Sunday, December 28, 2014

உமது மகள் எனது மருமகளாகலாம்! - விராட பர்வம் பகுதி 71

Thy daughter may be my daughter-in-law! | Virata Parva - Section 71 | Mahabharata In Tamil

(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 46)






பதிவின் சுருக்கம் : விராடன் அர்ஜுனனிடம் மற்ற பாண்டவர்களை அடையாளங்காட்டச் சொல்வது; அர்ஜுனன் ஒவ்வொருவராக அடையாளங்காட்டுவது; உத்தரன் மீண்டும் பாண்டவர்களை வர்ணித்து அடையாளங்காட்டுவது; விராடன் தனது மகளை அர்ஜுனனுக்குக் கொடுக்க முன் வருவது; அர்ஜுனன் உத்தரையைத் தனது மருமகளாக ஏற்பதாகச் சொல்வது...

விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “உண்மையில், இவரே குந்தியின் மகனான குரு மன்னன் யுதிஷ்டிரர் என்றால், இவர்களில் யார் இவரது தம்பி அர்ஜுனன். இதில் யார் பலமிக்கப் பீமன். இவர்களில் யார் நகுலன், யார் சகாதேவன், கொண்டாடப்படும் அந்தத் திரௌபதி எங்கே? பகடையாட்டத்தில் வீழ்ந்த பிறகு, பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} குறித்து யாராலும் எதுவும் கேள்விப்படவில்லை” என்றான் {விராடன்}.


அதற்கு அர்ஜுனன் {விராடரிடம்}, “ஓ! மன்னா {விராடரே}, வல்லவன் என்று அழைக்கப்படும் உமது சமையற்கலைஞரான இவரே வலிமைமிக்கக் கரங்களும், பயங்கர வலிமையும், சீற்றமிகு உத்வேகமும் கொண்ட பீமராவார். கந்தமாதன மலைகளில் ராட்சசர்களைக் கொன்று, பெரும் நறுமணமிக்க தெய்வீக மலர்களை {செங்கழுநீர் மலர்களைக்} கிருஷ்ணைக்கு {திரௌபதிக்குக்} கொணர்ந்தவர் இவரே. தீய ஆன்மா கொண்ட கீசகனைக் கொன்றவர் இவரே {பீமரே}. உமது அரண்மனை அந்தப்புரத்தில், புலிகளையும், கரடிகளையும், காட்டுப்பன்றிகளையும் கொன்றவர் இவரே {பீமரே}.

உமது குதிரைகளைப் பாதுகாப்பவனே நகுலன் என்று அழைக்கப்படும் எதிரிகளைக் கொல்பவனாவான். உமது பசுக்களைப் பாதுகாக்கும் இவனே சகாதேவன். பெரும் புகழையும், மேனி அழகும் கொண்ட இந்த இரு மாத்ரி மகன்களும் பெரும் தேர்வீரர்களாவர்.

உமது மனைவியின் {சுதேஷ்ணையின்}, {பணிப்பெண்ணான} சைரந்திரியும், தாமரையிதழ் போன்ற கண்களும், கொடியிடையும், இனிய புன்னகையும் கொண்ட இந்த மங்கையே துருபதன் மகள் {திரௌபதி} ஆவாள். இவள் பொருட்டே, ஓ! மன்னா {விராடரே} கீசகர்கள் கொல்லப்பட்டனர். ஓ! மன்னா {விராடரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், பீமருக்கு இளையவனும், இரட்டையர்களுக்கு மூத்தவனுமான நானே அர்ஜுனன். இதை நீர் கேள்விப்பட்டிருப்பீர் என்பது தெளிவு. ஓ! மன்னா {விராடரே}, கண்டறியப்படக்கூடாத {அஞ்ஞாதவாச} காலத்தை, கருவறைக்குள் இருக்கும் குழந்தைகளைப் போல, உமது வசிப்பிடத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகக் கழித்தோம்!” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் அர்ஜுனன் சுட்டிக்காட்டிய பிறகு, அர்ஜுனனுடைய பராக்கிரமம் குறித்து விராடனின் மகன் {உத்தரன்} பேசினான். உத்தரன் மீண்டும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} அடையாளம் காட்டினான். பிறகு அந்த இளவரசன் {உத்தரன்}, “சுத்தமான தங்கம் போன்ற பிரகாசமான நிறமும், முழுதாய் வளர்ந்த சிங்கம் போலப் பருத்திருப்பவரும், நேர்த்தியான மூக்கு உடையவரும், விரிந்த பெரிய கண்களைக் கொண்டவருமான தாமிர நிறத்திலான அகன்ற முகத்தைக் கொண்டவரே குருக்களின் மன்னன் {யுதிஷ்டிரர்} ஆவார்.

