Thursday, December 25, 2014

அதே வன்னிமரம்! - விராட பர்வம் பகுதி 66

The same sami tree! | Virata Parva - Section 66 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 41)






பதிவின் சுருக்கம் :அர்ஜுனனைத் தஞ்சம் அடைந்த கௌரவப் படைவீரர்கள்; அபயமளித்த அர்ஜுனன்; அர்ஜுனனும் உத்தரனும் மீண்டும் வன்னிமரத்தை அணுகி உடை மாற்றிக் கொள்வது; அர்ஜுனன் உத்தரனிடம் உத்தரனே இப்போரை வென்றதாக அவனது தந்தையிடம் சொல்லச் சொல்வது; விராட நகரத்தை அடைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களைப் போரில் வீழ்த்தியபிறகு, காளையின் கண் போன்ற கண்களைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, பெரும் அளவிலான விராடனின் கால்நடைச் செல்வங்களை {பசு மந்தையை} திரும்ப மீட்டான். திருதராஷ்டிரர்கள் {திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும்} படுதோல்வியடைந்து சென்ற பிறகு, பெரும் எண்ணிக்கையிலான குரு படைவீரர்கள், ஆழ்ந்த கானகத்தில் இருந்து வெளியேறி, இதயத்தில் அச்சத்துடன், பார்த்தனின் {அர்ஜுனனின்} முன்பு வந்தனர். கலைந்த கேசத்துடனும், கூப்பிய கரங்களுடனும் அவர்கள் அவன் {அர்ஜுனன்} முன்பு வந்தனர். அந்நிய நிலத்திற்கு வந்து, பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து, அச்சத்தால் உணர்வற்றுப் போய், மனக் குழப்பமடைந்திருந்த அவர்கள் அனைவரும், பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} முன்பு வந்து, “நாங்கள் உமது அடிமைகள்” என்றனர்.


அர்ஜுனன் {சரணடைந்த கௌரவப் படைவீரர்களிடம்}, “நல்வரவு. நீங்கள் அருளப்பட்டிருங்கள். நீங்கள் செல்லலாம். நீங்கள் அஞ்ச வேண்டிய காரணமேதும் இல்லை. துக்கமுற்றவர்களை நான் கொல்வதில்லை. உங்கள் பாதுகாப்புக்கான உறுதியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உறுதிகூறப்பட்ட இச்சொற்களைக் கேட்டு, கூடியிருந்த அவ்வீரர்கள், அவனது {அர்ஜுனனின்} சாதனைகள், புகழ் ஆகியவற்றைப் பாராட்டி, அவனது {அர்ஜுனனின்} நீண்ட வாழ்நாளுக்கான {நீண்ட ஆயுளுக்கான} நன்மொழிகளையும் {ஆசீர்வாதங்களையும்} கூறினர். எதிரியை முறியடித்து, மதங்கொண்ட யானையைப் போல விராடனின் நகரத்தை நோக்கி முன்னேறிய அர்ஜுனனைக் கௌரவர்களால் எதிர்கொள்ளமுடியவில்லை. மேகங்களைக் கலைக்கும் கடுங்காற்றைப் போல, மொத்த குரு {கௌரவப்} படையையும் முறியடித்த எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, மதிப்புடன், மத்ஸ்ய இளவரசனிடம் {உத்தரனிடம்}, “ஓ! குழந்தாய் {உத்தரா}, பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்} அனைவரும் உனது தந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நீ மட்டுமே அறிவாய். நகரில் நுழைந்ததும் அவர்களைப் {பாண்டவர்களைப்} புகழ்ந்துவிடாதே. ஏனெனில், அதனால் மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} அச்சங்கொண்டு, ஒளிந்து கொள்ள நேரிடும். அதற்குப் பதில், நகரத்தில் நுழைந்ததும், உனது தந்தையின் முன்னிலையில், “குருக்களின் படை என்னால் வீழ்த்தப்பட்டது. எதிரியிடமிருந்து பசுக்களும் என்னால் மீட்கப்பட்டன” என்று சொல்லி, இந்தச் செயல் உன்னால் ஆனதே என்று அறிவிப்பாயாக” என்றான் {அர்ஜுனன்}.

