Wednesday, December 03, 2014

பிருஹந்நளை தேரோட்டலாமே! - விராட பர்வம் பகுதி 36

Vrihannala can drive your car! | Virata Parva - Section 36 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 11)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : ஒரு தேரோட்டி மட்டும் இருந்தால் நான் கௌரவர்களை விரட்டி விட்டுப் பசுக்களை மீட்டு விடுவேன் என்று உத்தரன் பெண்களுக்கு மத்தியில் தற்பெருமை பேசுவது; இதைக் கேட்ட அர்ஜுனன் திரௌபதியிடம் சொல்லி உத்தரன் தன்னைத் தேரோட்டியாக அமர்த்த ஆவன செய்யுமாறு பணித்தது; திரௌபதி உத்தரையிடம் சென்று பிருஹந்நளன் குறித்துச் சொன்னது…

உத்தரன் சொன்னான், “குதிரைகளின் மேலாண்மையில் திறனுடைய ஒரு தேரோட்டி வந்தால், வில்லைப் பயன்படுத்துவதில் உறுதியுடன் இருக்கும் நான், பசுக்களின் பாதையைத் தொடர்ந்து இன்றே புறப்படுவேன். எனினும், எனக்குத் தேரோட்டியாக இருக்கத்தக்க மனிதனை நான் அறியவில்லை. எனவே, காலந்தாழ்த்தாமல், புறப்படத் தயாராக இருக்கும் எனக்கு ஒரு தேரோட்டியைத் தேடுங்கள். ஒரு மாதம் முழுமையோ அல்லது இருபத்தெட்டு இரவுகளோ {நாட்களோ} நாளுக்கு நாள் {தினமும்} தொடர்ச்சியாக நடந்த பெரும்போரில், எனது தேரோட்டி கொல்லப்பட்டான். குதிரைகளின் மேலாண்மையை அறிந்த மற்றொரு மனிதன் கிடைத்தவுடன், எனது கொடியை உயர ஏற்றி, உடனே புறப்படுவேன். பிறகு, யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த எதிரிப்படைக்கு மத்தியில் ஊடுருவி, ஆயுத வலிமையில் அற்பர்களும், பலவீனர்களுமான குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை நான் மீட்டு வருவேன்.


