Wednesday, December 03, 2014

உத்தரனிடம் பேசிய மந்தையாளன்! - விராட பர்வம் பகுதி 35

The cowherd spoke to Uttara! | Virata Parva - Section 35 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 10)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : பசுக்களை மீட்க திரிகார்த்தர்களைத் தொடர்ந்து ஒருபுறம் விராடன் சென்ற போது, மறுபுறத்தில் துரியோதனனும் அவனது பரிவாரங்களும் நாட்டின் வேறு பகுதி மீது படையெடுத்துப் பசுக்களைக் கவர்வது; இச்செய்தியை மந்தையர்த்தலைவன் உத்தரனிடம் சென்று சொல்வது; உத்தரன் தற்புகழ்ச்சியாகப் பேச ஆரம்பிப்பது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பசுக்களை மீட்க ஆவல் கொண்ட மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, திரிகார்த்தர்களைத் தொடர்ந்து சென்ற போது, தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய துரியோதனன், விராடனின் ஆளுகைக்குட்பட்ட {வேறொரு} பகுதி மீது படையெடுத்தான். பீஷ்மர், துரோணர், கர்ணன், சிறந்த ஆயுதங்களை அறிந்த கிருபர், அசுவத்தாமன், சுபலனின் மகன் {சகுனி}, துச்சாசனன், விவிம்சதி, விகர்ணன், பெரும் சக்தி கொண்ட சித்திரசேனன், துர்முகன், துஸ்ஸகன் ஆகியோரும், ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இன்னும் பிற பெரும் வீரர்களும் மத்ஸ்ய ஆட்சிப் பகுதியை அடைந்து, மன்னன் விராடனின் மந்தையாளர்களை {இடையர்களை – கோ-பாலர்களை} விரைவாக விரட்டிவிட்டு, பசுக்களைப் பலவந்தமாகக் கவர்ந்தனர்.


தேர்க்கூட்டங்களால் அனைத்துப்புறங்களிலும் சூழப்பட்ட கௌரவர்கள், அறுபதினாயிரம் {60,000} பசுக்களைப் பிடித்தனர். அந்தப் பயங்கர மோதலில் அடிபட்ட மந்தையாளர்கள் {கோ-பாலர்கள்}, துயரத்தால் உரக்கக் கதறினார்கள். {அப்போது} மந்தையாளர்களின் தலைவன் {மந்தையர்த்தலைவன்} ஒருவன், பெருவேகத்துடன் தேரில் ஏறி, துக்கத்தில் அழுது கொண்டே நகரத்திற்குப் புறப்பட்டான். மன்னனின் {விராடனின்} நகரத்திற்குள் நுழைந்த அவன், அந்த இடத்திற்கு முன்னேறி, தேரில் இருந்து விரைந்து இறங்கி, (என்ன நடந்தது) என்பதை உரைக்கலானான். பூமிஞ்சயன் {உத்தரன்} என்ற பெயர் கொண்ட மத்ஸ்யனின் பெருமிக்க மகனைக் கண்டு, அரச பசுக்கள் பிடிப்பட்டது குறித்த அனைத்தையும் அவனிடம் {உத்தரனிடம்} தெரிவித்தான்.

மேலும் அவன் அறுபதினாயிரம் {60,000} பசுக்களைக் கௌரவர்கள் பிடித்ததாகவும் சொன்னான். {பிறகு, அவன்-மந்தையர்த்தலைவன்}, “எனவே, ஓ! நாட்டின் புகழை மேம்படுத்துபவனே {உத்தரா}, உனது கால்நடைகளைத் திரும்பக் கொண்டுவருவதற்காக எழு! ஓ! இளவரசே {உத்தரா}, (நாட்டின்) நன்மையை அடைய நீ விரும்பினால், நேரத்தைக் கடத்தாமல் உடனே புறப்படு. உண்மையில், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} உன்னை வெறுமையான நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறார். (உனது தந்தையான) மன்னர் {விராடர்}, “எனது மகன் எனக்கு நிகரான வீரனாவான். எனது குலத்தைத் (குலத்தின் பெருமையைத்) தாங்குபவன் அவனே. கணைகளிலும் ஆயுதங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த போர்வீரனான எனது மகன் {உத்தரன்} பெரும் துணிவு கொண்டவனாவான்” என்று சபையில் உன்னைக் குறித்துப் {எப்போதும்} பெருமையாகப் பேசுவார்.

