Thursday, December 25, 2014

தோற்றுத் திரும்பிய குருக்கள்! - விராட பர்வம் பகுதி 65

Kurus went back defeated! | Virata Parva - Section 65 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 40)






பதிவின் சுருக்கம் :அர்ஜுனனின் வசைகளைத் தாங்கிக் கொள்ளாமல் திரும்பி வந்த துரியோதனனைக் கர்ணன் தடுத்து தானே அர்ஜுனனை எதிர்த்துச் சென்றது; கௌரவர்கள் அனைவரும் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டு தாக்குவது; சம்மோகனம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அர்ஜுனன் கௌரவர்களை மயக்குவது; அவர்களது ஆடைகளை எடுத்துக் கொள்வது; பீஷ்மர் துரியோதனனை ஹஸ்தினாபுரம் திரும்புமாறு வேண்டுவது; அர்ஜுனன் அடைந்த வெற்றி...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அந்த ஒப்பற்ற வீரனால் {அர்ஜுனனால்} அழைக்கப்பட்ட அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, அந்தக் கண்டனங்களால் குத்தப்பட்டு, அங்குசத்தால் குத்தப்பட்ட வலிமையும் சீற்றமும் மிக்க யானையைப் போலத் திரும்பினான். தன்னால் தாங்கிக் கொள்ளமுடியாத நிந்தனைகளால் குத்தப்பட்ட அந்த வலிமையும் துணிச்சலும் மிக்கத் தேர்வீரன் {துரியோதனன்}, பாம்பை மிதித்துவிட்டவன் போலப் பெரும் வேகத்துடன் தனது தேரைத் திருப்பினான். தங்க அட்டிகையால் அலங்கரிக்கப்படவனும், மனிதர்களில் வீரனுமான கர்ணன், காயங்களுடன் துரியோதனன் திரும்புவதைக் கண்டு,  அம்மன்னனை {துரியோதனனை} வழியிலேயே தடுத்து நிறுத்தி, அவனுக்கு {துரியோதனனுக்கு} ஆறுதல் அளித்து, துரியோதனனின் தேருக்கு வடக்கில் இருந்த பார்த்தனைப் {அர்ஜுனனைப்} போரில் சந்திக்க அவனே {கர்ணனே} சென்றான்.


சந்தனுவின் மகனான பீஷ்மரும், பார்த்தன் {அர்ஜுனன்} கையில் இருந்து துரியோதனனைக் காக்க, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய பழுப்பு நிற குதிரைகளைத் திருப்பி, கையில் வில்லுடன் விரைந்தார். துரோணர், கிருபர், விவிங்சதி, துச்சாசனன், மற்றும் பிறரும், இழுத்துப் பிடித்த விற்கள் மற்றும் வில்லின் நாணில் பொருத்தப்பட்ட கணைகளுடன் துரியோதனனைக் காப்பதற்காக விரைவில் திரும்பினார்கள். அலைகள் பெருகும் கடலெனத் தன்னை நோக்கி முன்னேறி வரும் படைப்பிரிவுகளைக் கண்டப் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தாழும் மேகத்தை நோக்கி கொக்கு விரைவதைப் போல அவர்களை நோக்கி விரைந்தான். கையில் தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட அவர்கள் பிருதையின் மகனை {அர்ஜுனனை} முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டு, மலைமீது மேகங்கள் கனத்த மழையைப் பொழிவதைப் போல, அவன் {அர்ஜுனன்} மீது அனைத்துப் புறங்களில் இருந்தும் கணை மழையைப் பொழிந்தனர்.

தனது ஆயுதங்களைக் கொண்டு, அந்த அனைத்து ஆயுதங்களையும் தள்ளியவனும், குருக்களில் காளையும், அனைத்து எதிரிகளையும் எதிர்க்க வல்லவனுமான அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, இந்திரனிடம் இருந்து தான் பெற்ற, {யாராலும்} தாங்கிக் கொள்ள முடியாத ஆயுதமான சம்மோகனம் {ஸம்மோஹனம்} என்ற ஆயுதத்தை அடித்தான். அனைத்துப் புறங்களையும் திசைப்புள்ளிகளையும், அழகிய இறகுகள் கொண்ட தனது கூர்முனைக் கணைகளால் நிறைத்த அந்த வலிமைமிக்க வீரன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தின் நாணொலியால் அவர்களது உணர்வுகளை மழுங்கடித்தான். பிறகு, தனது இரு கைகளாலும் சங்கை எடுத்து மீண்டும் ஒருமுறை, வலிமையுடன் உரக்க ஊதிய எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, அனைத்து திசைப்புள்ளிகளையும், முழு உலகத்தையும், வானத்தையும் அவ்வொலியால் நிறைத்தான்.

