Thursday, December 04, 2014

போருக்குப் புறப்படுதல்! - விராட பர்வம் பகுதி 37

Setting out for war! | Virata Parva - Section 37 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 12)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : உத்தரனுக்குத் தேரோட்டியாகும்படி உத்தரை பிருஹந்நளையை வேண்டுவது; பிறகு உத்தரனும் வேண்டுவது; அர்ஜுனன் உத்தரனுடன் தேரில் புறப்படுவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படித் தனது தமையனால் {உத்தரனால்} அனுப்பப்பட்டவளும், தங்க அட்டிகையால் அலங்கரிக்கப்பட்டவளும், தன் தமையனுக்கு எப்போதும் கீழ்ப்படிபவளும், குளவி போன்ற மெல்லிய இடுப்பு கொண்டவளும், லட்சுமியைப் போன்ற பிரகாசமிக்கவளும், மயிலின் மென்மையான இறகைப் போன்ற அழகிய அங்கங்கள் கொண்டவளும், முத்து வலயங்கள் {zone of pearls) படர்ந்த இடுப்பு கொண்டவளும், சற்றே சரிந்த கண்ணிமைகள் கொண்டவளும், அனைத்து மங்கலங்களையும் தனது உருவில் கொண்டவளுமான தொலைபுகழ் கொண்ட மத்ஸ்யமன்னன் மகள் {உத்தரை}, கருமேகங்களை நோக்கி மின்னல் கீற்று விரைவதைப் போல ஆடற்கூடத்திற்கு விரைந்து சென்றாள்.


களங்கமற்றவளும் மங்களகரமானவளும், அழகிய பற்கள் கொண்டவளும், மெல்லிய இடுப்புடையவளும், யானையின் துதிக்கையைப் போன்ற தொடைகளும், அவை ஒன்றுக்கொன்று நெருக்கமானதாக அமையப்பட்டவளும், மேனியில் அற்புதமான மாலையைத் தரித்தவளுமான விராடன் மகள் {உத்தரை}, தன் துணையை நாடும் பெண் யானையைப் போலப் பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} அடைந்தாள். விலைமதிப்பற்ற ரத்தினம் போன்றவளும், இந்திரனுடைய செழிப்பின் உருவம் போன்றவளும், மிகுந்த அழகுடையவளும், அகன்ற கண்களுடையவளும், வழிபடப்பட்டுக் கொண்டாடப்படுபவளுமான அந்த அழகிய காரிகை அர்ஜுனனை வணங்கினாள். அவளால் {உத்தரையால்} வணங்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, நெருக்கமான தொடைகளும், தங்க நிறமும் கொண்ட அந்தக் கன்னிகையிடம் {உத்தரையிடம்}, “அட்டிகை பூட்டி வந்த காரிகையே, எது உன்னை இங்கு அழைத்து வந்தது? ஓ! மருண்ட பார்வை கொண்ட கன்னிகையே, உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்? ஓ! அழகிய பெண்ணே {உத்தரை}, உனது முகம் ஏன் உற்சாகமற்றிருக்கிறது? இவை யாவையும் தாமதமில்லாமல் எனக்குச் சொல்!” என்று கேட்டான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, (துயரத்தில் இருக்கும்) தோழியான அகன்ற கண்களுடைய இளவரசியைக் {உத்தரையைக்} கண்ட அவளது {உத்தரையின்} தோழன் (அர்ஜுனன்), உற்சாகத்துடன் (இச்சொற்களைச்) சொல்லி, அங்கே வந்த அவளது வருகைக்கான காரணத்தை விசாரித்தான். அந்த மனிதர்களில் காளையை {அர்ஜுனனை} அணுகிய அந்த இளவரசி {உத்தரை}, தனது பெண் பணியாட்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, தனது பணிவைச் சரியாகக் காட்சிப்படுத்தி, அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பிருஹந்நளா, இந்த ஆட்சிக்குட்பட்ட பசுக்கள், குருக்களால் {கௌரவர்களால்} ஓட்டிச் செல்லப்படுகின்றன. அவற்றை வெற்றிக் கொள்ள எனது தமையன் {உத்தரன்} கையில் வில்லுடன் புறப்பட இருக்கிறார். சமீபத்தில்தான் அவரது தேரோட்டி போர்க்களத்தில் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட எனது தமையனின் தேரோட்டிக்கு நிகராகச் செயல்படக்கூடியவர் வேறு ஒருவரும் இல்லை. ஒரு தேரோட்டியை அடைய முயன்று வரும் அவரிடம் {உத்தரரிடம்}, ஓ! பிருஹந்நளா, குதிரைகளின் மேலாண்மையில் உனக்கிருக்கும் நிபுணத்துவத்தைக் குறித்துச் சைரந்திரி {மாலினி} பேசினாள். முன்பொரு சமயத்தில் நீயே அர்ஜுனரின் தேரோட்டியாக இருந்திருக்கிறாய். உன்னுடன் சேர்ந்துதான் அந்தப் பாண்டு மகன்களின் காளை {அர்ஜுனர்} தனியாக முழு உலகையும் அடக்கியிருக்கிறார். எனவே, ஓ! பிருஹந்நளா, நீ எனது தமையனின் {உத்தரனின்} தேரோட்டியாகச் செயல்படுவாயாக. (இந்நேரத்தில்) நமது பசுக்களைப் பெருந்தூரத்திற்குக் குருக்கள் {கௌரவர்கள்} ஓட்டிச் சென்றிருப்பார்கள். என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், என் சொற்களுக்கு நீ செயலாற்றவில்லையென்றால், பாசத்துடன் இந்தச் சேவையை உன்னிடம் கேட்கும் நான் எனது உயிரை விடுவேன்” என்றாள் {உத்தரை}.

