Wednesday, December 24, 2014

ஆதிபர்வம் அச்சிடுதல் - திரு.ரவிக்குமார் பின்னூட்டம்!

ஆதிபர்வம் அச்சிடுதல் சம்பந்தமான பதிவுக்கு மின்னஞ்சலிலும் முகநூலிலும் பலர் தங்கள் பின்னூட்டங்களைத் தெரிவித்தீர்கள். கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

பலர் எனது வங்கிக் கணக்கைக் கேட்டு அனுப்பியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே, "வாசகர்களும் நண்பர்களும் என்ன பின்னூட்டம் தருகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு, பலர் இதற்கு ஒப்புதல் அளித்தால், ஒரு வங்கிக் கணக்கெண்ணைத் தருகிறேன்" என்று பதில் கூறியிருந்தேன்.

நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே நான் அந்தப் பதிவை இட்டிருந்தேன். அவர், "இது நிச்சயம் அச்சு வடிவில் இருக்க வேண்டும். அதற்கு உண்டாகும் செலவு முழுமையும் நானே தருகிறேன். ஆனால், இந்தப் புண்ணியத்தை நான் மட்டுமில்லாமல், அனைவரும் பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகையால், உங்கள் வலைப்பூவில் ஒரு அறிவிப்பு கொடுங்கள். முதலில் நான் தரும் பணத்தை வைத்து வேலையை ஆரம்பித்துவிடுங்கள். பிறகு, மஹாபாரதத்துக்கு என்று புதிய வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்குங்கள். அந்த வங்கிக் கணக்கெண் மூலம், இதில் பங்கெடுக்க விரும்புவோர் பணம் தரட்டும். அது சிறு தொகையாக இருந்தாலும் பரவாயில்லை. பணம் போதவில்லையென்றால் அதையும் நானே தருவேன்" என்று சொல்லியிருந்தார்.

அவரது கோரிக்கையின் படியே "ஆதிபர்வம் அச்சிடலாமா?" என்று தலைப்பிட்டு பதிவை இட்டேன். பின்னூட்டங்கள் பல வந்தன.

சில நெருங்கிய நண்பர்கள், "இது உங்கள் வேலையல்ல. இதைச் செய்யாதீர்கள். பதிப்பகத்தார் முன் வந்தால் மட்டும் செய்யுங்கள். இது உங்கள் நேரத்தைக் கறைத்துவிடும். முதலில் முழு மகாபாரதத்தையும் முடியுங்கள். பிறகு அச்சு பதிப்பது குறித்து யோசியுங்கள். இச்சேவைக்குப் பணம் கோரினீர்கள் என்றால் அது சேவையல்ல என்றாகிவிடும்." என்று சொல்லியிருந்தார்கள்.

இதனால் "நாம் தவறு செய்கிறோமோ" என்று நான் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள், தனது பின்னூட்டத்தைத் தந்திருக்கிறார். அது உங்கள் பார்வைக்காக....

****************************************************

மகாபாரதம் என்னும் படைப்பு வியாசரால் எழுதப்பட்டது. இது பொழுது போக்குவதற்காக எழுதப்பட்ட நாவல் அல்ல. இது மனித மனத்தை செம்மைப்படுத்தி அவனை மிக உயர்ந்த நிலையான முக்தி நிலைக்கு கூட்டிக் செல்லக் கூடிய ஒன்றாகும். இதை படிப்பதற்கு நாம் மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இதை தமிழில் மொழி பெயர்த்து எழுதிக் கொண்டு இருக்கும் செ.அருட்செல்வப்பேரரசனை வாழ்த்தி வணங்குகிறேன். இந்த பணி என்பது மகத்தானது. இது அவ்வளவு எளிதானதும் அல்ல. ஏனென்றால் மனித மனம் அவ்வளவு எளிதாக கட்டுப்படக்கூடியது அல்ல. ஏதோ ஒன்று அல்லது இரண்டு நாளில் முடியக் கூடிய விஷயமும் அல்ல. கண்டிப்பாக இந்த முழு மகாபாரதத்தையும் எழுதி முடிக்கும் போது மிக உயர்ந்த நிலையில் இவர் இருப்பார் என்பது நிச்சயம்.

மேலும் மகாபாரதம் என்னும் பொக்கிஷம் நூல் வடிவில் இருப்பது தான் சிறந்தது. ஏனென்றால் இது மனிதன் எல்லா துயரங்களையும் நீக்கி பேரின்பத்தை என்னவென்று காட்டி அதில் நம்மை கலந்திடவும் செய்யும். எல்லாரும் எல்லா நேரங்களிலும் வலைப்பூவை பார்த்து படிப்பது என்பது இயலாது. மேலும் இதை புத்தக வடிவில் கொடுப்பது என்பது ஒரு பெரிய யாகம் செய்வதை விட மேலானது. இந்த யாகத்தில் பங்கு பெறும் போது நமக்கு கிடைக்கும் பலன்களோ நினைத்து பார்க்க முடியாதது.

இது மனித குலம் மேன்மையுற வியாசர் ஆற்றிய பெரிய செயலாகும். வியாச பகவான் நினைத்த செயலை நாம் எடுத்து செய்யும் போது பல தெய்வங்கள் நமக்கு அருள் மாரி பொழிவது நிச்சயம். சத்தியம். நான் இதற்கு ஆகும் செலவுத் தொகையை கொடுப்பது என்பது நான் சேர்க்கும் அழியாத சொத்து என்று நினைக்கிறேன். ஆகவே நான் செ.அருட்செல்வப்பேரரசன் அவர்களிடம் இதை மற்றவர்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று கூறியிருந்தேன்.

1. மகாபாரதம் கமிட்டி அமைக்க வேண்டும்.
2. இந்த கமிட்டியில் STO 10 நபர்கள் இருக்க வேண்டும்
3. இதற்கு தனியாக மகாபாரத சேவா என்று ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டும்.
4. இதில் வரும் பணத்தை கொண்டு இந்த சேவையை செய்ய வேண்டும்.
இது எனது கருத்து.

மேலும் ஒவ்வொரு வாசகரும் வெறும் ரூபாய் 100/- என்றாலே பணம் என்பது ஒரு பொருட்டல்ல என்பது தெரியும். இதை வைத்து சேவையை நல்ல முறையில் நடத்தலாம்.

நன்றி
ரவிக்குமார்.K

 ****************************************************
திரு ரவிக்குமார் அவர்களது பின்னூட்டத்தை https://www.facebook.com/arulselva.perarasan/posts/955892877772250?comment_id=957928444235360&ref=notif&notif_t=share_comment என்ற லிங்கில் காணலாம்.

  ****************************************************

எப்போதும் போல ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்