Sunday, October 26, 2014

யுதிஷ்டிரன் விராடன் சந்திப்பு! - விராட பர்வம் பகுதி 7

Yudhishthira meets Virata! | Virata Parva - Section 7 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 7)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண






பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் விராடனைச் சந்தித்து அவனிடம் பிழைப்புக்காக வந்ததாகச் சொன்னது; விராடன் யுதிஷ்டிரனைப் பணியமர்த்தி அவன் கேட்ட வேண்டுதல்களை ஏற்றது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் யுதிஷ்டிரன், வைடூரியத்தால் இழைக்கப்பட்டு, தங்கத்தால் செய்யப்பட்டிருந்த பாச்சிகைகளைத் {பகடைக் காய்களை} தனது துணியில் கட்டி, அதைக் கக்கத்தில் {அக்குளில்; கைக்குழியில்} பிடித்துக் கொண்டான். மனிதர்களின் சிறப்புவாய்ந்த தலைவனும், குரு குலத்தைத் தழைக்க வைக்கும் உயர் ஆன்மா கொண்டவனும், மன்னர்களால் மதிக்கப்படுபவனும், கட்டுக்கடங்காத வல்லமை கொண்டவனும், கடும் விஷம் கொண்ட பாம்பு போன்றவனும், மனிதர்களில் காளையும், பலம் அழகு பராக்கிரமம் ஆகியவற்றைக் கொண்டவனும், மேன்மை கொண்டவனும், அடர்த்தியான மேகங்களால் மூடப்பட்ட சூரியன் போன்றோ, சாம்பலால் மூடப்பட்ட நெருப்பு போன்றோ இப்போது இருந்தாலும், தெய்வீக உருவம் கொண்டவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, புகழ் பெற்ற விராட மன்னன் தனது சபையில் அமர்ந்திருந்தபோது முதலில் தோன்றினான்.


மேகங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் நிலவைப் போலவும், முழு நிலைவைப் போன்ற அழகிய முகமும் கொண்டிருந்த பாண்டுவின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} தனது தொண்டர்களுடன் கண்ட மன்னன் விராடன், தனது ஆலோசகர்களிடமும் {அமைச்சர்களிடமும்}, இருபிறப்பாளர்களிடமும் {பிராமணர்களிடமும்}, தேரோட்டிகளிடமும், வைசியர்களிடமும், பிறரிடமும், “எனது சபைக்கு முதல் முறையாக வந்திருக்கும் மன்னனைப் போல இருக்கும் இவன் யார் என்பதை விசாரியுங்கள். இவன் அந்தணனாக இருக்க முடியாது. இவனே மனிதர்களில் ஆண்மகன் என நான் நினைக்கிறேன் {Methinks he is a man of men}. இவனிடம் அடிமைகளோ, தேர்களோ, யானைகளோ {மட்டும்தான்} இல்லை. இருப்பினும் இவன் இந்திரனைப் போலப் பிரகாசிக்கிறானே. இவனது மேனியில் இருக்கும் குறிகள், இவனைப் புனித பட்டம் பெற்று மணிமுடி கொண்டவனாகக் குறிக்கின்றன. இதுவே எனது நம்பிக்கை. இவன் எந்த வித தயக்கமும் இன்றி, தாமரைக் கூட்டத்தை அணுகும் ஒரு மதம் கொண்ட யானை போல என்னை அணுகுகிறானே!” என்றான் {விராடன்}.

மன்னன் {விராடன்} இத்தகு சிந்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மனிதர்களில் காளையான யுதிஷ்டிரன் விராடனின் முன்பு வந்து அவனிடம், “ஓ! பெரும் மன்னா, அனைத்தையும் தொலைத்துவிட்டு, பிழைப்புக்காக உம்மிடம் வந்திருக்கும் ஓர் அந்தணனாக என்னை அறிவீராக! ஓ! பாவமற்றவரே, ஓ! தலைவா {விராடரே}, உமது கட்டளையின் கீழ் பணி செய்து வாழ்வதற்கு நான் விரும்புகிறேன் [1]” என்றான். இதனால் மிகவும் மகிழ்ந்த மன்னன் {விராடன்} அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “உனக்கு நல்வரவு. நீ வேண்டிய நியமனத்தை ஏற்றுக் கொள்" என்றான். அந்த மன்னர்களில் சிம்மத்தை {யுதிஷ்டிரனை}, அவன் வேண்டிய பதவியிலேயே நியமித்த மன்னன் விராடன், பிறகு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குழந்தாய், பற்றுதலால் உன்னிடம் ஒன்று கேட்கிறேன். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதியில் {நாட்டில்} இருந்து நீ இங்கே வந்திருக்கிறாய்? உனது பெயர், குடும்பம் {கோத்ரம்} ஆகியவை என்ன என்பதையும், உனக்கு எதில் ஞானம் இருக்கிறது என்பதையும் உண்மையாகச் சொல்" என்று கேட்டான் {விராட மன்னன்}.

