Saturday, November 22, 2014

துரியனைச் சந்தித்த ஒற்றர்கள்! - விராட பர்வம் பகுதி 25

The spies who met Duryodhana! | Virata Parva - Section 25 | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 12)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: துரியோதனனால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் பாண்டவர்களைக் கண்டடைய முடியாமல் ஹஸ்தினாபுரம் திரும்புவது; குருக்களின் எதிரியான கீசகன் கந்தர்வர்களால் கொல்லப்பட்டான் என்ற செய்தியை ஒற்றர்கள் துரியோதனனுக்குச் சொல்வது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, கீசகனும் அவனது தம்பிகளும் கொல்லப்பட்டதைப் பயங்கரமான சாதனையாக நினைத்த மக்கள் ஆச்சரியத்தில் நிறைந்தனர். மேலும், நகரம் மற்றும் மாகாணங்களில், மன்னனின் வல்லவன் {பீமன்} மற்றும் கீசகன் ஆகிய இரு வலிமைமிக்க வீரர்களின் வீரத்தைக் குறித்துப் பொதுவாக வதந்திகள் பரவியிருந்தன. “எனினும், தீய கீசகன், மனிதர்களை எப்போதும் ஒடுக்குபவனே! பிற மனிதர்களின் மனைவிகளை அவமதிப்பவனே! அதற்காகவே அந்தத் தீய பாவகர ஆன்மா {கீசகன்} கந்தர்வர்களால் கொல்லப்பட்டான்”. இப்படியே, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பகைவர் கூட்டத்தைக் கொல்பவனான ஒப்பற்ற கீசகனைக் குறித்து மாகாணத்துக்கு மாகாணம் மக்கள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்.


அதே வேளையில், திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} நியமிக்கப்பட்டிருந்த ஒற்றர்கள், பல்வேறு கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும், தங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்த பல இடங்களையும் குறித்தபடி தேடி முடித்து, தாங்கள் அறிந்த ஒரே ஒரு செய்தியில் மனநிறைவு கொண்டு நாகரூபத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினார்கள்.

பிறகு திருதராஷ்டிரன் மகனான குரு குலத்தின் மன்னன் துரியோதனன் தனது அவையில் துரோணர், கர்ணன், கிருபர், உயர் ஆன்ம பீஷ்மர், தனது தம்பிகள், பெரும் வீரர்களான திரிகார்த்தர்கள் ஆகியோரோடு அமர்ந்திருந்த போது, அவனிடம் {துரியோதனனிடம் அவனது ஒற்றர்கள்}, “ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனரே}, பெரும் வனத்தில் பாண்டுவின் மகன்களைத் தேடுவதில் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்தினோம். மான்கள் மற்றும் பிற விலங்குகள் நிறைந்ததும், மரங்கள் மற்றும் வித்தியாசமான வகைகளிலான கொடிகள் நிறைந்ததுமான ஏகாந்தமான வனாந்தரங்களில் நாங்கள் {அவர்களைத்} தேடினோம்.

படர்ந்த காடுகள், தாவரங்கள், அனைத்து வகைக் கொடியினங்கள் ஆகியவை நிறைந்த சூழல் கொண்ட இடங்களில் தேடினோம். ஆனால், அடக்க முடியாத சக்தி கொண்ட பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்} சென்ற பாதையைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்றோம். இந்த இடங்களிலும், மேலும் பல இடங்களிலும் அவர்களது பாதச்சுவடுகளைத் தேடினோம். ஓ! மன்னா {துரியோதனா}, அடைவதற்கரிதான காடுகளிலும், பல்வேறு நாடுகளிலும், மக்கள் நிறைந்த மாகாணங்களிலும், நாற்சந்திகளிலும், நகரங்களிலும் நாங்கள் நெருக்கமாகத் தேடினோம். பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} குறித்த எந்தத் தடயமும் இன்னும் {எங்களுக்குக்} கிடைக்கவில்லை.

உமக்கு மங்களம் உண்டாகட்டும். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனரே}, எந்தத் தடயத்தையும் விட்டுவைக்காமல் அவர்கள் {அந்த பாண்டவர்கள்} அழிந்துவிட்டதாகவே தெரிகிறது. ஓ! வீரர்களில் முதன்மையானவரே {துரியோதனரே}, நாங்கள் அவர்களது பாதையிலேயே தொடர்ந்து சென்றாலும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {துரியோதனரே}, விரைவில் அவர்களது காற்தடங்களைத் தொலைத்தோம். {எங்களுக்கு அவர்களது கால்தடங்கள் தெரியவில்லை}. இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை {நாங்கள்} அறியவில்லை.

ஓ! மனிதர்களின் தலைவா, சில காலம் நாங்கள் அவர்களின் தேரோட்டிகளைத் தொடர்ந்து சென்றோம். முறையாக விசாரித்ததில் நாங்கள் அறிய விரும்பியதை உண்மையில் உறுதி செய்து கொண்டோம். ஓ! எதிரிகளைக் கொல்பவனே, அந்தத் தேரோட்டிகள் தங்கள் மத்தியில் பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்} இல்லாமலேயே துவாராவதியை {துவாரகையை} அடைந்தனர். ஓ! மன்னா {துரியோதனரே}, பாண்டுவின் மகன்களோ {பாண்டவர்களோ}, கற்புள்ள கிருஷ்ணையோ {திரௌபதியோ} யாதவர்களின் நகரத்தில் இல்லை.

ஓ! பாரதகுலத்தின் காளையே {துரியோதனரே}, அவர்கள் தற்சமயம் எங்கு வசிக்கிறார்கள் என்பதையோ, அவர்களது பாதையையோ எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. உமக்கு வந்தனம், அவர்கள் அழிந்து விட்டார்கள். பாண்டு மகன்களின் மனநிலையை நாங்கள் அறிந்தவர்கள். அவர்களது சாதனைகளில் சிலவற்றையும் அறிந்திருக்கிறோம். எனவே, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, பாண்டு மகன்களைத் தேடும் விவகாரத்தில் அடுத்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்று, ஓ! ஏகாதபதி {துரியோதனரே} எங்களுக்கு உத்தரவு அளியும்.

ஓ! வீரரே, உமக்கு நம்பிக்கைத் தரக்கூடிய ஏற்புடைய எங்களது {வேறு} வார்த்தைகளைக் கேளும். மன்னர் மத்ஸ்யரின் {விராடரின்} தளபதியும், திரிகார்த்தர்களை மீண்டும் மீண்டும் வீழ்த்தி, பெரும்பலத்தால் அவர்களைக் கொன்றவனும், தீய ஆன்மாவுமான கீசகன், ஓ! ஏகாதிபதி {துரியோதனரே}, கண்ணுக்குப்புலப்படாத கந்தர்வர்களால் இருள் சூழ்ந்த நேரத்தில், ஓ! மங்காப்புகழ் கொண்டவரே {துரியோதனரே} தனது தம்பிகள் அனைவருடனும் சேர்த்து கொல்லப்பட்டான். நமது எதிரிகளின் {இந்த} நிலைமை பற்றிய மகிழ்ச்சிகரமான செய்தியைக் கேள்விப்பட்டு, ஓ! கௌரவ்யரே {துரியோதனரே}, நாங்கள் மிகுந்த மனநிறைவு கொண்டோம். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது சொல்வீராக”, என்றனர் {ஒற்றர்கள்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்