மதங்கொண்ட யானையின் நடையும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறமும், அகன்று விரிந்த தோள்களும், நீண்ட பருத்த கரங்களும் கொண்ட இந்த விருகோதரைப் {பீமரைப்} பாரும். அவரது அருகில் கரிய நிறத்தில், யானை மந்தையின் தலைமை யானையைப் போல, சிங்க போன்ற அகன்ற தோள்களும், பலமிக்க யானையின் நடையும், தாமரை இதழ்களைப் போன்ற விரிந்த பெரிய கண்களும் கொண்டு நிற்பவரே வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனர் ஆவார். மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அருகே விஷ்ணுவையும், இந்திரனையும் போல இருப்பவர்களும், மனிதர்களின் உலகத்தில், அழகிலும், பலத்திலும், நடத்தையிலும் தனக்கு நிகர் இல்லாதவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான இரட்டையர்களை இதோ அனைவரும் பாருங்கள். அவர்களுக்கு அருகே, தங்கம் போன்ற அழகுடனும், ஒளியே உருவம் கொண்டு வந்தது போலவும், நீலத்தாமரையின் {நீலோத்பலமலரின்} நிறத்துடனும், தெய்வீக மங்கையைப் போலவும், லட்சுமியின் வாழும் உருவத்தைப் பிரதிபலிப்பது போலவும் நிற்கும் அவரே கிருஷ்ணையாவார்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு விராடனின் மகன் {உத்தரன்}, அர்ஜுனனின் பராக்கிரமத்தை விவரிக்க எண்ணி, “மான்கூட்டத்தை நாசம் செய்யும் சிங்க போல எதிரிகளைக் கொன்றவர் இவரே. எதிரிகளின் தேர்க்கூட்டத்திற்கு மத்தியில் உலவி, அவர்களது சிறந்த தேர்வீரர்களைக் கொன்றவர் இவரே. மதங்கொண்ட ஒரு பெரிய யானை இவரது ஒரே கணையால் கொல்லப்பட்டது. தங்கக் கவசம் பூண்டிருந்த அந்தப் பெரிய விலங்கு, இவரால் துளைக்கப்பட்டு, தனது தந்தங்களால் பூமியைத் துளைத்தவண்ணம் கீழே விழுந்தது. பசுக்களை மீட்டதும், போரில் கௌரவர்களை வீழ்த்தியதும் இவரே. இவரது சங்கொலியால் எனது காதுகள் செவிடாகின. துரியோதனனுடன் கூடிய பீஷ்மர், துரோணர் ஆகியோர் இந்தக் கடுஞ்செயல் புரியும் வீரராலேயே வீழ்த்தப்பட்டனர். அந்தச் சாதனை அவருடையதே! எனதல்ல” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட மத்ஸ்யர்களின் வலிமைமிக்க மன்னன் {விராடன்}, யுதிஷ்டிரனுக்குக் காயமேற்படுத்தியதைக் குற்றமாகக் கருதி உத்தரனிடம், “பாண்டு மகன்களை {பாண்டவர்களை} அமைதிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என நான் நினைக்கிறேன். நீ விரும்பினால், எனது மகள் உத்தரையை அர்ஜுனனுக்கு அளிப்பேன்” என்றான் {விராடன்}.