இப்படி, அழகிய இடுப்புக் கொண்ட தனது தோழியால் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்குபவனான அளவிலா பராக்கிரமம் கொண்டவன் {அர்ஜுனன்}, அந்த இளவரசனின் {உத்தரனின்} முன்பு சென்றான். கன்றுக்குப் பின் ஓடும் பெண்யானையைப் போல, அகன்ற கண்களைக் கொண்ட அந்த இளவரசியும் {உத்தரையும்}, மதநீர் பெருகிய யானை போல விரைந்த நடையுடன் சென்ற அந்த வீரனைப் {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றாள். தூரத்திலேயே அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட அந்த இளவரசன் {உத்தரன்}, “உன்னைத் தனது தேரோட்டியாகக் கொண்டே, காண்டவ வனத்தில், குந்தியின் மகனான தனஞ்சயர் {அர்ஜுனர்}, அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்து, முழு உலகையும் அடக்கியிருக்கிறார். சைரந்திரி உன்னைக் குறித்து என்னிடம் சொன்னாள். அவள் பாண்டவர்களை அறிவாள். எனவே, ஓ! பிருஹந்நளா, எனது குதிரைகளின் கடிவாளங்களை நீ பிடிப்பாயாக, எனது செல்வங்களான பசுக்களை மீட்கும்பொருட்டு, நான் குருக்களுடன் {கௌரவர்களுடன்} மோத விரும்புகிறேன். முன்னர், நீ அர்ஜுனரின் அன்புக்குரிய தேரோட்டியாக இருந்திருக்கிறாய். உன்னுடன் சேர்ந்தே அந்தப் பாண்டு மகன்களில் காளை {அர்ஜுனர்} இந்த முழு உலகையும் தனி ஆளாக அடக்கியிருக்கிறார்!” என்றான் {உத்தரன்}. இப்படிச் சொல்லப்பட்ட பிருஹந்நளை, அந்த இளவரசனிடம் {உத்தரனிடம்}, “போர்க்களத்தில் தேரோட்டியாகச் செயல்பட எனக்குத் திறன் ஏது? பாடலோ, இசைக்கருவிகளுடன் கூடிய ஆடலோ அல்லது அவை போன்ற பிறவோ என்றால், நான் உன்னை மகிழ்விப்பேன். ஆனால் ஒரு தேரோட்டி ஆவதற்கான திறன் என்னிடம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டாள்.