பார்த்தனால் {அர்ஜுனனால்} ஊதப்பட்ட அந்தச் சங்கொலியால், குருவீரர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்தனர். எப்போதும் பிரியாத தங்கள் விற்கள் கைகளில் இருந்து விழும்வண்ணம் அவர்கள் அனைவரும் அப்படியே நின்றனர். அந்தக் குரு படை மயங்கியிருந்த அவ்வேளையில், உத்தரையின் சொற்களை மனதில் நினைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, மத்ஸ்ய மன்னனின் மகனிடம் {உத்தரனிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவனே {உத்தரா}, குருக்கள் மயங்கியிருக்கும் வரையில் நீ அவர்கள் மத்தியில் சென்று துரோணர், கிருபர் ஆகியோருடைய வெள்ளாடைகளையும், மஞ்சள் நிறத்தில் அழகாக இருக்கும் கர்ணனின் ஆடையையும், மன்னன் {துரியோதனன்} மற்றும் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} நீல நிற ஆடைகளையும் எடுத்து வா. பீஷ்மர் மயக்கத்திலில்லை என்று நான் நினைக்கிறேன். அவரால் எனது ஆயுதங்களுக்கு எதிர்வினை புரிய முடியும். எனவே அவரது குதிரைகளை இடது புறம் கொண்டு கடந்து போ. மயக்கத்திலில்லாதவர்களை இப்படியே தவிர்க்க வேண்டும்” என்றான் {அர்ஜுனன்}.

இச்சொற்களைக் கேட்ட மத்ஸ்யனின் ஒப்பற்ற மகன் {உத்தரன்}, குதிரைகளின் கடிவாளத்தைவிட்டு, தேரில் இருந்து இறங்கி, அவ்வீரர்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு, தன்னிடத்திற்குத் திரும்பி வந்தான். பிறகு அந்த விராடன் மகன் {உத்தரன்}, தங்கக் கவசம் பூண்ட நான்கு குதிரைகளையும் விரைந்து ஓட்டினான். அப்படி விரைந்து ஓடிய வெள்ளைக் குதிரைகள், கைகளில் கொடிதாங்கிய காலாட்படையினரின் வரிசைக்கப்பால், அர்ஜுனனை அவர்களுக்கு வெளியே இட்டுச் சென்றன. மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} இப்படிச் செல்வதைக் கண்ட பீஷ்மர், தனது கணைகளால் அவனைத் தாக்கினார்.

பீஷ்மரின் குதிரைகளைக் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, பத்து கணைகளால் அவரையும் {பீஷ்மரையும்} துளைத்தான். அவரது தேரோட்டியை முதலில் கொன்ற அர்ஜுனன், கையில் அழகிய வில்லுடன், எண்ணற்ற தேர்களைக் கடந்து, மேகங்களை விட்டு வெளியேறும் சூரியனைப் போல வெளியே வந்தான். குருவீரர்களில் முதன்மையான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தனது உணர்வு மீண்டு {மயக்கம் தெளிந்து}, தேவர்களின் தலைவனைப் போல {இந்திரனைப் போல}, அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, போர்க்களத்தில் தனியாக நிற்பதைக் கண்டான். அவன் {துரியோதனன்} விரைந்து (பீஷ்மரிடம்), “அவன் எப்படி உம்மிடம் இருந்து தப்பினான்? அவன் தப்பாதவாறு நீர் அவனைத் தாக்குவீராக” என்றான்.

