Sunday, November 23, 2014

துச்சாசனன் ஆலோசனை! - விராட பர்வம் பகுதி 26

The counsel of Dussasana! | Virata Parva - Section 26 | Mahabharata In Tamil

(கோஹரணப் பர்வம் - 1)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம்: துரியோதனன் தன் அவையோரின் ஆலோசனைகளை வேண்டல்; கர்ணன் தனது ஆலோசனையை வழங்கல்; துச்சாசனன் தனது ஆலோசனையை வழங்கல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் ஒற்றர்களின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், தனக்குள்ளேயே சிறிது நேரம் சிந்தித்த பிறகு, தனது அவையினரிடம், “நிகழ்வுகளின் போக்கைத் தெரிந்து கொள்வது கடினமாக உள்ளது. நம்மால் கண்டறியப்படாமல், அவர்கள் {பாண்டவர்கள்} வாழ வேண்டிய பதிமூன்றாவது வருடத்தின் பெரும்பகுதி கழிந்துவிட்டது. மீதம் இருப்பது {மீதம் இருக்கும் காலம்} மிகவும் குறைவு. எனவே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} எங்கிருக்கிறார்களோ அந்த இடத்தைக் கண்டுபிடியுங்கள்.


உண்மை {சத்திய} நோன்புக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களான பாண்டுவின் மகன்களால், இந்த வருடத்தில் எஞ்சியிருக்கும் காலத்தையும் கண்டறியப்படாமல் உண்மையில் கழிக்கமுடியுமானால், அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள் ஆவார்கள். பிறகு, மதநீர் பாயும் பலமிக்க யானைகளைப் போலவோ, கடும் நஞ்சு கொண்ட பாம்புகளைப் போலவோ அவர்கள் திரும்பி வருவார்கள். {அப்படி வந்தால்} கோபம் நிறைந்த அவர்கள், குருக்களுக்குக் கொடூரத் தண்டனையை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, காலத்தின் தன்மைகளை நன்கறிந்த பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, வலிநிறைந்த வேடங்களில் இப்போது இருப்பது போலவே நீடிக்கவும், தங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு மீண்டும் கானகம் செல்லவும், {நாம் எடுக்க} வேண்டிய முயற்சிகளைக் காலந்தாழ்த்தாமல் எடுப்பதே உங்களுக்குத்தகும். உண்மையில், நாடு அமைதியாகவும், எதிரிகளற்றதாகவும், எந்தக் குறைவும் இல்லாததாகவும், நாட்டிற்காகச் சண்டை நடவாதிருக்கவும், சண்டைக்கான அனைத்துக் காரணங்களையும் களையும்படியான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்” என்றான் {துரியோதனன்}.

துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்}, “ஓ! பாரதா {துரியோதனா}, திறன்வாய்ந்தவர்களும், இன்னும் அதிகத் தந்திரமிக்கவர்களும், நோக்கத்தைச் சாதிக்கவல்லவர்களுமான வேறு ஒற்றர்களை விரைந்து அனுப்பு. நல்ல வேடந்தரித்து, பெரிய நாடுகளிலும், மக்கள் நிறைந்த மாகாணங்களிலும் திரிந்து, கற்றோர் சபைகளையும், மாகாணங்களில் இருக்கும் காண்பதற்கினிய இடங்களையும் அவர்கள் வேவு பார்க்கட்டும். அரண்மனைகளின் அந்தப்புரங்களிலும், சன்னதிகளிலும், புனித இடங்களிலும், சுரங்கங்களிலும், வித்தியாசமான பிற பகுதிகளிலும், நன்கு வழிகாட்டப்பட்ட ஆவலுடன் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} தேடப்பட வேண்டும்.

மாற்றுருவில் வாழும் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, வேலையில் அர்ப்பணிப்புக் கொண்ட, நல்ல வேடந்தரித்த, தேடுவதற்கான நோக்கங்களை நன்கு அறிந்த, நல்ல திறன்வாய்ந்த அதிக எண்ணிக்கையிலான ஒற்றர்களால் தேடப்படட்டும். ஆற்றங்கரைகளிலும், புனித இடங்களிலும், கிராமங்களிலும், நகரங்களிலும், துறவியரின் இடங்களிலும், காண்பதற்கினிய மலைகள் மற்றும் மலைக்குகைகளிலும் {அந்த பாண்டவர்கள்} தேடப்படட்டும்” என்றான் {கர்ணன்}.

கர்ணன் நிறுத்தியதும், துரியோதனனின் இரண்டாவது தம்பியும் {துரியோதனனுக்கு உடன்தம்பியும்}, {துரியோதனனின்} பாவச்செயல்களுக்குக் கைகோர்ப்பவனுமான துச்சாசனன், தனது அண்ணனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனரே}, நமது வெகுமதிகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு, நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஒற்றர்கள் மட்டும் மீண்டும் தேடச் செல்லட்டும். இதுவும், கர்ணன் சொன்ன வேறு யாவும் நமது முழு ஏற்பைப் பெற்றவையாகும். ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி {மற்ற} அனைத்து ஒற்றர்களும் இந்தத் தேடலில் ஈடுபடட்டும். அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் படி, ஒவ்வொரு மாகாணத்திலும் தேடுவதில் இவர்களும், பிறரும் ஈடுபடட்டும்.

எனினும், பாண்டவர்கள் தொடர்ந்து சென்ற பாதையையோ, அவர்கள் தற்போது இருக்கும் வசிப்பிடத்தையோ, {அவர்கள்} மேற்கொண்டிருக்கும் தொழிலையோ கண்டுபிடிக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. ஒருவேளை, அவர்கள் {அந்த பாண்டவர்கள்} நன்றாக மறைந்திருக்கலாம்; ஒருவேளை, அவர்கள் {அந்த பாண்டவர்கள்} கடலின் மறுபுறத்திற்கே சென்றிருக்கலாம். அல்லது தங்கள் பலத்திலும் வீரத்திலும் கொண்ட கர்வத்தினால், ஒருவேளை அவர்கள் காட்டுவிலங்குகளால் விழுங்கப்பட்டிருக்கலாம்; அல்லது அவர்கள் {அந்த பாண்டவர்கள்} ஏதாவது எதிர்பாரா ஆபத்தை அடைந்து, ஒருவேளை நித்தியமாக அழிந்துபோயிருக்கலாம். எனவே, ஓ! குருகுலத்தின் இளவரசே {துரியோதனரே}, உமது இதயத்தில் இருந்து அனைத்து துயரங்களையும் அகற்றி, உமது சக்திக்கேற்றபடி எப்போதும் போலச் செயல்பட்டு, உம்மால் முடிந்ததைச் சாதியும். {செய்யக் கருதும் காரியத்தைச் செய்யும்}” என்றான் {துச்சாசனன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்