Saturday, December 27, 2014

அறத்தின் திருவுருவம் யுதிஷ்டிரன்! - விராட பர்வம் பகுதி 70

Yudhishthira, the embodiment of virtue? | Virata Parva - Section 70 | Mahabharata In Tamil

(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 45)






பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு விராடனின் சபையில் மன்னர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வது; அங்கே வந்த விராடன் அதைக் கண்டு கோபமுற்று, கங்கனை நிந்திப்பது; அர்ஜுனன் விராடனைப் பரிகசிக்கும் வகையில் யுதிஷ்டிரனின் புகழைச் சொல்வது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, {அன்றிலிருந்து} மூன்றாவது நாளில் [1] குளித்து முடித்து வெள்ளுடை உடுத்தி, அனைத்து வகைகளிலாலான ஆபரணங்களும் தரித்துக் கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களான ஐந்து பாண்டவ சகோதரர்களும், தங்கள் நோன்பை முடித்து, ஐந்து மதங்கொண்ட யானைகளைப் போல யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு, பிரகாசத்துடன் அரண்மனை வாயிலுக்குள் நுழைந்தனர். விராடனின் சபா மண்டபத்துக்குள் நுழைந்த அவர்கள், மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அரியணைகளில் அமர்ந்து கொண்டு, வேள்விப்பீடத்தில் இருக்கும் நெருப்புகள் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர். அப்படிப் பாண்டவர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்த பிறகு, பூமியின் தலைவனான விராடன், தனது அரச அலுவல்களை முடித்து, தனது சபையை நடத்த அங்கே வந்தான். சுடர்விடும் நெருப்புகளைப் போன்ற ஒப்பற்ற பாண்டவர்களைக் கண்டு சிறிது நேரம் அந்த மன்னன் {விராடன்} சிந்தித்தான். பிறகு, கோபம் நிறைந்த மத்ஸ்ய மன்னன், மருதர்களால் சூழப்பட்ட தேவர்கள் தலைவனைப் போல அமர்ந்திருந்த கங்கனிடம் பேசினான். அவன் {விராடன்}, “பகடையாட்டக்காரனான நீ என்னால் சபை உறுப்பினராகவே அமர்த்தப்பட்டாய்! அழகிய ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு, அரச ஆசனத்தில் நீ எப்படி அமரலாம்?” என்று கேட்டான்.


[1] இரண்டாவது நாளில் என்று ஒரு பதிப்பில் இருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, விராடனின் சொற்களைக் கேட்டு அவனைக் கேலி செய்ய விரும்பிய அர்ஜுனன், அவனிடம் {விராடனிடம்} புன்னகையுடன், “இந்த மனிதர், ஓ! மன்னா {விராடரே}, இந்திரனுடன் சேர்ந்து ஒரே ஆசனத்தில் அமரத் தகுந்தவராவார். அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, வேதங்களை அறிந்து, ஆடம்பரம் மற்றும் உடல் இன்பங்களை அலட்சியப்படுத்தி, வேள்விகள் செய்வதை வழக்கமாகக் கொண்டு, நோன்புகளில் நிலைத்து நின்று, சக்தி கொண்ட அனைத்து மனிதர்களிலும், முதன்மையானவரும், பூமியில் உள்ள அனைவரிலும் புத்திசாலித்தனத்தில் மேன்மையானவரும், தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், பல்வேறு ஆயுதங்களை அறிந்தவருமான இவர் உண்மையில் அறத்தின் உருவமாவார் {உடல் கொண்டு வந்த தர்மம் [தர்மதேவன்] ஆவார்}.

மூன்று உலகத்திலும் உள்ள அசையும் மற்றும் அசையாத உயிரினங்களில் யாரும் இத்தகு {இவர் கற்று வைத்திருக்கும்} ஆயுதங்களின் அறிவை இதுவரை அடைந்தது இல்லை, இனி அடையப்போவதும் இல்லை. தேவர்களிலோ, அசுரர்களிலோ {Asuras}, மனிதர்களிலோ, ராட்சசர்களிலோ {Rakshasas}, கந்தர்வர்களிலோ {Gandharvas}, யக்ஷத் தலைவர்களிலோ {Yaksha chiefs}, கின்னர்களிலோ {Kinnaras}, ஊர்க்கர்களிலோ {Uragas} இவரைப் போன்ற ஒருவரும் இல்லை. பெரும் முன்னறிதிறமும் {தீர்க்கதரிசனமும்}, சக்தியும் கொண்டு, குடிமக்கள், மாகாணங்களில் வசிப்பவர்கள் ஆகியோரால் விரும்பப்படும் இவரே பாண்டு மகன்களில் {பாண்டவர்களில்} பெரும்பலமிக்கத் தேர்வீரராவார். வேள்விகளைச் செய்பவரும், அறநெறிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், ஆசைகளை அடக்கியவரும், பெரும் முனிவரைப் போன்றவருமான இந்த அரசமுனி அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படுபவராவார். பெரும் பலமும், பெரும் புத்திசாலித்தனமும், திறனும், உண்மையும் {சத்தியமும்}, கொண்ட இவர் தனது புலன்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராவார். செல்வத்தில் இந்திரனுக்கும், குவியல்களால் குபேரனுக்கும் நிகரான இவர் பெரும் பராக்கிரமம் மிக்க மனுவைப் போல உலகங்களைப் பாதுகாப்பவராவார். இவர் பெரும் பலமிக்கவராவார். அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு பாராட்டும் இவர், குருகுலத்தின் காளையும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்திரரைத் தவிர வேறு யாருமில்லை.

