Friday, November 21, 2014

சைரந்திரியை விசாரித்த பிருஹந்நளை! - விராட பர்வம் பகுதி 24

Vrihannala enquired Sairindhri! | Virata Parva - Section 24 | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 11)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: சைரந்திரியை அரண்மனைக்குள் சேர்க்க வேண்டாம் என்றும், அவளை நாட்டை விட்டு விரட்டுங்கள் எனவும் குடிமக்கள் விராடனிடம் சொன்னது; விராடன் சுதேஷ்ணையிடம் சைரந்திரியை அவள் விரும்பும் இடத்திற்குச் செல்லச் சொல்லுமாறு கட்டளையிட்டது; திரௌதி விராடனின் சமையலறையில் பீமனைக் கண்டு பேசுவது; பிருஹந்நளையாக இருந்த அர்ஜுனன் சைரந்திரியாக இருந்த திரௌபதியிடம் அவள் எப்படி விடுதலை அடைந்தாள் என்பதைக் கேட்பது; சுதேஷ்ணை சைரந்திரியிடம் அவள் விரும்பிய இடத்திற்குச் செல்லச் சொல்வது; சைரந்திரி பதிமூன்றுநாள் பொறுக்குமாறு கேட்பது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூதர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட குடிமக்கள் மன்னனிடம் {விராடனிடம்} சென்று நடந்தது அத்தனையும் சொன்னார்கள். அவர்கள், “ஓ! மன்னா, பலம்பொருந்திய சூதர் மகன்கள் அனைவரும் கந்தர்வர்களால் கொல்லப்பட்டனர். உண்மையில், அவர்கள் அனைவரும் இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போலப் பூமியில் சிதறிக் கிடக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட சைரந்திரியும் {மாலினியும்}, நகரத்தில் இருக்கும் உமது அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள்.


ஐயோ, ஓ! மன்னா {விராடா}, அந்தச் சைரந்திரி வருவது உமது மொத்த நாட்டுக்கும் ஆபத்தாகும். சைரந்திரியோ பெரும் அழகு படைத்தவளாக இருக்கிறாள்; கந்தர்வர்களும் அதீத பலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் இயற்கையாகவே மனிதர்கள் {அவளிடம்} காமங்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! மன்னா {விராடா}, சைரந்திரிக்குச் செய்யப்பட்ட அநீதிகளின் விளைவாக உனது நாடு அழிவைச் சந்திக்கமால் இருக்கத் தாமதமில்லாமல் நடவடிக்கை எடு” என்றனர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கூட்டத்தின் தலைவன் விராடன் அவர்களிடம், “அந்தச் சூதர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள்! ரத்தினங்கள் மற்றும் தாராளமான நறுமணத்தைலங்களுடன் கீசகர்கள் அனைவரும் சுடர்வெட்டெரியும் ஒரே சிதையில் தகனம் செய்யப்படட்டும்!” என்றான்.

பிறகு அச்சம் நிரம்பிய மன்னன் {விராடன்} தனது ராணியான சுதேஷ்ணையிடம், “சைரந்திரி திரும்பி வரும்போது, அவளிடம் நீ “ஓ! அழகிய முகம் கொண்ட சைரந்திரி, உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எங்கு விரும்புகிறாயோ அங்குச் செல்லலாம். ஓ! அழகிய இடை கொண்டவளே {சைரந்திரி}, ஏற்கனவே கந்தர்வர்கள் கரங்களில் பெற்ற தோல்வியால் மன்னர் அச்சமுற்றிருக்கிறார். நீ கந்தர்வர்களின் பாதுகாப்பில் இருக்கும்போது, உன்னிடம் தனிப்பட்ட முறையில் இதைச் சொல்ல எனக்குத் துணிவில்லை. எனினும் ஒரு பெண் உன்னைப் புண்படுத்த முடியாது என்பதால் தான், நான் ஒரு பெண்ணின் மூலம் உன்னிடம் இவற்றைச் சொல்கிறேன். {அதாவது பெண்கள் உன்னிடம் சொல்வதில் குற்றமில்லை. அதனால் பெண்ணான என் மனைவி மூலம் உன்னிடம் சொல்கிறேன்}” என்ற எனது இந்த வார்த்தைகளை அவளிடம் சொல்” என்றான் {விராடன் சுதேஷ்ணையிடம்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சூதர்களைக் கொன்ற பிறகு பீமசேனனால் விடுவிக்கப்பட்டவளும், புத்திக்கூர்மையும் இளமையும் கொண்டவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, தன் அனைத்து அச்சங்களில் இருந்தும் விடுபட்டு, தன் அங்கங்களையும் ஆடைகளையும் நீரில் கழுவிக் கொண்டு, புலியால் பயமுறுத்தப்பட்ட வெள்ளாடு போல நகரத்தை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்ட குடிமக்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, கந்தர்வர்கள் மேல் கொண்ட பயத்தின் காரணமாக அனைத்துத் திசைகளிலும் ஓடினர். சிலர் தங்கள் கண்களை மூடிக் கொள்ளும் அளவுக்குச் சென்றனர்.

பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மடைப்பள்ளியின் வாயிலில் மதங்கொண்ட பெரும் யானை போல இருக்கும் பீமசேனனை, அந்தப் பாஞ்சால இளவரசி {திரௌபதி} கண்டாள். ஆச்சரியத்தால் அகன்ற விழிகளுடன் அவனை {பீமசேனனைக்} கண்ட திரௌபதி, தங்கள் இருவருக்கு மட்டுமே புரியும் வார்த்தைகளில், “என்னைக் காப்பாற்றிய கந்தர்வர்களின் இளவரசரை வணங்குகிறேன்” என்றாள். அவளது {திரௌபதியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட பீமன், “இதுவரை யாருக்குக் கீழ்ப்படிந்து இந்த நகரத்தில் அம்மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அவளது {உனது} இந்த வார்த்தைகளைக் கேட்டு, தங்கள் கடனில் இருந்து அவர்கள் விடுபட்டத்தாகக் கருதி இனி இங்கே இருப்பார்கள்” என்றான். [1]

[1] //இங்கே பீமன், “உனது கணவர்களான கந்தர்வர்கள் உனக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவர்களாவர்! அவர்களால் உனக்குச் சேவை செய்ய முடிந்ததெனில், அவர்கள் தங்கள் கடனைத் திருப்பித் தந்ததாக மட்டுமே ஆகும்” என்று சொல்கிறான்// என்கிறார் கங்குலி

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அவள் {திரௌபதி}, ஆடற்கூடத்தில் மன்னன் விராடனின் மகள்களுக்கு ஆடற்கலை கற்பித்துக்கொண்டிருந்த வலிய கரங்கள் கொண்ட தனஞ்சயனைக் {பிருஹந்நளையாக இருந்த அர்ஜுனனைக்} கண்டாள். அப்பாவியாக இருந்தாலும் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} அங்கே வந்தபோது, ஆடற்கூடத்தில் இருந்து அர்ஜுனனுடன் வெளியே வந்த காரிகைகள், அவளை {திரௌபதியை} அணுகினர். பிறகு அவர்கள், “ஓ! சைரந்திரி {மாலினி}, நற்பேறாலேயே நீ உனது ஆபத்துக்களில் இருந்து வெளியேறினாய். நற்பேறாலேயே நீ பாதுகாப்பாகத் திரும்பியிருக்கிறாய். மேலும், நீ அப்பாவியாக இருந்தாலும் உனக்குத் தீங்கிழைத்த சூதர்கள் உனது நற்பேறாலேயே கொல்லப்பட்டனர்” என்றார்கள்.