[1] “வேறு இடங்களில் அப்படியே வேறு பொருளைக் கொடுத்தாலும், Kamachara [kāmacaras] என்பது நீலகண்டரால் இப்படியே விளக்கப்பட்டுள்ளது.” என்கிறார் கங்குலி.

யுதிஷ்டிரன் {விராட மன்னனிடம்}, “எனது பெயர் கங்கன் [Kanka; kaṅketi], நான் வையாக்கிரர் [Vaiyaghra; vaiyāghrapadyaḥ] {வ்யாக்ரபாதர்} [2] என்று பெயரால் அழைக்கப்படும் குடும்பத்துக்குரிய {கோத்ரத்திற்குரிய} அந்தணனாவேன். பகடை வீசுவதில் நான் நிபுணன். முன்பு நான் யுதிஷ்டிரருக்கு நண்பனாக இருந்தேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.

[2] புலி போலப் பாய்பவன் என்ற பொருள் உடைய "வ்யாக்ரபாத" என்ற பெயர் யமனுக்குடையது. எனவே யுதிஷ்டிரன், தன்னை அவனது {யமனின்} வழியில் வந்தவன் என்று சொல்லி, உண்மையைச் சொல்வதாகப் பண்டிதர்கள் பொருள் கொள்கிறார்கள்.

விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “நீ விரும்பும் எந்த வரத்தையும் நான் கொடுப்பேன். நீ மத்ஸ்யத்தையே {மத்ஸ்ய நாட்டையே} {ஆள வேண்டுமென்றாலும்} ஆண்டுக் கொள். நான் உனக்கு அடிபணிந்து இருப்பேன். தந்திரமான சூதாடிகள் கூட எனக்குப் பிடித்தமானவர்களே. ஆனால், மறுபுறம் நீயோ தேவனைப் போல இருக்கிறாய். எனவே, நீ நாட்டைப் பெறத் தகுதி வாய்ந்தவனே" என்றான் {விராடன்}.

யுதிஷ்டிரன் {விராடனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {விராடரே}, இழிந்த மனிதர்களோடு (பகடையின் காரணமாக) எந்தவித சர்ச்சைகளிலும் {தகராறுகளிலும்} என்னை ஈடுபடுத்தக்கூடாது என்பதே எனது முதல் வேண்டுகோள். மேலும், (பகடையில்) என்னால் வீழ்த்தப்பட்ட (என்னால் வெல்லப்பட்ட) மனிதன்,  செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. உமது அருளால் எனக்கு இந்த வரம் கிடைக்கட்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.

விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “உன்னை வெறுப்படையச் செய்யும் ஒருவன் நிச்சயம் என்னால் கொல்லப்படுவான். அவனே இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} ஒருவனாக இருந்தால், அவன் எனது நாட்டில் இருந்து விரட்டப்படுவான். கூடியிருக்கும் குடிமக்கள் இதைக் கேட்கட்டும்! கங்கன் இந்த அரசாங்கத்துக்கு என்னைப் போலவே தலைவனாவான். நீ (கங்கன்) எனது நண்பனாக இருந்தாலும், நான் பயணிப்பது போன்ற வாகனங்களிலேயே நீயும் பயணிக்கலாம். உன் பொறுப்பில் நிறைய ஆடைகளும், பல்வேறு வகையான உணவு வகைகளும், பானங்களும் இருக்கும். எனது காரியங்களில் அகம் {உட்புற} புறம் {வெளிப்புற} ஆகிய இரண்டையும் {இரண்டு காரியங்களையும்} நீயே கவனிப்பாயாக. உனக்காக எனது கதவுகள் அனைத்தும் திறந்திருக்கும். வெளியே பணி செய்யும் மனிதர்களும், சூழ்நிலையால் பலவீனப்பட்டவர்களும் உன்னிடம் விண்ணப்பிக்கும் போது, அது எந்த நேரமானாலும், அவர்களின் வார்த்தைகளை என்னிடம் சொல். அவர்கள் என்ன விரும்பினாலும், நான் அதை நிச்சயம் கொடுப்பேன். என்னுடன் நீ வசிக்கும் வரை உனக்கு எந்த அச்சமும் வேண்டாம்" என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி விராட மன்னனின் பேட்டியை பெற்று, அவனிடம் {விராடனிடம்} வரங்களையும் பெற்ற அந்த மனிதர்களில் வீரக்காளை {யுதிஷ்டிரன்} அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான். அவன் {யுதிஷ்டிரன்} அங்கே வாழ்ந்து வந்த போது, யாராலும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்