தானவர்களை அச்சுறுத்தும் இரண்டாவது வஜ்ரதாங்கியைப் {இந்திரனைப்} போல, துரியோதனன், பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர் மற்றும் அவரது மகன்  {அஸ்வத்தாமன்}ஆகியோரையும், அங்கே கூடியிருக்கும் வலிய வில்லாளிகளையும் போரில் அச்சுறுத்தி, இக்கணத்திலேயே நான் பசுக்களை மீட்டு வருவேன். (எதிர்க்க) யாருமற்றதாலேயே, குருக்கள் {கௌரவர்கள்} பசுக்களைக் கவர்ந்து செல்கின்றனர். நான் அங்கில்லாத போது, என்னால் என்ன செய்ய முடியும்? ஒன்றுகூடி வந்திருக்கும் குருக்கள் {கௌரவர்கள்} எனது பராக்கிரமத்தை இன்று சாட்சியாகக் காண்பார்கள். “நம்மை எதிர்ப்பது அர்ஜுனனா?” என்று அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்தையும் அறிந்த அர்ஜுனன், இளவரசனால் {உத்தரனால்} பேச்சப்பட்ட வார்த்தைகளைக் கேட்டான். பிறகு, சிறிது நேரம் கழித்து, துருபதன் மகளும், பாஞ்சால இளவரசியும், களங்கமற்ற அழகு கொண்டவளும், கொடியால் செய்யப்பட்டவளும், நெருப்பில் உதித்தவளும், உண்மை, நேர்மை ஆகிய அறங்களைக் கொண்டு, தனது கணவர்களின் நன்மையில் எப்போதும் கவனமுள்ளவளும், தனது அன்பிற்குரிய மனைவியுமான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} தனிமையில் பேசினான் {அர்ஜுனன்}. வீரனான அந்த அர்ஜுனன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகியே {திரௌபதி}, எனது வேண்டுதலின் படி உத்தரனிடம் தாமதமில்லாமல் சென்று, “திறமையும் உறுதியும் கொண்ட இந்தப் பிருஹந்நளன், பாண்டு மகனின் {அர்ஜுனனுடைய} தேரோட்டியாக இருந்தான். பல போர்களில் பங்குபெற்ற அவன் {பிருஹந்நளன்} உனது தேரோட்டியாகட்டும்” என்று சொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மகளிருக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் இளவரசன் {உத்தரன்} சொல்லிக் கொண்டிருந்த சொற்களைக் கேட்ட பாஞ்சாலியால் {திரௌபதியால்}, {அச்சொற்களில் இருந்த} பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} குறித்த மறைமுகக் குறிப்புகளை அமைதியாகத் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாணத்துடன் பெண்கள் மத்தியில் இருந்து வெளியேறிய அப்பாவியான அந்தப் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அவனிடம் {உத்தரனிடம்} இச்சொற்களை மெதுவாகப் பேசினாள். “வலிமைமிக்க யானைப் போன்றவரும், பிருஹந்நளன் என்ற பெயரில் அறியப்படுபவருமான அந்த அழகிய இளைஞர், முன்னர் அர்ஜுனருக்குத் தேரோட்டியாக இருந்தார். அந்தச் சிறப்புமிக்க வீரரின் {அர்ஜுனரின்} சீடரும், வில்லைப்பயன்படுத்துபவர்களில் யாருக்கும் சளைக்காதவருமான அவரை, நான் பாண்டவர்களுடன் வாழ்ந்து வந்த போதே அறிவேன். அக்னியால் காண்டவ வனம் எரிக்கப்பட்ட போது, அர்ஜுனருடைய அற்புதமான குதிரைகளின் கடிவாளத்தை இவரே பிடித்திருந்தார். இவரைத் தேரோட்டியாகக் கொண்ட பார்த்தர், காண்டவப்பிரஸ்தத்தின் அனைத்து உயிரினங்களையும் வீழ்த்தினார். உண்மையில், அவருக்கு {பிருஹந்நளனுக்கு} நிகரான தேரோட்டி வேறு ஒருவருமில்லை” என்றாள் {திரௌபதி}.

உத்தரன் {திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, இந்த இளைஞனை நீ அறிவாயா? இந்த அலியால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை நீ அறிந்திருக்கிறாய். எனினும், ஓ! அருளப்பட்டவளே {மாலினி}, என் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடிக்குமாறு நானே பிருஹந்நளையிடம் கோர முடியாது” என்றான்.

அதற்குத் திரௌபதி {உத்தரனிடம்}, “ஓ! வீரரே, அழகிய இடைகள் கொண்ட காரிகையான உனது தங்கையின் {உத்தரையின்} சொற்களுக்குப் பிருஹந்நளன் கீழ்ப்படிவார் என்பதில் ஐயமில்லை. அவர் {பிருஹந்நளன்} உனக்குத் தேரோட்டியாக இருக்கச் சம்மதித்தால், நீ குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை மீட்டுத் திரும்புவாய் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்காது” என்றாள் {திரௌபதி}.

சைரந்திரியால் இப்படிச் சொல்லப்பட்ட உத்தரன், தனது தங்கையிடம் {உத்தரையிடம்}, “ஓ! களங்கமற்ற அழகுடையவளே {உத்தரை}, நீயே சென்று பிருஹந்நளையை இங்கே அழைத்து வருவாயா?” என்று கேட்டான். தனது அண்ணனால் அனுப்பப்பட்ட அவள் {உத்தரை}, வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மாறுவேடத்தில் தங்கியிருந்த ஆடற்கூடத்திற்கு விரைந்து சென்றாள்.” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்