக்காகத் தேவர்களால் வழிபடப்பட்டுத் துதிக்கபடுபவள் நீயே. ஓ! அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவளே, எனக்கு உனது அருளைத் தருவாயாக, என்னிடம் கருணை காட்டுவாயாக, நான் பெறும் மங்கலங்கள் அனைத்துக்கும் நீயே ஊற்றுக்கண்ணாவாயாக.

ஜெயமும், விஜயமும் நீயே. போர்க்களத்தில் வெற்றியை அளிப்பவள் நீயே. ஓ! தேவி, எனக்கு வெற்றியைக் {ஜெயத்தைக்} கொடுப்பாயாக. துயரமிக்க இந்த நேரத்தில் எனக்கு வரங்களையும் {விஜயத்தையும்} கொடுப்பாயாக. மலைகளில் முதன்மையான விந்தியமே உனது நித்திய வசிப்பிடமாகும். ஓ! காளி, ஓ காளி, மது, ஊண் {இறைச்சி}, {ஆடு, கோழி முதலிய} விலங்கு பலிகள் ஆகியவற்றில் மகிழும் பெரும் காளி {மஹாகாளி} நீயே. விரும்பிய இடம் செல்லும் திறன் கொண்டு, வழிபாட்டினருக்கு வரங்கள் அளிப்பவளான உனது பயணங்களில், பிரம்மனும் பிற தேவர்களும் எப்போதும் உன்னைத் தொடர்ந்து வருகிறார்கள். பாரங்களை அகற்றுபவள் என உன்னை அழைப்பவர்களுக்கும், பூமியில் நாள் உதிக்கும்போது {அதிகாலையில்} உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகள் அல்லது செல்வம் நிமித்தமாக அடைய முடியாதது எதுவுமில்லை. {துயர் களையும் பொருட்டு உன்னை நினைப்பவர்களுக்கும், விடியற்காலையில் உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகளும் செல்வமும் கிடைப்பது அரிதன்று}.

அடர்ந்த காட்டுப்பகுதியில் துன்புறும்போதும், பெருங்கடலில் மூழ்கும் போதும், அத்துன்பங்களில் இருந்து மக்களை மீட்பதாலே அனைவராலும் துர்க்கை [2] என்று அழைக்கப்படுபவள் நீயே. கொள்ளையர்களால் தாக்கப்படும்போதும், காடுகள், அடர்ந்த காட்டுப்பகுதிகள் {வனாந்திரங்கள்}, கடல்கள், நீரோடைகள் ஆகியவற்றைக் கடப்பதில் ஏற்படும் துன்பத்தின் போதும், மனிதர்களுக்கு ஒரே புகலிடமாக இருப்பவள் நீயே. ஓ! தேவி, உன்னை நினைக்கும் மனிதர்கள் எப்போதும் வீழ்வதில்லை. புகழ் நீயே, செழிப்பு நீயே, உறுதி {நிலைமாறாதவள்} நீயே, வெற்றி நீயே, மனைவி நீயே, மனிதர்களின் வாரிசுகள் நீயே, அறிவு {ஞானம்} நீயே, அறிவாற்றல்{புத்தி} நீயே.

சந்திப்பொழுதுகள் இரண்டும் {அதிகாலை, அந்திமாலை}, இரவு உறக்கம், சூரிய சந்திர ஈரொளிகள், அழகு, பொறுமை {மன்னிக்கும் குணம்}, கருணை மற்றும் பிற அனைத்தும் நீயே. பக்தர்களால் வழிபடப்படும்போது, விலங்குகள், அறியாமை, குழந்தைகள் இழப்பு, செல்வமிழப்பு, நோய், மரணம், அச்சம் ஆகியவற்றை அகற்றுபவள் நீயே. நாட்டை இழந்த நான் உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! பரமேஸ்வரியே {உயர்ந்த தேவியே}, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவளே, உன்னைச் சிரம் தாழ்த்தி வணங்கும் எனக்கு, பாதுகாப்பை அருள்வாயாக! உண்மையின் {சத்தியத்தின்} படி செயல்பட்டு வரமளிக்கும் உண்மையாகவும் {சத்தியமாகவும்} எங்களுக்கு ஆவாயாக! {ஓ சத்ய ஸ்வரூபிணி! நீ எங்கள் விஷயத்தில் ஸத்யமாக இருப்பாயாக}. ஓ! துர்க்கையே, உனது பாதுகாப்பை நாடும் யாவருக்கும் கருணைகாட்டுபவளே, உன்னை வழிபடுபவர்கள் யாவரிடமும் பாசம் கொண்டவளே, எனக்குப் பாதுகாப்பை வழங்குவாயாக!” என்றான் {யுதிஷ்டிரன்}.