அதற்கு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “ஓ பிருஹந்நளா, நீ பாடகராகவோ, ஆடற்கலைஞராகவோ இரு {இருந்து கொள்}. (இப்போது) காலந்தாழ்த்தாமல், எனது அற்புதக் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு எனது தேரில் ஏறுவாயாக!” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த எதிரிகளை ஒடுக்குபவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அனைத்தையும் அறிந்திருந்தாலும், உத்தரனின் முன்னிலையில், பல தவறுகளை வேடிக்கையின் பொருட்டுச் {கேலிக்காகச்} செய்யத் தொடங்கினான். அவன் {அர்ஜுனன்} கவசத்தை எடுத்து தலைகீழாக அணிந்து கொள்ள முயன்றபோது, அதைக் கண்ணுற்ற அகன்ற விழிகள் கொண்ட மாதரனைவரும் உரத்த சிரிப்பை வெடித்துச் சிரித்தனர். அவன் கவசம் அணிவதைக் கூட அறியாதிருப்பதைக் கண்ட உத்தரன், தானே பிருஹந்நளைக்கு விலையுயர்ந்த கவசத்தை அணிவித்தான். சூரியப்பிரகாசம் கொண்ட கவசத்தைத் தன் மேனியில் தரித்துக் கொண்டு, சிங்க உருவம் பொறித்த கொடியைத் தனது கம்பத்தில் உயர்த்திய இளவரசன் {உத்தரன்}, பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாக்கிக் கொண்டான். கடிவாளத்தைப் பிருஹந்நளை பற்றும்படி செய்த அந்த வீரன் தன்னுடன் பல விலையுயர்ந்த விற்களையும், அதிக எண்ணிக்கையிலான அழகிய கணைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். பிறகு, {அர்ஜனனின்} தோழியான உத்தரை தனது பணிப்பெண்களுடன் சேர்ந்து பிருஹந்நளையிடம், “ஓ! பிருஹந்நளா, கூடியிருக்கும் குருக்களில், போர்க்களத்தில் முதன்மையான பீஷ்மர் மற்றும் துரோணரை வீழ்த்திய பிறகு, (நீ திரும்பி வரும்போது) நமது பாவையருக்கு பலவிதமான நல்ல அழகிய துணிகளைக் கொண்டுவா” என்றாள் {உத்தரை}. இப்படிச் சொல்லப்பட்ட பாண்டு மகனான பார்த்தான் {அர்ஜுனன்}, மேகங்களின் உறுமலைப் போன்ற ஆழ்ந்த குரலில், அந்த மங்கையர்க்கூட்டத்திடம் சிரித்துக் கொண்டே, “அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களை உத்தரன் வீழ்த்தினால், நான் நிச்சயம் அற்புதமான அழகிய துணிகளைக் கொண்டு வருவேன்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இச்சொற்களைச் சொன்ன வீரனான அர்ஜுனன், எண்ணற்ற கொடிகள் பறக்கும் குரு {கௌரவப்} படையை நோக்கி குதிரைகளை விரைந்து செலுத்தினான். எனினும், அவர்கள் புறப்படுவதற்குச் சற்று முன்பு, பிருஹந்நளையைத் தேரோட்டியாகக் கொண்டு, உயர்ந்து பறக்கும் பெரும் கொடியைக் கொண்ட தனது அற்புதத் தேரில் அமர்ந்திருக்கும் உத்தரனைக் கண்ட முதிய பெருமாட்டிகளும் {பேரிளம்பெண்களும்}, கன்னியரும், கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்களும், அந்த வீரனை {உத்தரனை} வாழ்த்தும் வகையில் தேரை வலம் வந்தனர். அப்போது பெண்கள், “ஓ! பிருஹந்நளா, இன்று நீ இளவரசன் உத்தரனுடன் சேர்ந்து குருக்களிடம் மோதும்போது, பழங்காலத்தில் காண்டவ வனத்தை எரித்த போது காளையைப் போல நடக்கும் அர்ஜுனன் பெற்ற அதே வெற்றி {அப்போது} உனதாகட்டும்” என்று வாழ்த்தினர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்