உத்தரன் {விராடனிடம்}, “நம்மால் வழிபடத்தகுந்தவர்களும், நமது போற்றுதலுக்கும், வழிபாட்டுக்கும், மதிப்புக்கும் உரிய பாண்டுவின் ஒப்பற்ற மகன்களை {பாண்டவர்களை} வழிபடும் நேரம் வந்துவிட்டது” என்றான்.

விராடன் {உத்தரனிடம்}, “போரில் நான் எதிரிகளிடம் அகப்பட்ட போது, பீமசேனனே என்னைக் காத்தான். எனது பசுக்களும் அர்ஜுனனால் மீட்கப்பட்டுள்ளன. உங்கள் கரங்களின் பலத்தினாலேயே நாங்கள் போரில் வெற்றியை அடைந்திருக்கிறோம். இப்படியே அனைத்தும் நடந்திருப்பதால், நமது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய நாங்கள் அனைவரும் குந்தியின் மகனான யுதிஷ்டிரரை அமைதிப்படுத்துவோம். ஓ! பாண்டு மகன்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளுடன் கூடிய நீர் அருளப்பட்டிரும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சொல்லாலோ, செயலாலோ, இதற்கு முன்னர், அறியாமையின் காரணமாக நான் எப்போதாவது தீங்கிழைத்திருந்தால், எங்களை மன்னிப்பதே உமக்குத் தகும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அறம்சார்ந்தவரல்லவா?” என்று கேட்டான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்த உயர் ஆன்ம விராடன், பெரிதும் மகிழ்ந்து மன்னன் யுதிஷ்டிரனை அணுகி அவனிடம் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, செங்கோல், கருவூலம் மற்றும் தலைநகரம் ஆகியவை அனைத்தையும் கொண்ட தனது முழு {மத்ஸ்ய} நாட்டையும் அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அளித்தான். பிறகு அனைத்துப் பாண்டவர்களிடமும், குறிப்பாகத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, அந்த வலிமைமிக்க மத்ஸ்ய மன்னன் {விராடன்} மீண்டும் மீண்டும், “நற்பேறாலேயே நான் உன்னைக் காண்கிறேன்” என்று சொன்னான். பிறகு மீண்டும் மீண்டும், யுதிஷ்டிரனையும், பீமனையும் மாத்ரியின் மகன்களையும் தழுவி, அவர்களது உச்சந்தலையை முகர்ந்து பார்த்த பெரும்படைக்குச் சொந்தக்காரனான விராடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் திருப்தியடையவில்லை.

பிறகு மிகவும் மகிழ்ந்த அவன் {விராடன்}, மன்னன் யுதிஷ்டிரனிடம், “நற்பேறாலேயே, காட்டிலிருந்து பாதுகாப்பாக நீர் வந்ததைக் கண்டேன். நற்பேறாலேயே அடைவதற்குக் கடினமான வனவாச காலத்தையும், அந்தத் தீயவர்களால் கண்டறியப்படாமல் நிறைவு செய்திருக்கிறீர்கள். என்னிடம் உள்ள அனைத்தையும், எனது மொத்த நாட்டையும் நான் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொடுக்கிறேன். சிறு தயக்கமும் இன்றிப் பாண்டுவின் மகன்கள் இவற்றை ஏற்கட்டும். சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உத்தரையின் கரங்களை ஏற்கட்டும். மனிதர்களில் சிறந்த அவனே {அர்ஜுனனே} அவளுக்கு {உத்திரைக்குத்} தலைவனாக இருக்கத் தகுந்தவன்” என்றான் {விராடன்}. இப்படிச் சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது பார்வையைச் செலுத்தினான். தனது அண்ணனால் இப்படிப் பார்க்கப்பட்ட அர்ஜுனன், மத்ஸ்ய மன்னனிடம் {விராடனிடம்}, “ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்திரையை} நான் எனது மருமகளாக ஏற்பேன். மத்ஸ்யருக்கும், பாரதருக்கும் இடையிலான கூட்டணி இந்த வகையில் அமைவதே உண்மையில் விரும்பத்தக்கதாகும்” என்றான் {அர்ஜுனன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்