அதற்கு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நீர் அடைந்த சாதனை எனது சக்திக்கு அப்பாற்பட்டது. அதை அடைவதற்கான திறனை நான் பெற்றிருக்கவில்லை. எனினும், ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனரே}, நீர் அதைச் செய்யச் சொல்லாத வரை, நான் எனது தந்தையிடம், உம்மைக் குறித்துச் சொல்ல மாட்டேன்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “எதிரி படையை வீழ்த்தி, குருக்களிடம் இருந்து, கால்நடைச் செல்வங்கள் முழுவதும் கைப்பற்றப்பட்ட பிறகு, ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மீண்டும் அந்த மயானத்திற்குத் திரும்பி வந்து, அதே வன்னி மரத்தை அடைந்து, எதிரிகளின் கணைகளால் சிதைக்கப்பட்ட உடலுடன் அங்கே நின்றான். பிறகு, நெருப்பு போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்தப் பயங்கரக் குரங்கு அந்தக் கொடிக்கம்பத்தில் இருந்த பிற உயிரினங்களுடன் சேர்ந்து வானத்தில் உயர்ந்தது {அந்தப் பெரிய வானரம், பூதங்களுடன் சேர்ந்து ஆகாயத்தில் கிளம்பியது}. (விஸ்வகர்மாவால்} உண்டாக்கப்பட்ட அந்த மாயை கறைந்து போய், சிங்க இலச்சனை பொறித்த உத்தரனின் கொடி அந்தத் தேரில் நிறுவப்பட்டது. அந்தக் குரு இளவரசர்களில் முதன்மையானவனின் {அர்ஜுனனின்} கணைகளையும், அம்பறாத்தூணிகளையும், போர்க்களத்தின் கடுமையை அதிகரிக்கும் வேறு ஆயுதத்தையும் (காண்டீவத்தையும்) {வன்னி மரத்தில்} மீண்டும் வைத்துவிட்டு, கிரீடியைத் {அர்ஜுனனைத்} தேரோட்டியாகக் கொண்டு மத்ஸ்யத்தின் ஒப்பற்ற இளவரசன் {உத்தரன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் நகரத்திற்குப் புறப்பட்டான். வலிமைமிக்கப் பெரும்சாதனையை அடைந்த எதிரியைக் கொல்பவனான பார்த்தனும் {அர்ஜுனனும்}, தனது தலைமுடியை முன்பு போலவே பின்னலாகக் கட்டி, உத்தரனின் கரங்களில் இருந்து கடிவாளங்களைப் பெற்றுக் கொண்டான். பிறகு அந்த ஒப்பற்ற வீரன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மீண்டும் பிருஹந்நளையாக மாறி, உத்தரனின் தேரோட்டியாக விராடனின் நகரத்திற்குள் நுழைந்தான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கௌரவர்கள் அனைவரும் முற்றிலும் முறியடிக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, தளர்ந்த மனநிலையுடன் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றதும், {நகரம் நோக்கித்} திரும்பிக் கொண்டிருந்த பல்குனன் {அர்ஜுனன்}, உத்தரனிடம், “ஓ! இளவரசே, ஓ! வலிய கரங்கள் கொண்ட வீரா {உத்தரா}, பசுமந்தையாளர்களால் {மாட்டிடையர்களால்}, பாதுகாக்கப்பட்டபடியே பசுக்கள் முன்னே செல்லட்டும். குதிரைகளைக் {நீர்} குடிக்கச் செய்து {நீர்காட்டி}, குளிக்கச் செய்து, அவற்றை நன்றாகத் தேற்றிய பிறகு, பிற்பகலில் {மதிய வேளையில்} நாம் தலைநகருக்குள் நுழையலாம். உன்னால் அனுப்பப்படும் பசுமந்தையாளர்கள் {கோபாலர்களான மாட்டிடையர்கள்}, {இந்த} நற்செய்தியோடு நகரத்திற்கு விரைந்து சென்று, உனது வெற்றியை {முன்} அறிவிக்கட்டும் {பிரகடனம் செய்யட்டும்}” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனின் சொற்களுக்கு இசைவாக, உத்தரன் தூதுவர்களிடம், “சென்று மன்னனின் {விராடரின்} வெற்றியை அறிவியுங்கள்” என்று விரைந்து கட்டளையிட்டான். எதிரி முறியடிக்கப்பட்டு, பசுக்கள் மீட்கப்பட்டதும், அந்த மத்ஸ்யனும் {உத்தரனும்}, பாரத இளவரசனும் {அர்ஜுனனும்} தங்களுக்குள் ஆலோசித்தபடியே மீண்டும் வன்னி மரத்தை அணுகினர். தாங்கள் பெற்ற வெற்றியால் மனம் நிறைந்த அவர்கள், வன்னி மரத்தின் அடியை அடைந்து, அங்கே அவர்கள் விட்டுச் சென்ற தங்கள் ஆடை ஆபரணங்களைத் தங்கள் தேரில் எடுத்துக் கொண்டு, அந்த இடத்தை விட்டு அகன்றனர். எதிரியின் மொத்தப் படையையும் வீழ்த்தி, குருக்களிடமிருந்து மொத்த செல்வத்தையும் {மொத்த கால்நடைச் செல்வத்தையும்} மீட்ட பிறகு, பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாகக் கொண்ட விராடனின் வீரமகன் {உத்தரன்} நகரத்திற்குத் திரும்பினான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்