இந்த மன்னனின் சாதனைகள் சூரியனைப் போன்ற சுடர் மிகும் பிரகாசம் கொண்டவையாகும். அந்தச் சூரியனின் கதிர்களைப் போலவே இவரது புகழும் அனைத்துத் திக்குகளுக்கும் பயணித்துக் கொண்டே இருக்கிறது. உதயச் சூரியனின் கதிர்களைப் போன்ற சுடர்மிகும் பிரகாசம் கொண்ட இவர் குருக்களின் மத்தியில் வசித்தபோது, ஓ! மன்னா {விராடரே}, வேகமான பத்தாயிரம் {10000} யானைகள் இவரைப் பின்தொடர்ந்து செல்லும். ஓ! மன்னா {விராடரே}, சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட முப்பதாயிரம் {30000} தேர்கள் இவரைப் பின்தொடர்ந்து செல்வது வழக்கம். ரத்தினங்கள் ஒளிரும் காது வளையங்கள் அணிந்த எண்ணூறு {800} துதிபாடிகளும், பாணர்களும், இந்திரனைப் புகழும் முனிவரைகளைப் போல, இவரது புகழையே அந்தக் காலத்தில் பாடிக் கொண்டிருந்தனர்.

ஓ! மன்னா {விராடரே}, கௌரவர்களும், இந்தப் பூமியின் பிற தலைவர்களும், தேவர்கள் குபேரனுக்காகக் காத்திருப்பது போல், இவருக்காக எப்போதும் அடிமைகள் போலக் காத்திருப்பார்கள். பிரகாசமான கதிர்கொண்ட சூரியனைப் போல இருக்கும் இந்த உயர்ந்த மன்னன் {யுதிஷ்டிரர்}, இந்தப் பூமியின் அனைத்து மன்னர்களையும், உழவர் வர்க்கத்தினர் போலத் தனகு கப்பம் கட்ட வைத்தார். உயர் ஆன்ம ஸ்நாதகர்கள் எண்பத்தெட்டாயிரம் {88000} பேர், தங்கள் வாழ்வாதாரத்திற்காக அற்புத நோன்புகள் பயிலும் இந்த மன்னனையே நம்பி இருந்தனர். இந்த ஒப்பற்ற தலைவன் {யுதிஷ்டிரன்}, முதிர்ந்தவர்களையும், ஆதரவற்றவர்களையும், முடமானவர்களையும், குருடர்களையும் தனது மகன்களைப் போலப் பாதுகாத்து, தனது குடிகளை அறம் சார்ந்து ஆட்சி செய்தார்.

அறநெறியில் உறுதியாக, தன்னடக்கத்துடன், கோபத்தை அடக்கும் திறனுடன், தாராளக் குணம் மிகுந்து, அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, உண்மையுடன் {சத்தியத்துடன்} இருந்த இவர் பாண்டுவின் மகனாவார். இவரது {யுதிஷ்டிரனது} செழுமையும் பராக்கிரமமும், மன்னன் சுயோதனனையும் {துரியோதனனையும்}, கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} அடங்கிய அவனது தொண்டர்களையும் துன்புறுத்தியது. ஓ! மனிதர்களின் தலைவரே {விராடரே}, இவரது அறங்கள் எண்ண இயலாத முடிவிலி தன்மை கொண்டவை. அறநெறிக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் ஊறிழைப்பதைத் தவிர்ப்பவராவார் {அஹிம்சாவாதியாவார்}. இத்தகு குணங்களைக் கொண்ட மன்னர்களில் காளையான இந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! ஏகாதிபதி {விராடரே}, {இந்த} அரச ஆசனத்தை அடையத் தகுதி வாய்ந்தவரே ஆவார்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்