[1] "மஹிஷாசுரன், ரம்பாசுரனின் மகனாவான். இந்த வல்லமைமிக்க அசுரனைக் கொல்வதற்காகவே பற்பல வருடங்களுக்கு முன்பு துர்க்கை போரிட வேண்டியிருந்தது. இக்கதை மார்க்கண்டேய புராணத்தில் வருகிறது. இந்தக் காலத்திலும், இலையுதிர்காலத்தில் வங்கத்தில் நடைபெறும் துர்கா பூஜை விழாவில் பெரும் வழிபாடுகளுடன் இந்தத் தேவி வணங்கப்படுகிறாள்.” என்கிறார் கங்குலி.

[2] "துர்க்கை என்றால் "சிரமங்களில் மீட்பவள்" என்பது சொல்லுக்குச் சொல் சரியான பொருளுடையது" என்கிறார் கங்குலி.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} துதிக்கப்பட்ட அந்தத் தேவி {துர்க்கையம்மன்}, அவனுக்குக் {யுதிஷ்டிரனுக்கு} காட்சியளித்தாள். அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகிய அவள் {துர்க்கையம்மன்}, “ஓ! வலிய கரங்கள் கொண்ட மன்னா, ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, எனது வார்த்தைகளைக் கேட்பாயாக. எனது அருளால் கௌரவ அணியில் உள்ளவர்களைக் கொன்று முறியடித்த பிறகு, போர்க்கள வெற்றி விரைவில் உனதாகும். உனது நாட்டை முட்களற்றதாக்கி {எதிரகளற்றதாக்க}, நீ மீண்டும் முழுப் பூமியின் தலைவனாவாய். ஓ! மன்னா, உனது தம்பிகளுடன் கூடிய நீ, பெரும் மகிழ்ச்சியையும் அடைவாய். எனது அருளால், மகிழ்ச்சியும், உடல் நலனும் உனதாகும்.

இந்த உலகில் உள்ளவர்கள் {மனிதர்கள்}, என் பண்புகளையும், சாதனைகளையும் உரைத்தால்,  தங்கள் பாவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, முழு மனநிறைவு கொள்வார்கள். நான் அவர்களுக்கு, நாட்டையும், நீண்ட வாழ்நாளையும், அழகிய மேனியையும், வாரிசுகளையும் அளிப்பேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வனவாசத்தில் இருப்பவர்களோ, நாட்டில் இருப்பவர்களோ, போர்க்களத்தின் மத்தியில் இருப்பவர்களோ, எதிரிகளின் ஆபத்தில் இருப்பவர்களோ, காட்டிலோ, அணுகமுடியாத பாலைவனங்களிலோ, கடல்களிலோ, அடர்ந்த காடுகள் கொண்ட மலையிலோ இருந்து உன்னைப் போலவே {உன் முறையில்} என்னை அழைப்பவர்கள், இந்த உலகில் அடையமுடியாதது எதுவுமில்லை.

பாண்டுவின் மகன்களே {பாண்டவர்களே}, இந்தச் சிறந்த பாடலை கேட்பவனோ, பக்தியுடன் மீண்டும் தானே உரைப்பவனோ, தான் செய்யும் அனைத்துத் தொழில்களிலும் வெற்றியடைவான். நீங்கள் விராட நகரத்தில் வசிக்கும் வரை, எனது அருளால், குருக்களின் ஒற்றர்களோ, மத்ஸ்ய {விராட} நாட்டில் வசிப்பவர்களோ உங்களை அடையாளம் காண்பதில் வெற்றியடைய மாட்டார்கள்" என்றாள் {துர்க்கையம்மன்}. பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து {ரக்ஷை செய்து}, எதிரிகளைத் தண்டிப்பவனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தேவி {துர்க்கையம்மன்} அங்கேயே, அப்படியே மறைந்து போனாள்.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்