அதற்கு, சிரித்தபடியே அவனிடம் {துரியோதனனிடம்} சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, “அழகிய வில்லையும், உனது கணைகளையும் துறந்து நீ மயங்கி இருந்தபோது, இந்த உனது உணர்வும், பராக்கிரமமும் எங்கிருந்தன? பீபத்சு {அர்ஜுனன்}, அட்டூழியங்கள் புரிவதற்கு அடிமையானவனல்ல {அட்டூழியங்கள் புரியமாட்டான்}; அல்லது அவன் ஆன்மா எப்போதும் பாவத்தை நோக்காது. மூன்று உலகங்களுக்காகவும் அவன் {அர்ஜுனன்} தன் கொள்கைகளை விட்டுக் கொடுப்பவனல்ல. அதனால்தான் நாம் அனைவரும் {இப்படி மயக்கமடைந்த போதிலும்} இந்தப் போரில் கொல்லப்படாமல் இருக்கிறோம். ஓ! குருவீரர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, குருக்களின் நகரத்திற்குத் திரும்புவாயாக. பசுக்களை வென்று பார்த்தனும் திரும்பிச் செல்லட்டும். மூடத்தனமாக உனது நன்மையைத் தூக்கி வீசாதே. உண்மையில், ஒருவனுக்கு நன்மை எதுவோ, அதுவே {அவனால்} சாதிக்கப்பட வேண்டும்” என்றார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது நன்மைக்காகச் சொல்லப்பட்ட பாட்டனின் சொற்களைக் கேட்ட கோபக்கார மன்னன் துரியோதனன், மேலும் போரிட ஆர்வமில்லாததால், நீண்ட பெருமூச்சு விட்டபடி அமைதியடைந்தான். பீஷ்மர் சொன்ன அறிவரை தனக்கு நன்மையே தரும் என்பதை நினைத்தும், பலத்தில் வளர்ந்திருக்கும் பாண்டவர்களைக் கண்டு அவனும் {துரியோதனனும்}, துரியோதனனைக் காக்க விரும்பிய பிற வீரர்களும் {தங்கள் நாட்டுக்குத்} திரும்பிச் செல்லத் தீர்மானித்தனர். அந்தக் குரு வீரர்கள் தங்கள் நகரத்திற்குத் திரும்பிச் செல்வதைக் கண்டப் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவர்களிடம் பேசவும், அவர்களை வழிபடவும் விரும்பி, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சிறிது நேரம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். சந்தனுவின் மகனான வயது முதிர்ந்த பாட்டனையும் {பீஷ்மரையும்}, ஆசானான துரோணரையும் வழிபட்ட பிறகு, துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, கிருபரையும், பிற மதிப்பிற்குரிய வீர்களையும் அழகிய கணைகளால் வணங்கிய பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, மற்றொரு கணையால், மதிப்புமிக்க ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த துரியோதனனின் கிரீடத்தைத் துண்டுகளாக உடைத்தான்.

துணிச்சலும் மதிப்பும் மிக்க, அனைத்து வீரர்களையும் வணங்கிய பிறகு, அவன் {அர்ஜுனன்}, காண்டீவத்தின் நாணொலியால் மூன்று உலகங்களையும் நிறைத்தான். திடிரெனத் தனது சங்கான தேவதத்தத்தை எடுத்து ஊதி, தனது எதிரிகளின் இதயங்களை அவ்வீரன் {அர்ஜுனன்} துளைத்தான். எதிரிகளை {இப்படிச்} சிறுமைபடுத்தியபிறகு, அவன் {அர்ஜுனன்}, அழகிய கொடியுடன் கூடிய தேரில் பிரகாசமாகத் தெரிந்தான். குருக்கள் திரும்புவதைக் கண்ட கிரீடி {அர்ஜுனன்}, மத்ஸ்யன் மகனிடம் {உத்தரனிடம்} மகிழ்ச்சியாக, “உனது பசுக்களை மீட்டு, உனது குதிரைகளைத் திருப்புவாயாக; எதிரிகள் செல்கின்றனர். நீயும் உனது நகரத்திற்கு மகிழ்ச்சிநிறைந்த இதயத்துடன் திரும்புவாயாக” என்றான். பல்குனனுக்கும் {அர்ஜுனனுக்கும்} குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற மிக அற்புதமான இந்த மோதலைச் சாட்சியாகக் கண்ட தேவர்களும் பெருமகிழ்ச்சியுடன், பார்த்தனின் {அர்ஜுனனின்} சாதனைகளை நினைத்துப் பார்த்தபடி, தங்களுக்கு உரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்