Wednesday, December 24, 2014

அர்ஜுனனின் பராக்கிரமம்! - விராட பர்வம் பகுதி 62

The Prowess of Arjuna! | Virata Parva - Section 62 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 37)






பதிவின் சுருக்கம் : போர்க்களத்தில் அர்ஜுனனின் கோரத்தாண்டவம்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! பாரதக் குலத்தவனே {ஜனமேஜயா}, குருக்களில் பெரும் தேர்வீரர்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி அனைத்துப் புறங்களில் இருந்தும் அர்ஜுனனைத் தாக்கினர். ஆனால் அளவிலா ஆன்மா கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அந்த வலிய தேர்வீரர்களை, மலைகளை மூடும் பனி போலத் தனது கணை மேகங்களால் மூடினான். பெரும் யானைகளின் பிளிறல்களும், சங்கொலிகளும் ஒன்றாகக் கலந்து அங்கே பெரும் ஒலியை உண்டாக்கின. யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும், இரும்புக்கவசங்களையும் பார்த்தன் {அர்ஜுனன்} அடித்த அம்புகள் துளைத்து வெளியேறி ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன. மிகுந்த வேகத்துடன் கணைகளை அடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போட்டியில், கூதிர்காலத்தின் {இலையுதிர் காலத்தின்} நண்பகல் வேளையில் சுட்டெரிக்கும் சூரியனை நினைவுபடுத்தினான்.


அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும், குதிரை வீரர்கள் தங்கள் குதிரைகளில் இருந்தும் கீழே குதித்து, காலாட்படையினருடன் சேர்ந்து அனைத்துப் புறங்களிலும் {புறமுதுகிட்டு} ஓடினர். தாமிரம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பலமிக்க வீரர்களின் கவசங்களை அர்ஜுனனின் கணைகள் பிளந்த போது ஏற்பட்ட சடசடப்பொலி பெருவொலியாக இருந்தது. பாம்புகள் போலச் சீறிக்கொண்டு விரைந்து சென்ற பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் சிதைக்கப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள் மேலிருந்த போர்வீரர்கள் அனைவரும் விரைவில் அந்தக் களத்தில் பிணங்களாக விழுந்தனர்.

கையில் வில்லுடன் போர்க்களத்தில் தனஞ்சயன் {அர்ஜுனன்} நாட்டியம் ஆடுவதைப் போலத் தெரிந்தது. இடி போன்ற காண்டீவத்தின் நாணொலியால் பீதியடைந்தவர்களில், அந்தப் போர்க்களத்தை விட்டு ஓடியவர்கள் பலராக இருந்தனர். தலைப்பாகைகள், காது குண்டலங்கள், தங்க ஆரங்களுடன் கூடிய வெட்டப்பட்ட தலைகள் அந்தப் போர்க்களத்தில் நிறைந்திருந்தன. ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட கைகளில் விற்களை ஏந்திய மனித உடல்கள், கணைகளால் சிதைக்கப்பட்டு எங்கும் சிதறிக் கிடந்ததால் பூமி அழகாகத் தெரிந்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, கூரிய கணைகளால் வெட்டப்பட்ட தலைகள் தொடர்ச்சியாகப் பூமியில் விழுவதைக் காண, வானத்தில் இருந்து கல் மழை பொழிவது போல இருந்தது.

அஞ்சத்தக்க பராக்கிரமம் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} தனது கடுமையை வெளிக்காட்டியபடி போர்க்களத்தில் உலவி, திருதராஷ்டிரன் மகன்கள் மீது கோபத்தால் பயங்கர நெருப்பை ஊற்றிக் கொண்டிருந்தான். அர்ஜுனனின் கடும் பராக்கிரமத்தைக் கண்ட எரிக்கப்பட்ட அந்த எதிரிப்படையின் குரு வீரர்கள் துரியோதனன் முன்னிலையிலேயே உற்சாகமிழந்து போரிடுவதை நிறுத்தினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் படையைப் பயங்கரத்தால் பீடிக்கச் செய்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கதிகலங்கச் செய்த அந்த வெற்றியாளர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} களத்தில் இப்படியே உலவி கொண்டிருந்தான்.

இறந்தவர்களின் கலைந்த கேசத்தை மிதக்கும் தக்கையாகவும், விற்களையும் அம்புகளையும் படகுகளாகவும், இறைச்சியையும் விலங்குச் சாறுகளையும் சேறாகவும் கொண்ட யுகமுடிவின் மரண ஆறு போல, பாண்டுவின் மகன் அந்தப் போர்க்களத்தில், அலையடிக்கும் கடுமையான ரத்த ஆற்றை உற்பத்தி செய்தான். கவசங்களும், தலைப்பாகைகளும் அதன் பரப்பில் அடர்த்தியாக மிதந்து சென்றன. யானைகள் முதலைகளாகவும், தேர்கள் அதன் கட்டுமரங்களாகவும், கொழுப்பு, இரத்தம் ஆகியன அதன் ஊற்றாகவும் இருந்தன. பார்வையாளர்களின் இதயங்களில் பயங்கரம் பீடிக்கச்செய்ய அது {அந்த இரத்த ஆறு} கணக்கிடப் பட்டிருந்தது.

காணக் கொடூரமாகவும், சீற்றமிகு விலங்குகளின் கதறல்களை எதிரொலிக்கும் அச்சத்தின் எல்லையாகவும் இருந்த கூரிய கணைகள் அதன் {அந்த இரத்த ஆற்றின்} முதலைகளாக இருந்தன. ராட்சசர்களும் மற்ற மனித ஊனுண்ணிகளும் {நரமாமிசம் உண்பவர்களும்} அதன் ஓர் எல்லையில் இருந்து மற்ற எல்லைவரை நடமாடினர். முத்துச் சரங்கள் அதன் {அந்த இரத்த ஆற்றின்} அதிர்வலைகளாக இருந்தன. பிற அற்புத ஆபரணங்கள் அதன் குமிழிகளாக இருந்தன. மொய்க்கும் கணைகள் அதன் கடும் சுழிக்காற்றாகவும், குதிரைகள் அதன் ஆமைகளாகவும் இருந்தன. அந்த வலிமைமிக்கத் தேர் வீரன் {அர்ஜுனன்} அதன் {அந்த இரத்த ஆற்றில் இருக்கும்} பெரிய தீவாக இருந்தான். அது சங்கொலிகளையும், பேரிகையொலிகளையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பார்த்தன் {அர்ஜுனன்} உண்டாக்கிய அந்த இரத்த ஆறு கடக்கமுடியாததாக இருந்தது. அர்ஜுனன் தனது கணைகளை எடுப்பதையும், வில்லின் நாணில் அவற்றைப் பொருத்துவதையும் அக்காண்டீவத்தில் இருந்து நீட்டி இழுத்து அவற்றை விடுவதையும் பார்வையாளர்களால் காண முடியாத அளவுக்கு அவனது {அர்ஜுனனது} கரங்கள் இலகுவாக {வேகமாக} இருந்தன.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்