இதைக் கேட்ட பிருஹந்நளை {அர்ஜுனன் - திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, நீ எப்படி விடுவிக்கப்பட்டாய்? அந்தப் பாவிகளான இழிந்தவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர்? இவை அனைத்தையும் நடந்தவாறே உன்னிடம் அறிய விரும்புகிறேன்” என்று கேட்க, அதற்குச் சைரந்திரி {திரௌபதி - அர்ஜுனனிடம்}, “ஓ! அருளப்பட்ட பிருஹந்நளையே, எப்போதும் பெண்களின் அறைகளில் மகிழ்ச்சியாக நாட்களைக் கடத்தும் உனக்கு, சைரந்திரியின் விதியில் கவலை கொள்ளச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்ன இருக்கிறது? சைரந்திரி தாங்கிக் கொள்ள வேண்டிய கவலைகள் ஏதும் உனக்கில்லை! அதனால்தான் துக்கத்திலிருக்கும் என்னிடம் பரிகாசத்துடன் நீ இப்படிக் கேட்கிறாய்” என்றாள் {திரௌபதி}.

அதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் திரௌபதியிடம்}, “ஓ! அருளப்பட்டவளே, பிருஹந்நளைக்கும் தனக்கேயுரிய இணையற்ற துக்கங்கள் இருக்கின்றன. அவள் விலங்கைப் {[அ] அறிவிலியைப்} போலத் தாழ்ந்த நிலையை அடைந்திருக்கிறாள். ஓ! பெண்ணே {திரௌபதி}, இதை நீ புரிந்து கொள்ள வில்லை. நான் உன்னுடன் வாழ்ந்திருக்கிறேன். நீயும் எங்களுடன் வாழ்ந்திருக்கிறாய். எனவே, நீ துன்பத்தால் பாதிக்கப்பட்டால், ஓ! அழகான இடைகள் கொண்டவளே {திரௌபதி}, யார்தான் அதை உணரமாட்டார்கள்? ஆனால் எவராலும் மற்றவரின் இதயத்தை முழுமையாகப் படிக்க முடியாது. எனவே, ஓ! இனிமையாளனவளே {திரௌபதி}, நீ எனது இதயத்தை அறியவில்லை” என்றாள் {பிருஹந்நளை}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு திரௌபதி அந்தப் பெண்களுடன் அரச வசிப்பிடத்துக்குள் நுழைந்து சுதேஷ்ணையின் முன் தோன்ற விரும்பினாள். ராணியின் {சுதேஷ்ணையின்} முன்பு அவள் {திரௌபதி} வந்தபோது, அந்த விராடனின் மனைவி {சுதேஷ்ணை}, மன்னனுடைய கட்டளையின் பேரில், “ஓ! சைரந்திரி, நீ எங்குச் செல்ல விரும்புகிறாயோ அங்கே செல். உனக்கு மங்களம் உண்டாகட்டும், கந்தர்வர்கள் கைகளில் ஏற்பட்ட இந்தத் தோல்வியைக் கண்டு மன்னர் {விராடர்} அஞ்சுகிறார். ஓ! அழகிய கண் புருவங்கள் கொண்டவளே {மாலினி}, நீ இளமையுடனும், பூமியில் இணையற்ற அழகுடனும் இருக்கிறாய். மறுபுறம் ஆண்களின் விருப்பத்துக்குகந்த பொருளாகவும் இருக்கிறாய். கந்தர்வர்களும் அதீதக் கோபக்காரர்களாக இருக்கிறார்கள்” என்றாள்.

அதற்குச் சைரந்திரி {திரௌபதி சுதேஷ்ணையிடம்}, “ஓ! அழகான பெண்ணே {சுதேஷ்ணை}, இன்னும் பதிமூன்று {13} நாட்களுக்கு மட்டும் மன்னர் {விராடர்} என்னைப் பொறுத்துக் கொள்ளட்டும். கந்தர்வர்களும் இதற்கு மிகவும் இணக்கமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பிறகு, அவர்கள் {கந்தர்வர்கள்} தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, விராடருக்கு ஏற்புடையதைச் செய்வார்கள். இப்படிச் செய்வதால், தனது நண்பர்களுடன் கூடிய மன்னர் {விராடர்} பெரிய நன்மை அடைவார் என்பதில் சந்தேகமில்லை” என்றாள் {திரௌபதி}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்