ஓ!, அந்த மனிதர்களின் தலைவனுடைய {விராடனுடைய} சொல் உண்மையாகட்டும்! ஓ! மந்தை உரிமையாளர்களின் தலைவா {உத்தரா}, உனது கணைகளின் பயங்கர சக்தியால் குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகளை எரித்து, அவர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்டு வா. {யானைகளில்} தலைமை யானை, {வேறு யானை} மந்தையை விரட்டுவது போல, உனது வில்லில் இருந்து புறப்படும், தங்க இறகுகள் கொண்ட நேரான கணைகளைக் கொண்டு எதிரி தலைவர்களைத் துளைத்திடு. உனது வில் வீணையைப் போல இருக்கிறது. அதன் இரண்டு முனைகளும் தந்தத்தாலான தலையணையை ஒத்திருக்கிறது. அதன் முக்கியக் கம்பியான அதன் நாண், அதன் தண்டு, விரல்களைத் தாங்கும் இடம், அதில் இருந்து அடிக்கப்படும் அம்புகள் ஆகியன இசைக்குறிப்புகளைப் போல இருக்கின்றன. எதிரிகளுக்கு மத்தியில் இந்த வீணையின் {வில்லின்} இசையொலியால் {கணைமழையால்} {அவர்களை} அடித்திடு! [1]

[1] “இந்த ஒப்பீட்டைப் புரிந்து கொள்ள இந்திய வீணையின் பொறிமுறை {இயக்கவியல்} குறித்த அறிவு ஒரு வாசகருக்குத் தேவைப்படும். சுருக்கமாகச் சொல்வதென்றால், இரு முனைகளிலும் உள்ள பூசணிகள் போன்ற அமைப்புகளை ஒரு மூங்கில் இணைத்துக் கொண்டிருக்கும். அதுவே வீணை. விரல் வைக்கும் பலகையாகச் செயல்படும் அந்த மூங்கிலே அதன் முக்கிய நாணாக இருக்கும், மேலும் அதில் பல மெல்லிய கம்பிகள் இருக்கும். இவை அனைத்தும் பல {பின்னல் போன்ற} முனைகளையும், இரண்டரை ஏழ்நரம்புகளையும் கடந்து செல்லும். இந்த மொத்த அமைப்பே அந்தக் கருவியை அமைக்கிறது. {அந்த வீணையில்} சம்ஸ்க்ருதத்தில் உபதானங்கள் என்றும், உருதுமொழியில் ஸ்வரிஸ் என்றும் அழைக்கப்படும் தந்தத்தாலான அந்த இரு முனைகளில்தான் கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும்.” என்கிறார் கங்குலி

ஓ! தலைவா {உத்தரா}, வெள்ளி நிறம் கொண்ட உனது குதிரைகள் தேரில் பூட்டப்படட்டும். தங்க சிங்க இலச்சனை கொண்ட உனது கொடி ஏற்றப்படட்டும். தங்க இறகுகளும், கூரிய முனைகளும் கொண்ட கணைகள், உனது வலிய கரங்களால் அடிக்கப்பட்டு, சூரியனைத் தடுக்கும் கிரகணம் போல, அந்த மன்னர்களின் வழிகளைத் தடுக்கட்டும். அசுரர்களை வீழ்த்தும் வஜ்ரம் தாங்குபவனைப் {இந்திரனைப்} போல, அனைத்துக் குருக்களையும் {கௌரவர்களையும்} போர்க்களத்தில் வீழ்த்தி, பெரும் புகழை அடைந்து நகரம் திரும்புவாயாக. மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மகனாக நீ இருப்பதால், அறம்சார்ந்த வீரர்களில் முதன்மையான பாண்டு மகன்களில் அர்ஜுனன் போல நீயே இந்த நாட்டின் ஒரே புகலிடம். அவனது சகோதரர்களுக்கு அர்ஜுனன் எப்படியோ, அதே போல, இந்த நாட்டிற்குள் வசிப்போருக்கும் நீயே புகலிடம் என்பதில் ஐயமில்லை. உண்மையில், இந்த ஆட்சியின் குடிமக்களாகிய நாங்கள் உன்னில் எங்கள் பாதுகாவலனைக் கொண்டிருக்கிறோம்” என்றான் {மந்தையர்த்தலைவன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு, பெண்களுக்கு மத்தியில் மூச்சுக்கு மூச்சு வீரச் சொற்களைப் பேசிய அந்த மந்தையாளனால் {கோபாலனால்} இப்படிச் சொல்லப்பட்ட இளவரசன் {உத்தரன்}, தற்புகழ்ச்சியின் வெளிப்பாடாக {பின்வரும்} இச்சொற்களைச் சொன்னான்”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்